Wednesday, August 5, 2009

அணுசக்தி தொழில்நுட்பங்கள்

அண்மையில் இத்தாலியில் நடந்த ஜி-8 உச்சி மாநாடு அணுசக்தி தொடர் பான தொழில்நுட்பங்களை அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத் திடாத எந்த நாட்டிற்கும் தரக்கூடாது என்று தடை விதித்துள்ளது. கையெழுத்திடாத நாடுகளில் இந்தியாவும் ஒன்று. பாகிஸ் தான், இஸ்ரேல், வடகொரியா ஆகியவை அதில் கையெழுத் திடாத மற்ற மூன்று நாடுகள். நமக்கு மேற் படி தொழில் நுட்பங்கள் கிடையாது என்று பணக்கார நாடுகள் கைவிரித்து விட்டன.

அதென்ன அணுசக்தி தொடர்பான தொழில்நுட்பங்கள்?

அணு எரிபொருள் செறிவூட்டல் (நசேiஉாஅநவே) ஒன்று, எரி பொருளை மறு சுழற்சி செய்வது (சநயீசடிஉநளளiபே) மற்றொன்று. இங்கே எரிபொருள் என்பது அணு உலைகளில் பயன்படுத்தப்படும் யுரே னியம், தோரியம், புளூட்டோனியம் போன்ற பொருட்களில் ஒன்றைக் குறிக்கிறது. யுரேனியத்தில் ரு-235, ரு-238 என இருவகை அணுக்கள் உள்ளன. இயற்கையில் கிடைக்கும் யுரேனியத்தில் ரு-235 அணு 0.7 ரூ அளவே உள்ளது. மீதி 99ரூ-க்கு மேல் ரு-238 உள்ளது. இதில் ரு-235 மட்டுமே அணுப்பிளவின் காரணமாக சக்தியை வெளிப்படுத்தக் கூடியது. அதனால் இயற்கையில் கிடைக் கும் யுரேனியத்திலிருந்து ரு-238-ஐ பிரித்து அகற்றிக் கொண்டே வந்தால் மீதி இருக்கும் பொருளில் ரு-235இன் சதவிகிதம் கூடிக்கொண்டே வரும் அல் லவா? இந்த நடைமுறைதான் செறி வூட்டல். 2ரூ அல்லது 3ரூ செறிவூட்டி னாலே அது மின்சாரம் தயாரிக்கப் பயன்படும் சிவில் அணு உலைக்குப் போதுமானது. அணு ஆயுதம் தயாரிக்க வேண்டுமெனில், 90ரூ-க்கு மேல் செறிவூட்ட வேண்டும். எனவே, ஒரு அணு உலை மின்சாரம் தயாரிக்கப் பயன் படுகிறதா, அணுகுண்டு தயாரிக்கப் பயன்படுகிறதா என்பது யுரேனியம் எந்த அளவுக்கு செறிவூட்டப்பட்டிருக்கிறது என்பதைப் பொறுத்தது.

மறுசுழற்சி செய்வது

அணு உலைகளில் யுரேனியத்தைப் பயன்படுத்தும்போது அதனுடைய தன் மை மாறுகிறது. ரு-235 என்ற அணு வின் மீது ஒரு நியூட்ரான் மோதும்போது யுரேனியம் அணு இரு துகள்களாகப் பிரி கிறது. அப்படி பிளவுபடும்போது ஏராள மான வெப்பசக்தி வெளிப்படுகிறது. இந்த வெப்பசக்தியைக் கொண்டு நீரைக் கொதிக்க வைத்து நீராவியின் சக்தியைப் பயன்படுத்தி டர்பைன்களைச் சுழலவிட்டு மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. யுரே னியப் பிளவின்போது பல மூலகங்களும் கிடைக்கின்றன. அப்படி கிடைக்கும் மூல கங்களில் புளூட்டோனியமும் ஒன்று. அணு உலையில் யுரேனியம் எரிபொரு ளாகப் பயன்படுத்தப்பட்ட பிறகு மீதியிருக் கும் எரிபொருளில் இன்னமும் பயன் படுத்தப்படாத யுரேனியம் (96ரூ), புளூட் டோனியம் (1ரூ), கழிவுப் பொருள் (3ரூ) ஆகி யவை இருக்கும். இந்தக் கலவையி லிருந்து யுரேனியத்தையும் புளூட்டோனி யத்தையும் மீட்டு மறுபடியும் அணுஉலை யில் எரிபொருளாகப் பயன்படுத்துவதற்கு மறுசுழற்சி செய்வது என்று பெயர்.

இப்படி மறுசுழற்சி செய்வதில் இரண்டு நன்மைகள் இருக்கின்றன. பயன்படுத்தப் பட்ட எரிபொருளை வீணாக்கி விடாமல் அதிலிருந்து புதிய எரிபொருளை உரு வாக்கி மீண்டும் பயன்படுத்தி மேலும் சக் தியைப் பெறுவது என்பது ஒரு நன்மை. அழிக்கப்பட வேண்டிய கழிவுப் பொருளின் அளவைக் குறைப்பதென்பது இரண் டாவது நன்மை.

நிலக்கரி, பெட்ரோல் போன்ற எரி பொருட்களுக்கு இல்லாத ஒரு விசே ஷத்தன்மை அணு உலைகளுக்கு உண்டு. இங்கு கழிவுப்பொருளை அழிப்பது எளி தல்ல. கழிவுப் பொருளும் கதிர்வீச்சினைக் கொடுக்கக்கூடியது என்பதால் ஆபத்தா னது. அதை பொருத்தமான கண்டெயி னர்களில் பூமிக்கடியில் வைத்து நீண்ட காலம் பாதுகாத்து வீரியத்தை இழக்கச் செய்து, பின்னரே அழிக்க முடியும். அத னால் ஒரு நாட்டில் அணு உலையும் யுரே னியமும் மட்டும் இருந்தால் போதாது. செறிவூட்டுவது, மறுசுழற்சி செய்வது, கழிவுப் பொருளை அழிப்பது ஆகியவற் றுக்கான தொழில்நுட்பங்கள் வேண்டும்.

மாற்றுவழிகள் உண்டு

அணுஉலைகளைப் பயன்படுத்து வதில் ஆபத்துகள் அதிகம் என்பதால் பல நாடுகள் அவற்றைத் தவிர்த்து விடுகின் றன. இந்தியாவுக்கு அணுசக்தியை விட் டால் வேறுவழியில்லை என்று நமக்கு நாமே போட்டுக் கொண்ட கைவிலங்கி லிருந்து நாம் விடுபட முடியும். மின்சக்தி நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு வேறு மாற்று முறைகள் (சூரியன், காற்று, கடல் அலைகள், உயிரியல் எரிபொருட்கள், குப் பைக் கழிவுகள் போன்றவற்றிலிருந்து மின்சாரம்) பற்றிய ஆராய்ச்சிகள் விரி வாக நடைபெறுவதும் ஈரானிலிருந்து எரி வாயு, நேபாளத்திலிருந்து நீர்மின்சாரம் போன்ற மாற்றுவழிகளைப் பரிசீலிப்பதும் அவசியம்.

நன்றி: பேராசிரியர் கே. ராஜு

No comments: