Thursday, August 20, 2009

கடல் நீரைக் குடிநீராக்குதல்

உலகில் கிடைக்கும் மொத்த நீரில் 97.5 சதவீதம் கடல் நீர்தான். மீதி உள்ள 2.5 சதவீதம் நீரிலும் 70 சதவீதம் வட-தென் துருவங்களில் உறை நிலையில் உள்ளது. 30 சத வீதம் மட்டுமே உலகெங்கும் உள்ள மக்களுக்குப் பயன்படும் வகையில் நீர்நிலைகளிலும் நிலத்தடி நீராகவும் உள்ளது. இந்த அளவும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது என்பது நமது உடனடி கவனத்தை ஈர்க்க வேண்டிய முக்கியமான அம்சம்.

உலகை மிரட்டும் குடிநீர்ப் பற்றாக்குறை

பல்வேறு பகுதிகளில் தொடரும் வறட்சிகள், மக்கள் பெருநகரங் களுக்குக் குடிபெயர்தல், தொழில் வளர்ச்சி ஆகிய காரணங்களால் நீரின் தேவை அதிகரித்து வருகிறது. உலகத் தண்ணீர்த் தேவை ஒவ் வொரு 20 ஆண்டுகளிலும் இரண்டு மடங்காகிக் கொண்டு வருகிறது. மக்கள் தொகை வளரும் வேகத் தைப் போல் இது இரு மடங்கு. 2025-இல் குடிநீர்த் தேவை, கிடைக் கும் அளவைவிட 56 சதவீதம் கூடுத லாக இருக்கும் என மதிப்பிடப்பட்டி ருக்கிறது. குடிநீர்த் தட்டுப்பாடு மக் களை மேலும் மேலும் சிரமத்துக்குள் ளாக்கி வரும் இச்சூழலில் மாற்று வழிகளைப் பற்றிச் சிந்தித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் உலகம் இருக்கிறது. குடிநீர்ப் பற்றாக்குறை பொருளாதார வளர்ச்சியைப் பாதிக் கிறது. வாழ்க்கைத் தரத்தை மோச மாக்குகிறது. எனவே இந்த விலை மதிப்பற்ற இயற்கை வளத்தைப் பெருக்குவதைப் பற்றியும் திறமை யாக நிர்வகிப்பதைப் பற்றியும் நாம் விழிப்புணர்வு பெற வேண்டியிருக்கிறது.

கடல் நீரைக் குடிநீராக்குதல்

கடல் நீரைக் குடிநீராக்குவதென் பது இப்பிரச்சனையைத் தீர்ப்பதில் ஒரு முக்கிய பங்கினை ஆற்ற முடி யும். சென்னை மாநகர மக்களின் குடிநீர்த்தேவையை ஓரளவுக்கு நிறைவேற்ற மீஞ்சூரில் கடல் நீரைக் குடிநீராக்கும் ஆலை செயல்படத் தயாராகி விட்டது. இதன் மூலம் மாந கர மக்களுக்கு தினசரி 100 மில் லியன் லிட்டர் நல்ல தண்ணீர் கிடைக்குமென்று தலைமைச் செய லாளர் அறிவித்துள்ளார். இதே போன்ற இன்னோர் ஆலையை நெம்மேலியில் நிறுவ ஏற்பாடு நடந்து வருகிறது.

காய்ச்சி குளிர்வித்தல்

கடல் நீரைக் குடிநீராக்க இரண்டு வழிமுறைகள் இருக்கின்றன. ஒன்று, காய்ச்சி குளிர்வித்தல்(னளைவடைடயவiடிn). நீரை ஆவியாக்கி பின்னர் குளிர்விப் பதுதான் `காய்ச்சி குளிர்வித்தல்’ எனப்படுகிறது. நீர்நிலைகளில் உள்ள தண்ணீர் சூரியவெப்பத்தி னால் ஆவியாகி பின்னர் குளிர்ந்து மழையாகப் பொழிவதை காய்ச்சி குளிர்விக்கும் முறைக்கு உதாரண மாகக் கொள்ளலாம். தண்ணீரைச் சூடுபடுத்தும்போது கொதிநிலை வரும்வரை வெப்பநிலை உயர்ந்து கொண்டே வரும். கொதிநிலையை அடைந்தபிறகு நீரை ஆவியாக்கவும் வெப்பம் தேவை. கொதிநிலையில் உள்ள நீரை ஆவியாக்கத் தேவைப் படும் வெப்பம் `உள்ளுறை வெப்பம்’ எனப்படுகிறது. நீரை ஆவியாக்க, உறைநிலையிலிருந்து கொதிநிலை வரை நீரைக் கொதிக்க வைக்கத் தேவைப்படும் வெப்பத்தைப் போல ஐந்து மடங்கு வெப்பம் தேவை. ஆவியாக்கலையும் குளிர்வித்தலை யும் தனித்தனியாகச் செய்தால் செலவு கூடுதலாக ஆகும். எனவே, நீராவியைக் குளிர்விக்கும்போது கிடைக்கும் வெப்பத்தில் ஒரு பகுதி யை, கடல் நீரை ஆவியாக்கத் தேவைப்படும் வெப்பமாகப் பயன் படுத்தி செலவைக் குறைக்கிறார்கள்.

ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ்

இரண்டாவது முறை, எதிர்திசை சவ்வூடுபரவல்- `ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ்’ எனப் படுகிறது. அடர்த்தி குறை வான கரைசல் ஒருவழிப் பாதையாகச் செயல்படும் ஒரு சவ்வில் (ளநஅi-யீநசஅநயடெந அநஅசெயநே) உள்ள நுண்ணிய துவாரங்கள் வழியாக அடர்த்தி அதிகமாக உள்ள கரைசலை அடைவதற்கு (சவ்வூடுபரவல்) `ஆஸ்மாசிஸ்’ என்று பெயர். மண்ணிலிருந்து நீரையும் தாதுப் பொருட் களையும் செடிகொடி கள் உள் வாங்கிக் கொள்வது, நம் உட லில் உள்ள இரத்தத்தி லிருந்து ஊட்டச்சத்துக்கள் செல்களுக் குச் செல்வது எல்லாமே ஆஸ் மாசிஸ் முறையில்தான். ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ் முறை யில் ஒருவழிப்பாதை சவ்வு சுத்தமான நீரை அனுமதிக் கிறது. ஆனால் அசுத்தமான பொருட்களை சவ்வு அனும திக்காது. சவ்வை நோக்கி நீரைத் தள்ள ஒரு விசை தேவைப்படும். இந்த முறையில் சவ்வின் மறுபுறத்தில் சுத்தமான நீர் கிடைக்கும். சவ்வின் இந்தப் பக்கத்தில் உள்ள அசுத் தமான பொருட் களும் உப்புக் களும் வெளியேற்றப்படும். ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ் முறை யில் பாக்டீரியா, வைரஸ்களை அகற்றிவிட இயலும். வேறு உயிரியல் அசுத்தங்களை (biடிடடிபiஉயட உடிவேயஅiயேவேள) புற ஊதாக் கதிர்கள் மூலம் சுத்தப் படுத்திவிடலாம்.

நன்றி: பேராசிரியர் கே. ராஜு

No comments: