Showing posts with label Scientist. Show all posts
Showing posts with label Scientist. Show all posts

Thursday, March 18, 2010

சர். சி.வி. ராமன் (1888-1970)

சந்திரசேகர் வெங்கடராமன் தமிழ் நாட்டில் திருச்சி அருகே உள்ள திருவா னைக்காவலில் 1888-ஆம் ஆண்டு பிறந் தார். சென்னை மாநிலக் கல்லூரியில் சேர்ந்த அவர் தனது 15-வது வயதில் இயற்பியல் மற்றும் ஆங்கில பி.ஏ. ஹானர்ஸ் படிப்பில் மாநிலத்திலேயே முதல் மாணவராகத் தேறினார். பிறகு அதே கல்லூரியிலிருந்து முதுகலைப் படிப் பிலும் சிறந்த மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றார். அறிவியல் ஆர்வம் மிக்கவரா னாலும், அத்துறையில் அன்று வேலை வாய்ப்புகள் குறைவாக இருந்த காரணத் தினால் கொல்கத்தாவில் நிதித் துறை அலுவலகத்தில் வேலையில் சேர்ந்தார். எனினும் ஓய்வு நேரங்களில் கம்பி / நரம்பு வாத்தியங்கள் மற்றும் தாளவாத்தியங் களின் ஒலி தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.

நோபல் பரிசு

10 ஆண்டுகள் அரசுப் பணியில் இருந்தபிறகு 1917-ல் கொல்கத்தா பல் கலைக்கழகத்தில் இயற்பியல் துறையில் பணியாற்ற அவருக்கு வாய்ப்பு கிடைத் தது. ஒளிச்சிதறல் பற்றிய அவரது கண்டுபிடிப்புகள் உலகின் கவனத்தைக் கவர்ந்தன. பிரிட்டிஷ் அர சின் கௌரவப் பட்டத்தைப் பெற்றதால் `சர்’ என்ற அடைமொழி அவரது பெயரு டன் சேர்ந்து கொண்டது. 1933-ல் பெங்க ளூரு இந்திய அறிவியல் கழகத்தில் சேர்ந்த அவர் 1948 வரை அங்கு பணி புரிந்து ஓய்வு பெற்றார். ஓய்வு பெற்ற பிற கும் தனது ஆராய்ச்சிப் பணிகளைத் தொடர்ந்தார். ஒளியியல் துறையிலும் ஒலியியல் துறையிலும் அவரது ஆராய்ச் சிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை.

ஐரோப்பாவில் நடந்த ஒரு விஞ் ஞானிகள் மாநாட்டிற்குக் கப்பலில் சென்று கொண்டிருந்தபோது கடல் ஏன் நீலமாக உள்ளது என்பது பற்றிய கேள்வி அவருள் எழுந்தது. இதற்கான காரணத்தையும் வானம் நீலநிறமாகத் தோன்றும் காரணத் தையும் அவர் பின்னர் கண்டுபிடித்தார். இந்தக் கண்டுபிடிப்பிற்காக 1930-இல் அவர் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றார். அறிவியலில் இந்த உயரிய விரு தைப் பெற்ற முதல் இந்தியர் மட்டுமல்ல, முதல் ஆசியரும் அவரே.

ராமன் விளைவு

ஒரு பொருள் மீது ஒளி பட்டு அது பல திசைகளிலும் சிதறடிக்கப்படுவது ஒளிச் சிதறல் எனப்படுகிறது. ஒளியின் ஒழுங் கற்ற பிரதிபலிப்பே ஒளிச்சிதறல் ஆகி றது. காற்றில் உள்ள தூசுகள் கூட ஒளிச் சிதறலை நிகழ்த்தக் கூடியவை. இப்படி ஒளிச்சிதறல் ஏற்படுவதால்தான் அப் பொருளை நாம் பார்க்க முடிகிறது. ஒளி ஒரு ஊடகத்தின் வழியாகச் செல்லும் போது அது ஒளிச்சிதறலுக்கு உள்ளாகி றது. அப்படி உள்ளான பிறகு, பெரும்பான் மையான ஒளி அதே அலை நீளத்துடன் இருந்தாலும் மிகச் சிறிய ஒரு பகுதியின் அலைநீளம் சற்று மாறிவிடுகிறது. இதை ராமன் 1928ஆம் ஆண்டில் கண்டுபிடித் தார். இது `ராமன் விளைவு (சுயஅயn நுககநஉவ)’ என்று அழைக்கப்படுகிறது.

வானம் நீலவண்ணமாகத் தோன்றக் காரணம்

வானத்திற்கு நீல வண்ணம் கிடைத் தது எப்படி என்பதைப் பற்றியும், இரவில் வானம் நீலநிறமாகத் தெரியாததற்கான காரணத்தையும் அறிவியல் கதிரில் ஏற் கனவே பார்த்திருக்கிறோம். சுருக்கமாக நினைவுகூர்வோம். வளிமண்டலத்தின் மூலக்கூறுகள் ஒளிச்சித றலை ஏற்படுத்துகின்றன. சூரிய ஒளியில் உள்ள ஏழு வண்ணங்களில் சிவப்பு, மஞ் சள், பச்சை நிறங்கள் நீள அலைநீளம் உடையவையாக இருப்பதால், இவற்றின் ஒளிச்சிதறல் குறைவாக இருக்கும். மீத முள்ள நிறங்களில் ஒளிச்சிதறல் அதிக மாக நடைபெறுகிறது. எந்த நிறம் அதிக மாகப் பிரதிபலிக்கப்படுகிறதோ அந்த நிறமே நம் கண்ணுக்குத் தெரியும். அதிக மாகச் சிதறல் அடையும் நீலநிறம் நமக் குப் பிரகாசமாகத் தெரிகிறது.

ஒலியியல் துறையில்...

ஒளியைப் பற்றி மட்டுன்றி ஒலி மற் றும் அதன் அதிர்வுகள், வயலின், தபலா, மிருதங்கம் போன்ற இசைக்கருவிகள் மற்றும் தாளவாத்தியங்கள் தொடர்பாக வும் ராமன் பல ஆய்வுகளைச் செய்துள் ளார். வயலினிலிருந்து எழும் இனிய இசை பற்றிய இவரது கண்டுபிடிப்புகள் புகழ்பெற்றவை. படிகங்கள், வைரங்கள், முத்துக்கள் போன்றவற்றின் கட்டமைப்பு பற்றி ஆய்வுகள் செய்து, இயற்பியலின் பல்வேறு துறைகளில் 475 ஆய்வுக் கட்டு ரைகளை அவர் வெளியிட்டுள்ளார். உலக அளவில் புகழ்பெற்ற இந்த இந்திய விஞ்ஞானி இளம் விஞ்ஞானிகளுக்கு ஒரு ஊக்கசக்தியாகத் திகழ்ந்தார்.

Friday, March 12, 2010

சுப்பிரமணியன் சந்திரசேகர் - வானவியல் இயற்பியலாளர்

சுப்பிரமணியன் சந்திரசேகர் இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் குடியேறிய வானவியல் இயற் பியலாளர். சர்.சி.வி. இராமனுடைய மருமகன். 1910ஆம் ஆண்டு லாகூரில் (இன்றைய பாகிஸ்தான்) பிறந்தாலும் அவர் குடும்பம் சென்னைக் குக் குடிபெயர்ந்தது. மாநிலக் கல்லூரியில் இளங்கலை இயற்பியல் படிப்பை மேற்கொண்டபோது வெள்ளைக் குட்டி நட்சத்திரங்கள் (றாவைந னறயசகள) பற்றிய ரால்ஃப் ஃபவுலர் என்பவரின் ஆராய்ச்சிகளால் ஈர்க்கப்பட்டு தன் 18 வயதிலேயே ஓர் ஆராய்ச்சிக் கட்டுரையைத் தயாரித்து ஃபவுலருக்கு அனுப்பினார். அது அவரை இங்கிலாந்திலுள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்கு இட்டுச் சென்றது. இருபது வயதில் ஃபவுலரின் கீழ் ஆராய்ச்சி மாணவராக அங்கு சேர்ந்த சந்திரசேகர் மூன்றே ஆண்டுகளில் பிஎச்.டி. பட்டம் பெற்றார். பின்னர் சிகாகோ பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார். அமெரிக்கா விலும் இங்கிலாந்திலுமாக வாழ்நாள் முழுதும் விண் மீன்களின் கட்டமைப்பு, வெள்ளைக் குட்டி நட்சத்தி ரம், குவாண்டம் இயற்பியல் (ளூரயவேரஅ வாநடிசல) போன்ற பல்வேறு துறைகளில் ஆராய்ச்சியில் ஈடுபட்டார். இவருக்கும் வில்லியம் ஆல்ஃப்ரெட் ஃபவுலர் என்ப வருக்கும் 1983ஆம் ஆண்டு நட்சத்திரங் களின் கட்ட மைப்பு குறித்த கண்டுபிடிப்புகளுக்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது.

சந்திரசேகர் வரம்பு

இவரது மிகச் சிறந்த கண்டுபிடிப்பாக `சந்திரசேகர் வரம்பு’ கருதப்படு கிறது. நட்சத்திரங்கள் அணுச்சேர்க்கை யின் போது கிடைக்கும் வெப்பசக்தியைத் தொடர்ந்து உற்பத்தி செய்தவண்ணம் உள்ளன. சூரியனைப் போல் எட்டு மடங்கு பொருண்மை (அயளள)க்குட்பட்ட நட்சத்திரங்களில் மையத்தின் வெப்ப நிலை அங்குள்ள தனி மங்களுடைய அணுச்சேர்க்கையை ஏற்படுத்துவதற்குப் போதுமானதாக இருக்காது. எனவே அந்த நட்சத்திரங்களின் பொருண்மை படிப்படியாகக் குறைந்து கொண்டே வந்து இறுதியில் வெள்ளைக் குட்டி நட்சத்திர மாகிவிடும். ஒரு வெள்ளைக் குட்டி நட் சத்திரத்தின் அதிகபட்ச பொருண்மை 1.44 சூரியனுடைய பொருண்மை அளவே இருக்கும். சூரிய னைப்போல் குறைந்த பட்சம் எட்டு மடங்கு பொருண்மைக்குட் பட்ட நட்சத்திரங்களில் இது நடக்கிறது என்ற வரம்பைக் கண்டு பிடித்தவர் சந்திர சேகர். இதுவே `சந்திர சேகர் வரம்பு’ என அழைக்கப்படுகிறது. எல்லா நட்சத்திரங் களின் பரிணாம வளர்ச்சியின் கடைசிக் கட்டமே வெள்ளைக் குட்டி நட்சத்திரம் எனக் கருதப்பட்டது. ஆனால் அது சரி யல்ல, சந்திரசேகர் வரம்பிற்குட்பட்ட நட் சத்திரங்களுக்கு மட்டுமே இது பொருந் தும் என நிரூபித்தவர் சந்திரசேகர். சூரி யனைப் போல் எட்டு மடங்கு பொருண் மைக்கு அதிகமாக உள்ள நட்சத்திரங் களில் மையத்திலுள்ள பொருண்மை அதி கரித்துக் கொண்டே வந்து ஒரு கட்டத்தில் நட்சத்திரம் வெடித்து சிதறிவிடும். மீதி இருப்பது நியூட்ரான் நட்சத்திரம் அல்லது கருந்துளை விண்மீன் (டெயஉம ாடிடந) எனப் படுகிறது. அதனுடைய அடர்த்தி மிக அதிகமாக இருக்கும். அதிலிருந்து ஒளி கூட வெளியேற முடியாது.

இறுதி வெற்றி அடைந்த சந்திரசேகர்

ஃபவுலரின் ஆராய்ச்சிக் கட்டுரையு டன் `தனிப்பட்ட ஒப்பீட்டுக் கொள்கை’ பற்றிய தன்னுடைய புரிதலை இணைத்து வெள் ளைக் குட்டி நட்சத்திரங்கள் கொள்கையை சந்திரசேகர் உருவாக்கியிருந்தார். இங்கி லாந்தில் அப்போது புகழ்பெற்ற வானவி யல் இயற்பியலாளர்களாக இருந்த எடிங் டனும் மில்னேயும் இந்தக் கொள்கையை ஏற்கவில்லை. அதனால் இங்கிலாந்தில் தனது ஆராய்ச்சிக் கட்டுரையை வெளியிட சந்திரசேகரால் இயலாமல் போனது. எனவே, அவர் தன் கட்டுரையை அமெ ரிக்காவுக்கு அனுப்பினார். அமெரிக்கா வின் வானவியல் இதழில் 1931-ஆம் ஆண்டில் அது பிரசுரிக்கப்பட்டது. எடிங் டன் சந்திரசேகருடைய கூற்றை நிராக ரித்ததற்குக் காரணம் இருந்தது. அவர் தன் வாழ்நாள் முழுதும் செலவழித்து எந்த நட்சத்திரமும் - அதன் பொருண் மை எவ்வளவு இருப்பினும் - நிலையான கட்டமைப்பைக் கொண்டது என்று நிறு வுவதற்குப் பாடுபட்டிருந்தார். கடைசியில் சந்திரசேகரின் கூற்றுதான் சரி, எடிங்ட னுடைய நிலை தவறானது என்று நிரூ பணமாயிற்று.

ஆசிரியர், எழுத்தாளராக...

ஏராளமான அறிவியல் புத்தகங்களை எழுதிக் குவித்தவர் சந்திரசேகர். பல சர் வதேச விருதுகளும் அவரைத் தேடி வந் தன. அவர் ஓர் உற்சாகமான ஆசிரியர். உலகெங்கும் அவரது வகுப்புகளை விரும்பி ஏற்ற மாணவர்கள் இருந்தனர். 1983-ல் அவர் வெளியிட்ட `கருந்துளை விண்மீன்களின் கணிதவியல் கோட்பாடு ’ என்ற நூல் புகழ்பெற்றது. உலக அளவில் முக்கியமான வானவியல் இயற்பியலாளர் களுள் ஒருவராக சந்திரசேகர் மதிக்கப் படுகிறார்.