Wednesday, December 10, 2008

பொருளாதாரம் மீட்சிபெற வஞ்சிக்கப்பட்டவர்கள் மீது கவனம் செலுத்துங்கள்!

நம் நாட்டில் 87 கோடி பேர் நாளொன்றுக்கு ரூ.20க்கும் குறைவாக வருமானம் பெற்று உயிர் வாழ்ந்து வருகிறார்கள். இந்திய ஏழைகள் பற்றி இந்த அதிர்ச்சிகரமான விபரத்தை வெளிப்படுத்தியவர் டாக்டர் அர்ஜூன் சென்குப்தா எம்.பி.,. தேசிய அமைப்புசாரா தொழில்கள் ஆணையத்தின் தலைவராக இவர் செயல்பட்டு வருகிறார். மிகப்பெரிய உள்நாட்டுச் சந்தையைக் கொண்ட இந்தியா, உலகப் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை இந்து (9.12.2008) நாளிதழில் விவரித்துள்ளார். அதன் சுருக்கம் இங்கு தரப்படுகிறது



இந்திய அரசு அண்மையில் ஏற்று மதியாளர்களுக்குச் சில சலுகைகளை அறிவித்துள்ளது. பணக்கார நாடுகளில் சந்தைகள் தேக்கமடைந்துள்ள நிலை யில் நுகர்வுத் தேவை அதிகரிக்காது. எனவே மத்திய ஆட்சியாளர்களின் இது போன்ற நடவடிக்கைகளால் பொருளா தார நெருக்கடிக்குச் சரியான தீர்வு ஏற்படாது. மாறாக இந்த பொருளாதார நெருக்கடி மேலும் தொடரவே செய்யும்.

இந்திய மக்களின் நுகர்வுத் தேவை யை விரிவுபடுத்தி உள்நாட்டுச் சந்தை யை பலப்படுத்த வேண்டும். இந்தியாவில் 20 ஆண்டுகளாக ஏற்பட்டுள்ள வளர்ச்சி மிகக் குறைந்தவர்களுக்கு மட்டுமே கிடைத்துள்ளது. சுமார் 26 கோடி பேருக்கு இந்த பலன்கள் கிடைத்தபோது பெரும் பான்மையான 87 கோடிப் பேர் புறக் கணிக்கப்பட்டுள்ளனர். பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது என்று சொல்லப்படும் இந்த கால கட்டத்தில் நாளொன்றுக்கு ரூ.12 மட்டுமே ஈட்டிவந்த மக்களில் கொஞ்சம்பேர் (2004 - 05ல்) நாளொன்றுக்கு ரூ.20 வருமானம் பெறும் அளவுக்கு உயர்ந்துள்ளனர். இதுதான் ஏழைகள் பெற்ற முன்னேற்றம்! வளர்ச்சி யின் பலன் தங்களைப் புறக்கணித்துச் செல்வதை அவர்கள் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

இந்த 87 கோடி மக்களில் ஆகப் பெரும்பான்மையானோர் எழுத்தறிவில் லாதவர்களாக அல்லது ஆரம்ப கல்வி மட்டுமே பெற்றவர்களாக இருக்கின்றனர். சத்தான உணவு கிடைக்காமல் நோயில் துன்புறுகின்றனர். பெரும்பாலும் வேலை வாய்ப்பு கிடைக்காதவர்கள் அல்லது ஏழை உழைப்பாளிகள், சாலையோர வியாபாரம் போன்ற அமைப்புசாராத சுய வேலை செய்யும் தொழிலாளி வர்க்கத் தினராக இவர்கள் இருக்கின்றனர்.

வேளாண்மை துறையைச் சேர்ந்த 84 சதவீதம் குடும்பத்தினர் இந்த பொருளா தாரத்தைச் சார்ந்தவர்களாக இருக்கின் றனர். அதிகபட்சம் 2 ஹெக்டேருக்கும் குறைவான நிலம் வைத்திருக்கக்கூடிய ஏழை விவசாயிகளான இவர்கள் வாழ்வ தற்காக நிலத்தோடு போராட வேண்டி யிருக்கிறது. மேலும் வாழ்க்கைத் தேவைக்கு விவசாயம் இல்லாத இதர உள்ளூர் வேலைகளை எதிர்பார்த்திருக்கின்றனர்.

தொழில் துறையைப் பொறுத்தவரை 5 கோடியே 80 லட்சம் சிறு, குறு தொழிற் கூடங்களில் 10 கோடியே 40 லட்சம் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். ரூ.5 லட்சத்துக்குக் குறைவான முதலீடு கொண்ட இந்த சிறிய தொழிற்சாலை களில் மிக துன்பகரமான நிலைமையில் இவர்கள் வேலை செய்கின்றனர். கைத் தறி, கைவினை, கயிறு, தோல், ஆயத்த ஆடை, உணவு பதப்படுத்துதல் மற்றும் உலோகத் தயாரிப்பு தொழில்களில் வேலை செய்யும் இவர்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 31 சதவீதம் பங்களிக்கின்றனர். இவர்களது உற்பத்திப் பொருட்களில் ஏறத்தாழ 90 சதவீதம் உள்நாட்டு சந்தைகளில் நுகரப்படுகிறது.

அரசு வழங்கும் நிதி தூண்டிவிடல் (ளவiஅரடரள) என்பதன் அர்த்தம் இந்தப் பிரிவினரை ஊக்குவிப்பதாக இருக்க வேண்டும். இதன் மூலம் உள்நாட்டுத் தேவையை விரிவாக்க வேண்டும்.

5 கோடியே 80 லட்சம் சிறு, குறு தொழிற்சாலைகளுக்கு நிதி மற்றும் கடன் வசதியை நாம் அதிகரிக்க வேண்டும். நம் நாட்டு வங்கிகள் வழங்கும் நிகரக் கடனில் 5 கோடியே 40 லட்சம் தொழிற்சாலைகள் பெறும் கடன் வசதி வெறும் 2.2 சதவீதம் மட்டுமே. அதிகபட்சம் ரூ.25 லட்சம் முத லீட்டில் இயங்கும் இதர 40 லட்சம் சிறு தொழிற்சாலைகள் பெறும் கடன் வச தியும் மொத்த நிகரக் கடனில் 4 சதவீதம் தான். இந்த தொழிற்சாலைகளுக்கு வழங் கும் கடன் அளவை இன்னும் 1 சதவீதம் அதிகரித்தாலே புதிதாக 1 கோடிப் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தர முடியும். உள்நாட்டு மொத்த உற்பத்தியும் பெருகும்.

அமைப்பு சாரா துறைக்கு

தனி நிதி நிறுவனம்

வேளாண் துறைக்கு கடன் வழங்க ஏற்படுத்தப்பட்ட நபார்டு வங்கி போல அமைப்புசாரா துறைகளுக்கு கடன் மற்றும் நிதி வசதி ஏற்படுத்த தனி நிதி நிறுவனம் ஏற்படுத்த வேண்டும் என்று அமைப்புசாரா தொழில்களுக்கான தேசிய ஆணையம் ஓராண்டுக்கு முன்பு மத்திய அரசுக்கு பரிந்துரை வழங்கியது. அமைப்புசாரா தொழில்களுக்கு கடன் வசதி மட்டுமின்றி, சந்தை வாய்ப்பு, தொழில்நுட்பம், காப்பீடு வழங்கவும் இந்த நிதியமைப்பு தேவை. மத்திய அரசின் குறைந்தபட்சப் பொதுத் திட்டத் திலேயே அமைப்புசாராத் தொழில்களுக்கு வசதி ஏற்படுத்தித்தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே அரசு தேவையான நிதி முதலீடு செய்து இந்த பரிந்துரையை உடனடியாக நடைமுறைக் குக் கொண்டு வர வேண்டும்.

அரசின் கடன், மானியங்களைப் பெறு வதில் வழக்கமாக பலனடையும் பெரிய விவசாயிகளைத் தவிர்த்து, சிறிய, ஏழை விவசாயிகள், அமைப்புசாராத் துறையை நம்பி இருப்பவர்கள் பலனடையும் வகையில் ரூ.5 ஆயிரம் கோடி அளவில் திட்டத்தை தேசிய ஆணையம் பரிந்துரை செய்தது. இதையும் அரசு நடைமுறைப் படுத்த வேண்டும்.

மின்சாரம், போக்குவரத்து, தகவல் தொடர்பு போன்ற பொது உள்கட்டமைப்பு களில் நிதி ஒதுக்கி தூண்டிவிடும் நட வடிக்கையை அரசு மேற்கொள்வதன் மூலம் அமைப்புசாரா துறை பொருளாதா ரத்தையும் ஊக்குவிக்க முடியும்.

குறிப்பாக கிராமப்புற சாலை, சந்தை, மின்வசதி, சிறிய நீர்ப்பாசன திட்டங் களை அரசு பொது முதலீட்டைச் செலுத்தி மேம்படுத்த வேண்டும். இதன் மூலம் கிராமப்புற மக்களின் வாங்கும் சக்தி பெருமளவு விரிவடையும். இது உள் நாட்டு தேவையை அதிகரிக்கும். தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதியளிப்பு சட்டத்தை இன்னும் தீவிரமாக நடை முறைப்படுத்துவதன் மூலமும் கிராமப்புற மக்களின் வாங்கும் சக்தியை அதிகரித்து உள்நாட்டுத் தேவையைப் பெருக்க முடியும்.

ஏழ்மையில் துன்புறும் 87 கோடி மக்களை நோக்கி வருமானத்தை மாற்றி விடுவதற்காக வருத்தப்படத் தேவையில் லை. வளர்ச்சியின் இறுதி இலக்கு என்பது சாமானிய மக்களின் நலன்களை மேம்படுத்துவதுதானே? மேலும் 36 கோடி அமைப்புசாராத் தொழிலாளர் களின் சமூகப் பாதுகாப்புக்கு தேசிய ஆணையம் விரிவான திட்டம் தீட்டியுள் ளது. இதை செயல்படுத்த மொத்த உள் நாட்டு உற்பத்தியில் அரை சதவீதம் ஒதுக்கினாலே போதுமானது. இதை நிறைவேற்றுவதன் மூலம் எதிர்பாராத இழப்பு, விபத்துக்களில் இருந்து அந்த மக்களைக் காக்கலாம். அவர்களின் வாங்கும் சக்தியையும் குறையாமல் பாதுகாக்கலாம். இவர்கள் வாங்கும் சக்தி அதிகரிப்பதால் அத்தியாவசியப் பொருட் கள் நுகர்வு அதிகரிக்கும். நாட்டிலுள்ள சிறு, குறு தொழிற்சாலைகளின் உற்பத்தி பெருகும்.

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக மற்ற முதலாளித்துவ நாடு கள் பின்பற்றும் வழிமுறையை நம் நாடும் பின்பற்ற வேண்டியதில்லை. மிகப்பெரிய உள்நாட்டுச் சந்தை இருந்தும் இத்தனை காலமாக அது புறக்கணிக்கப்பட்டு வந் துள்ளது. பொருளாதார வளர்ச்சி ஏற் படுத்த அரசு மேற்கொண்ட நடவடிக் கைகளிலும்கூட இந்த சந்தை இதுவரை புறக்கணிக்கப்பட்டே வந்துள்ளது. தேவையான கடன் வசதி, சந்தை வாய்ப்பு ஏற்படுத்தித் தராமல் பெரும் பிரச்ச னையை இதுவரை சந்தித்து வந்துள்ளது. இதை நிறைவு செய்யும் வகையில் உள் நாட்டு கொள்கை வகுத்தாலே குறைந்த காலஅளவில் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த முடியும். இதன் மூலம் தேசியப் பொரு ளாதாரம் நம்பிக்கையோடு நெருக்கடியில் இருந்து மீண்டு வர முடியும்.

தமிழில் : வே.தூயவன்

No comments: