வீட்டைவிட்டு வெளியே தெருவிற்கு வந்து, நடந்தோமானால் நமக்கு சுவாசிப்பதே மிகவும் சிரமமாக ஆகிவிடுகிறது. தொடர்ந்து செல்லும் நான்கு சக்கர வாகனங்களும், இரண்டு சக்கர வாகனங்களும், ஆட்டோக்களும், டிராக்டர்களும் வெளிவிடும் புகை காரணமாக, நாம் சுவாசிக்கவே முடியவில்லை. மேலும் தூசியும் ஓரங்களில் ஓடும் கழிவு நீர்களின் துர்நாற்றமும், பிளாட்பாரம் நடுவில் நிறுத்தப்பட்டுள்ள தள்ளுவண்டியில், கோழி இறைச்சி, மீன் முதலியவற்றை எண்ணையில் வறுத்தெடுக்கும் நெடியும் சேர்ந்து அதன் கழிவுநீரை ரோட்டின் நடுவில் கொட்டுதலும் சேர்ந்து, நம்மை பயமுறுத்துகிறது. வெளியில் சென்ற நாம் நம் வேலைகளை விரைவில் முடித்து, வீடு திரும்பினால் போதும் என்று ஆகிவிடுகிறது.
பருவநிலை மாற்றத்தால் நாட்டின் சில பகுதிகளில் அதிக மழை பெய்து வெள்ளக்காடாக பெருகி, விவசாயத்தை அழித்து மக்களுக்கு உண்ண உணவு கூட கிடைக்காமல் செய்து விடுகிறது. சில நேரங்களில் தேவையான அளவு கூட மழை பெய்யாமல் வறட்சியாக்கி, நீருக்காக நெடுந்தூரம் அலைய வேண்டியதாய் ஆகிவிடு கிறது. மனித குலத்திற்கு கிடைக்கவேண்டிய நீரின் அளவும் குறைய ஆரம்பித்துவிட்டது. பூமி உருண்டையும் வெப்பம் அடைய ஆரம்பித்து விட்டது. தொழிற்சாலையிலிருந்து வெளியிடும் புகையும், கழிவு நீரும், வானத்தையும், நிலத்தையும் நஞ்சாக மாற்றிக் கொண்டேயிருக்கிறது. அணு ஆயுத கழிவுகள், யுரேனிய தாது கழிவுகளும் வளி மண்டலத்தையும், கடல் நீரையும் கெடுத்துக் கொண்டே வருகிறது. நம் பூமியைச் சுற்றியுள்ள காற்று மண்டலத்தையும் தாண்டி, பூமிக்கு பாதுகாப்பாக இருக்கும் ஓசான் மண்டலத்தில் ஓட்டை விழுந்திருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். அந்த துவாரத்தின் வழியாக அல்ட்ரா வயலட் கதிர்களும், இன்பரா ரெட் கதிர்களும், பூமியை தாக்குகின்றன. அதனால் மனிதனுக்கு தோல் புற்று நோயும், உடல் பாதிப்புகளும் ஏற்பட போகின்றன என்று எச்சரிக்கிறார்கள் விஞ்ஞானிகள்.
முதலில் நாம் உயிர்வாழ நல்ல சுத்தமான காற்றாவது வேண்டாமா? நல்ல பிராணவாயு நிறைந்த காற்றை சுவாசித்தால்தானே, அதை நம் உடல் ஏற்று, ரத்தம் சுத்தமடைந்து, அதிலுள்ள கழிவுகளை கரியமில வாயுவாக மாற்றி, நம் உடலானது நம் நாசிகள் மூலம் வெளியேற்ற முடியும்!
மக்கட்தொகை பெருகி, ஜனநெருக்கம் அதிகம் ஆகும்பொழுது அத்தனை மக்களும், உயிர் வாழ் பிராணிகள், மிருகங்கள் அனைத்தும் சேர்ந்து மூச்சுவிடும் பொழுது வெளியேற்றும் கரியமில வாயு, காற்றில் கலந்து, அந்த பகுதியில் உள்ள காற்று மாசு படாதா! என்று எண்ணத் தோன்றும்.
செடி கொடிகளும், மரங்களின் இலைகளும் சுவாசிக்கின்றன. ஆனால் அவைகள் காற்றில் உள்ள கரியமில வாயுவை எடுத்துக்கொண்டு, நல்ல பிராணவாயுவை வெளியிடுகின்றன. இதனால் காற்றில் கரியமில வாயு குறைந்து, பிராண வாயு அதிகரிக்கிறது. இயற்கை, இப்படி ஒரு சமன்பாட்டு நிலைமை ஏற்படுத்துகிறது! இதனை எத்தனை பேர் உணருகிறார்கள். இதனால்தான் காட்டை அழிக்கக் கூடாது என்ற இயக்கம் தோன்றியது. மழை வரவழைக்க மரம் நடுவிழா நடத்த வேண்டும் என்று மக்கள் நினைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
மழை நிறைய பெய்தால், மண்ணில் நிறைய செடி கொடிகள், புல்பூண்டுகள் தழைத்து வளரும்.
ஒவ்வொரு சிறுசெடியும், புல்லு கூட, அதிலுள்ள இலைகளால் கரியமில வாயுவை உறிஞ்சி, பிராண வாயுவை வெளியிடுகிறது. சிறுதுளி பெரு வெள்ளம் என்பது போல, அது காற்றோடு கலந்து நம்மை வாழ வைக்கிறது.
டாக்டர்கள் கூட மக்களை அதிகாலை வேளைகளில் வெறும் காலால் புல்வெளியில் நடந்து செல்லுங்கள் என்று கூறுகிறார்கள். செருப்பு அணியாமல் வெறும் கால்களால் காலை வேளைகளில் புல்தரைகளில் நடந்து செல்லும் பொழுது அதில் படிந்திருக்கும் பனித்துளிகள் கால் பாதங்களில் பட நமக்கு புத்துணர்வு ஏற்படுகிறது. அப்பொழுது புல்லின் நறுமணத்துடன் அவை வெளியிடும் பிராண வாயுவையும் நாம் சுவாசிக் கின்றோம். அந்த காற்று நம்மை புத்துணர்வு கொள்ள வைக்கிறது. உள்ளத்தில் உவகை உண்டாகி உற்சாகம், சுறுசுறுப்பு ஏற்படுகிறது.
செடி, கொடிகள், மரங்கள் உருவாக்குவதற்கு நம் வீட்டைச் சுற்றி இடம் இல்லாவிட்டாலும், வீட்டிற்கு உள்ளேயும், வெளியேயும், வீட்டைச் சுற்றியும், மொட்டை மாடியிலாவது தொட்டிகள் வைத்து செடிகளை வளர்க்க வேண்டும் என்ற எண்ணங்கள் வர ஆரம்பித்திருக்கின்றன. சிலரது வீட்டு வரவேற்பறையில் நிறைய தொட்டிகளை வைத்து அழகான செடிகளை வளர்க்கிறார்கள். அழகுக்காக இருந்தாலும், அவை ஆக்ஸிஜனை வெளியிடுகிறது. மிக ரம்மியமான சூழல் அங்கு நிலவுகிறது. நம் வீட்டிற்குள்ளேயும் வெளியிலும் உருவாகும் அசுத்தமான காற்று, தொட்டியில் வளர்க்கப்படும் செடி கொடிகளால் உறிஞ்சப்பட்டு பிராண வாயுவாக வெளியிடட்டும் வீட்டிற்குள் ளேயே! நமக்கு நல்ல பிராண வாயு கிடைக்கட்டும்!
நம் சூரிய மண்டலத்தில், பூமியைச் சுற்றியுள்ள எந்த கிரகத்திலும் நீர் இல்லை. அதனால் அங்கு தாவரங்கள் உண்டாகவில்லை. நீர் இருந்திருந்தால், பாசி பச்சை படர்ந்து செடி கொடிகள் மரங்கள் உருவாகியிருக்கும். மரங்கள் உருவாகியிருந்தால், அதன் இலைகள் அங்குள்ளநச்சுகாற்றை உறிஞ்சி, பிராண வாயு வெளியிட்டிருக்கும். சந்திரனுக்கு போய் இறங்கிய மனிதன் கூட பிராண வாயுவை உருவாக்கி மூச்சு விடுவதற் காக தலைக் கவசம் அணிந்து சென்றுதான் ஆராய்ச்சி செய்தான்.
பிராணவாயுவை தாவரங்களினால் மட்டுமே உருவாக்க முடியும் இயற்கையாக!
சிறுதொழில்கள் மூலமாக பலவித கைத் தொழில் பொருட்கள் செய்து, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து, பணம் கொழிக்கும் நாடாக முன்னேறிய நாடு ஜப்பான். அந்த நாட்டில் எரிமலை சீற்றங்களால் சுற்றுச்சூழல் காற்று மாசடைந்து வருகிறது. மேலும் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு குடிசைத் தொழிலாக ஏதோ ஒரு பொருள் செய்வதற்காக, மூலப்பொருளை உஷ்ணமாக்கி, உருவாக்கி வடிவமைத்து செய்து கொண்டிருக்கிறார்கள். அதன்மூலம் வெப்பத்தையும், கழிவு பொருளின் நாற்றத்தையும் புகை போக்கி மூலமாக வானத்தில் விடப்படுகிறது. அதனால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. இதனால் ஜப்பானில் பல முக்கிய நகரங்களில் பல இடங்களில் ஆக்ஸிஜன் பார்லர்கள் உள்ளன. அங்குள்ள மக்கள் பார்லருக்கு சென்று பணம் கொடுத்து சுத்தமான காற்றை சுவாசித்துவிட்டு வருகிறார்கள். முதன்முதலில் பொது இடத்தில் ஆக்ஸிஜன் பார்லர்கள் அமைத்தவர்கள் ஜப்பானியர்களே!
இன்று நம்நாட்டிலும் பம்பாய் போன்ற நகரங்களில் ஆக்ஸிஜன் பார்லர்கள் உள்ளன. நாமும் அந்த பார்லர்களில் போய் பணம் கொடுத்து, சுத்தமான ஆக்ஸிஜனை சுவாசித்து புத்துணர்ச்சி பெறலாம்.
இப்பொழுது நம்நாட்டில் சுத்தமான தண்ணீர் தேவைக்கு மினரல் வாட்டர் கேன், பாட்டில் நீர் விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகிறோம். இன்னும் சில ஆண்டுகள் கழித்து காற்றையும் விலை கொடுத்து வாங்கி சுவாசிக்க வேண்டிவரும். வீட்டில் ஒவ்வொரு அறைக்கும் குழாய்கள் பதித்து, அதில் ரெகுலேட்டர் பொருத்தி, ஆக்ஸிஜன் சிலிண்டர் வாங்கி இணைத்து, நல்ல காற்றை திறந்து, அறை முழுவதும் நிறைத்து சுவாசிக்க வேண்டி வரும்!
நம் வீட்டு அருகில் செடி கொடி தாவரங்கள் நிறைய வளர்ப்போம். வீட்டிற்கு உள்ளேயும், வெளியேயும், திறந்தவெளி மாடியிலும் தொட்டி களில் செடிகளை அதிகமாக வளரச் செய்வோம். நம்வீட்டில் நாம் ஆரோக்கியமாக இருக்க, சுத்த மான பிராணவாயு கிடைக்க முயற்சி செய்வோம்.
மரம் நடுவோம், சுத்தமான ஆக்ஸிஜன் காற்றை உருவாக்கி சுவாசிப்போம்.
நன்றி: மாற்று மருத்துவம் இதழ்
Showing posts with label பருவ நிலை மாற்றம். Show all posts
Showing posts with label பருவ நிலை மாற்றம். Show all posts
Monday, August 22, 2011
Friday, August 12, 2011
இயற்கை
இயற்கை இயல்பாக இயன்றதை இந்த பூமி பந்தில் உள்ள ஜீவராசிகள் அனைத்திற்கும் அளித்து வருகிறது. ஆனால் அதிகரித்து வரும் மக்கள் பெருக்கம் இந்த இயற்கையின் இயல்பின் மீது ஆதிக்கம் செலுத்தி ஆதாயம் அடைகிறது. பெருகிவரும் மக்கள் தொகையினால் தேவைகளும் அதிகரிக்கிறது. இந்த இயற்கை இதுநாள் வரை பூமியில் பிறந்த அனைத்து ஜீவராசிகளுக்கும் வாழ்வதற்கான இடத்தை, வாழ்வியல் தேவைகளை என ஜீவிப்பதற்கான அனைத்தையும் அளித்து வருகிறது. ஆனால் மனிதனின் தேவைகள் இந்த இயற்கையின் வளங்களை ஒட்டு மொத்தமாக உறிஞ்சி எடுப்பதிலேயே கவனம் செலுத்தி வருகிறது.
இந்தியாவில் பசுமைப் புரட்சி (1965\-1980) தானிய உற்பத்தியில் தன்னிறவு என்ற முழக்கத்துடன் முன்வைக்கப்பட்டு அமல்படுத்தப்படும் காலகட்டத்தில் ஏராளமான அந்நிய ரக பொருட்கள் (வீரிய ரக விதைகள், இரசாயன உரங்கள், பூச்சிமருந்துகள் என) இந்த மண்ணிற்கு பரவலாக அறிமுகப்படுத்தப்பட்டது. இவை அனைத்தும் மண்ணின் இயல்பு தன்மையை அன்றைய தினம் முதலே மாற்ற துவங்கி இன்று இயற்கை சமநிலையின் மீது தாக்குதலை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் கோதுமை களஞ்சியமான பஞ்சாபில் இன்று இந்த தாக்கம் பரவலாக உணரப்படுகிறது. பசுமைப் புரட்சி காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பல உரங்கள், பூச்சி மருந்துகள் இன்று அதே மண்ணின் இயற்கை தன்மையை முற்றிலுமாக பாதித்து இருக்கிறது. 2009 ஆம் ஆண்டு கீரின்பிஸ் பஞ்சாபின் மக்ட்ஸர், பதின்டா, லூதியானா ஆகிய மாவட்டங்களில் சுமார் 50 கிராமங்களில் நடத்திய ஆய்வில், 20 சதவிதத்திற்கு மேலான குடிநீர் கிணறுகளில் நைட்ரேட் அளவு 50 சதம் உள்ளது என கண்டறிப்பட்டுள்ளது. இது சர்வதேச சுகாதார மையம் அனுமதித்த அளவை விட அதிகம். இந்த நைட்ரேட் மனிதனுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் இரசாயனம் ஆகும். செயற்கை நைட்ரேட் உரங்களின்தாக்கம் இந்த மண்ணையும், தண்ணீரையும் வெகுவாக நச்சாக்கியுள்ளது. இந்த மாவட்டங்களில் இந்த இரசாயனங்கள் மண்ணின் இயல்பு தன்மையை பயிர் உற்பத்திற்கு உதவும் அதன் குணத்தை பாதித்துள்ளது.
Sold soul of infinity life முடிவில்லா வாழ்க்கையின் உயிர் என ஆங்கிலத்தில் குறிப்பிடுவர். இத்தகு மண் இயற்கை நமக்களித்த வாழ்க்கைக்கு அஸ்திவாரம் இயற்கையினால் நாம் உணவாக உட்கொள்ளும் அனைத்தும் இந்த மண் அளித்த மாற்று வடிவங்களே. இயற்கையை தவிர்த்து செயற்கையாக உண்டாக்கப்படும் உணவு வகைகள் இயற்கையின் தேர்வில் வாழும் மனிதனுக்கு பல உடற்கூறு தொந்தரவுகளை அளிக்கிறது.
இந்த பசுமைப்புரட்சி கால கட்டத்தில் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நெல்ரகங்கள் ஆரம்ப காலத்தில் நல்ல விளைச்சலை அளித்தது. இரசாயன உரங்கள், பூச்சிமருந்துகள் என விளைச்சலை அதிகரிக்கும் நோக்குவுடன் அரசு வேளாண் அதிகாரிகளின் வழிகாட்டுதலுடன் தமிழகத்தின் மண்ணும் மாசுபட ஆரம்பித்து, இன்று அதன் பிரச்சனையை தமிழக விவசாயிகளும் உணர துவங்கியுள்ளார்கள். அதனால்தான் தமிழகத்தில் இன்று இரசாயனம் இல்லாத வேளாண்மை எனும் முறை வேகமாக விவசாயிகளிடத்தே பிரபலமாகி வருகிறது.
இந்த இயற்கை வேளாண்மை என்பது மீண்டும் நமது பாரம்பரிய வேளாண்மை முறைக்கு மாறுவது என்பதாகும். ஏராளமான இரசாயனங்களை இந்த மண்ணிற்கு ஊற்றி அதில் வாழ்ந்து வந்த விவசாயத்திற்கு உதவிய பல நுண்ணுயிரிகளை (சூடோமோனஸ், ப்ளேரசன்ஸ், டிரைகோடெர்மா விரிடி) நாம் இந்த இயற்கை சமநிலையில் இருந்து அகற்றினோம் இன்று மீண்டும் இந்த நன்மை செய்யும் நுண்ணுயிரிவுகளை இந்த மண்ணிற்கு அளிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் இந்த நுண்ணுயிரிகள் மண்ணின் இயல்பு தன்மையை அதை சார்ந்து வாழும் இன்னும் பல உயிரிகள் மண்புழுக்கள், ஓட்டுண்ணிகள் என அவற்றின் உயிரி-பன்முகத்தன்மை பாதுகாத்திட தேவைப்படுகின்றன.
நமது பாரம்பரிய விவசாய முறையில் விவசாயிகளிடத்தே ஒரு விவசாய சமநிலையை பாதுகாத்திடும் செயல்முறை இருந்து வந்தது. விவசாயிகள் கால்நடைகளை வளர்ப்பதும் அவற்றின் சாணங்களை எருவாக்கி அதில் நுண்ணுயிர்கள் பல வளர்ப்பதற்கு வாய்ப்பளித்து அதனை நிலத்திற்கு அடி உரமாக இடுவார்கள். நிலத்தில் விளையும் களைச் செடிகளை புல் மற்றும் கரும்பு சோலை ஆகியவற்றை கால்நடைகளுக்கு வழங்குவார்கள். இன்று இவையனைத்தும் பெரும்பாலும் வழக்கத்தில் இருந்து மாறியுள்ளது. அடியுரமாக இரசாயனத்தை இடுவது, பயிர் வளர்ச்சியுடன் அனைத்து படிகளிலும் இரசாயன உரங்களையே ஈடுவது என இந்த மண்ணின், நீரின் இயல்பு தன்மையை வெகுவாக மாற்றியுள்ளார்கள். இதனால் தேவைக்கு அதிகமாக நிலத்தில் தங்கும் உப்புகள் காரணமாக நிலம் கடினமாகிறது. அதனால் நிலத்தடி நீரும் மாசுபடுகிறது.
மனிதர்களின் இதுபோன்ற தொடர் தாக்குதல்களால் இயற்கையில் ஏற்படும் பல விளைவுகளை இந்த மனித இனம் இன்று பரவலாக எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இங்கு பிரடெரிக் எங்கெல்ஸ் வரிகளை குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.
இயற்கையின் மீது நமது மானுட வெற்றிகளை வைத்துக்கொண்டு நம்மை நாம் அளவு கடந்து தற்புகழ்ச்சி செய்து கொள்ள வேண்டியதில்லை. ஏனெனில் இப்படிப்பட்ட வெற்றி ஒவ்வொன்றுக்கும் இயற்கை நம்மை பழிவாங்குகிறது. ஒவ்வொரு வெற்றியும் முதலாவதாக நாம் எதிர்பார்க்காத முற்றிலும் வேறுபட்ட பலன்களை அளிக்கிறது. இயற்கையுடன் இணைந்த வாழ்வு முறையும், வேளாண்மையும் இந்த மனித இனம் கைவிடாமல் வாழ வேண்டும் என்பதையே இன்றைய சூழல் நமக்கு உணர்த்துகிறது.
நன்றி: இளைஞர் முழக்கம்
இந்தியாவில் பசுமைப் புரட்சி (1965\-1980) தானிய உற்பத்தியில் தன்னிறவு என்ற முழக்கத்துடன் முன்வைக்கப்பட்டு அமல்படுத்தப்படும் காலகட்டத்தில் ஏராளமான அந்நிய ரக பொருட்கள் (வீரிய ரக விதைகள், இரசாயன உரங்கள், பூச்சிமருந்துகள் என) இந்த மண்ணிற்கு பரவலாக அறிமுகப்படுத்தப்பட்டது. இவை அனைத்தும் மண்ணின் இயல்பு தன்மையை அன்றைய தினம் முதலே மாற்ற துவங்கி இன்று இயற்கை சமநிலையின் மீது தாக்குதலை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் கோதுமை களஞ்சியமான பஞ்சாபில் இன்று இந்த தாக்கம் பரவலாக உணரப்படுகிறது. பசுமைப் புரட்சி காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பல உரங்கள், பூச்சி மருந்துகள் இன்று அதே மண்ணின் இயற்கை தன்மையை முற்றிலுமாக பாதித்து இருக்கிறது. 2009 ஆம் ஆண்டு கீரின்பிஸ் பஞ்சாபின் மக்ட்ஸர், பதின்டா, லூதியானா ஆகிய மாவட்டங்களில் சுமார் 50 கிராமங்களில் நடத்திய ஆய்வில், 20 சதவிதத்திற்கு மேலான குடிநீர் கிணறுகளில் நைட்ரேட் அளவு 50 சதம் உள்ளது என கண்டறிப்பட்டுள்ளது. இது சர்வதேச சுகாதார மையம் அனுமதித்த அளவை விட அதிகம். இந்த நைட்ரேட் மனிதனுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் இரசாயனம் ஆகும். செயற்கை நைட்ரேட் உரங்களின்தாக்கம் இந்த மண்ணையும், தண்ணீரையும் வெகுவாக நச்சாக்கியுள்ளது. இந்த மாவட்டங்களில் இந்த இரசாயனங்கள் மண்ணின் இயல்பு தன்மையை பயிர் உற்பத்திற்கு உதவும் அதன் குணத்தை பாதித்துள்ளது.
Sold soul of infinity life முடிவில்லா வாழ்க்கையின் உயிர் என ஆங்கிலத்தில் குறிப்பிடுவர். இத்தகு மண் இயற்கை நமக்களித்த வாழ்க்கைக்கு அஸ்திவாரம் இயற்கையினால் நாம் உணவாக உட்கொள்ளும் அனைத்தும் இந்த மண் அளித்த மாற்று வடிவங்களே. இயற்கையை தவிர்த்து செயற்கையாக உண்டாக்கப்படும் உணவு வகைகள் இயற்கையின் தேர்வில் வாழும் மனிதனுக்கு பல உடற்கூறு தொந்தரவுகளை அளிக்கிறது.
இந்த பசுமைப்புரட்சி கால கட்டத்தில் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நெல்ரகங்கள் ஆரம்ப காலத்தில் நல்ல விளைச்சலை அளித்தது. இரசாயன உரங்கள், பூச்சிமருந்துகள் என விளைச்சலை அதிகரிக்கும் நோக்குவுடன் அரசு வேளாண் அதிகாரிகளின் வழிகாட்டுதலுடன் தமிழகத்தின் மண்ணும் மாசுபட ஆரம்பித்து, இன்று அதன் பிரச்சனையை தமிழக விவசாயிகளும் உணர துவங்கியுள்ளார்கள். அதனால்தான் தமிழகத்தில் இன்று இரசாயனம் இல்லாத வேளாண்மை எனும் முறை வேகமாக விவசாயிகளிடத்தே பிரபலமாகி வருகிறது.
இந்த இயற்கை வேளாண்மை என்பது மீண்டும் நமது பாரம்பரிய வேளாண்மை முறைக்கு மாறுவது என்பதாகும். ஏராளமான இரசாயனங்களை இந்த மண்ணிற்கு ஊற்றி அதில் வாழ்ந்து வந்த விவசாயத்திற்கு உதவிய பல நுண்ணுயிரிகளை (சூடோமோனஸ், ப்ளேரசன்ஸ், டிரைகோடெர்மா விரிடி) நாம் இந்த இயற்கை சமநிலையில் இருந்து அகற்றினோம் இன்று மீண்டும் இந்த நன்மை செய்யும் நுண்ணுயிரிவுகளை இந்த மண்ணிற்கு அளிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் இந்த நுண்ணுயிரிகள் மண்ணின் இயல்பு தன்மையை அதை சார்ந்து வாழும் இன்னும் பல உயிரிகள் மண்புழுக்கள், ஓட்டுண்ணிகள் என அவற்றின் உயிரி-பன்முகத்தன்மை பாதுகாத்திட தேவைப்படுகின்றன.
நமது பாரம்பரிய விவசாய முறையில் விவசாயிகளிடத்தே ஒரு விவசாய சமநிலையை பாதுகாத்திடும் செயல்முறை இருந்து வந்தது. விவசாயிகள் கால்நடைகளை வளர்ப்பதும் அவற்றின் சாணங்களை எருவாக்கி அதில் நுண்ணுயிர்கள் பல வளர்ப்பதற்கு வாய்ப்பளித்து அதனை நிலத்திற்கு அடி உரமாக இடுவார்கள். நிலத்தில் விளையும் களைச் செடிகளை புல் மற்றும் கரும்பு சோலை ஆகியவற்றை கால்நடைகளுக்கு வழங்குவார்கள். இன்று இவையனைத்தும் பெரும்பாலும் வழக்கத்தில் இருந்து மாறியுள்ளது. அடியுரமாக இரசாயனத்தை இடுவது, பயிர் வளர்ச்சியுடன் அனைத்து படிகளிலும் இரசாயன உரங்களையே ஈடுவது என இந்த மண்ணின், நீரின் இயல்பு தன்மையை வெகுவாக மாற்றியுள்ளார்கள். இதனால் தேவைக்கு அதிகமாக நிலத்தில் தங்கும் உப்புகள் காரணமாக நிலம் கடினமாகிறது. அதனால் நிலத்தடி நீரும் மாசுபடுகிறது.
மனிதர்களின் இதுபோன்ற தொடர் தாக்குதல்களால் இயற்கையில் ஏற்படும் பல விளைவுகளை இந்த மனித இனம் இன்று பரவலாக எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இங்கு பிரடெரிக் எங்கெல்ஸ் வரிகளை குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.
இயற்கையின் மீது நமது மானுட வெற்றிகளை வைத்துக்கொண்டு நம்மை நாம் அளவு கடந்து தற்புகழ்ச்சி செய்து கொள்ள வேண்டியதில்லை. ஏனெனில் இப்படிப்பட்ட வெற்றி ஒவ்வொன்றுக்கும் இயற்கை நம்மை பழிவாங்குகிறது. ஒவ்வொரு வெற்றியும் முதலாவதாக நாம் எதிர்பார்க்காத முற்றிலும் வேறுபட்ட பலன்களை அளிக்கிறது. இயற்கையுடன் இணைந்த வாழ்வு முறையும், வேளாண்மையும் இந்த மனித இனம் கைவிடாமல் வாழ வேண்டும் என்பதையே இன்றைய சூழல் நமக்கு உணர்த்துகிறது.
நன்றி: இளைஞர் முழக்கம்
Subscribe to:
Posts (Atom)