Showing posts with label environment. Show all posts
Showing posts with label environment. Show all posts

Sunday, April 4, 2010

கடலின் மீது ஒரு சுமை

வற்றாத வளம்கொண்ட கடலின் பெருமை அதை நம்பி வாழும் மீனவர்களுக்கு நன்றாகத் தெரியும். ‘கடல் அம்மா’ என்றுதான் மீனவர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை அழைக்கிறார்கள். கடல் மீனவர்களுக்கு மட்டுமே வாழ்வாதாரம் இல்லை. மனிதகுலத்தின் வாழ்வாதாரமே கடல்தான் என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுவருகிறது. புவிக்கோளத்தின் முக்கால் பரப்பை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும் கடல்தான் நம்முடைய வானிலையைத் தீர்மானிக்கிறது. மனிதர்களின் செயல்பாடுகளால் வளிமண்டலத்தில் வெளிவிடப்படும் கார்பன் டை ஆக்சைடின் கால்பகுதியை கடல்நீர்தான் உறிஞ்சிக்கொள்கிறது. இதனால் புவி வெப்பமடைவது தடுக்கப்படுகிறது.

sea_co2ஆனால் மனித வாழ்க்கையில் இப்போது தொழிலகங்கள் பெருகிவிட்டன. கார்பன் டை ஆக்சைடின் அளவு காற்றில் அதிகரித்து வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் இந்த கார்பன் டை ஆக்சைடின் அளவு அதிகரித்துக்கொண்டே இருப்பதால் கடல்நீரின் CO2 உறிஞ்சு திறன் குறைந்துபோயிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ‘Nature’ தன்னுடைய நவம்பர் 19 ஆம் தேதியிட்ட இதழில் ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு 2.3 பில்லியன் டன்கள் கார்பன் டை ஆக்சைடை கடல் உறிஞ்சிக்கொண்டது. ஆனால் 2000ம் ஆண்டில் இருந்த கடல் நீரின் CO2 உறிஞ்சு திறன் 10 சதவீதம் குறைந்துபோயிருப்பதாக ஆய்வாளர்கள் கணக்கிட்டுள்ளனர். இந்தக்கணிப்பு முன்னரே செய்யப்பட்டிருந்தாலும், இதுபற்றிய அளவீடுகளும் புள்ளிவிவரங்களும் இப்போதுதான் சேகரிக்கப்பட்டுள்ளன.

“காற்றில் கார்பன் டை ஆக்சைடின் அளவு அதிகரிக்கும்போது கடல்நீரின் அமிலத்தன்மை அதிகரிக்கிறது. இதனால் கடல் நீரின் கார்பன் டை ஆக்சைடு உறிஞ்சு திறன் குறைகிறது” என்கிறார் கொலம்பியா பல்கலைக்கழக விஞ்ஞானி சாமர் காட்டிவாலா என்பவர். வளிமண்டலத்தில் தொழிலக கார்பனின் அளவை 1765 ஆம் ஆண்டு முதல் 2008 வரை காட்டிவாலா குழுவினர் ஆய்வு செய்தனர். 1950 ஆம் ஆண்டுவரை எல்லாம் சீராக இருந்தன. ஆனால் 2000 ம் ஆண்டில் கடல் நீரின் CO2 உறிஞ்சுதிறன் கணிசமாக குறையத் தொடங்கியிருந்தது. 1990ம் ஆண்டைக் காட்டிலும் இன்று நாம் கடல்நீரின் மீது 150 பில்லியன் டன்கள் கூடுதலான CO2 வை திணிக்கிறோம்.

நன்றி: மு.குருமூர்த்தி

Friday, February 19, 2010

சமையல் அறையிலும் சூழலை காக்கலாம்

நம் வீட்டின் சமையல் அறைகள் பெருந் தொழிற்சாலைகளின் சிறிய பகுதிகள் போன்றவை. இவை செயல்படும் முறை சூழலுக்கு இணக்கமாகவோ, எதிராகவோ அமையலாம். சமையல் அறைகள் உணவு தயாரிப்பதற்கு மட்டுமானவை என்று நினைத்துவிடக் கூடாது. அவைதான் நமது உடல்நலத்தையும், பூமியின் உடல்நலத்தையும் ஒரு சேரப் பாதுகாக்கக் கூடியவை.

சமையல் அறையில் எரிபொருளையும், தண்ணீரையும் நாம் பெருமளவு சேமிக்க முடியும்.

வீட்டுக்குள்ளே நாம் மிக அதிகமாக எரிபொருள் செலவு செய்யும் விஷயங்களில் ஒன்று கேஸ் ஸ்டவ் அல்லது ஏதாவது ஒரு வகை அடுப்பு. எரிவாயு நன்கு, முழுமையாக எரியும் திறன் கொண்ட எரிபொருள் என்பதால், கேஸ் ஸ்டவ்வை சிம் நிலையில் வைத்தே சமைக்கலாம். எப்பொழுதும் பர்னரை முழுமையாக எரிய விடத் தேவையில்லை. சமைக்க வேண்டிய பொருள் தேவையான கொதி நிலைக்கு வந்த பின், தீயின் அளவைக் குறைப்பதால் 40 சதவீத எரிவாயுவை மிச்சம் பிடிக்கலாம். திரவப் பொருள் என்றால் கொதி நிலை வந்தவுடனும், திடப் பொருட்கள் என்றால் வெந்தவுடனும் தீயை அணைத்து விடவும். குறிப்பாக காய்கறிகளை முழுமையாக வேக வைக்காமல், பாதி வெந்தாலே போதும், முழுமையாக வேக வைக்கும்போது அவற்றிலுள்ள சத்துகள் காணாமல் போய்விடும்.

பாத்திரத்தில் சமைப்பதற்கு பதிலாக பிரஷ்ஷர் குக்கரில் சமைப்பதால் 75 சதவீத எரிபொருளை மிச்சம் பிடிக்கலாம். சமைப்பதற்கு ஆகும் நேரமும் குறையும். பிரஷ்ஷர் குக்கரின் கேஸ்கட் இறுக்கமாக இருக்கிறதா, வெயிட் சரியாக இருக்கிறதா என்பதை அடிக்கடி பரிசோதித்துக் கொள்ளவும். இல்லையென்றாலும் எரிபொருள் வீணாகும்.

அதேபோல் தட்டையான, அடி அகன்ற பாத்திரத்தில் சமைப்பதால் தீ முழுமையாக பயன்படுத்தப்பட்டு வெப்பம் அதிகமாகக் கிடைக்கிறது. மேலும் எதை சமைக்கும்போதும் பாத்திரத்தை மூடி வைக்கவும். இதனாலும் எரிபொருள் மிச்சமாகும்.

குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து கூட்டாகச் சாப்பிடுவதால் அந்நியோன்னியம் கூடும். உணவை பல முறை சூடாக்குவதையும் தவிர்க்கலாம். எப்பொழுதும் தேவையைக் கணக்கிட்டே சமைக்க வேண்டும். சமைத்த உணவை அடிக்கடி பிரிட்ஜில் வைத்து, மீண்டும் சூடாக்குவதால் இரண்டுக்குமே எரிபொருள் செலவாகிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

பொருட்கள் வாங்கக் கடைக்குச் செல்லும்போது கட்டாயம் துணிப்பை எடுத்துச் செல்வோம். சாலையோர கடையில் முன்பெல்லாம் இலையில் கட்டி பூவை கொடுத்துக் கொண்டிருந்தார்கள். இன்று அங்கும்கூட பிளாஸ்டிக் பையே தரப்படுகிறது. பூக்கடை, மளிகைக் கடை, ஜவுளிக் கடை, ஓட்டல் என எதுவென்றாலும் பிளாஸ்டிக் பை தராத பட்சத்தில் நாமே கேட்டு வாங்குகிறோம். ஒரு காலத்தில் வாழை இலை, மந்தாரை இலையில் சுருட்டிக் கொடுத்தது மட்டுமின்றி, அவற்றில் சாப்பிட்ட காலமும் மலையேறி விட்டது.

பிளாஸ்டிக் பையால் ஏற்படும் பிரச்னைகள் நம் அனைவருக்கும் நன்றாகத் தெரியும். இருந்தாலும் துணிப் பை எடுத்துச் செல்லத் தயங்குகிறோம். இந்தத் தயக்கத்தை ஒழிக்க வேண்டும். கடைகளுக்குச் செல்லும் முன்னரே என்னவெல்லாம் வாங்க வேண்டும் என்று யோசித்துக் கொள்ள வேண்டும். இதனால் பல முறை செல்வதைத் தவிர்க்கலாம். அத்துடன் ஒவ்வொரு முறை செல்வதற்கான நேரம், எரிபொருள் இழப்புகளையும் குறைக்கலாம்.

வெவ்வேறு கடைகளுக்குச் செல்ல வேண்டிய பட்சத்தில், முன்கூட்டியே திட்டமிட்டு வரிசையாக ஒவ்வொரு கடைக்கும் சென்று வாங்குவதாலும் மேற்கண்ட இழுப்புகளை குறைக்க முடியும். திட்டமிட்டு செயல்படுவதால் நேரம், எரிபொருள் மிச்சம் அடைவது மட்டுமின்றி நம் அலைச்சலும் குறைகிறது, காசு சேமிக்கப்படுகிறது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

Thursday, February 11, 2010

பூமிக்கடியில் நியூட்ரினோ ஆராய்ச்சி மையம்

தேனி மாவட்டத்தில் பொட்டி புரம் அருகில் மேற்குத் தொடர்ச்சி மலையின் அழுத்தமான பாறை களுக்குக் கீழே பூமிக்கடியில் ஓரி டத்தை நியூட்ரினோ ஆராய்ச்சி மையம் (ஐனேயை-யௌநன சூநரவசinடி டீளெநசஎயவடிசல-ஐசூடீ) ஒன்றினை அமைப்பதற்குப் பொருத்தமான இடமாக புவியலாளர்கள் தேர்வு செய்துள்ளனர். இதற்கான ரூ. 900 கோடி நிதியை நமது அணுசக்தித் துறையும், அறிவியல் தொழில் நுட்பத் துறையும் வழங்க இருக்கின் றன. தமிழ்நாட்டு மலைகளில் `சார் னோக்கைட்’ என்ற வகை கடின மான பாறைகள் இருப்பதால், இப் படிப்பட்ட நிலையத்தை அமைப்ப தற்கு ஏற்ற இடமாக அவை கருதப்படுகின்றன. முதலில் இதே மாதிரி அழுத்தமான பாறைகள் உள்ள நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சிங்காரா மலைப்பகுதியில் இந்த நிலையத்தை அமைப்பதாக முடிவு செய்திருந்தனர். ஆனால் அந்த இடம் பந்திபூர்-முதுமலை புலிகள் சரணாலயத்தின் அருகே இருந்ததாலும், யானைகள் வரத்து அதிகம் உள்ள இடமாக இருந்த தாலும் அந்த முடிவு பிறகு கை விடப்பட்டது.

மிகப் பெரிய திட்டம்

அடிப்படை அறிவியல் ஆராய்ச் சியில் ஒரு மிகப் பெரிய திட்டம் தான் ஐசூடீ. அதிக சக்தி இயற்பிய லில் (ழiபா நநேசபல யீாலளiஉள) முக் கியமான ஆய்வுகளை இது மேற் கொள்ள இருக்கிறது. இயற்பியலில் இதுவரை விடை தெரியாத கேள்வி களுக்கு விடை கண்டுபிடிக்கும் விதத்தில் உலகத்தரம் வாய்ந்ததாக இந்த மையம் அமைக்கப்பட உள் ளது. இப்படிப்பட்ட ஒரு நிலையம் அமைப்பது பற்றி 1989-ம் ஆண்டு முதலே பரிசீலனை செய்யப்பட்டு வந்தாலும், தற்போது தான் அது நிறைவேறும் கட்டம் வந்திருக் கிறது. கூஐகுசு-ன் மேற்பார்வையில், 25 அறிவியல் நிறுவனங்களும், 90 விஞ்ஞானிகளும் இத்திட்டத்தில் பங்கேற்க உள்ளனர். பல் வேறு துகள்கள் பற்றியும் பிர பஞ்சம் உருவான விதம் பற்றியும் நட்சத்திரங்களில் தொடர்ந்து உற்பத்தியாகும் சக்தி பற்றியும் மேலும் பல தகவல்களை அறிந்து கொள்ள இந்த மையம் உதவி செய்ய இருக்கிறது. மாணவர்கள் தங்கள் ஆய் வுத்திட்டங்களை மேற் கொள்ளத் தகுந்த இடமாக வும் இந்த நிலையம் அமைய வாய்ப்பிருக்கிறது.

கனடா, ஜப்பான், இத் தாலி, அமெரிக்கா ஆகிய நான்கு நாடுகள்தான் இது வரை நியூட்ரான் ஆய்வு மையங்களை அமைத்துள் ளன. அடுத்து இந்தியாவில் தான். எனவே, இந்த மையம் பற்றி உலக அளவி லேயே விஞ்ஞானிகள் ஆர் வம் செலுத்தத் தொடங்கி யுள்ளனர்.

நியூட்ரினோக்கள் என்றால்...

பிரபஞ்சத்தில் உள்ள அடிப்படை துகள்க ளில் ஒன்றுதான் நியூட்ரினோ. இதன் பொருட்திணிவு எலெக்ட்ரானின் பொருட் திணிவுக் குச் சமமானது. ஆனால் நியூட்ரா னில் மின்னேற்றம் கிடையாது. அதனால் எலெக்ட் ரானைப் போல இது மின்காந்த விசையினால் எந்த பாதிப்பையும் அடையாது. அணுவுக்குள் உள்ள பலவீனமான ஈர்ப்பு விசையினால் மட்டுமே அது ஈர்க்கப்படும் என்ப தால், பொருட்களின் ஊடாக அது எளிதாகச் செல்ல முடியும். எனவே, அதைக் கண்டுபிடிப்பது மிக சிரமமானது. சூரியனும் பிற நட்சத் திரங்களும் நியூட்ரான்களைத் தொடர்ந்து உற்பத்தி செய்து கொண்டே இருக்கின்றன. பிரபஞ் சத்தில் உள்ள துகள்களில் அதிக எண்ணிக்கையில் உள்ளவை இவைதான். அவை பூமிக்கு எவ்வி தத் தடையுமின்றி வந்து சேருகின் றன. அத்தோடு வேறு துகள்களும் இப்படி வந்து சேருகின்றன. ஆனால் ஆராய்ச்சி மையத்தின் மேலுள்ள கடினமான பூமிப்பகுதி நியூட்ரான்களைத் தவிர வேறு துகள்கள் அனைத்தையும் தடுத்து நிறுத்திவிடும்.

கதிர்வீச்சு பயம் தேவையற்றது

பூமியின் மேற்பரப்பில் காஸ்மிக் கதிர்களிடமிருந்தும் இயற்கையி லேயே கதிர்வீச்சை வெளியிடும் தனிமங்களாலும் கதிர்வீச்சு இருந்து கொண்டேதான் இருக் கிறது. இந்த கதிர்வீச்சின் பாதிப்பு எதுவுமின்றி நியூட்ரான்கள் மீது ஆராய்ச்சி நடத்த வேண்டும் என் பதால்தான் ஆராய்ச்சி மையத் தையே பாறைகளுக்கடியில் -அதுவும் சுமார் 1300 மீட்டர் (4265 அடி) ஆழத்தில் - அமைக்க வேண் டியிருக்கிறது. அப்படியிருக்க அந்த மையத்திலிருந்து கதிர்வீச்சு அபாயம் இருக்கும் என்று கூறுவ தற்கு எந்த அறிவியல் அடிப்படை யும் கிடையாது. கதிர்வீச்சு பாதிப்பு இருக்கும் என உள்ளூர் மக்களும், சுற்றுச்சூழலாளர்களும் கருதிய தால், அவர்களது அச்சத்தைப் போக்கும் நோக்கத்தில் அண் மையில் தேனி மாவட்டத்தில் விஞ் ஞானிகள் ஒரு விழிப்புணர்வுக் கூட் டம் நடத்தினர். மும்பையில் உள்ள டாடா அடிப்படை அறிவியல் ஆய்வு மையத்தைச் (கூயவய ஐளேவவைரவந டிக குரனேயஅநவேயட சுநளநயசஉா- கூஐகுசு) சேர்ந்த நோபா கே.மோண்டல், உள்ளூர் மக்களின் ஆதரவோடும் ஒத்துழைப்போடும்தான் இத்திட்டம் நிறைவேற்றப்படும் என்று உறுதி யளித்தார். மரங்களை வெட்டத் தேவையில்லை என்றும், மக்கள் இடம் பெயரத் தேவையிருக்காது என்றும் அவர் குறிப்பிட்டார். தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் மக்களிடம் இது குறித்து பிரச்சாரம் செய்ய இருக்கிறது.

தேவையான விளக்கங்களைப் பெறுவோம். ஆதாரமற்ற அச்சங் களைத் தவிர்ப்போம் !

நன்றி: தீக்கதிர்

Saturday, January 30, 2010

ஓசோன் மெலிவு மனிதருக்கு நலிவு

21 ஆம் நூற்றாண்டில் ஓசோன் படலமே இல்லாமல் செய்துவிடுவது என்று மனிதகுலம் கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுவதாகத் தோன்றுகிறது. National Oceanic and Atmospheri Administration (NOAA) என்னும் அமைப்பு வெளியிட்டுள்ள முடிவுகள் இப்படித்தான் நம்மை சிந்திக்கத்தூண்டுகின்றன. பூமியில் வாழும் தாவரங்களும், விலங்குகளும் சூரியனில் இருந்து வெளிப்படும் அதிகப்படியான புற ஊதாக்கதிர்களால் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு ஒசோன் படலம் உதவியாக இருக்கிறது. ஒசோன் படலம் மெலிந்துபோனால் சூரியனிடமிருந்து வெளிப்படும் புற ஊதாக்கதிர்கள் மிக எளிதாக பூமிப்பரப்பை வந்து சேரும். இதனால் பூமியில் வாழும் தாவரங்கள், நீர்வாழ் விலங்குகள், மனிதர்களின் உடல்நலம் இவற்றில் பாதகமான மாற்றங்கள் ஏற்படும்.

சர்வதேச சமுதாயத்தால் வெறுத்து ஒதுக்கப்பட்ட chlorofluorocarbonகளின் அளவு வளிமண்டலத்தில் இப்போது குறையத் தொடங்கியிருந்த போதிலும், ஓசோன் படலத்தை மெலிதாக்கும் நைட்ரஸ் ஆக்சைடின் அதிகரிப்பு மனித குலத்தை அச்சுறுத்திவருகிறது. நைட்ரஸ் ஆக்சைடின் அளவு வளிமண்டலத்தில் இப்போது இரண்டு மடங்கு அதிகரித்திருக்கிறதாம். அதுவும் மனிதர்களின் செயல்பாடுகளால் அதிகரித்திருக்கிறது என்பதுதான் ஆய்வாளர்கள் தரும் எச்சரிக்கை மணி. பூமிப்பந்தின் பல்வேறு இடங்களில் இருந்து திரட்டப்பட்ட காற்று மாதிரிகளை ஆராய்ந்தபிறகு NOAA ன் விஞ்ஞானிகள் இந்த முடிவிற்கு வந்திருக்கிறார்கள்.

ஓசோன் படலத்தை மெல்லியதாக்கும் வாயுக்கள் ஹலோஜன் குடும்பத்தைச் சேர்ந்த குளோரின் மற்றும் புரோமின் வாயுக்கள்தான். 1987ல் ஏற்பட்ட மாண்ட்ரீல் ஒப்பந்தத்தில் ஓசோன் படலத்தை ஓட்டையாக்கும் chlorofluorocarbon மற்றும் ஹலோஜன் குடும்பத்தைச் சேர்ந்த குளோரின், புளோரின் வாயுக்களுக்கு கடிவாளம் போடப்பட்டது. ஆனால் நைட்ரஸ் ஆக்சைடின்மீது எந்தவித கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. நைட்ரஸ் ஆக்சைடு பசுமை வாயுக்களுள் ஒன்று. எனவே புவிவெப்ப அதிகரிப்பிற்கும் இந்த வாயு காரணமாக இருக்கிறது. இத்துடன் ஓசோன் படலத்தைக் குறைப்பதற்கும் இந்த வாயுவே காரணமாக இருக்கிறது. ஏறத்தாழ வளிமண்டலத்தில் உள்ள மூன்றில் ஒரு பங்கு நைட்ரஸ் ஆக்சைடு மனிதர்களின் செயல்பாடுகளால் வெளியிடப்பட்டவை. மண்ணிற்கு உரமிடுதல், கால்நடைகளின் கழிவுகள், கழிவுநீர் சுத்திகரிப்பு, பெட்ரோல் டீசல் எஞ்சின்களின் செயல்பாடு இவற்றால் நைட்ரஸ் ஆக்சைடு வெளியிடுதல் அதிகரிக்கிறது.

நன்றி: குருமூர்த்தி

Monday, June 22, 2009

அழிவின் விளிம்பில் பவளப்பாறைகள்

பவளப்பாறகள் அழிந்து போவதற்கான காரணங்கள் வெளிச்சத்துக்கு வரத்தொடங்கியுள்ளன. புவிவெப்பமடைவதும் கடல்நீரில் அமிலத்தன்மை கூடுவதும் பவளப்பாறைகளின் அழிவுக்கு முக்கியமான காரணங்கள் என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. பவளப்பாறைகளை அழியாமல் காப்பது எப்படி என்பதும்கூட இந்த ஆய்வுகளில் அடங்கும்.

Pavalapaarai பவளங்கள் என்பவை மிகச்சிறிய உயிரினங்கள். மரபியல் ரீதியாக ஒத்த உருவமுடையவை. இவை தாவர உயிரிகளை உண்டு வாழக்கூடியவை. பவளங்கள் தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்ளக்கூடியவை. வளர்சிதைமாற்றத்தின்போது கால்சியம் கார்பனேட் என்னும் வேதிப்பொருளை இவை சுரக்கின்றன. கால்சியம் கார்பனேட் படிவுகளின்மீதுதான் பவளங்கள் அமர்ந்துகொள்கின்றன. இவ்வாறு தோன்றும் படிவுகள் நீண்டகாலம் நிலைத்து பவளப்பாறைகளாக உருவெடுக்கின்றன. இந்த பவளப்பாறைகளில் சுமார் 4,000 வகையான கடல்வாழ் உயிரினங்கள் குடியிருக்கின்றன.

பவளங்கள் தம்முடைய உணவை தாமே தயாரித்துக் கொள்வது இல்லை. பவளங்களுக்குள் வாழும் ஆல்காக்கள் தங்களுடைய பச்சையத்தின் உதவியாலும் சூரிய ஒளியின் உதவியாலும் ஒளிச்சேர்கை செய்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த ஆல்காக்களின் குளுக்கோஸ் உற்பத்தி செய்யும் திறன் அபாரமானது. ஆல்காக்கள் உற்பத்திசெய்யும் குளுக்கோஸை உண்டு பவளங்கள் செழிக்கின்றன. மாறாக, பவளங்களில் இருந்து வெளியாகும் நைட்ரஜன் கழிவுகள் ஆல்காக்களுக்கு உணவாக பயன்படுகிறது. கடல் நீரில் நைட்ரஜன் கிடைப்பது அரிது. பவளங்கள் வெளிப்படுத்தும் கழிவுகளில் இருந்து ஆல்காக்களுக்கு தேவையான நைட்ரஜன் கிடைப்பது இயற்கையின் விந்தைகளுள் ஒன்று.,

மனித உடலைப்போன்றே பவளங்களிலும் சிக்கலான மரபியல் கூறுகள் உள்ளன. சுற்றுப்புறத்தில் ஏற்படும் மாற்றங்கள் இந்த மரபியல் கூறுகளை பாதிப்படையச் செய்கின்றன. 250 மில்லியன் ஆண்டுகள் இந்த பவளப்பாறைகள் தங்களுடைய வாழ்க்கைப் பயணத்தை நிறைவு செய்து விட்டன. ஆனால் இப்போது ஏற்பட்டுவரும் சுற்றுப்புற மாற்றங்களால் இந்த பவளப்பாறைகளில் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கிவிட்டன. இவற்றுள் பவளப்பாறைகள் வெளுக்கத் தொடங்கியதும் அடக்கம். நெடுங்காலம் ஆபத்தின்றி வாழ்ந்துவிட்ட பவளப்பாறைகளுக்கு மனிதன் எதிரியாகிப் போனது அவமானகரமான செய்தி அல்லவா?

புவி வெப்ப மாறுபாடுகளால் பவளப்பாறைகள் அழிவை எதிர்நோக்கி வருவதாக ஓரிகான் மாகாண பல்கலைக்கழக விலங்கியல் பேராசிரியர் வர்ஜீனியா வீஸ் கூறுகிறார். பவளப்பாறைகள் எதிர்நோக்கியுள்ள சிக்கல்கள் ஏராளம். கடல்நீரின் வெப்பநிலை உயர்வு, கடல்நீர் மாசுபடுதல், வரைமுறையற்ற மீன்பிடித்தம், வண்டல் படிவு, அமிலத்தன்மை அதிகரிப்பு ஆகியவற்றால் பவளப்பாறைகள் அழிந்து வருகின்றன. ஏறத்தாழ 20 சதவீத பவளப்பாறைகள் ஏற்கனவே அழிந்துவிட்டதாகவும், இன்னும் 24 சதவீத பவளப்பாறைகள் அழிவை எதிர்நோக்கியிருப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கடல்நீரின் அமிலத்தன்மை கூடுவதால் அடுத்த நூற்றாண்டில் பவளப்பாறைகள் உருவாவது 50 சதவீதமாக குறையும் என்றும், இருக்கும் பவளப்பாறைகளும் அமிலத்தன்மையால் கரையத்தொடங்கும் என்றும்கூட ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.
நன்றி: மு.குருமூர்த்தி

Saturday, June 13, 2009

தொழில் வளர்ச்சியும் சுற்றுச்சூழலும்



உலகம் ஒருபுறம் இன்று பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருக் கிறது. இன்னொரு புறம் சுற்றுச்சூழல் நெருக்கடியையும் சந்தித்து வருகிறது. தொழில் வளர்ச்சி பெற்ற நாடுகள் பல் லாண்டு காலமாகத் நிலக்கரி, பெட்ரோல் போன்ற தொல் எரிபொருட்களை (கடிளளடை கரநடள) அதிக அளவில் பயன்படுத்தியே தொழில் துறையில் வேகமாக முன்னேறி இன்றைய வளர்ச்சியை எட்டியிருக்கின்றன. தொல்எரிபொருட்களைப் பயன்படுத்தி வந்ததன் காரணமாக காற்று மண்டலத்தில் பசுங்கூட வாயுக்கள் (பசநநnாடிரளந பயளநள) சேர்ந்ததற்கும் சுற்றுச்சூழல் பேராபத்துகள் உலகைத் தாக்கத் தொடங்கியிருப்பதற்கும் அந்த நாடுகளே பெருமளவுக்குக் காரண மாகவும் இருக்கின்றன.

ஆபத்து நெருங்கிவிட்டது !

பூமி சூடேறி வருவதையும் அதன் பாதக மான விளைவுகள் பற்றியும் அறிவியல் கதி ரில் ஏற்கனவே விரிவாகப் பார்த்திருக்கி றோம். பல தீவுகள் கடலுக்கடியில் மூழ்கி விடக் கூடிய ஆபத்து நெருங்கிக் கொண்டி ருக்கிறது. 3 லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட மாலத் தீவுகள் நாடு மக்களை இடம்பெயரச் செய்து, அவர்களைக் காப்பாற் றுவது பற்றி யோசிக்கத் தொடங்கியிருக் கிறது. உணவு உற்பத்தி மிகவும் தேவைப் படும் வறிய நாடுகளில் உற்பத்தி குறையத் தொடங்கிவிட்டது. 2015ஆம் ஆண்டில் உல கில் சுமார் 40 கோடி மக்கள் பாதிக்கப்பட உள்ளனர். இவர்களில் பெரும்பான்மையோர் வறிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்தாம். 2015 எங்கோ தொலைதூரத்தில் இல்லை. இன்னும் ஆறே ஆண்டுகள்தாம் இருக்கின்றன.

வளர்ந்த நாடுகள் தங்களது பசுங் கூட வாயுக்கள் வெளியீட்டினை 1990ல் இருந்த அளவுக்குக் குறைத் துக் கொள்ள வேண்டுமென சீனாவும், ஜி-77 நாடுகளும் கோரி வருகின்றன. அத்தோடு வளரும் நாடுகள் தங்களது கார்பன் வெளியீட்டைக் குறைத்துக் கொண்டு, தொழில் வளர்ச்சி பாதிப்பை ஏற்றுக் கொள்ள வேண்டுமானால், வளர்ந்த நாடுகள் அதை ஈடுகட்டும் விதத்தில் நிதியுதவி செய்ய வேண்டு மெனவும் அவை கோருகின்றன. மெக்சிகோ நாடு உலக தட்பவெப்ப நிதிக்கு ஒவ்வொரு நாடும் எவ்வளவு கொடுக்க வேண்டும் என்று கணக்குப் போட்டுக்கூட வைத்துவிட்டது !

நாட்டின் கணக்கும்

தனிநபர் கணக்கும்

1997-இல் கியோட்டோ மாநாடு விதித்த நிபந்தனைகளை அமெரிக்கா ஏற்க மறுத்துவிட்டது. ஆனால் இன்று ஒபாமா அதிபராக வந்தபிறகு, கார்பன் வெளியீட்டைக் கட்டுப்படுத்த சர்வதேச அளவில் எடுக்கப்படும் முயற்சிகளுடன் ஒத்துழைக்க அமெரிக்கா முன்வந்துள்ளது. அதே சமயம் இந்தியாவும் சீனாவும் தங்க ளது கார்பன் வெளியீட்டைக் குறைத்துக் கொள்ளவேண்டும் என்று அமெரிக்கா நிர்ப்பந்தம் கொடுத்து வரு கிறது. உலகின் கார்பன் வெளியீட்டில் 16 சதத்திற்கு அமெரிக்காவும் சீனாவும் காரணம். ஆனால் ஒரு நப ருக்கான கணக்கு என்று வரும் போது ஒரு அமெரிக் கர் 20 டன் வெளியீட்டிற் குப் பொறுப்பு எனும்போது, ஒரு சீனப்பிரஜை 4 டன் னுக்கு மட்டுமே பொறுப்பு. ஒரு இந்தியரின் பங்கு 1 டன் மட்டுமே.

ஐரோப்பா காட்டும் வழி

நமக்கு தொழில்வளர்ச்சி வேண்டும். மக்களின் வாழ்க்கைத்தரம் உயர வேண் டும். அதே சமயம், நமது சுற்றுச் சூழலையும் பாதுகாத்தாக வேண்டும். ஐரோப்பாவில் சைக்கிள்கள் உபயோகிப்பது, பொதுப் போக்குவரத்தை மேம்படுத்துவது, சாலை நெருக்கடி நிறைந்த மாநகரங்களுக்குள் தனியார் வாகனங்கள் நுழைய வரிகள் விதிப்பது போன்ற நடவடிக்கைகள் எடுத்த தன் காரணமாக காற்று சுத்தமடைந்து வரு கிறது. சாலை நெருக்கடி குறைந்து இனி மையான பயணம் கிடைக்கத் தொடங்கி யிருக்கிறது. இந்தியாவில் இத்திசையில் முயற்சிகள் எதுவுமே செய்யப்பட வில்லையே? சூரிய வெப்பம் அபரிமிதமாகக் கிடைக்கும் நம் நாட்டில், அதிலிருந்து நமக்கு வேண்டிய சக்தியைப் பெற நாம் எடுத்துவருகிற முயற் சிகள் நிச்சயம் போதுமானவையல்ல. அதே போல, காற்றிலிருந்தும் கடல் அலைகளிலி ருந்தும் நாம் இன்னும் அதிகமான சக்தி யைப் பெற முடியும். ஆனால் செய்கிறோமா?

பூமி சூடேறுவதைத் தடுக்க உலக அள வில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை கள் குறித்து கவனம் செலுத்துவது அவசி யம்தான். ஆனால் அந்த முயற்சிகள் வெற்றி பெறும்வரை நாம் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. நம் நாட்டிலுள்ள ஏழை எளிய மக்கள் வறட்சி, வெள்ளம், வேலை யின்மை காரணமாக நகரங்களை நோக்கி இடம் பெயரும் சுற்றுச்சூழல் அகதிகளாகத் தான் இருக்கின்றனர். சுத்தமான காற்று, குடிநீர், பசுமையான சுற்றுப்புறம் ஆகியவற் றைப் பெற நாம் முயற்சி செய்வதோடு இந்த இலக்குகளை நோக்கி அரசை இயங்கவைக்க நிர்ப்பந்தம் செலுத்தவும் வேண்டும்.

Monday, June 8, 2009

புவிப் பந்தைக் காப்போம்; மனிதனைக் காப்போம்!

இரயுமன்துறை - தமிழகத்தின் வரைபடத்தில் பூத கண்ணாடியால் பார்த் தால் கூட ஒரு நுண்ணிய புள்ளியாக தோன்றும் இந்த மீன்பிடி மக்கள் வாழும் கிராமம் இன்னும் சில வருடங்களில் அழிந்துவிடும் அபாயம் பற்றி எத்தனை பேருக்கு தெரிந்திருக்கும்?

கன்னியாகுமரி மாவட்டத்தில் அரபிக்கடலுக்கும் வற்றாத தாமிரபரணி நதிக்கும் ஏவிஎம் கால்வாய் ஆகிய மூன்றுக்கும் நடுவில் அமைந்திருக்கும் சிறிய கிராமம் இது. இதற்கு 700 மீட்டர் தொலைவில் கடலும் ஆறும் இருந்தன. இன்று இந்த இடைவெளி 50 மீட்டராக குறைந்துவிட்டது. தொடர்ந்த கடல் அரிப்பின் விளைவாக 650 மீட்டர் நீள முள்ள மண் பகுதியை கடல் விழுங்கிக் கொண்டது.

1982ம் ஆண்டில் இக்கிராமத்தில் 8 தெருக்களும் 7000 மக்களும் குடியிருந் தனர். கடல் அரிப்பின் விளைவாக 5 தெருக்களில் இருந்த வீடுகள் சிதைந்து விட்டன. மக்களின் எண்ணிக்கை 2500 ஆக ஆகிவிட்டது. வீடுகளை, தொழிலை இழந்த வசதி படைத்த மக்கள் சமத்துவ புரத்திற்கும் நாகர்கோவிலுக்கும் புலம் பெயர்ந்துவிட்டார்கள். வேறு யார் எஞ்சி யிருக்க முடியும். மீன்பிடித்தலைக்கூட கூலிக்கு செய்து பிழைக்கும் ஏழை மக்கள்தான் அங்கு மிஞ்சியுள்ளார்கள். கிராமத்தின் மேற்குபுறத்தில் தடுப்புச் சுவர் கட்டினால்தான் மண்அரிப்பை தடுக்க முடியும். அப்படி கட்டப்படும் சுவரால் தங்கள் கிராமம் பாதிக்கப்படும் என்று அண்டையில் உள்ள கிராமத்தார் தடுப்புச் சுவர் கட்டப்படுவதை எதிர்க் கிறார்கள். இதுபோன்ற அழிவை இப் பகுதியில் வேறு எந்த கிராமமும் சந்திக்கவில்லை. அரசின் கவனத் தையும் அதிகாரிகளின் இரக்கத்தையும் ஈர்க்க மக்கள் செய்த முயற்சிகள் பலிக்கவில்லை.

இது ஒன்றும் ஓர் தனிப்பட்ட நிகழ் வல்ல. தரங்கம்பாடியில் மாசிலாமணி நாதர் ஆலயமும், சுந்தரவனச் சதுப்பு நிலத்தீவுகளும் இந்தியாவில் பாதிக்கப் பட்டு வருகின்றன. தன்னை அழிக்கும் மனிதர்களை எச்சரிக்கும் இயற்கையின் சீண்டல்கள் இவை.

சீண்டப்படும் பஞ்சபூதங்கள்

உலகெங்கும் இதுபோன்ற சம்ப வங்கள் நடந்தவண்ணம் உள்ளன. சுற்றுச் சூழலை மனிதன் சிதைக்கும் நிகழ்ச்சி உலகெங்கும் நடந்து வருகிறது. எவ ரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்த அப்பு ஷெர்பாவும், அவருடைய குழுவும் 5 டன் எடையுள்ள கழிவுகளை சிக ரத்தின் உச்சியிலிருந்து கீழே கொண்டு வந்துள்ளார்கள்.

அண்டார்டிக் ஒரு பனிப் பிரதேசம். அங்கு விவசாயம் என்பதே கிடையாது. ஆனால் அங்குள்ள பனிக்கட்டிகளிலும் கடல் நீரிலும் உரத்துகள்கள் படிந்துள் ளதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ள னர். உலகின் மிகப்பெரிய வனமான அமே சான் சுருங்கி வருகிறது. ஆர்க்டிக் பெருங் கடலில் பனிக்கட்டி உருகுவதால் பிரிட் டிஷ் கடலையும் ஜப்பானிய கடலையும் இணைக்கும் வண்ணம் பெரும் படகு செல்லக்கூடிய பாதை தோன்றியுள்ளது.

இந்திய வனங்களில் புலிகள் மறைந்து வருகின்றன. ஆப்பிரிக்காவில் யானைகளும் இரட்டைக் கொம்பு காண் டாமிருகங்களும் குறைந்து வருகின்றன. இந்தோனேசியாவில் உராங் உட்டான் குரங்குகள் மட்டுமல்ல; ஆப்பிரிக்க கொரில்லாக்களும் மறைந்து வருகின்றன. கடல்களில் பவளப்பாறைகள் அழிந்து வருகின்றன. மொத்தத்தில் கூறினால் உலகில் தோன்றிய இனங்களில் பறவை களில், மிருகங்களில், மீன்களில் எஞ்சி யிருப்பது 10 சதவீதம் மட்டுமே.

கடல்கள் திடீரென்று உள்வாங்கு கின்றன அல்லது சீறிப் பொங்குகின்றன. ஆற்றுநீரில் வேதியியல் கழிவுகள் கலப்ப தால் அவற்றின் நீர் பாசனத்துக்கும் குடிப்பதற்கும் அருகதையற்றவையாகி விட்டன. காற்று மாசடைகிறது. தொழிற் சாலைகள் கக்கும் புகைகளும், போக்கு வரத்து சாதனங்கள் (கப்பல், விமானம்) வெளியிடும் வெப்பமும் காற்று மண்டலத் தின் அடித்தளத்தை ஆட்டுவிக்கின்றன.

வீடுகளில், ஊர்களில்

கங்கை, கோதாவரி போன்ற ஆறு களில் மிதக்கும் பிளாஸ்டிக் பாட்டில்கள், ஆறுகளின் இயல்பை அழித்துவிடு கின்றன. குளிர்பானங்களுக்காக சுரண் டப்படும் நிலத்தடி நீர் பூமியின் சமச்சீர் நிலையை மாற்றுகின்றன. விவசாயத் துக்கு பயன்படுத்தப்படும் செயற்கை உரங்கள் நிலத்தின் மாண்பை சீரழிப் பதுடன் நிலத்தடி நீரையும் நஞ்சாக்கு கின்றன. போதாததற்கு மரபணு விதை கள் வேறு, அழிவை ஏற்படுத்துகின்றன.

தெருக்களில் கொட்டப்படும் பிளாஸ் டிக் பைகள், மண்ணையும் வாயுவையும் நாசமாக்குகின்றன. இவை விரைவில் மக்குவதில்லை. பிளாஸ்டிக் பைகளை குவித்து வைத்து எரிப்பதால் காற்று பாழாகிறது. வீடுகளில் கழிவறைகளை, பளிங்குத்தரைகளை பளபளக்க வைக்க பயன்படும் வேதியியல் பொருட்கள் சாக்கடைகளையும் நாசமாக்குகின்றன. இவைகள் அனைத்தும் சுற்றுச்சூழலை நாசமாக்கும் காரணிகளில் ஒருசிலவே.

நாம் என்ன செய்ய வேண்டும்?

விற்பனை மையங்களில் பிளாஸ்டிக் பைகளை மறுப்போம். ஆடம்பரம், பகட்டு கருதி துணிப்பைகளை மறுப்பதை நிறுத்துவோம். பிளாஸ்டிக் பைகளை தெருக்களில் வீசாமல் சேமித்து வைத்து குப்பை வண்டிகளில் கொட்டுவோம். மரங்களை நடுவோம். வீடுகளில் செம்பருத்தி, துளசி, மாதுளை போன்ற செடிகளை வளர்ப்போம். இவ்வாண்டு 700 கோடி மரங்களை நடுவது என்று ஐ.நா. இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்கு ‘கோடி மரங்கள் இயக்கம்’ என பெயரிடப்பட்டுள்ளது. இதில் நாமும் இணைவோம்.

எரிசக்தியை உருவாக்கும் முறை களில் புகைவிடும் முறைகளை அகற்று வோம். எரிசக்தி சேமிப்பில் கவனம் செலுத்த வேண்டும். அறைகளில், அலுவலகங்களில் அநாவசியமாக எரியும் மின் விளக்குகளை அணைப் போம். சுழலும் மின்விசிறியை நிறுத்து வோம். தண்மையான நேரங்களில் குளி ரூட்டும் சாதனத்தை பயன்படுத்துவதை தவிர்ப்போம். வீட்டில் துணிமணிகளை துவைக்க சுற்றுச்சூழல் நட்புடைய பொருட்களை பயன்படுத்துவோம். மக்கும் குப்பைகளை உரமாக்குவோம். மக்காத குப்பைகளை மறுசுழற்சிக்கு அனுப்புவோம். நாம் செய்ய வேண்டியதை பற்றி இங்கு கூறியுள்ளது குறைவே. இன்னும் ஏராளம் உண்டு.

‘உங்கள் கிரகம் உங் களை நாடுகிறது-தட்பவெப்ப மாற்றத்தை எதிர்க்க ஒன்று படுங்கள்’ என்ற பதங்களை இவ்வாண் டின் சுற்றுச்சூழல் பாது காப்பு முழக்கமாக ஐ.நா. புவியில் வாழும் மக்கள் முன்வைத் துள்ளது. மனித இனம் வாழ பூவுலகு வேண்டும். பூவுலகம் தழைக்க மனித இனம் வேண்டும். பூமியும், மனிதனும் ஒன்றுக்கொன்று அனுசரணையாக, இணையாக, துணையாக இருப்பதுடன் ஒன்றையொன்று ஈடு செய்ய வேண்டும். அந்த அரிய பணியில் நம்மை நாமே அர்ப்பணிப்போம்.
நன்றி: தாஸ்

Friday, June 5, 2009

பிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள்

பிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள்
ஆதி

- ஒரு பிளாஸ்டிக் பையின் சராசரி பயன்படும் நேரம் வெறும் 20 நிமிடங்கள் மட்டுமே. ஆனால் அது மக்குவதற்கு ஆகும் காலமோ நூற்றுக்கணக்கான ஆண்டுகள். வகையைப் பொருத்து இந்தக் காலம் மாறுபடும்.

Plastic waste - கடலில் மிதந்து கொண்டிருக்கும் கழிவுகளில் 90 சதவீதம் பிளாஸ்டிக்கே

- தற்போது உற்பத்தி செய்யப்படும் பிளாஸ்டிக்கில் வெறும் 7 சதவீதம் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது. அதாவது மறுபடி பயன்படுத்தப்படுகிறது. அப்படியானால், சென்னையில் ஒரு நாளில் மட்டும் கொட்டப்படும் கழிவு பிளாஸ்டிக்கின் அளவு 1,86,000 கிலோ.

சென்னை, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய நகரங்கள் தனித்தனியாக ஒரு நாளைக்கு 2,00,000 கிலோ (200 முதல் 250 டன். டன் என்றால் ஆயிரம் கிலோ) பிளாஸ்டிக் கழிவை உருவாக்குகின்றன. இதில் பாதி பிளாஸ்டிக் கழிவுகள் மட்டும் 4 சதுர கிலோ மீட்டர் பரப்பை அடைத்துக் கொள்ளும் தன்மை கொண்டவை. அடிக்கடி வீட்டுச் சாக்கடை, தெருச் சாக்கடை, மழைக்காலங்களில் மழை நீர் வடிகால் குழாய் போன்றவை அடைத்துக் கொண்டு நாறுவதற்கும், வெள்ளக் காடாவதற்கும் இந்த பிளாஸ்டிக்கே காரணம். இப்படி அடைத்துக் கொள்வதால் கழிவுநீர் தேங்குகிறது. ஆட்கொல்லி நோய்களைப் பரப்பும் கொசுக்கள், கிருமிகள் பல்கிப் பெருகி நோய் தாக்குவதற்கு நாமே வாய்ப்பு உருவாக்கித் தருகிறோம்.

நாம் அனைவரும் கவனக்குறைவாக வெளியேற்றும் கீழ்க்காணும் கழிவுகள்தான் நகராட்சி பிளாஸ்டிக் கழிவுகளில் 50 சதவீதத்தை உருவாக்குகின்றன.

- கேரி பேக்குகள்
- காய்கறி கேரி பேக்குகள்
- மளிகைப் பொருள் அடைக்கப்பட்ட பிளாஸ்டிக் பைகள்
- பேக்கேஜிங் பைகள், சுருள்கள்
- வீட்டு குப்பை பைகள்
- வணிக குப்பை பைகள்
- தொழிற்சாலை லைனர்கள்
- மருத்துவ, ஹோட்டல் குப்பை பைகள்

மக்கிப் போவதற்கு ஆகும் காலம்

பிளாஸ்டிக் பைகள் 100-1000 ஆண்டுகள்

வாழைப்பழத் தோல் - 2-10 நாட்கள்
பஞ்சுக் கழிவுகள் - 1-5 மாதங்கள்
காகிதம் - 2-5 மாதங்கள்
கயிறு - 3-14 மாதங்கள்
ஆரஞ்சு தோல் - 6 மாதங்கள்
உல்லன் சாக்ஸ் - 1-5 ஆண்டுகள்
டெட்ரா பேக்குகள் - 5 ஆண்டுகள்
தோல் காலணி - 25-40 ஆண்டுகள்
நைலான் துணி - 30-40 ஆண்டுகள்
தகர கேன் - 50-100 ஆண்டுகள்
அலுமினிய கேன் - 80-1000 ஆண்டுகள்
பிளாஸ்டிக் ரிங்க்ஸ் - 450 ஆண்டுகள்
டயபர், நாப்கின் - 500-800 ஆண்டுகள்

பிளாஸ்டிக் பாட்டில்கள் - எக்காலத்திலும் அழியாது

எனவே, பிளாஸ்டிக் கேரி பேக், பிளாஸ்டிக் பாட்டில்கள் போன்றவற்றை வாங்காதீர்கள். அந்தக் குப்பையை எந்த வகையிலும் உருமாற்றவோ, அழிக்கவோ முடியாது. இன்னும் 10, 20 ஆண்டுகளில் உலகம் கழிவு பிளாஸ்டிக்கால் நிரம்பி வழியும் என்று நம்பப்படுகிறது. நமது முதுமைக் காலத்தை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.

பிளாஸ்டிக் பைகளைத் தவிர்ப்பதற்கு இதற்கு மேல் வலுவான காரணம் வேண்டுமா?

சுத்தமான, மாசுபாடற்ற சுற்றுச்சுழலைப் பெறுவது ஒவ்வொருவரது அடிப்படை உரிமை

அனைத்து மாற்றங்களும் நம் வீட்டிலிருந்து, நம்மிடமிருந்தே தொடங்குகின்றன.

-நன்றி: ஆதி