Monday, February 22, 2010

பாக்டீரியாவை திணித்துத் தரும் கத்தரிக்காய்

வளமைக்கு அடித்தளம் உயிரி யல் பன்மயம். கம்பெனி விதைகள் திணிக்கப்பட்டால் உயிரியல் பன் மயம் அழியும். பச்சைப் புரட்சிக் காலத்தில் இப்படி நமது 30 ஆயிரம் நெல் வகைகள் அழிந்ததை யாரும் மறுப்பதற்கு இல்லை. இந்தியாவில் கத்தரி ரகங்களுக்கு பஞ்சமில்லை. ‘வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும்’ என்று அவ்வை பிராட்டி குறிப்பிடுகிற வழுதுணங்காய் நமது கத்தரியே. கத்தரிக்காயின் இனங் களில் பன்மயம் இருப்பது போல, அவை பயிரிடப்படும் இடங் களிலும் பயிரிடும் முறைகளிலும் வேறுபாடு நிலவுகிறது. எடுத்துக்காட்டாக, நாகை மாவட்டத்தில் பொய்யூர் கத்தரிக்காய், திருச்செங் கோட்டில் பூனைத்தலை கத்தரிக்காய், வேலூரில் முள்ளு கத்தரிக்காய், தஞ்சாவூரில் தூக்கானம் பாளை யம் கத்தரிக்காய், கல்லணை வட்டாரத்தில் சுக்காம் பார் கத்தரிக்காய், திருச்சியில் அய் யம்பாளையம் கத்தரிக்காய், நெல் லையில் வெள் ளைக் கத்தரிக்காய்.... இப்படி பட்டியல் நீள்கிறது.

சமைத்து உண்ணுவதில்கூட குழம்பு வைப்பது, பொரியல் செய் வது, வறுவல் செய்வது, வத்தலாக் கிக் குழம்பு வைப்பது, ஆட்டிறைச் சியுடன் கலந்து உண்பது என்று நுகர்வு முறையும் கூட பல்வகைப் பட்டன. மொத்தத்தில் கத்தரிக்காய் என்பது நமது மக்களின் கலாச் சாரம். இத்தகைய கலாச்சார சரி வைத்தான் முதலாவதாக எதிர் நோக்குகிறோம். இப்படி ஒரு பேரிழப்பை சந்தித்து நாம் எதை அடையப்போகிறோம்.

பி.டி. என்ற இரண்டு எழுத்துக் கள், பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ் என்ற இரண்டு சொற்களின் முதல் எழுத்துக்கள். பேசில்லஸ் என்பது ஒரு நச்சுக்கிருமி. அதன் ஒரு அணுவை கத்தரிக்காயின் விதைக் குள் புகுத்துகிறார்கள். எந்த ஒரு உயி ரும் வெளியில் இருந்து வரும் மாற்று அணுவை ஏற்பது இல்லை. அத னால் ஏற்க வைக்கும் விதத்தில் துணை அணுக்களையும் சேர்த்து கோவையாக்கி மனிதருக்கு ஊசி குத்துவது போல அல்லது மனித உடலில் புல்லட் பாய்ச்சுவது போல நச்சு உயிரியின் அணுவை கத்தரி விதைக்குள் புகுத்துகிறார்கள். எதற் காக இப்படிச் செய்கிறார்கள்.

பி.டி.பயிர்களை சாகுபடி செய் வதன் மூலம் வறுமை மறையும் என்ற வாதத்தை முன் வைக்கிறார் கள். இது உண்மைக்குப் புறம் பானது. 2008ம் ஆண்டு மே மாதம் 60 நாடுகளைச் சேர்ந்த 450 விஞ் ஞானிகள் கூடி சர்வதேச ஆய்வு அறிக்கை வெளியிட்டனர். உலக வங்கி சார்பில் நடைபெற்ற இந்த மாநாட்டின் அறிக்கை, மாற்றுப் பயிர் களால் பஞ்சமோ, வறுமையோ மறையக்கூடியவை அல்ல என் பதை விரிவாக விளக்கினர்.

‘கத்தரிச் செடியின் தண்டு அல்லது காயை ஒரு புழு துளைக் கிறது. அந்தப் புழுவை கொல்லக் கூடிய நஞ்சு பி.டி. கத்தரி விதை யில் சுரக்கிறது’ என்று சொல் கிறார்கள். அதனை ‘பி.டி. புரதம்’ என்று சொல்கிறார்கள். ‘எல்லா நஞ்சுகளுமே புரதம்தான். விதை யில் திணிக்கப்பட்ட நச்சு உயிரி விதை முளைக்கும்போது தனது சுரப்பை தொடங்குகிறது. செடி முழு வதற்கும் பரவி செடியைத் தின்னும் புழுவைக் கொல்லுகிறது’ என்று கூறுகிறார்கள். ‘கத்தரிக்காயை சென்றடையும் நஞ்சு புழுவை மட் டும்தான் கொல்லும். மனிதருக்கு எந்த தீங்கும் செய்யாது’ என்று கம்பெனிக்காரர்கள் சொல்கிறார்கள். இதற்கு ஆதாரம் என்ன? எங்கு சோதிக்கப்பட்டது? என்ற கேள்வி களுக்குப் பதில் இல்லை.

இந்தியாவில் மூத்த உயிரியல் தொழில்நுட்ப விஞ்ஞானியான புஷ்பா பார்கவா, ‘ஒரு உணவுப் பாதுகாப்பானதா என்று கண்டறி வதற்கு நிறைய சோதனைகள் நடத்த வேண்டும். அந்தச் சோத னைகள் நடத்தப்படவில்லை. அது மட்டுமல்ல, மாறாக நடத்தப்பட்ட சோதனைகள் முறையாக செய்யப் படவில்லை. உணவு பாதுகாப் பானதா என்பதை சோதிப்பதற்கு உரிய ஆய்வுக்கூடம் இனிமேல் தான் நிறுவப்பட வேண்டி உள்ளது. பி.டி.கத்தரிக்காயை உற்பத்தி செய்த மான்சாண்டோ - மகிகோ கம்பெனி கொடுத்த விண்ணப்பத்தில் உள்ள கருத்துக்களை நமது ஆராய்ச்சி நிறுவனங்கள் அப்படியே ஏற்றுக் கொண்டன. பி.டி.கத்தரிக்காய்க்கு அனுமதி வழங்கியுள்ளனர். இப்படி அனுமதி வழங்கியது உலகத்தின் முன்பு இந்திய விஞ்ஞானத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தி உள் ளது’ என்றும் ‘இந்திய அரசு பி.டி. கத்தரிக்கு அனுமதி வழங்கு மானால் குடியாட்சி வரலாற்றில் அது மாபெரும் ஆபத்தாக முடியும்’ என்றும் எச்சரித்திருக்கிறார்.

தமிழ்நாடு விவசாயிகள் விழிப் புணர்வு இயக்கத்தின் கூடுதல் பொதுச் செயலாளரும், இந்திய உயிரி மருத்துவ சங்க உறுப்பினருமான டாக்டர் உஷாராணி ‘இந்தியாவில் மரபணு மாற்று உணவுகளை சர மாரியாக உட்கொண்டால், இனி வரும் சந்ததிகள் ஆண்மைக் குறை பாடுகள் உள்ளவர்களாகவோ, மலட்டுத்தன்மை உள்ளவர்களாக வோ, மூளை மற்றும் உடல் வளர்ச்சி குறைந்தவர்களாகவோ ஆக்கு வதற்கு நாம் வழிவகுத்தவர்கள் ஆவோம்’ என்று குறிப்பிடுகிறார்.

ஒட்டகம் கூடாரத்திற்குள் மூக்கை நுழைப்பது போல இன்று கம்பெனிகள் திணிப்பது பி.டி.கத் தரிக்காய்! தொடர்ந்து பி.டி.தக்காளி, பி.டி.வெண்டை, பி.டி. நிலக்கடலை, பி.டி.மரவள்ளி, பி.டி.உருளை, பி.டி. மக்கா, பி.டி.சோயா எல்லாம் வர வுள்ளன. தமிழ்நாட்டில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட கல்லூரி களிலும், ஆய்வுக்கூடங்களிலும் அமெரிக்க கம்பெனியின் ஆதர வுடன் இதற்கான ஆய்வுகள் மேற் கொள்ளப்படுகின்றன. குறிப்பாக அமெரிக்க கம்பெனிகள் ஒட்டு மொத்த உலகப் பயிர் சாகுபடியை ஏகபோகமாக்குவதற்கு வலை விரிப்பது புரிய வருகிறது. இதில் விவரம் அறிந்த ஐரோப்பிய நாடுகள் விலகி நிற்கின்றன. முதல் முதலாக ஒரு உணவுப் பயிர் இந்தியாவில் தான் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதுவே பி.டி.கத்தரி.

உலகமயமாக்கத்தில் ஒரு பிரிவான காப்புரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி பி.டி. மரபணுவுக்கு காப்புரிமையும் பெறுகிறார்கள். இதன் மூலம் உலகில் உள்ள அத்தனை உழவர்களும் கம்பெனிகளுக்கு கப்பம் (ராயல்டி) கட்ட வேண்டும் என்ற கட்டுப்பாட்டை கொண்டு வருகிறார்கள். உணவே மருந்து என்பது தமிழ் மரபு. ஆனால் இப்படி பாக்டீரி யாவை திணித்துத் தரும் கத்தரிக் காய் எப்படி மருந்தாகும்.

நன்றி: கோ.நம்மாழ்வார்

No comments: