நமது தாய்வீடான பூமி தோன்றி சுமார் 454 கோடி ஆண்டுகள் ஆகின்றன என அறிவியல் கிட்டத்தட்ட துல்லியமாய் கண்டுபிடித்து விட்டது. சந்திரனிலிருந்து எடுத்துவந்த கல்லிருந்தும், பூமியில் இருக்கும் கற்களின் வயதை அறியும் கதிர்வீச்சு சோதனை (radiometric age dating of meteorite material) மூலமும் இது அறியப்பட்டது. இதில் 1% மாறுபாடு இருக்கலாம். அவ்வளவே..! மேற்கு ஆஸ்திரேலியாவின் ஜாக் மலையிலிருந்து கிடைத்த சிர்கான் படிகங்கள்தான் (Zircon crystals) இதுவரை கிடைத்த படிகங்களிலேயே வயதானது. அதன் வயதுகுறைந்த பட்சம் 404 கோடி ஆண்டுகள் இருக்கலாம். சூரியனின் நிறை மற்றும் பிரகாசம் போன்றவற்றை மற்ற விண்மீன்களுடன் ஒப்பிடும்போது நமது சூரியனுக்கும், சூரிய குடும்பத்திற்கும் சுமார் 456.7 கோடி ஆண்டுகள் ஆகின்றன என்பது தெரிய வருகிறது. அதுமட்டுமல்ல இதன் மூலம் பூமியின் வயதும் 454 கோடி ஆண்டுகள் என்பதும், பூமி, சூரிய, சந்திரர்கள் சம வயதுக்காரர்கள் என்றும் கூட தெரிய வருகிறது.
நன்றி:பேரா.சோ.மோகனா
Showing posts with label வானவியல். Show all posts
Showing posts with label வானவியல். Show all posts
Friday, February 17, 2012
Monday, October 31, 2011
எரடோஸ்தனிஸ்... உலகின் முதல் புவியியலாளர்
உலகின் பழங்கால அறிவியல் மையம்!
பழங்கால கிரேக்கம் தான் இன்றைய எகிப்து. கிரேக்கம் நைல் நதியின் கொடை என வரலாற்றாளர்களால் வருணிக்கப்படுகிறது. அந்த எகிப்து, ஆப்பிரிக்காவின் வட பகுதியில் உள்ளது. உலகில் மனித நாகரிகம் உருவாகி வளர்ந்த ஆற்றுச் சமவெளிகளில் ஒன்றுதான் இந்த நைல் நதியின் நாகரிக களமான எகிப்து. இங்கே சுமார் 7,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வரலாற்றுப் பதிவுகள் கிடைத்துள்ளன. கிரேக்கத்தின் பெரிய நகரும், எகிப்தின் இரண்டாவது பெரிய நகரும் அலேக்சாண்டிரியாதான். இதனை மகா அலெக்சாண்டர் என்ற பேரரசர் கி.மு.337ல் (2,400 ஆண்டுகளுக்கு முன்) நிறுவினார். மத்தியதரைக்கடல் ஓரத்தில் அழகாக அமர்ந்துள்ள அலெக்சாண்டிரியாவின் கடற்கரை 32 கி.மீ நீளமுள்ளது. அன்றைய உலகின் பெரிய நூலகமான அலெக்சாண்டிரியாவும், அலெக்சாண்டிரியா பல்கலைக்கழகமும் இங்குதான் இருந்தன.
அலெக்சாண்டிரியா நூலகம்
அலெக்சாண்டிரியா நூலகத்தில் பல்லாயிரக்கணக்கான பாப்பிரஸ் சுருள்களும், ஆட்டுத் தோலில் எழுதப்பட்ட வரலாற்று ஆவணப் பதிவுகள் சுமார், 400,000-700,000 எழுத்துச் சுருள்கள் இங்கே வைக்கப்பட்டுள்ளன. இந்த நூலகத்தில், மாணவர்கள் படிக்க, விவாதிக்க, எழுத, ஆராய்ச்சி செய்ய என சுமார் 5,000 அறைகள் இருந்தன. இந்த நூலகத்தில் மூன்றாவது நூலகராகவும், நிர்வாக இயக்குனராகவும் இருந்தவர்தான் எரடோஸ்தனிஸ் என்ற கிரேக்க விஞ்ஞானி. இந்த அலெக்சாண்டிரியா நூலகம் பண்பாடு மற்றும் அறிவின் கிரீடம் ஆகத் திகழ்ந்தது. இங்கே அறிவுஜீவிகள் சுமார் 700 ஆண்டுக்காலம் அதனை ஆட்சி புரிந்தனர். ஆனால் இந்த அலெக்சாண்டிரியா சுமார் 1600 ஆண்டுகளுக்கு முன் அழிந்து போனது.
கிரேக்கத்தின் விஞ்ஞானி எரடோஸ்தனிஸ்!
பழங்காலத்தில் கிரேக்கம்தான் அறிவியல் உலகில் கொடி கட்டிப் பறந்தது. அங்குதான் உலகின் தலைசிறந்த தத்துவஞானிகளும், அறிஞர்களும் வாழ்ந்தனர். கணிதத்தின் விற்பன்னர்களே, வானவியல் மற்றும் புவியியல் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினர். கி.மு. 276 -194களில் வாழ்ந்த எரடோஸ்தனிஸ், சைராகுயூசின் (Syracuse) ஆர்கிமிடீசுக்கு நெருங்கிய நண்பர். ஆனால் எரடோஸ் வசித்தது அலெக்சாண்டிரியா நகரில்தான். இவர் சைரீனில் (Cyrene) பிறந்தார். இப்போது வட ஆப்பிரிக்க லிபியாவில் உள்ள ஷஹட்(Shahhat) தான் அன்றைய சைரீன். கிரேக்க அறிஞர் எரடோஸ் பல்துறை வித்தகர். இவரே கிரேக்கத்தின் மிகப் பெரிய கணித மேதை, அற்புதமான கவிஞர், சிறந்த விளையாட்டு வீரர், முக்கியமான வரலாற்றியலாளர் மற்றும் புவியியல் கண்டுபிடிப்பாளரும் கூட!
நூலகரும் வானவியலாளரும் பல்துறை வித்தகரும் .!
எரடோஸ்தனிஸின் பன்முகத்தன்மையால் இவர், பஞ்சாவதானி (Pentathalus) என்று பாராட்டப்பட்டவர். இவரை தத்துவத்தில் இரண்டாவது பிளேட்டோ என்றும், வானவியல் கணிப்பில் தாலஸூக்குப் பிறகு வந்த மிகச் சிறந்த வித்தகர் என்றும் பேசப்பட்டவர். இவருக்கு பீட்டா (Beta) என்ற பட்டப் பெயரும் உண்டு. புவியியல்(Geography) என்ற வார்த்தையை உருவாக்கியவர் இவரே. ஜியோகிரபி என்றால் பூமியைப் பற்றி எழுதப்பட்ட என்று பொருளாகும். உலகில் முதன் முதலில் பூமியின் விட்டத்தையும், சுற்றளவைவும் சரியாக அளந்தவர் எரடோஸ்தனிஸ்தான். அது மட்டுமல்ல பூமியின் அட்சரேகை, தீர்க்கரேகை என்ற முறையைக் கண்டுபிடித்தவரும் எரடோஸ்தனிஸ்தான். புவியியலின் ஒழுங்குமுறை விதிகளை நிர்ணயித்தவரும் இவரே..! ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக அலெக்சாண்டிரியா நூலகத்தின் நிர்வாக இயக்குநராக இருந்தார்.
சூரிய ஒளியும் நிழலும்= பூமியின் சுற்றளவு!
எரடோஸ்தனிஸ் கி.மு.276ம் ஆண்டு வட ஆப்பிரிக்காவின் சைரீன் எனற தற்போதைய லிபியாவில் பிறந்தார். அலெக்சாண்டிரியாவில் இலக்கணமும், ஏதென்ஸில் தத்துவமும் பயின்றார். கி.மு 236ல் மூன்றாம் தாலமி எரடோஸ்தனிஸை அலெக்சாண்டிரியா நூலகத்தின் நூலகராக நியமித்தார். அங்கே இவர் கணிதத்திலும், அறிவியலிலும் ஏராளமான முக்கியமான கண்டுபிடிப்புகளைத் தந்தார். சூரியனின் வெப்பமும், அதன் ஒளியால் ஏற்படும் விளைவுகளும் உண்டு என்பதை நாம் அறிவோம். ஒளியின் மூலம் நிழல் உண்டாவதும் நமக்குத் தெரியும். ஆனால் நிழல் வழியாக ஓர் அறிவியல் கண்டுபிடிப்பு நிகழ்த்தி உலகை அசர வைத்தது எரடோஸ்தனிஸ் மட்டுமே..! பூமியின் மேல், சூரிய ஒளியால் உருவாகும் நிழலை வைத்து பூமியின் அனைத்து பரிமாணங்களையும் கண்டறிந்தார்.
வானியல் உற்று நோக்கல் போலவே, புவிக்கோளின் பல்வேறு தகவல்களைக் கணக்கிட்டு, பல அறிவியல் விஷயங்களை அறிந்தது இவரது மகத்தான சாதனையாகும். பூமி தன் அச்சில் சாய்வாக சுற்றுகிறது என்ற உண்மையை முதலில் கண்டறிந்தவரும் எரடோஸ்தனிஸ்தான். அது மட்டுமல்ல, புவியின் சுற்றளவையும், சாய்மானத்தையும் துல்லியமாகச் சொன்னவரும் இவரே. அத்துடன் நம் புவிக்கோளில் நான்கு வருடத்திற்கு ஒரு முறை உருவாகும் லீப் தினத்தையும் கண்டறிந்தார். தனக்குக் கிடைத்த தகவல்களிலிருந்து, உலகின் வரைபடத்தையும் உருவாக்கினார். இதெல்லாம் எரடோஸ்தனிஸின் தலையாய சாதனையாகும். அதனால்தான் இவரை உலகின் நில அளவீட்டாளர்/கணக்காளார்/கணக்காயர் (Surveyor of the world) என்றும், புவியியல் தந்தை (Father of Geography) என்றும், அறிவியல் காலப்பட்டியலின் தந்தை (Father of Scientific Chronology) என்றும் பெருமையுடன் அழைக்கிறார்கள்.
ஏன் சில நாட்களில் நிழல் சாய்வாக..?
சூரியக் கதிர்கள் விளைவால் ஒரு பொருளின் நிழல் பூமி மேல் விழுவதை எரடோஸ்தனிஸ் தொடர்ந்து கவனித்தார். வருடத்தின் ஒரு சில நாட்களில்/நாளில் சூரியக் கதிர் பகலில் உச்சி வேளையில், தலைக்கு மேலே இருப்பதையும், அதனால் ஒரு பொருளின் நிழல் அதன் அடிப்பகுதி/காலடியில் மட்டும் விழுவதையும் கவனித்தார். ஆனால் எல்லா நாட்களும் ஒரு பொருளின் நிழல் அவ்வாறு அதன் அடியில் மட்டுமே நேராக சரியாக விழுவதில்லை. அந்த நிழல் கொஞ்சம் வடக்கு/தெற்கே சாய்வாக இருக்கிறது.
சூரியனின் கதிர்களால் ஏற்படும் நிழல் என்பது, பூமி சுற்றுவதாலும், அது தன் அச்சில் 23.5 பாகை சாய்வாக உள்ளதாலும் உண்டாகிறது. எரடோஸ்தனிஸ் தினம் இடம் மாறும் நிழலைப் பார்த்தது மட்டுமின்றி, அதற்கான காரணமும் தேட ஆரம்பித்தார். எரடோஸ்தனிஸ் சூரியக் கதிர்கள் ஒரு பொருளின் மேல் படுவதால் ஏற்படும் நிழல் தினமும் ஒரே இடத்தில் ஒரே சாய்மானத்தில் இருப்பதில்லை. அந்த நிழலின் சாய்மானத்தையும், தினமும் சூரிய உதயம் என்பது 6 மாதம் வடக்கிலிருந்து தெற்காகவும், அடுத்த 6 மாதம் தெற்கிலிருந்து வடக்காகவும் நகர்ந்து கொண்டே இருக்கிறது என்பதை துல்லியமாக கவனித்தார். அதன் விளைவாக உருவானதுதான் பூமியின் சுற்றளவு எவ்வளவு என்ற வினாவும், அதற்கான விடை தேடுதலும். இதனை சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் யாரும் நினைத்துப் பார்க்க முடியாத காரியம். அதுவும் இருந்த இடத்தில் இருந்து கொண்டே பூமியின் சுற்றளவை ஆதிகாலத்தில், எந்த அறிவியல் ஆதாரமும் தெளிவாக அறிய முடியாத 2,000 ஆண்டுகளுக்கு முன் ஒருவர் கண்டுபிடிக்கிறார் என்றால், அது எத்தனை வியப்புக்குரிய விஷயம்..! பூமியின் சுற்றளவைக் கண்டறிய, எகிப்தை விட்டு நகராமல், சூரியனால் ஒரு பொருள் மேல் ஏற்படும் நிழலின் சாய்மானத்தை வைத்தே, பூமியின் சுற்றளவை ஒருவர் கண்டறிகிறார் என்றால் அவர் படு கில்லாடிதானே..!
பூமியின் கோள வடிவமும், சுற்றளவும்..!
அன்று கோடைகாலத்தின் மிக நீண்ட பகல் தினம் (summer solstice). அப்போது சூரியன் வானில் தலைக்கு மேலே சரியாக பவனி வந்து, வெய்யிலை நம் மேல் கொட்டுகிறது. அன்றைய எகிப்தின் ஸ்வேனெட் (Swenet/Syene) நகரில், இன்று நாம் சொல்லும் கடக ரேகை என்பது அப்போது கிடையாது. ஏனெனில் அந்த அட்ச ரேகையை அன்று யாரும் வரையவில்லை. ஆனால் சூரியன் அப்போது கடக ரேகையின் மேல் இருந்தது. அதுவும் சரியாக சூரியன் தலைக்கு மேல் கொளுத்திக் கொண்டிருந்தது. அப்போது யாராவது குனிந்து ஒரு ஆழமான கிணற்றில் எட்டிப் பார்த்தால், அது அப்போது சூரியனின் பிரதிபலிப்பை மறைத்துவிடும், இந்தத் தகவலை யாரோ தெரிவித்திருந்தனர்.. ஆனால் அவரும்கூட இந்த உண்மையை ஒரு சோதனை மூலம் நிரூபிக்க முயற்சி செய்தார். அவரது சொந்த ஊரான சைநீனுக்குச் சென்றார். அலெக்சாண்டிரியாவில் சூரியனின் சாய்மானம் என்பது, அந்த வட்டத்தில் 50ல் ஒரு பங்கு என தீர்மானித்தார். இது ஒரு வட்டத்தில் 7.12 பாகை என்பதை எரடோஸ் தெரிவித்தார். அதே சமயம், பூமி ஒரு கோளவடிவம் என்று கிரேக்கர்கள் புரிந்து கொண்டனர். அதே கருத்தைத்தான் எரடோஸ்தனிஸும் கொண்டிருந்தார்.
அலெக்சாண்டிரியா சைனுக்கு (Syene) வடக்கே இருக்கிறது. எனவே, மெரிடியன் வளைவு (meridian arc) எனபது எவ்வளவு தூரம் எனபதை தூரத்துடன் இணைத்து கணக்கிட்டால், அந்த தூரம் என்பதுதான் புவியின் சுற்றளவு அறிய சரியான அளவுகோலாக அன்று எரஸ்டோஸ்தனிசுக்குப் பயன்பட்டது. ஏனெனில் சூரியனின் கதிர்கள் பூமி மீது இணை கோடுகளாகவே விழுகின்றன. அதன் சாய்மானம் அந்த இடத்தில் 50ல் ஒரு பங்கு என்றும், அதுதான் 1/50=7.2/360 பாகை என்ற கணக்கை படு துல்லியமாகப் போட்டார். அலெக்சாண்டிரியாவுக்கும், சைனீனுக்கும் இடையில் உள்ள தொலைவு என்ன என்று தெரிந்தால் இதற்கு விடை கண்டுபிடித்து விடலாம்.
அலெக்சாண்டிரியாவுக்கும், சைனீனுக்கும் இடையில் உள்ள தொலைவு அறிய சைனீனிலிருந்து அலெக்சாண்டிரியாவுக்கு சில வீரர்களை ஒட்டகத்தின் மீது ஏற்றி அனுப்பினார். இரு ஊர்களுக்கும் இடையிலுள்ள தூரத்தை அறிந்து கொள்ள அவர் எடுத்த ஒட்டக முயற்சிகள் மிகவும் சுவையானவை. அதனால்தான் அன்றைய எரடோஸ்தனிஸின் கணிப்பிலிருந்து பூமியின் சுற்றளவு கொஞ்சமும் தப்பவில்லை. அன்றைய எகிப்திய அலகான ஸ்டேடியன் (stadion) என் ற அலகில்தான் பூமியின் சுற்றளவைக் கணக்கிட்டார். அந்த அலகுப்படி, எரடோஸ்தனிஸ் கணக்கிட்ட புவியின் சுற்றளவு 250,000 ஸ்டேடியா (46,250 கி.மீ.). ஆனால் நிலநடுக்கோட்டில் பூமியின் சுற்றளவு 40,075 கி.மீ. ஸ்டேடியன் அலகில் உள்ள மாறுதகளைக் கணக்கில் கொண்டு, அன்றைக்கு அவர் கண்டுபிடித்த புவியின் சுற்றளவு 39, 690 கி.மீ.என்பதும் தெரிய வந்தது. அதாவது இன்றைய புவியின் சுற்றளவில் சுமார் 2% மட்டும் வித்தியாசம் இருந்தது. இதனை நாம் கணக்கில் கொள்ள வேண்டியதில்லை.
புவி மீது சோதனைகள்..!
எரடோஸ்தனிஸ் பூமியின் சுற்றளவு கண்டுபிடிக்கும் முயற்சி, ஒரே ஒரு சோதனையுடன் நிறைவு பெற்று விடவில்லை. அவரே. வேறு வேறு இடங்களுக்கு ஒட்டகத்தின் மேல் ஆட்களை அமரவைத்து அனுப்பி, அவைகளுக்கு இடையே உள்ள தூரம், சூரியக்கதிரின் சாய்மானம் போன்றவற்றைக்கொண்டு அந்த பகுதியிலும் புவியின் சுற்றளவு என்ன என்பது தெரிந்து கொண்டு, ஏற்கனவே கண்டுபிடித்திருந்த சுற்றளவுடன், மற்ற விடைகள் ஒத்துப் போனதால், முன்பு அலேக்சான்டிரிய-சைநினுக்கு இடையில் கண்டறிந்த பூமியின் சுற்றளவு சரியானதே என்ற முடிவுக்கு வந்தார். பூமியின் சுற்றளவை திரிகோணமிதி கணக்கியல் மூலமே கண்டறிந்தார். பூமியின் விட்டத்தையும் கூட, சுற்றளவு மூலம் கணக்கிட்டுத் தெரிவித்தார்.
புவியியலின் முதல் பதிவும் புத்தகமும்!
அந்த கால கட்டத்தில் எரடோஸ்தனிஸ் எழுதிய புவிவியல் புத்தகம் 3 பெரிய தொகுதிகளாக வெளிவந்தன. நீண்ட காலத்துக்கு அதுவே, புவியியலின் அசைக்க முடியாத ஆதாரமாக இருந்தது. எரடோஸ்தனிஸின் கண்டுபிடிப்பான பூமி சுற்றளவின் அளவு அடுத்த 100 ஆண்டுகளுக்கு எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே ஒப்புக்கொள்ளப்பட்டு பின்பற்றப்பட்டது. அதாவது அடுத்த நூறாண்டுக்காலமும் எந்தவித அறிவியல் கண்டுபிடிப்புகளும் பூமியின் சுற்றளவு பற்றி நடக்கவில்லை என்றே சொல்ல வேண்டும். அவருக்குப் பின் 150 ஆண்டுகள் கழித்து வந்த பாசிடோனியஸ் (Posidonius) பூமியின் சுற்றளவை அளக்க எரடோஸ்தனிஸின் செய்முறையையே பயன்படுத்தினார். இரு வேறு இடங்களின் மூலம் சுற்றளவு கணக்கைக் கணக்கிட்டு, முன்பு கணக்கிட்ட 252,000 என்ற ஸ்டேடிய எண்ணிக்கையே வந்தது.
எரடோதனிஸின் மற்ற கண்டுபிடிப்புகள்..!
எரடோஸ்தனிஸ் பூமியின் சுற்றளவு, விட்டம் கண்டுபிடித்ததுடன் அவரது கண்டுபிடிப்பின் தாகம் தணிந்துவிடவில்லை. அவரது கண்டுபிடிப்புகள் வானவியலிலுக்கும் கூட பெருமை சேர்க்கிறது. பூமியிலிருந்து சந்திரனும், சூரியனும் எவ்வளவு தூரத்தில் இருக்கின்றன என்ற உண்மையைக் கண்டுபிடித்தவர் எரடோஸ்தனிஸ்தான். ஆனால் அவை பூமியின் சுற்றளவு போல் அவ்வளவு துல்லியமாக இல்லை. சூரியக் கதிரின் சாய்மானம், நிழலின் சாய்மானம் இவற்றை வைத்து பூமி சுழலும்போது 23.5 பாகை சாய்மானத்தில் சுழலுகிறது என்பதையும் கூட துல்லியமாகத் தீர்மானித்தார். மேலும் எரடோஸ்தனிஸ் அலெக்சாண்டிரியா நூலகத்தின் பொறுப்பாளாராகவும் இருந்தார். அதனாலும் மக்கள் எரடோஸ்தனிஸ் சொல்வதை ரொம்பவும் நம்பினார்கள். எக்கச்சக்கமான எரடோஸ்தனிஸின் வேலைகள், கண்டுபிடிப்புகள்.அனைத்தும் அலெக்சாண்டிரியா நூலகம் அழிந்த போது அழிந்துவிட்டன. அவரைப் பற்றி மற்ற நூலாசிரியர்கள் எழுதிய தகவல்களை வைத்தே இவையனைத்தும் எழுதப்பட்டுள்ளன.
ஹெர்மஸ் கவிதையும்..லீப் வருடமும்..!
எரடோஸ்தனிஸ்தான் முதன் முதல் பூமியின் உருவத்தை உத்தேசமாகக் கணித்து, அதன் வரைபடத்தை வரைந்து தந்தார். அதன் காலக் கணிப்பையும் பரிணாமக் காலத்தையும் கணக்கிட்டவர் இவர்தான். எரடோஸ்தனிஸுக்கு சரித்திரத்தின் மீது மீளாக் காதல் உண்டு. அதனால்தான் அவற்றை சுவைபட எழுதினார். வானில் வலம் வரும் விண்மீன் படலங்களுக்கும், கிரேக்க புராணங்களுடன் உறவு உண்டாக்கி, அவற்றிற்கிடையே உள்ள இணைப்பை அழகாக சித்தரித்தார். எரடோஸ்தனிஸ் இரவு வானின் விண்மீன்களைப் பட்டியலிட்டார். அன்றைக்கு அவற்றின் எண்ணிக்கை 675 உள்ளது என்றும் தெரிவித்தார். எரடோஸ்தனிஸ் ஹெர்ம்ஸ் Hermes, Erigone and Anterinys or Hesiod (apparently alternative titles)) என்ற அழகிய கவிதை ஒன்றைப் புனைந்தார். அதில் வானவியலின் அடித்தளம் பற்றி அழகாக, கோர்வையாக வடித்திருக்கிறார். அத்துடன், ஒவ்வொரு 4 ஆண்டுக்கு ஒரு முறை லீப் (Leap) வருடம் வருகிறது என்று பாட்டாக படித்தவரும் இவரே. அது மட்டுமின்றி அந்த சமயத்தில் நடைபெற்ற அரசியல் தகவல்களையும் , முக்கிய நிகழ்வுகளையும் குறிப்பிட்டுள்ளார்.
அலெக்சாண்டிரியா நூலகம் & எரடோஸ்தனிஸின் எழுத்துக்கள் அழிவு!
எரடோஸ்தனிஸ் கணிதத்தில் விற்பன்னர். தனது 30 ஆவது வயதில், மூன்றாம் தாலமியால் மீண்டும் அலெக்சாண்டிரியாவுக்கு அழைக்கப்பட்டார். அதுவும் தாலமியின் மகனுக்கு கல்வி புகட்ட வந்த எரடோஸ்தனிசை தாலமி III அலெக்சாண்டிரியா நூலகத்தின் முதன்மை நூலகராக நியமித்தார். அந்த நூலகத்தில் எரடோஸ்தனிஸ் நிலவியலின் அறிவியல் முழுவதையும் பாப்பிரஸ் மற்றும் ஆட்டுத்தோலில் பதிவு செய்து வைத்திருந்தார். பின்னர் அலெக்சாண்டிரியா நூலகம் அழிக்கப்பட்டபோது, ஆயிரக்கணக்கான பாப்பிரஸ் பட்டைச் சுருள்களும், ஆட்டுத்தோல் சுருள் பதிவுகளும் அப்படியே அழிக்கப்பட்டன.
தனது காலத்தில் அரிஸ்ட்டாட்டில் மனித இனத்தை கிரேக்கர்கள் மற்றும் காட்டுமிராண்டிகள் என்று கூறு போட்டதையும் எதிர்த்தவர் எரடோஸ்தனிஸ்.
எரடோஸ்தனிஸின் எண்ணியல்..!
அந்தக்காலத்தின் எண்ணியல் (Number Theory), வடிவியல் (Geometry) மற்றும் எண் கணிதம் (Arithmetic) ஆகியவற்றில் சிறந்து விளங்கினார் எரடோஸ்தனிஸ். இதில் முதன்மை எண்களைக் (Prime Numbers) கண்டுபிடிக்கும் முறையை அறிமுகப் படுத்தியவர் எரடோஸ்தனிஸ்தான். அதனால்தான் அவைகளை நாம் எரடோஸ்தனிஸின் சல்லடை (‘Sieve of Eratosthenes’) என்றே அழைக்கிறோம். இதுவும் கூட நிகோமாக்கஸ் (writings of Nicomachus) என்ற அறிஞரின் எழுத்துக்கள் மூலமே தெரிய வந்துள்ளன.
எளிதான அல்காரிதம்!
சல்லடை/சீவ் என்ற சதுர வடிவ கணித சூத்திரம். படம் பார்க்க. இது ஒரு எளிதான அல்காரிதம் (simple algorithm). இது முதன்மை எண்கள் ஒரு குறிப்பிட்ட எண்கள் வரை செயல்பட முடிகிறது. மேலும் ஒரு கோடி வரை துல்லியமாய் அறிய முடிகிறது (The Sieve is a simple algorithm which works to identify all of the prime numbers up to a certain integer and is very accurate up to about 10 மில்லியன். Eratosthenes later erected a column at Alexandria with an epigram inscribed on it relating to his own mechanical solution to the cube problem.) இது 2, 3, 5, 7 போன்றவற்றின் இரட்டிப்பு பதின்மரை (Multiples) விட்டுவிட்டு செயல்படுகிறது. மீதமுள்ள எண்கள் முதன்மை எண்களாகும். இந்த எண் சல்லடை/சீவ் 18 ம் நூற்றாண்டின் லியோன்ஹார்ட் யூலர் (Leonhard Euler) வந்து தன் கருத்துக்களை சொல்லும் வரை நீடித்தது. அதுவே கணிதத் துறையை ஆட்சியும் செய்தது..
வடிவியலின் தந்தை எரடோஸ்தனிஸ்..!
எரடோஸ்தனிஸின் இன்னொரு முக்கிய புத்தகமும் அழிந்து போனது. அதன் பெயர் வழிகளிலே (On means ) -கணித வழிகள் என்பதாகும். இதுதான் வடிவியலின் இன்றியமையாத புத்தகங்களில் ஒன்றாகும். இதனைக் குறிப்பிட்டு, அதன் தகவல்களையும் தந்தவர் பாபஸ் ( Pappus) என்பவர். (another lost book written by Eratosthenes was On means. It is mentioned by Pappus as one of the great books of geometry.)
பூமி-சூரியன் தொலைவினைக் கண்டுபித்த எரடோஸ்..!
திரிகோணமிதியின் சூத்திரம் மற்றும் அப்போது கிடைத்த தகவல்களைக் கொண்டே பூமி-சூரியன் தொலைவினைக் கண்டறிந்தார். அப்போது இன்னொரு முக்கிய விஷயமும் அவருக்குக் கிடைத்தது. சூரியன் வெகு தொலைவில் உள்ளதால்தான் அதன் கதிர்கள் பூமியில் இணைகோடுகளாக (Parallel) வருகின்றன என்பதையும் அனுமானம் செய்தார். அது மட்டுமல்ல பூமி-சூரியனுக்கு இடையில் உள்ள தூரம் 149 மில்லியன் கி.மீ என்றும் தெரிவித்தார். இப்போது அறியப்படும் புவி-சூரிய தொலைவு 149 .5 மில்லியன் கி.மீ தான். அதாவது 1% மட்டுமே வித்தியாசம் இருந்தது. இந்த வித்தியாசம் ஒரு விஷயமே அல்ல. ஆனால் பூமியின் சாய்மானத்தை மிகத் துல்லியமாக 23.5 பாகை என்று கணக்கிட்டார். ஆனால் துரதிருஷ்டவசமாக பூமிக்கும் சந்திரனுக்கும் இடையில் உள்ள தூரம் என அவர் குறிப்பிட்ட 144,000 கி.மீ என்பது மட்டும் தவறாகி விட்டது. இது தற்போதைய தூரத்தை விட மூன்று மடங்கு அதிகம்.
பீட்டா எரடோஸ்தனிஸ்..!
எரடோஸ்தனிஸ் பல்துறை வித்தகராக இருந்தாலும் கூட எந்தத் துறையிலும் அவர் முதன்மையாய் இல்லாததால் அவரை இரண்டாம் நிலைக் குறியீடான பீட்டாவை வைத்து பீட்டா என்றே அழைக்கின்றனர். பீட்டா என்று குறியீட்டுப்பெயரில் இவரைக் கூறியவர் சுதா லெக்சிகான் (Suda Lexicon) மற்றும் அவரது சம காலத்தவருமே. ஆனால் முதன்மை அறிஞர்களை விட எரடோஸ்தனிஸ் மிக மிக முக்கியாமானவர். அவரது கண்டுபிடிப்புகளும், சூத்திரங்களும், கொள்கைகளும் இன்றும் மக்களால் பின்பற்றப்படுகின்றன.
எரடோசின் விமரிசனமும் பிளாட்டோவும்..!
எரடோஸ்தனிஸ் எழுதிய கணித விமர்சனம் மிகவும் முக்கியமானது. அதுவே, பிளாட்டோவின் தத்துவத்திற்கு அடித்தளம் என்றும் சொல்லப்படுகிறது. எரடோஸ்தனிஸின் எழுத்தில் எண்கணிதம் (arithmetic) மற்றும் வடிவியல் (geometry) போன்றவற்றிற்கு கணித அடிப்படை விளக்கங்கள் சொல்லப்பட்டுள்ளன. அவற்றில் ஏராளமான விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. மேலும், அதில் (கணிதத்தில்) இசையையும் இணைத்தே கூறியுள்ளார் எரடோஸ்தனிஸ். இவற்றை எல்லாம் நாம் ஸ்மியார்னா(Smyrna)வில் வாழ்ந்த தியோனின் பதிவுகள் மூலமே அறிகிறோம்.
கிரேக்க கணிதத்தில் வட்டத்தின் பரப்பு (squaring a circle), கனசதுரத்தின் இரட்டிப்பு (doubling a cube) மற்றும் ஒரு கோணத்தின் முப்பிரிவு (trisecting an angle) போன்ற மூன்று முக்கிய பிரச்சினைகள் இருந்தன. அதில் ஒன்றான கன சதுரத்தின் இரட்டிப்பு என்பதற்கான பிரச்சனையை எரடோஸ்தனிஸ் தீர்த்து வைத்தார் என்று தியோன்(Theon of Smyrna -Theon) மற்றும் ஈடோசியஸ்(Eutocius) தெரிவித்துள்ளனர்.
எரடோசின் முதுமையும் முடிவும்..!
எரடோஸ்தனிசுக்கு முதுமை எட்டியதும் பல வகைகளில் சங்கடப்பட்டார். முக்கியமாக 80 வயதாகும்போது அவருக்கு பார்வை இழப்பு ஏற்படுகிறது. அதனால் மிகவும் மனம் நொந்த எரடோஸ்தனிஸ் கண்பார்வை போன பின் மனிதனுக்கு மதிப்பு மரியாதை இல்லை என்றும், அதனால் விரைவில் இறப்பது உசிதம் என்று எண்ணி பல நாட்கள் உண்ணா நோன்பிருந்து பின்னரே உயிர் நீத்தார். இதுதான் இவரது வாழ்வில் வேதனையான ஒரு நிகழ்வாகும். எரடோஸ்தனிசின் உயிர் இந்தப் புவியிலிருந்து பிரிந்த வருடம் கி.மு.192. தன் 84 வது வயதில் இந்த உலகைத் துறந்தார்.
எரடோஸ்தனிசுக்கு பெருமை சேர்க்கும் வகையில், சந்திரனில் உள்ள ஒரு பள்ளத்திற்கு எரடோஸ்தனிஸ் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
நன்றி: பேரா.சோ.மோகனா
பழங்கால கிரேக்கம் தான் இன்றைய எகிப்து. கிரேக்கம் நைல் நதியின் கொடை என வரலாற்றாளர்களால் வருணிக்கப்படுகிறது. அந்த எகிப்து, ஆப்பிரிக்காவின் வட பகுதியில் உள்ளது. உலகில் மனித நாகரிகம் உருவாகி வளர்ந்த ஆற்றுச் சமவெளிகளில் ஒன்றுதான் இந்த நைல் நதியின் நாகரிக களமான எகிப்து. இங்கே சுமார் 7,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வரலாற்றுப் பதிவுகள் கிடைத்துள்ளன. கிரேக்கத்தின் பெரிய நகரும், எகிப்தின் இரண்டாவது பெரிய நகரும் அலேக்சாண்டிரியாதான். இதனை மகா அலெக்சாண்டர் என்ற பேரரசர் கி.மு.337ல் (2,400 ஆண்டுகளுக்கு முன்) நிறுவினார். மத்தியதரைக்கடல் ஓரத்தில் அழகாக அமர்ந்துள்ள அலெக்சாண்டிரியாவின் கடற்கரை 32 கி.மீ நீளமுள்ளது. அன்றைய உலகின் பெரிய நூலகமான அலெக்சாண்டிரியாவும், அலெக்சாண்டிரியா பல்கலைக்கழகமும் இங்குதான் இருந்தன.
அலெக்சாண்டிரியா நூலகம்
அலெக்சாண்டிரியா நூலகத்தில் பல்லாயிரக்கணக்கான பாப்பிரஸ் சுருள்களும், ஆட்டுத் தோலில் எழுதப்பட்ட வரலாற்று ஆவணப் பதிவுகள் சுமார், 400,000-700,000 எழுத்துச் சுருள்கள் இங்கே வைக்கப்பட்டுள்ளன. இந்த நூலகத்தில், மாணவர்கள் படிக்க, விவாதிக்க, எழுத, ஆராய்ச்சி செய்ய என சுமார் 5,000 அறைகள் இருந்தன. இந்த நூலகத்தில் மூன்றாவது நூலகராகவும், நிர்வாக இயக்குனராகவும் இருந்தவர்தான் எரடோஸ்தனிஸ் என்ற கிரேக்க விஞ்ஞானி. இந்த அலெக்சாண்டிரியா நூலகம் பண்பாடு மற்றும் அறிவின் கிரீடம் ஆகத் திகழ்ந்தது. இங்கே அறிவுஜீவிகள் சுமார் 700 ஆண்டுக்காலம் அதனை ஆட்சி புரிந்தனர். ஆனால் இந்த அலெக்சாண்டிரியா சுமார் 1600 ஆண்டுகளுக்கு முன் அழிந்து போனது.
கிரேக்கத்தின் விஞ்ஞானி எரடோஸ்தனிஸ்!
பழங்காலத்தில் கிரேக்கம்தான் அறிவியல் உலகில் கொடி கட்டிப் பறந்தது. அங்குதான் உலகின் தலைசிறந்த தத்துவஞானிகளும், அறிஞர்களும் வாழ்ந்தனர். கணிதத்தின் விற்பன்னர்களே, வானவியல் மற்றும் புவியியல் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினர். கி.மு. 276 -194களில் வாழ்ந்த எரடோஸ்தனிஸ், சைராகுயூசின் (Syracuse) ஆர்கிமிடீசுக்கு நெருங்கிய நண்பர். ஆனால் எரடோஸ் வசித்தது அலெக்சாண்டிரியா நகரில்தான். இவர் சைரீனில் (Cyrene) பிறந்தார். இப்போது வட ஆப்பிரிக்க லிபியாவில் உள்ள ஷஹட்(Shahhat) தான் அன்றைய சைரீன். கிரேக்க அறிஞர் எரடோஸ் பல்துறை வித்தகர். இவரே கிரேக்கத்தின் மிகப் பெரிய கணித மேதை, அற்புதமான கவிஞர், சிறந்த விளையாட்டு வீரர், முக்கியமான வரலாற்றியலாளர் மற்றும் புவியியல் கண்டுபிடிப்பாளரும் கூட!
நூலகரும் வானவியலாளரும் பல்துறை வித்தகரும் .!
எரடோஸ்தனிஸின் பன்முகத்தன்மையால் இவர், பஞ்சாவதானி (Pentathalus) என்று பாராட்டப்பட்டவர். இவரை தத்துவத்தில் இரண்டாவது பிளேட்டோ என்றும், வானவியல் கணிப்பில் தாலஸூக்குப் பிறகு வந்த மிகச் சிறந்த வித்தகர் என்றும் பேசப்பட்டவர். இவருக்கு பீட்டா (Beta) என்ற பட்டப் பெயரும் உண்டு. புவியியல்(Geography) என்ற வார்த்தையை உருவாக்கியவர் இவரே. ஜியோகிரபி என்றால் பூமியைப் பற்றி எழுதப்பட்ட என்று பொருளாகும். உலகில் முதன் முதலில் பூமியின் விட்டத்தையும், சுற்றளவைவும் சரியாக அளந்தவர் எரடோஸ்தனிஸ்தான். அது மட்டுமல்ல பூமியின் அட்சரேகை, தீர்க்கரேகை என்ற முறையைக் கண்டுபிடித்தவரும் எரடோஸ்தனிஸ்தான். புவியியலின் ஒழுங்குமுறை விதிகளை நிர்ணயித்தவரும் இவரே..! ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக அலெக்சாண்டிரியா நூலகத்தின் நிர்வாக இயக்குநராக இருந்தார்.
சூரிய ஒளியும் நிழலும்= பூமியின் சுற்றளவு!
எரடோஸ்தனிஸ் கி.மு.276ம் ஆண்டு வட ஆப்பிரிக்காவின் சைரீன் எனற தற்போதைய லிபியாவில் பிறந்தார். அலெக்சாண்டிரியாவில் இலக்கணமும், ஏதென்ஸில் தத்துவமும் பயின்றார். கி.மு 236ல் மூன்றாம் தாலமி எரடோஸ்தனிஸை அலெக்சாண்டிரியா நூலகத்தின் நூலகராக நியமித்தார். அங்கே இவர் கணிதத்திலும், அறிவியலிலும் ஏராளமான முக்கியமான கண்டுபிடிப்புகளைத் தந்தார். சூரியனின் வெப்பமும், அதன் ஒளியால் ஏற்படும் விளைவுகளும் உண்டு என்பதை நாம் அறிவோம். ஒளியின் மூலம் நிழல் உண்டாவதும் நமக்குத் தெரியும். ஆனால் நிழல் வழியாக ஓர் அறிவியல் கண்டுபிடிப்பு நிகழ்த்தி உலகை அசர வைத்தது எரடோஸ்தனிஸ் மட்டுமே..! பூமியின் மேல், சூரிய ஒளியால் உருவாகும் நிழலை வைத்து பூமியின் அனைத்து பரிமாணங்களையும் கண்டறிந்தார்.
வானியல் உற்று நோக்கல் போலவே, புவிக்கோளின் பல்வேறு தகவல்களைக் கணக்கிட்டு, பல அறிவியல் விஷயங்களை அறிந்தது இவரது மகத்தான சாதனையாகும். பூமி தன் அச்சில் சாய்வாக சுற்றுகிறது என்ற உண்மையை முதலில் கண்டறிந்தவரும் எரடோஸ்தனிஸ்தான். அது மட்டுமல்ல, புவியின் சுற்றளவையும், சாய்மானத்தையும் துல்லியமாகச் சொன்னவரும் இவரே. அத்துடன் நம் புவிக்கோளில் நான்கு வருடத்திற்கு ஒரு முறை உருவாகும் லீப் தினத்தையும் கண்டறிந்தார். தனக்குக் கிடைத்த தகவல்களிலிருந்து, உலகின் வரைபடத்தையும் உருவாக்கினார். இதெல்லாம் எரடோஸ்தனிஸின் தலையாய சாதனையாகும். அதனால்தான் இவரை உலகின் நில அளவீட்டாளர்/கணக்காளார்/கணக்காயர் (Surveyor of the world) என்றும், புவியியல் தந்தை (Father of Geography) என்றும், அறிவியல் காலப்பட்டியலின் தந்தை (Father of Scientific Chronology) என்றும் பெருமையுடன் அழைக்கிறார்கள்.
ஏன் சில நாட்களில் நிழல் சாய்வாக..?
சூரியக் கதிர்கள் விளைவால் ஒரு பொருளின் நிழல் பூமி மேல் விழுவதை எரடோஸ்தனிஸ் தொடர்ந்து கவனித்தார். வருடத்தின் ஒரு சில நாட்களில்/நாளில் சூரியக் கதிர் பகலில் உச்சி வேளையில், தலைக்கு மேலே இருப்பதையும், அதனால் ஒரு பொருளின் நிழல் அதன் அடிப்பகுதி/காலடியில் மட்டும் விழுவதையும் கவனித்தார். ஆனால் எல்லா நாட்களும் ஒரு பொருளின் நிழல் அவ்வாறு அதன் அடியில் மட்டுமே நேராக சரியாக விழுவதில்லை. அந்த நிழல் கொஞ்சம் வடக்கு/தெற்கே சாய்வாக இருக்கிறது.
சூரியனின் கதிர்களால் ஏற்படும் நிழல் என்பது, பூமி சுற்றுவதாலும், அது தன் அச்சில் 23.5 பாகை சாய்வாக உள்ளதாலும் உண்டாகிறது. எரடோஸ்தனிஸ் தினம் இடம் மாறும் நிழலைப் பார்த்தது மட்டுமின்றி, அதற்கான காரணமும் தேட ஆரம்பித்தார். எரடோஸ்தனிஸ் சூரியக் கதிர்கள் ஒரு பொருளின் மேல் படுவதால் ஏற்படும் நிழல் தினமும் ஒரே இடத்தில் ஒரே சாய்மானத்தில் இருப்பதில்லை. அந்த நிழலின் சாய்மானத்தையும், தினமும் சூரிய உதயம் என்பது 6 மாதம் வடக்கிலிருந்து தெற்காகவும், அடுத்த 6 மாதம் தெற்கிலிருந்து வடக்காகவும் நகர்ந்து கொண்டே இருக்கிறது என்பதை துல்லியமாக கவனித்தார். அதன் விளைவாக உருவானதுதான் பூமியின் சுற்றளவு எவ்வளவு என்ற வினாவும், அதற்கான விடை தேடுதலும். இதனை சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் யாரும் நினைத்துப் பார்க்க முடியாத காரியம். அதுவும் இருந்த இடத்தில் இருந்து கொண்டே பூமியின் சுற்றளவை ஆதிகாலத்தில், எந்த அறிவியல் ஆதாரமும் தெளிவாக அறிய முடியாத 2,000 ஆண்டுகளுக்கு முன் ஒருவர் கண்டுபிடிக்கிறார் என்றால், அது எத்தனை வியப்புக்குரிய விஷயம்..! பூமியின் சுற்றளவைக் கண்டறிய, எகிப்தை விட்டு நகராமல், சூரியனால் ஒரு பொருள் மேல் ஏற்படும் நிழலின் சாய்மானத்தை வைத்தே, பூமியின் சுற்றளவை ஒருவர் கண்டறிகிறார் என்றால் அவர் படு கில்லாடிதானே..!
பூமியின் கோள வடிவமும், சுற்றளவும்..!
அன்று கோடைகாலத்தின் மிக நீண்ட பகல் தினம் (summer solstice). அப்போது சூரியன் வானில் தலைக்கு மேலே சரியாக பவனி வந்து, வெய்யிலை நம் மேல் கொட்டுகிறது. அன்றைய எகிப்தின் ஸ்வேனெட் (Swenet/Syene) நகரில், இன்று நாம் சொல்லும் கடக ரேகை என்பது அப்போது கிடையாது. ஏனெனில் அந்த அட்ச ரேகையை அன்று யாரும் வரையவில்லை. ஆனால் சூரியன் அப்போது கடக ரேகையின் மேல் இருந்தது. அதுவும் சரியாக சூரியன் தலைக்கு மேல் கொளுத்திக் கொண்டிருந்தது. அப்போது யாராவது குனிந்து ஒரு ஆழமான கிணற்றில் எட்டிப் பார்த்தால், அது அப்போது சூரியனின் பிரதிபலிப்பை மறைத்துவிடும், இந்தத் தகவலை யாரோ தெரிவித்திருந்தனர்.. ஆனால் அவரும்கூட இந்த உண்மையை ஒரு சோதனை மூலம் நிரூபிக்க முயற்சி செய்தார். அவரது சொந்த ஊரான சைநீனுக்குச் சென்றார். அலெக்சாண்டிரியாவில் சூரியனின் சாய்மானம் என்பது, அந்த வட்டத்தில் 50ல் ஒரு பங்கு என தீர்மானித்தார். இது ஒரு வட்டத்தில் 7.12 பாகை என்பதை எரடோஸ் தெரிவித்தார். அதே சமயம், பூமி ஒரு கோளவடிவம் என்று கிரேக்கர்கள் புரிந்து கொண்டனர். அதே கருத்தைத்தான் எரடோஸ்தனிஸும் கொண்டிருந்தார்.
அலெக்சாண்டிரியா சைனுக்கு (Syene) வடக்கே இருக்கிறது. எனவே, மெரிடியன் வளைவு (meridian arc) எனபது எவ்வளவு தூரம் எனபதை தூரத்துடன் இணைத்து கணக்கிட்டால், அந்த தூரம் என்பதுதான் புவியின் சுற்றளவு அறிய சரியான அளவுகோலாக அன்று எரஸ்டோஸ்தனிசுக்குப் பயன்பட்டது. ஏனெனில் சூரியனின் கதிர்கள் பூமி மீது இணை கோடுகளாகவே விழுகின்றன. அதன் சாய்மானம் அந்த இடத்தில் 50ல் ஒரு பங்கு என்றும், அதுதான் 1/50=7.2/360 பாகை என்ற கணக்கை படு துல்லியமாகப் போட்டார். அலெக்சாண்டிரியாவுக்கும், சைனீனுக்கும் இடையில் உள்ள தொலைவு என்ன என்று தெரிந்தால் இதற்கு விடை கண்டுபிடித்து விடலாம்.
அலெக்சாண்டிரியாவுக்கும், சைனீனுக்கும் இடையில் உள்ள தொலைவு அறிய சைனீனிலிருந்து அலெக்சாண்டிரியாவுக்கு சில வீரர்களை ஒட்டகத்தின் மீது ஏற்றி அனுப்பினார். இரு ஊர்களுக்கும் இடையிலுள்ள தூரத்தை அறிந்து கொள்ள அவர் எடுத்த ஒட்டக முயற்சிகள் மிகவும் சுவையானவை. அதனால்தான் அன்றைய எரடோஸ்தனிஸின் கணிப்பிலிருந்து பூமியின் சுற்றளவு கொஞ்சமும் தப்பவில்லை. அன்றைய எகிப்திய அலகான ஸ்டேடியன் (stadion) என் ற அலகில்தான் பூமியின் சுற்றளவைக் கணக்கிட்டார். அந்த அலகுப்படி, எரடோஸ்தனிஸ் கணக்கிட்ட புவியின் சுற்றளவு 250,000 ஸ்டேடியா (46,250 கி.மீ.). ஆனால் நிலநடுக்கோட்டில் பூமியின் சுற்றளவு 40,075 கி.மீ. ஸ்டேடியன் அலகில் உள்ள மாறுதகளைக் கணக்கில் கொண்டு, அன்றைக்கு அவர் கண்டுபிடித்த புவியின் சுற்றளவு 39, 690 கி.மீ.என்பதும் தெரிய வந்தது. அதாவது இன்றைய புவியின் சுற்றளவில் சுமார் 2% மட்டும் வித்தியாசம் இருந்தது. இதனை நாம் கணக்கில் கொள்ள வேண்டியதில்லை.
புவி மீது சோதனைகள்..!
எரடோஸ்தனிஸ் பூமியின் சுற்றளவு கண்டுபிடிக்கும் முயற்சி, ஒரே ஒரு சோதனையுடன் நிறைவு பெற்று விடவில்லை. அவரே. வேறு வேறு இடங்களுக்கு ஒட்டகத்தின் மேல் ஆட்களை அமரவைத்து அனுப்பி, அவைகளுக்கு இடையே உள்ள தூரம், சூரியக்கதிரின் சாய்மானம் போன்றவற்றைக்கொண்டு அந்த பகுதியிலும் புவியின் சுற்றளவு என்ன என்பது தெரிந்து கொண்டு, ஏற்கனவே கண்டுபிடித்திருந்த சுற்றளவுடன், மற்ற விடைகள் ஒத்துப் போனதால், முன்பு அலேக்சான்டிரிய-சைநினுக்கு இடையில் கண்டறிந்த பூமியின் சுற்றளவு சரியானதே என்ற முடிவுக்கு வந்தார். பூமியின் சுற்றளவை திரிகோணமிதி கணக்கியல் மூலமே கண்டறிந்தார். பூமியின் விட்டத்தையும் கூட, சுற்றளவு மூலம் கணக்கிட்டுத் தெரிவித்தார்.
புவியியலின் முதல் பதிவும் புத்தகமும்!
அந்த கால கட்டத்தில் எரடோஸ்தனிஸ் எழுதிய புவிவியல் புத்தகம் 3 பெரிய தொகுதிகளாக வெளிவந்தன. நீண்ட காலத்துக்கு அதுவே, புவியியலின் அசைக்க முடியாத ஆதாரமாக இருந்தது. எரடோஸ்தனிஸின் கண்டுபிடிப்பான பூமி சுற்றளவின் அளவு அடுத்த 100 ஆண்டுகளுக்கு எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே ஒப்புக்கொள்ளப்பட்டு பின்பற்றப்பட்டது. அதாவது அடுத்த நூறாண்டுக்காலமும் எந்தவித அறிவியல் கண்டுபிடிப்புகளும் பூமியின் சுற்றளவு பற்றி நடக்கவில்லை என்றே சொல்ல வேண்டும். அவருக்குப் பின் 150 ஆண்டுகள் கழித்து வந்த பாசிடோனியஸ் (Posidonius) பூமியின் சுற்றளவை அளக்க எரடோஸ்தனிஸின் செய்முறையையே பயன்படுத்தினார். இரு வேறு இடங்களின் மூலம் சுற்றளவு கணக்கைக் கணக்கிட்டு, முன்பு கணக்கிட்ட 252,000 என்ற ஸ்டேடிய எண்ணிக்கையே வந்தது.
எரடோதனிஸின் மற்ற கண்டுபிடிப்புகள்..!
எரடோஸ்தனிஸ் பூமியின் சுற்றளவு, விட்டம் கண்டுபிடித்ததுடன் அவரது கண்டுபிடிப்பின் தாகம் தணிந்துவிடவில்லை. அவரது கண்டுபிடிப்புகள் வானவியலிலுக்கும் கூட பெருமை சேர்க்கிறது. பூமியிலிருந்து சந்திரனும், சூரியனும் எவ்வளவு தூரத்தில் இருக்கின்றன என்ற உண்மையைக் கண்டுபிடித்தவர் எரடோஸ்தனிஸ்தான். ஆனால் அவை பூமியின் சுற்றளவு போல் அவ்வளவு துல்லியமாக இல்லை. சூரியக் கதிரின் சாய்மானம், நிழலின் சாய்மானம் இவற்றை வைத்து பூமி சுழலும்போது 23.5 பாகை சாய்மானத்தில் சுழலுகிறது என்பதையும் கூட துல்லியமாகத் தீர்மானித்தார். மேலும் எரடோஸ்தனிஸ் அலெக்சாண்டிரியா நூலகத்தின் பொறுப்பாளாராகவும் இருந்தார். அதனாலும் மக்கள் எரடோஸ்தனிஸ் சொல்வதை ரொம்பவும் நம்பினார்கள். எக்கச்சக்கமான எரடோஸ்தனிஸின் வேலைகள், கண்டுபிடிப்புகள்.அனைத்தும் அலெக்சாண்டிரியா நூலகம் அழிந்த போது அழிந்துவிட்டன. அவரைப் பற்றி மற்ற நூலாசிரியர்கள் எழுதிய தகவல்களை வைத்தே இவையனைத்தும் எழுதப்பட்டுள்ளன.
ஹெர்மஸ் கவிதையும்..லீப் வருடமும்..!
எரடோஸ்தனிஸ்தான் முதன் முதல் பூமியின் உருவத்தை உத்தேசமாகக் கணித்து, அதன் வரைபடத்தை வரைந்து தந்தார். அதன் காலக் கணிப்பையும் பரிணாமக் காலத்தையும் கணக்கிட்டவர் இவர்தான். எரடோஸ்தனிஸுக்கு சரித்திரத்தின் மீது மீளாக் காதல் உண்டு. அதனால்தான் அவற்றை சுவைபட எழுதினார். வானில் வலம் வரும் விண்மீன் படலங்களுக்கும், கிரேக்க புராணங்களுடன் உறவு உண்டாக்கி, அவற்றிற்கிடையே உள்ள இணைப்பை அழகாக சித்தரித்தார். எரடோஸ்தனிஸ் இரவு வானின் விண்மீன்களைப் பட்டியலிட்டார். அன்றைக்கு அவற்றின் எண்ணிக்கை 675 உள்ளது என்றும் தெரிவித்தார். எரடோஸ்தனிஸ் ஹெர்ம்ஸ் Hermes, Erigone and Anterinys or Hesiod (apparently alternative titles)) என்ற அழகிய கவிதை ஒன்றைப் புனைந்தார். அதில் வானவியலின் அடித்தளம் பற்றி அழகாக, கோர்வையாக வடித்திருக்கிறார். அத்துடன், ஒவ்வொரு 4 ஆண்டுக்கு ஒரு முறை லீப் (Leap) வருடம் வருகிறது என்று பாட்டாக படித்தவரும் இவரே. அது மட்டுமின்றி அந்த சமயத்தில் நடைபெற்ற அரசியல் தகவல்களையும் , முக்கிய நிகழ்வுகளையும் குறிப்பிட்டுள்ளார்.
அலெக்சாண்டிரியா நூலகம் & எரடோஸ்தனிஸின் எழுத்துக்கள் அழிவு!
எரடோஸ்தனிஸ் கணிதத்தில் விற்பன்னர். தனது 30 ஆவது வயதில், மூன்றாம் தாலமியால் மீண்டும் அலெக்சாண்டிரியாவுக்கு அழைக்கப்பட்டார். அதுவும் தாலமியின் மகனுக்கு கல்வி புகட்ட வந்த எரடோஸ்தனிசை தாலமி III அலெக்சாண்டிரியா நூலகத்தின் முதன்மை நூலகராக நியமித்தார். அந்த நூலகத்தில் எரடோஸ்தனிஸ் நிலவியலின் அறிவியல் முழுவதையும் பாப்பிரஸ் மற்றும் ஆட்டுத்தோலில் பதிவு செய்து வைத்திருந்தார். பின்னர் அலெக்சாண்டிரியா நூலகம் அழிக்கப்பட்டபோது, ஆயிரக்கணக்கான பாப்பிரஸ் பட்டைச் சுருள்களும், ஆட்டுத்தோல் சுருள் பதிவுகளும் அப்படியே அழிக்கப்பட்டன.
தனது காலத்தில் அரிஸ்ட்டாட்டில் மனித இனத்தை கிரேக்கர்கள் மற்றும் காட்டுமிராண்டிகள் என்று கூறு போட்டதையும் எதிர்த்தவர் எரடோஸ்தனிஸ்.
எரடோஸ்தனிஸின் எண்ணியல்..!
அந்தக்காலத்தின் எண்ணியல் (Number Theory), வடிவியல் (Geometry) மற்றும் எண் கணிதம் (Arithmetic) ஆகியவற்றில் சிறந்து விளங்கினார் எரடோஸ்தனிஸ். இதில் முதன்மை எண்களைக் (Prime Numbers) கண்டுபிடிக்கும் முறையை அறிமுகப் படுத்தியவர் எரடோஸ்தனிஸ்தான். அதனால்தான் அவைகளை நாம் எரடோஸ்தனிஸின் சல்லடை (‘Sieve of Eratosthenes’) என்றே அழைக்கிறோம். இதுவும் கூட நிகோமாக்கஸ் (writings of Nicomachus) என்ற அறிஞரின் எழுத்துக்கள் மூலமே தெரிய வந்துள்ளன.
எளிதான அல்காரிதம்!
சல்லடை/சீவ் என்ற சதுர வடிவ கணித சூத்திரம். படம் பார்க்க. இது ஒரு எளிதான அல்காரிதம் (simple algorithm). இது முதன்மை எண்கள் ஒரு குறிப்பிட்ட எண்கள் வரை செயல்பட முடிகிறது. மேலும் ஒரு கோடி வரை துல்லியமாய் அறிய முடிகிறது (The Sieve is a simple algorithm which works to identify all of the prime numbers up to a certain integer and is very accurate up to about 10 மில்லியன். Eratosthenes later erected a column at Alexandria with an epigram inscribed on it relating to his own mechanical solution to the cube problem.) இது 2, 3, 5, 7 போன்றவற்றின் இரட்டிப்பு பதின்மரை (Multiples) விட்டுவிட்டு செயல்படுகிறது. மீதமுள்ள எண்கள் முதன்மை எண்களாகும். இந்த எண் சல்லடை/சீவ் 18 ம் நூற்றாண்டின் லியோன்ஹார்ட் யூலர் (Leonhard Euler) வந்து தன் கருத்துக்களை சொல்லும் வரை நீடித்தது. அதுவே கணிதத் துறையை ஆட்சியும் செய்தது..
வடிவியலின் தந்தை எரடோஸ்தனிஸ்..!
எரடோஸ்தனிஸின் இன்னொரு முக்கிய புத்தகமும் அழிந்து போனது. அதன் பெயர் வழிகளிலே (On means ) -கணித வழிகள் என்பதாகும். இதுதான் வடிவியலின் இன்றியமையாத புத்தகங்களில் ஒன்றாகும். இதனைக் குறிப்பிட்டு, அதன் தகவல்களையும் தந்தவர் பாபஸ் ( Pappus) என்பவர். (another lost book written by Eratosthenes was On means. It is mentioned by Pappus as one of the great books of geometry.)
பூமி-சூரியன் தொலைவினைக் கண்டுபித்த எரடோஸ்..!
திரிகோணமிதியின் சூத்திரம் மற்றும் அப்போது கிடைத்த தகவல்களைக் கொண்டே பூமி-சூரியன் தொலைவினைக் கண்டறிந்தார். அப்போது இன்னொரு முக்கிய விஷயமும் அவருக்குக் கிடைத்தது. சூரியன் வெகு தொலைவில் உள்ளதால்தான் அதன் கதிர்கள் பூமியில் இணைகோடுகளாக (Parallel) வருகின்றன என்பதையும் அனுமானம் செய்தார். அது மட்டுமல்ல பூமி-சூரியனுக்கு இடையில் உள்ள தூரம் 149 மில்லியன் கி.மீ என்றும் தெரிவித்தார். இப்போது அறியப்படும் புவி-சூரிய தொலைவு 149 .5 மில்லியன் கி.மீ தான். அதாவது 1% மட்டுமே வித்தியாசம் இருந்தது. இந்த வித்தியாசம் ஒரு விஷயமே அல்ல. ஆனால் பூமியின் சாய்மானத்தை மிகத் துல்லியமாக 23.5 பாகை என்று கணக்கிட்டார். ஆனால் துரதிருஷ்டவசமாக பூமிக்கும் சந்திரனுக்கும் இடையில் உள்ள தூரம் என அவர் குறிப்பிட்ட 144,000 கி.மீ என்பது மட்டும் தவறாகி விட்டது. இது தற்போதைய தூரத்தை விட மூன்று மடங்கு அதிகம்.
பீட்டா எரடோஸ்தனிஸ்..!
எரடோஸ்தனிஸ் பல்துறை வித்தகராக இருந்தாலும் கூட எந்தத் துறையிலும் அவர் முதன்மையாய் இல்லாததால் அவரை இரண்டாம் நிலைக் குறியீடான பீட்டாவை வைத்து பீட்டா என்றே அழைக்கின்றனர். பீட்டா என்று குறியீட்டுப்பெயரில் இவரைக் கூறியவர் சுதா லெக்சிகான் (Suda Lexicon) மற்றும் அவரது சம காலத்தவருமே. ஆனால் முதன்மை அறிஞர்களை விட எரடோஸ்தனிஸ் மிக மிக முக்கியாமானவர். அவரது கண்டுபிடிப்புகளும், சூத்திரங்களும், கொள்கைகளும் இன்றும் மக்களால் பின்பற்றப்படுகின்றன.
எரடோசின் விமரிசனமும் பிளாட்டோவும்..!
எரடோஸ்தனிஸ் எழுதிய கணித விமர்சனம் மிகவும் முக்கியமானது. அதுவே, பிளாட்டோவின் தத்துவத்திற்கு அடித்தளம் என்றும் சொல்லப்படுகிறது. எரடோஸ்தனிஸின் எழுத்தில் எண்கணிதம் (arithmetic) மற்றும் வடிவியல் (geometry) போன்றவற்றிற்கு கணித அடிப்படை விளக்கங்கள் சொல்லப்பட்டுள்ளன. அவற்றில் ஏராளமான விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. மேலும், அதில் (கணிதத்தில்) இசையையும் இணைத்தே கூறியுள்ளார் எரடோஸ்தனிஸ். இவற்றை எல்லாம் நாம் ஸ்மியார்னா(Smyrna)வில் வாழ்ந்த தியோனின் பதிவுகள் மூலமே அறிகிறோம்.
கிரேக்க கணிதத்தில் வட்டத்தின் பரப்பு (squaring a circle), கனசதுரத்தின் இரட்டிப்பு (doubling a cube) மற்றும் ஒரு கோணத்தின் முப்பிரிவு (trisecting an angle) போன்ற மூன்று முக்கிய பிரச்சினைகள் இருந்தன. அதில் ஒன்றான கன சதுரத்தின் இரட்டிப்பு என்பதற்கான பிரச்சனையை எரடோஸ்தனிஸ் தீர்த்து வைத்தார் என்று தியோன்(Theon of Smyrna -Theon) மற்றும் ஈடோசியஸ்(Eutocius) தெரிவித்துள்ளனர்.
எரடோசின் முதுமையும் முடிவும்..!
எரடோஸ்தனிசுக்கு முதுமை எட்டியதும் பல வகைகளில் சங்கடப்பட்டார். முக்கியமாக 80 வயதாகும்போது அவருக்கு பார்வை இழப்பு ஏற்படுகிறது. அதனால் மிகவும் மனம் நொந்த எரடோஸ்தனிஸ் கண்பார்வை போன பின் மனிதனுக்கு மதிப்பு மரியாதை இல்லை என்றும், அதனால் விரைவில் இறப்பது உசிதம் என்று எண்ணி பல நாட்கள் உண்ணா நோன்பிருந்து பின்னரே உயிர் நீத்தார். இதுதான் இவரது வாழ்வில் வேதனையான ஒரு நிகழ்வாகும். எரடோஸ்தனிசின் உயிர் இந்தப் புவியிலிருந்து பிரிந்த வருடம் கி.மு.192. தன் 84 வது வயதில் இந்த உலகைத் துறந்தார்.
எரடோஸ்தனிசுக்கு பெருமை சேர்க்கும் வகையில், சந்திரனில் உள்ள ஒரு பள்ளத்திற்கு எரடோஸ்தனிஸ் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
நன்றி: பேரா.சோ.மோகனா
Saturday, August 20, 2011
இருட்டுக் கிரகம் கண்டுபிடிப்பு!
வியாழன் கிரகத்தின் அளவிலான கிரகம் ஒன்றைப் புதிதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பிரபஞ்சத்தில் இதுவரை அறியப்பட்டுள்ள கிரகங்களிலேயே மிகவும் இருட்டான ஒன்று இது என்கிறார் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வாளர்களில் ஒருவரான டேவிட் கிப்பிங். முழுமையான வாயுப்பந்து போன்று நெருக்கமாகப் பார்த்தால் தெரிகிறது. அதே வேளையில், ஆங்காங்கே சிவப்புப் புள்ளிகள் போன்று சில பகுதிகளும் உள்ளன என்கிறார் அவர்.
டி.ஆர்.இ.எஸ்-2பி என்று பெயரிடப்பட்டுள்ள இந்தக்கிரகம் ஏன் இவ்வளவு இருட்டாக இருக்கிறது என்பதற்கான காரணங்களை இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்கிறார்கள் ஆய்வாளர்கள். தனது நட்சத்திரத்திலிருந்து 30 லட்சம் மைல்கள் தொலைவில் இந்த கிரகம் அமைந்திருக்கிறது. 980 டிகிரி செல்சியஸ் வெப்பத்தைக் கொண்டதாகக் கருதப்படும் இந்தக் கிரகம், தனது நட்சத்திரத்திலிருந்துதான் இருக்கும் வெளிச்சத்தையும் பெறுகிறது என்பது ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.
இந்த இருட்டுக் கிரகத்தின் பரப்பில் ஆவி வடிவத்தில் சோடியம் மற்றம் பொட்டாசியம் அல்லது வாயு வடிவில் டைட்டானியம் ஆக்சைடு இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. இவையனைத்தும் ஒளியை உள்வாங்கிக் கொள்ளும் தன்மை கொண்டவை. அதனால்தான் தனது நட்சத்திரத்திலிருந்து பெறும் வெளிச்சம் இந்த கிரகத்திற்கு பயன்படாமல் போய்விட்டது என்று ஆய்வாளர்கள் ஊகிக்கிறார்கள்.
அமெரிக்க விண்வெளி மையமானநாசாவின் கெப்ளர் தொலைநோக்கி மூலம் பல்வேறு விபரங்களை இந்த ஆய்வாளர்கள் பெற்றுக் கொண்டுள்ளனர். மேலும் விபரங்கள் கிடைப்
பதன் மூலம் இருட்டுக்கான காரணத்தைத் துல்லியமாகச் சொல்ல முடியும் என்கிறார்கள் அவர்கள்.
நன்றி: தீக்கதிர்
டி.ஆர்.இ.எஸ்-2பி என்று பெயரிடப்பட்டுள்ள இந்தக்கிரகம் ஏன் இவ்வளவு இருட்டாக இருக்கிறது என்பதற்கான காரணங்களை இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்கிறார்கள் ஆய்வாளர்கள். தனது நட்சத்திரத்திலிருந்து 30 லட்சம் மைல்கள் தொலைவில் இந்த கிரகம் அமைந்திருக்கிறது. 980 டிகிரி செல்சியஸ் வெப்பத்தைக் கொண்டதாகக் கருதப்படும் இந்தக் கிரகம், தனது நட்சத்திரத்திலிருந்துதான் இருக்கும் வெளிச்சத்தையும் பெறுகிறது என்பது ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.
இந்த இருட்டுக் கிரகத்தின் பரப்பில் ஆவி வடிவத்தில் சோடியம் மற்றம் பொட்டாசியம் அல்லது வாயு வடிவில் டைட்டானியம் ஆக்சைடு இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. இவையனைத்தும் ஒளியை உள்வாங்கிக் கொள்ளும் தன்மை கொண்டவை. அதனால்தான் தனது நட்சத்திரத்திலிருந்து பெறும் வெளிச்சம் இந்த கிரகத்திற்கு பயன்படாமல் போய்விட்டது என்று ஆய்வாளர்கள் ஊகிக்கிறார்கள்.
அமெரிக்க விண்வெளி மையமானநாசாவின் கெப்ளர் தொலைநோக்கி மூலம் பல்வேறு விபரங்களை இந்த ஆய்வாளர்கள் பெற்றுக் கொண்டுள்ளனர். மேலும் விபரங்கள் கிடைப்
பதன் மூலம் இருட்டுக்கான காரணத்தைத் துல்லியமாகச் சொல்ல முடியும் என்கிறார்கள் அவர்கள்.
நன்றி: தீக்கதிர்
Wednesday, June 8, 2011
வானின் கண்ணாமூச்சி சூரிய கிரகணம்...!
முழு, பகுதி சூரிய கிரகணம் உருவாதல்
கிரகணம் என்பது ஓர் அருமையான வானியல் நிகழ்வு. வானில் சுற்றி வரும் பொருள் ஒன்று தற்காலிகமாக வேறொரு வான் பொருளால் மறைக்கப்படும்போது அது கிரகணம் (Grahan) என்று அழைக்கப்படுகிறது. கிரகணம் என்பது ஒரு கிரேக்க சொல். இதற்கு அனாதையாய் தனித்து விடப்பட்ட/மறைக்கப்பட்ட என்பதே பொருளாகும். பொதுவாக கிரகணம் என்பதை சூரிய, சந்திர கிரகணங்களையே குறிக்கும் சொல்லாக நாம் கருதுகிறோம். இந்த சூரிய, சந்திர கிரகணங்கள் சூரியன், சந்திரன் மற்றும் பூமிக்கு இடையே நடைபெறும் ஒரு கண்ணாமூச்சி விளையாட்டு. நம் சூரிய குடும்ப பங்காளியான வியாழன், சனி கோள்களிலும் அவைகளின் சந்திரன்கள் ஒரு குறிப்பிட்ட கோணத்தில் கடக்கும் போதும், இரட்டை விண்மீன்களுக்கிடையேயும் கூட இந்த கிரகண விளையாட்டு தொடர்து நடந்து கொண்டே இருக்கிறது.
இந்த சூரிய குடும்பத்தில் பூமியாகிய நாம் மட்டும் சுற்றவில்லை. நம் குடும்ப நாயகனான சூரியனும்கூட சுற்றுகிறது அதன் தாய்வீடான பால்வழி மண்டலத்தை. வானில் சூரியன், தட்டாமாலை சுற்றுவது போல, தன்னைத்தானே தக தகவென இருந்து சுற்றிக்கொண்டு, தான் வசிக்கும் பால்வழி மண்டலத்தையும் நொடிக்கு சுமார் 220 -250 கி.மீ வேகத்தில் சுற்றி வருகிறது. இது தன்னிடம் உள்ள ஹைடிரஜனை தொடர்ந்து எரித்தே நமக்கு இப்படி ஒளி வீசும் வாயுப் பந்துதான் சூரியன். இதுவும் கூட ஒரு விண்மீனே..! சூரியன் தனது ஈர்ப்பு சக்தியால், தான் சுற்றுவது மட்டுமின்றி, தனது குடும்ப உறுப்பினரான 8 கோள்கள், அவற்றின் துணைக்கோள்கள், விண்கற்கள் மற்றும் தனது குடும்ப கடைசி உறுப்பினரான வால் மீன்களையும் இழுத்துக்கொண்டே சுற்றி வருகிறது. சூரியனின் விட்டம் 1384௦௦௦000 கி.மீ. பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தொலைவு, 149565139438 கி.மீ. ஆனால் இந்த பிரம்மாண்டமான சூரியனை, 3474.8 கி.மீ விட்டமுள்ள குட்டியூண்டு நிலா, தன் நிழலால், சூரியனை நம் பார்வையிலிருந்து மறைக்கும் விளையாட்டுதான் ஜூன் 1, 2011ல் நிகழ்ந்தது.
நமக்கு இந்த தூரம், தொலைவு பற்றி ஒரு வினாக் குறி/ சந்தேகம் மனதுள் எழும். அது சரி.. இந்த சந்திரனோ ரொம்ப பொடிசு..! இது எப்படி இவ்...வ்ளோ. பெரிய அசுர சூரியனை மறைக்கிறது என்பதுதான்.! சூரியனின் விட்டம் சந்திரனின் விட்டத்தைப் போல 400 மடங்கு அதிகம். அதே போல, சூரியனுக்கும், பூமிக்கும் இடையிலுள்ள தூரம், பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலுள்ள தூரத்தைப் போல 400 மடங்கு அதிகம். இது ஓர் அரிதான ஒற்றுமை/ஒப்புமை எனலாம். எனவேதான், நாம் பூமியிலிருந்து பார்க்கும்போது சூரியனும், சந்திரனும் ஒரே அளவில் காணப்படுகிறது.
சூரியன், சந்திரன், பூமி மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது சந்திரனின் நிழல் சூரியனை மறைப்பதால் சூரிய கிரகண நிகழ்வு உண்டாகிறது. இதில் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் இருக்கும். சூரிய கிரகணம் அமாவாசை நாளில்தான் உருவாகும். சூரியன், பூமி, சந்திரன் மூன்றும் ஒரே நேர்கோட்டில், முழு நிலா நாளில் வரும்போது சந்திர கிரகணம் உண்டாகும். இதில் சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே பூமி இருக்கும். பூமியின் நிழல் நிலவின் மேல் விழுகிறது. எல்லா அம்மாவாசை நாளிலும் சூரிய கிரகணமும், எல்லா முழு நிலா நாளிலும் சந்திர கிரகணமும் உண்டாவதில்லை. காரணம், சந்திரன் தன் அச்சில் 5 டிகிரி சாய்வாக பூமியைச் சுற்றுவதே..! இதனால் எல்லா சமயங்களிலும் சூரிய, சந்திர, பூமி நாயகர்கள் ஒரே நேர்கோட்டில் வருவதில்லை.
பொதுவாக ஓர் ஆண்டில், 2 -7 கிரகணங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இந்த 2011 ம் ஆண்டில் 4 பகுதி சூரிய கிரகணங்களும், 2 சந்திர கிரகணங்களும் தெரியும். இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம், ஜனவரி 4 ம் நாள் நிகழ்ந்தது. அடுத்த சூரியகிரகணம், ஜுன் முதல் நாள்தான்.
இந்த ஆண்டில் வரும் கிரகண அட்டவணை இதோ.!
2011 , ஜனவரி 4 , பகுதி சூரிய கிரகணம்.
2011, ஜனவரி 4 ம் நால், சூரிய கிரகணம்
2011 , ஜுன் 1 , பகுதி சூரிய கிரகணம்
2011 , ஜுன் 15 , முழு சந்திர கிரகணம்
2011 , ஜுலை 1 , பகுதி சூரிய கிரகணம்
2011 , நவம்பர் 25 , பகுதி சூரிய கிரகணம்
2011, டிசம்பர் 10 , முழு சந்திர கிரகணம்
சீனாவில் கிரகணம் பார்த்தல்
கிரகணம் பற்றிய ஆராய்ச்சிகள் கி.பி. 19, 20ம் நூற்றாண்டுகளில்தான் நடைபெற்றன. ஆனால் நாம் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், பழங்காலங்களில் இருந்து கிரகணங்களைப் பார்த்ததிற்கான பதிவுகள் காணப்படுகின்றன. சீன ஜோதிடர்களும், வானவியலாலர்களும், பாபிலோனியர்களும் சுமார் 4,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே முழு சூரிய கிரகணம் பற்றி எழுதி வைத்துள்ளனர். வரலாற்றுப் பதிவுகளின் காலத்தைச் சரியாகப் பட்டியலிட இந்த கிரகணம் வந்து போன தேதிகள் உதவுகின்றன. சிரியன்கள் (Syrian ) காலத்து களிமண் பலகை ஒன்றில், கி.மு. 1223, மார்ச் 5ம் நாள் சூரிய கிரகணம் வந்து போன நிகழ்வு பதிவு செய்யப்பட்டுள்ளது. கி.மு 1036ல் ஜுலை 31ம் நாள் பகல் இரவாக மாறியது என்று குறிப்பிட்டுள்ளனர்.
அயர்லாந்தில் காணப்படும் கல்லில், கி.மு,3,340 , நவம்பர் 30 ம் நாள் ஒரு கிரகணம் ஏற்பட்டதாக பதிவு உள்ளது. சீனர்களின் வரலாற்றுப் பதிவுகள் சுமார் 4,000௦௦௦ ஆண்டுகளுக்கு முன்பே சூரிய கிரகணங்கள் வந்து போனதையும், அவைகளின் மூலம் பூமியின் சுற்று வேகத்தின் மாற்றங்கள் அறியப்பட்டதாகவும் பதிவுகள் சொல்லுகின்றன. பாபிலோனியர்கள் கணிதவியல் மூலம் கிரகணம் வருவதைக் கணித்தனராம். எகிப்திய பிரமிடுகளிலும், கோயில் கற்சித்திரங்களிலும் கிரகணம் பற்றிய பதிவுகள் காணப்படுகின்றன.
கி.மு. 6 ம் நூற்றாண்டில் மெடோனிக் மற்றும் சாரோஸ் எனற வானவியல் விஞ்ஞானிகள் மீண்டும், மீண்டும் வரும் கிரகணங்களைக் கவனித்தனர். அவை ஓர்ஒழுங்கு முறையில் வருவதைப் பார்த்தனர். அவற்றை வகைப் படுத்தினர். அவர்களின் பெயராலேயே கிரகணங்கள் வந்து போவதை சாரோஸ் சுழற்சி/காலம் மற்றும் மெடோனிக் காலம் என்று அழைக்கப் படுகிறது. இன்று நாம் சாரோஸ் சுழற்சியையே பின்பற்றுகிறோம். பூமி மற்றும் சந்திரனின் பாதைகள் சந்திக்கும் புள்ளியிலிருந்து, சூரியன் நிலவினுடைய 18 .5 டிகிரி பாகைக்குள் இருக்கும்போது மட்டுமே சூரிய கிரகணம் நிகழ வாய்ப்பு உள்ளது. 18வருடங்கள், 11 நாட்கள், 8மணி நேரம் என்பது ஒரு சாரோஸ் சுழற்சி/காலம் ஆகும்.
இந்த சூரிய கிரகணம் சாரோஸ் சுழற்சி 118 எண்ணைப் பெற்றுள்ளது. இந்த சாரோஸ் சுழற்சியில் மொத்தம் 72 கிரகணங்கள் உள்ளன. பகுதி கிரகணங்கள்:8; முழு கிரகணங்கள்:40; இடைப்பட்டது/ஹைபிரிட்:2; வளைய/கணக்கான கிரகணம்:15 ; அதன் பகுதி கிரகணம்:7 என மொத்தம் 72 கிரகணங்கள்.இதற்கான மொத்த காலகட்டம், 1280 ஆண்டுகள் ஆகும். இந்த சுழற்சியின் முதல் பகுதி சூரிய கிரகணம், தென் துருவத்தில் அண்டார்டிக்காவின் மேல் அற்புதமாய் குடிகொண்டது. அந்த நிகழ்வு நாள், 0803 ம் ஆண்டு, மே மாதம் 24 ம் நாளாகும்.ஒவ்வொரு 18 ஆண்டுகளிலும் இந்த சாரோஸ் சுழற்சி மீண்டும் மீண்டும் வரும். இந்த முறை எனபது, சந்திரனின் நோடு/சாய்மானம் வருவதைப் பொறுத்தே நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த நூறாண்டு காலத்தில், இந்த சாரோஸ் சுழற்சி 118, தென் துருவத்திலிருந்து இப்போதுதான் வட துருவத்தை எட்டிப் பிடித்திருக்கிறது. இந்த சாரோஸ் சுழற்சி முடிய இன்னும் 5 கிரகணங்கள் பாக்கி உள்ளன. எப்போது முடியும் தெரியுமா..? அதனைப் பார்க்க 2083 , ஜூலை 15 வரை காத்திருக்க வேண்டும்..! அதுவும் வட தருவ ஆர்டிக் பகுதியில் தான் முடியும்..! நமது சந்ததிகள் பார்த்து/கேட்டு மகிழ்வார்கள்.
நம் பூமி தவிர வேறு கோள்களில் இப்படி கிரகணத்தைப் பார்க்க முடியுமா? கட்டாயம் பார்க்கலாம். நமது பூமி போலவே, சூரிய குடும்ப உறுப்பினரான, செவ்வாய், வியாழன், சனி மற்றும் புளூட்டோவிலும் சூரிய கிரகணங்கள் நிகழும். என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? உண்மைதான். செவ்வாய் கோளில், அதன் துணைக் கோள்களான, போபோஸ் மற்றும் டெய்மோஸ் மூலம் சூரிய கிரகணம் உண்டாகிறது. இங்கே போபோஸ் வழித்தடத்தில் உருவாகும் கிரகணம் மிகக் குறைந்த நேரம், அதாவது 20 நொடிகள் மட்டுமே..! நமது குடும்பத்தின் பெரிய அண்ணாச்சியான வியாழனுக்கு 69 மேற்பட்ட துணைக் கோள்களும், ஏராளமான குட்டிக் குட்டி துணைக்கோள்களும், உள்ளன. இவற்றில் அமால்தியா, அயோ, யுறேபா, கனிமேடு மற்றும் காலிஸ்டோ என்ற 5 துணைக் கோள்கள் மூலம் மட்டுமே சூரிய கிரகணம் உருவாகிறது..! ஆனால் புதன் மற்றும் வெள்ளி கோள்களில் சூரிய கிரகணம் ஏற்படாது. ஏனெனில் இவைகளுக்கு துணைக் கோள்கள் இல்லை.
30 .. நாட்களில்.... 3 கிரகண..கொண்டாட்டங்கள்..!
இந்த மாத..ஜூன் 30 நாட்களுக்குள் மூன்று கிரகண கொண்டாட்டங்கள் நமக்கு கிடைக்க இருக்கின்றன. சூரிய கிரகணம் ஏற்பட்ட 15 வது நாளின் முன்போ/பின்போ கட்டாயமாய் சந்திர கிரகணம் உண்டாகும். ஜூன் முதல் நாள் பகுதி சூரிய கிரகணம். இன்னும் 15 நாட்களுக்குள், முழு சந்திர கிரகணம் ஜூன் 15 ம் நாள். அதனைத் தொடர்ந்தே அடுத்த 15 நாட்களுக்குள், ஜூலை 1 ம் நாள், மீண்டும் பகுதி சூரிய கிரகணம் என்றால், வானின் இப்படி ஒரு சாகச விளையாட்டைக் காண நமக்கெல்லாம் சந்தோஷக் கொண்டாட்டம்தானே..!
நன்றி- பேரா.சோ.மோகனா
கிரகணம் என்பது ஓர் அருமையான வானியல் நிகழ்வு. வானில் சுற்றி வரும் பொருள் ஒன்று தற்காலிகமாக வேறொரு வான் பொருளால் மறைக்கப்படும்போது அது கிரகணம் (Grahan) என்று அழைக்கப்படுகிறது. கிரகணம் என்பது ஒரு கிரேக்க சொல். இதற்கு அனாதையாய் தனித்து விடப்பட்ட/மறைக்கப்பட்ட என்பதே பொருளாகும். பொதுவாக கிரகணம் என்பதை சூரிய, சந்திர கிரகணங்களையே குறிக்கும் சொல்லாக நாம் கருதுகிறோம். இந்த சூரிய, சந்திர கிரகணங்கள் சூரியன், சந்திரன் மற்றும் பூமிக்கு இடையே நடைபெறும் ஒரு கண்ணாமூச்சி விளையாட்டு. நம் சூரிய குடும்ப பங்காளியான வியாழன், சனி கோள்களிலும் அவைகளின் சந்திரன்கள் ஒரு குறிப்பிட்ட கோணத்தில் கடக்கும் போதும், இரட்டை விண்மீன்களுக்கிடையேயும் கூட இந்த கிரகண விளையாட்டு தொடர்து நடந்து கொண்டே இருக்கிறது.
இந்த சூரிய குடும்பத்தில் பூமியாகிய நாம் மட்டும் சுற்றவில்லை. நம் குடும்ப நாயகனான சூரியனும்கூட சுற்றுகிறது அதன் தாய்வீடான பால்வழி மண்டலத்தை. வானில் சூரியன், தட்டாமாலை சுற்றுவது போல, தன்னைத்தானே தக தகவென இருந்து சுற்றிக்கொண்டு, தான் வசிக்கும் பால்வழி மண்டலத்தையும் நொடிக்கு சுமார் 220 -250 கி.மீ வேகத்தில் சுற்றி வருகிறது. இது தன்னிடம் உள்ள ஹைடிரஜனை தொடர்ந்து எரித்தே நமக்கு இப்படி ஒளி வீசும் வாயுப் பந்துதான் சூரியன். இதுவும் கூட ஒரு விண்மீனே..! சூரியன் தனது ஈர்ப்பு சக்தியால், தான் சுற்றுவது மட்டுமின்றி, தனது குடும்ப உறுப்பினரான 8 கோள்கள், அவற்றின் துணைக்கோள்கள், விண்கற்கள் மற்றும் தனது குடும்ப கடைசி உறுப்பினரான வால் மீன்களையும் இழுத்துக்கொண்டே சுற்றி வருகிறது. சூரியனின் விட்டம் 1384௦௦௦000 கி.மீ. பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தொலைவு, 149565139438 கி.மீ. ஆனால் இந்த பிரம்மாண்டமான சூரியனை, 3474.8 கி.மீ விட்டமுள்ள குட்டியூண்டு நிலா, தன் நிழலால், சூரியனை நம் பார்வையிலிருந்து மறைக்கும் விளையாட்டுதான் ஜூன் 1, 2011ல் நிகழ்ந்தது.
நமக்கு இந்த தூரம், தொலைவு பற்றி ஒரு வினாக் குறி/ சந்தேகம் மனதுள் எழும். அது சரி.. இந்த சந்திரனோ ரொம்ப பொடிசு..! இது எப்படி இவ்...வ்ளோ. பெரிய அசுர சூரியனை மறைக்கிறது என்பதுதான்.! சூரியனின் விட்டம் சந்திரனின் விட்டத்தைப் போல 400 மடங்கு அதிகம். அதே போல, சூரியனுக்கும், பூமிக்கும் இடையிலுள்ள தூரம், பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலுள்ள தூரத்தைப் போல 400 மடங்கு அதிகம். இது ஓர் அரிதான ஒற்றுமை/ஒப்புமை எனலாம். எனவேதான், நாம் பூமியிலிருந்து பார்க்கும்போது சூரியனும், சந்திரனும் ஒரே அளவில் காணப்படுகிறது.
சூரியன், சந்திரன், பூமி மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது சந்திரனின் நிழல் சூரியனை மறைப்பதால் சூரிய கிரகண நிகழ்வு உண்டாகிறது. இதில் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் இருக்கும். சூரிய கிரகணம் அமாவாசை நாளில்தான் உருவாகும். சூரியன், பூமி, சந்திரன் மூன்றும் ஒரே நேர்கோட்டில், முழு நிலா நாளில் வரும்போது சந்திர கிரகணம் உண்டாகும். இதில் சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே பூமி இருக்கும். பூமியின் நிழல் நிலவின் மேல் விழுகிறது. எல்லா அம்மாவாசை நாளிலும் சூரிய கிரகணமும், எல்லா முழு நிலா நாளிலும் சந்திர கிரகணமும் உண்டாவதில்லை. காரணம், சந்திரன் தன் அச்சில் 5 டிகிரி சாய்வாக பூமியைச் சுற்றுவதே..! இதனால் எல்லா சமயங்களிலும் சூரிய, சந்திர, பூமி நாயகர்கள் ஒரே நேர்கோட்டில் வருவதில்லை.
பொதுவாக ஓர் ஆண்டில், 2 -7 கிரகணங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இந்த 2011 ம் ஆண்டில் 4 பகுதி சூரிய கிரகணங்களும், 2 சந்திர கிரகணங்களும் தெரியும். இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம், ஜனவரி 4 ம் நாள் நிகழ்ந்தது. அடுத்த சூரியகிரகணம், ஜுன் முதல் நாள்தான்.
இந்த ஆண்டில் வரும் கிரகண அட்டவணை இதோ.!
2011 , ஜனவரி 4 , பகுதி சூரிய கிரகணம்.
2011, ஜனவரி 4 ம் நால், சூரிய கிரகணம்
2011 , ஜுன் 1 , பகுதி சூரிய கிரகணம்
2011 , ஜுன் 15 , முழு சந்திர கிரகணம்
2011 , ஜுலை 1 , பகுதி சூரிய கிரகணம்
2011 , நவம்பர் 25 , பகுதி சூரிய கிரகணம்
2011, டிசம்பர் 10 , முழு சந்திர கிரகணம்
சீனாவில் கிரகணம் பார்த்தல்
கிரகணம் பற்றிய ஆராய்ச்சிகள் கி.பி. 19, 20ம் நூற்றாண்டுகளில்தான் நடைபெற்றன. ஆனால் நாம் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், பழங்காலங்களில் இருந்து கிரகணங்களைப் பார்த்ததிற்கான பதிவுகள் காணப்படுகின்றன. சீன ஜோதிடர்களும், வானவியலாலர்களும், பாபிலோனியர்களும் சுமார் 4,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே முழு சூரிய கிரகணம் பற்றி எழுதி வைத்துள்ளனர். வரலாற்றுப் பதிவுகளின் காலத்தைச் சரியாகப் பட்டியலிட இந்த கிரகணம் வந்து போன தேதிகள் உதவுகின்றன. சிரியன்கள் (Syrian ) காலத்து களிமண் பலகை ஒன்றில், கி.மு. 1223, மார்ச் 5ம் நாள் சூரிய கிரகணம் வந்து போன நிகழ்வு பதிவு செய்யப்பட்டுள்ளது. கி.மு 1036ல் ஜுலை 31ம் நாள் பகல் இரவாக மாறியது என்று குறிப்பிட்டுள்ளனர்.
அயர்லாந்தில் காணப்படும் கல்லில், கி.மு,3,340 , நவம்பர் 30 ம் நாள் ஒரு கிரகணம் ஏற்பட்டதாக பதிவு உள்ளது. சீனர்களின் வரலாற்றுப் பதிவுகள் சுமார் 4,000௦௦௦ ஆண்டுகளுக்கு முன்பே சூரிய கிரகணங்கள் வந்து போனதையும், அவைகளின் மூலம் பூமியின் சுற்று வேகத்தின் மாற்றங்கள் அறியப்பட்டதாகவும் பதிவுகள் சொல்லுகின்றன. பாபிலோனியர்கள் கணிதவியல் மூலம் கிரகணம் வருவதைக் கணித்தனராம். எகிப்திய பிரமிடுகளிலும், கோயில் கற்சித்திரங்களிலும் கிரகணம் பற்றிய பதிவுகள் காணப்படுகின்றன.
கி.மு. 6 ம் நூற்றாண்டில் மெடோனிக் மற்றும் சாரோஸ் எனற வானவியல் விஞ்ஞானிகள் மீண்டும், மீண்டும் வரும் கிரகணங்களைக் கவனித்தனர். அவை ஓர்ஒழுங்கு முறையில் வருவதைப் பார்த்தனர். அவற்றை வகைப் படுத்தினர். அவர்களின் பெயராலேயே கிரகணங்கள் வந்து போவதை சாரோஸ் சுழற்சி/காலம் மற்றும் மெடோனிக் காலம் என்று அழைக்கப் படுகிறது. இன்று நாம் சாரோஸ் சுழற்சியையே பின்பற்றுகிறோம். பூமி மற்றும் சந்திரனின் பாதைகள் சந்திக்கும் புள்ளியிலிருந்து, சூரியன் நிலவினுடைய 18 .5 டிகிரி பாகைக்குள் இருக்கும்போது மட்டுமே சூரிய கிரகணம் நிகழ வாய்ப்பு உள்ளது. 18வருடங்கள், 11 நாட்கள், 8மணி நேரம் என்பது ஒரு சாரோஸ் சுழற்சி/காலம் ஆகும்.
இந்த சூரிய கிரகணம் சாரோஸ் சுழற்சி 118 எண்ணைப் பெற்றுள்ளது. இந்த சாரோஸ் சுழற்சியில் மொத்தம் 72 கிரகணங்கள் உள்ளன. பகுதி கிரகணங்கள்:8; முழு கிரகணங்கள்:40; இடைப்பட்டது/ஹைபிரிட்:2; வளைய/கணக்கான கிரகணம்:15 ; அதன் பகுதி கிரகணம்:7 என மொத்தம் 72 கிரகணங்கள்.இதற்கான மொத்த காலகட்டம், 1280 ஆண்டுகள் ஆகும். இந்த சுழற்சியின் முதல் பகுதி சூரிய கிரகணம், தென் துருவத்தில் அண்டார்டிக்காவின் மேல் அற்புதமாய் குடிகொண்டது. அந்த நிகழ்வு நாள், 0803 ம் ஆண்டு, மே மாதம் 24 ம் நாளாகும்.ஒவ்வொரு 18 ஆண்டுகளிலும் இந்த சாரோஸ் சுழற்சி மீண்டும் மீண்டும் வரும். இந்த முறை எனபது, சந்திரனின் நோடு/சாய்மானம் வருவதைப் பொறுத்தே நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த நூறாண்டு காலத்தில், இந்த சாரோஸ் சுழற்சி 118, தென் துருவத்திலிருந்து இப்போதுதான் வட துருவத்தை எட்டிப் பிடித்திருக்கிறது. இந்த சாரோஸ் சுழற்சி முடிய இன்னும் 5 கிரகணங்கள் பாக்கி உள்ளன. எப்போது முடியும் தெரியுமா..? அதனைப் பார்க்க 2083 , ஜூலை 15 வரை காத்திருக்க வேண்டும்..! அதுவும் வட தருவ ஆர்டிக் பகுதியில் தான் முடியும்..! நமது சந்ததிகள் பார்த்து/கேட்டு மகிழ்வார்கள்.
நம் பூமி தவிர வேறு கோள்களில் இப்படி கிரகணத்தைப் பார்க்க முடியுமா? கட்டாயம் பார்க்கலாம். நமது பூமி போலவே, சூரிய குடும்ப உறுப்பினரான, செவ்வாய், வியாழன், சனி மற்றும் புளூட்டோவிலும் சூரிய கிரகணங்கள் நிகழும். என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? உண்மைதான். செவ்வாய் கோளில், அதன் துணைக் கோள்களான, போபோஸ் மற்றும் டெய்மோஸ் மூலம் சூரிய கிரகணம் உண்டாகிறது. இங்கே போபோஸ் வழித்தடத்தில் உருவாகும் கிரகணம் மிகக் குறைந்த நேரம், அதாவது 20 நொடிகள் மட்டுமே..! நமது குடும்பத்தின் பெரிய அண்ணாச்சியான வியாழனுக்கு 69 மேற்பட்ட துணைக் கோள்களும், ஏராளமான குட்டிக் குட்டி துணைக்கோள்களும், உள்ளன. இவற்றில் அமால்தியா, அயோ, யுறேபா, கனிமேடு மற்றும் காலிஸ்டோ என்ற 5 துணைக் கோள்கள் மூலம் மட்டுமே சூரிய கிரகணம் உருவாகிறது..! ஆனால் புதன் மற்றும் வெள்ளி கோள்களில் சூரிய கிரகணம் ஏற்படாது. ஏனெனில் இவைகளுக்கு துணைக் கோள்கள் இல்லை.
30 .. நாட்களில்.... 3 கிரகண..கொண்டாட்டங்கள்..!
இந்த மாத..ஜூன் 30 நாட்களுக்குள் மூன்று கிரகண கொண்டாட்டங்கள் நமக்கு கிடைக்க இருக்கின்றன. சூரிய கிரகணம் ஏற்பட்ட 15 வது நாளின் முன்போ/பின்போ கட்டாயமாய் சந்திர கிரகணம் உண்டாகும். ஜூன் முதல் நாள் பகுதி சூரிய கிரகணம். இன்னும் 15 நாட்களுக்குள், முழு சந்திர கிரகணம் ஜூன் 15 ம் நாள். அதனைத் தொடர்ந்தே அடுத்த 15 நாட்களுக்குள், ஜூலை 1 ம் நாள், மீண்டும் பகுதி சூரிய கிரகணம் என்றால், வானின் இப்படி ஒரு சாகச விளையாட்டைக் காண நமக்கெல்லாம் சந்தோஷக் கொண்டாட்டம்தானே..!
நன்றி- பேரா.சோ.மோகனா
Monday, February 7, 2011
பிரபஞ்சத்தில் உயிரைத் தேடி..
மின்சாரம் தடைப்படுகிற இரவு நேரம்; மொட்டை மாடியில் நின்று கவனித்தால் நமக்குமுன் எல்லையற்ற விரிந்து பரந்துள்ள பிரபஞ்சத்தில் நட்சத்திரங்களின் கண்சிமிட்டல்கள் அற்புதமானது. சப்தரிசி மண்டலம், ஓரியன் மண்டலம், கார்த்திகை நட்சத்திரக் கூட்டம், வெண்பனி போன்ற "ஆகாயகங்கை" என்று அழைக்கப்படுகிற மில்கிவே என கண்கொள்ளா காட்சி. நமக்கு முன் உள்ள இந்த வெளியில் உயிர்களைத் தேடுவோம்.
நீண்ட நெடுங்காலமாகவே வானவியல் விஞ்ஞானிகளுக்கு ஒரு `பிரபஞ்சத் தனிமையில்' இந்த உலகம் இருக்கிறதா என்ற கேள்வி ஏற்பட்டது. இந்த பரந்த பிரபஞ்சத்தை ஆராயவும், தெரிந்து கொள்ளவும் நாம் மட்டுமே முயற்சி செய்கிறோமா, நமக்கு துணையாக வேறு கிரகவாசிகள் இல்லையா என்ற ஆதங்கம் இருக்கிறது.
பிரபஞ்சத் தனிமை ஒரு பக்கம் இருந்தாலும், உயிர் தேடலில் மற்றொரு விசயமும் அடங்கியுள்ளது. கொஞ்சம்,கொஞ்சமாக பூமிக்கு வயது ஆகிக்கொண்டே போகிறது. அதோடு நாமும் பூமியை ஒரு கழிவுகளை கொட்டும் இடமாக மாற்றிவிட்டோம். இதனால் பூமி மனிதர்கள் வாழத் தகுதியில்லாத இடமாக மாறிவருகிறது. எதிர்காலத்தில் மனித இனம் தளைக்க வேறு ஒரு இடம்(கிரகம்) வேண்டுமே.
இது போன்ற தேவைகளைப் பூர்த்தி செய்ய விஞ்ஞானிகள் செயற்கைகோள்களையும், `கலீலியோ' போன்ற வானில் மிதந்த கொண்டே ஆராய்கிற டெலஸ்கோப்புகள், பூமியில் அமைக்கப்பட்டுள்ள மிகப் பிரமாண்டமான டெலஸ்கோப்புகளை கொண்டு இந்த பிரபஞ்சத்தை துருவித்துருவி ஆராந்து கொண்டிருக்கிறார்கள்.
உயிர்களைத் தேடுவதற்கு முன்னால் உயிர் என்பது என்ன என தெரிந்துகொள்வோம். 'புரதப்பொருட்களின் புதிர் வடிவமே உயிர்' என்கிறார்கள் விஞ்ஞானிகள். இவை போக இன்னும் சில நிபந்தனைகளும் உண்டு.
1. டி.என்.ஏ (டி ஆக்ஸிரிபே நியூக்ளீக் அமிலம்), ஆர்.என்.ஏ (ரீபோ நியூக்ளீக் அமிலம் கொண்டதாக இருக்க வேண்டும்
2. இனப்பெருக்கம், உறுப்பசைவு, நகர்தல் இருக்கவேண்டும்.
3.ஒரு உயிர் மற்றொரு உயிராக மாறுதல் அடையவேண்டும்(பரிணாமம்)
4.வளர்ச்சிதைமாற்றம்.
5.வேதிமாற்றம் போன்ற செயல்பாடுகள் இருக்கவேண்டும்.
உயிர் என்றால் என்ன எனப் பார்த்தாயிற்று.
உயிர் உருவாக என்ன மாதிரியான சூழ்நிலைகள் வேண்டும். ஒரு கிரகத்தின் சூழ்நிலையை மாற்ற இயலாதவை, மாற்றக்கூடியவை என இரண்டு விதமாக பிரிக்கலாம். ஒரு கிரகம் சூரியனில் இருந்து உள்ள தொலைவு, சுழற்சி வேகம்,நாள் சலனம், ஆண்டு சலனம், சுழற்ச்சி ஆச்சின் சரிவு, நிறை, ஆரம், சுற்றும் பாதை இவை மாற்ற இயலாதவை. மாற்றகூடிய சூழ்நிலைகள் என சில உண்டு. மனிதனின் விஞ்ஞான முயற்சியால் ஒரு கிரகத்தின் வளிமண்டலம், வளிமகலவை, அழுத்தம், தட்பவெப்பம், ஈரப்பதம் இவற்றை மாற்றலாம்.
இந்த விதிமுறைகளுக்கு உட்பட்டு நமது சூரியமண்டலத்தில் உயிர் வாழத் தகுதியான, அல்லது ஏதேனும் புதிய உயிர்கள் வாழ்கின்றதா எனத் தேடுவோம்.
வேற்று கிரகங்களில் உயிர்தேடல் என பேச ஆரம்பித்தாலே நமக்கு முதலில் தோன்றுவது செவ்வாய் கிரகமாகத்தான் இருக்கும். நமது சூரியமண்டலத்தில் பூமியை அடுத்த நான்காவது கிரகமாகும். கிட்டதட்ட பூமியின் பரப்பளவு கொண்டது. தன்னைத்தானே சுற்றிக்கொள்ள 24 1/2 மணிநேரம் ஆகிறது. சூரியனை சுற்ற இரண்டு வருடங்கள் (பூமி வருடங்களில்). தைமாஸ், போபாஸ் என இரண்டு சந்திரன்கள். தைமாஸ் 16 கிமீ சுற்றளவு, போபாஸ் 28 கிமீ. சுற்றளவு கொண்டது. தைமாஸ் செவ்வாயை கிழக்கிலிருந்து மேற்காகவும், போபாஸ் மேற்கிலிருந்து கிழக்காகவும் சுற்றுகின்றன. செவ்வாயின் மேற்பரப்பு இயக்கமற்று காணப்பட்டாலும் எரிமலை வெடிப்புகள் அவ்வப்போது நிகழ்கின்றன. செவ்வாயின் அதிகாலைப் பொழுது பூமியின் காலை பொழுதைப்போலவே மெல்லிய பனிப்படலத்துடனேயே துவங்கிறது. மிக மெல்லிய காற்றுமண்டலம் அதில் குறைந்த அளவில் ஆக்ஸிஸன், கார்பன்டை ஆக்ஸைடு, நைட்ரஜன் உள்ளது. ஒரு காலத்தில் ஆறுகள் ஒடி வற்றிப்போன கிரகமாக செவ்வாய் காட்சியளிக்கிறது. பாத்பைன்டர் ஆய்வுகள் செவ்வாயின் மையப்பகுதியல் செய்யப்பட்டது. துருவப்பகுதியில் நீர் பனிகட்டியாக இருக்கிறது. பாக்டிரீயாக்கள் போன்ற சிறு உயிரினங்கள் இருக்கலாம். தற்பொழுது உயிர் இருக்கிறதோ இல்லையோ எதிர்காலத்தில் நமது சந்ததியினர் வாழ ஏற்ற கிரகம்.
செவ்வாய்க்கு அடுத்தாக சனிகிரகத்தின் சந்திரனான டைட்டன். கி.பி.1655ல் கிருஸ்டியன் ஹூயுஜென்னால் கண்டுபிடிக்கபட்ட்து. 400 கோடி ஆண்டுகளுக்கு முன் பூமி எப்படி இருந்ததோ அதே போன்ற தன்மையில் இருக்கிறது. சனிகிரகத்திலிருந்து 12,22,000 கி.மீ. துரத்தில் உள்ளது. 180 டிகிரியில் தண்ணீர் உறைந்திருக்கிறது. அந்த கிரகம் முழுவதும் மீத்தேனும், ஈத்தேனும் நிறைந்தருக்கிறது. இக்கிரகம் உயிர்வாழ தகுதியானதாக மாற 400 கோடி ஆண்டுகளாகலாம். காத்திருப்போம்!!
சூரிய மண்டலத்தில் மற்றொரு நம்பிக்கை தரும் கிரகமாக வியாழன் கிரகத்தின் யூரோப்பா. வியாழன் கிரகம் மற்றொரு சூரியமண்டலத்தை போலவே 20க்கும் மேற்பட்ட சந்திரன்களுடன் திகழ்கிறது. வியாழனின் காந்தப்புலனும், ஈர்ப்புவிசையும் சூரியனின் ஆற்றலில் பாதியைப் பெற்றுள்ளது. யுரோப்பாவின் மேற்பரப்பில் 10 கி.மீ. அழத்தில் தண்ணீர் உள்ளது என்றும், அதன் வளிமண்டல அழுத்தம், வாயுகள், தட்பவெப்பநிலை, சுழற்சிவேகம் போன்றவை டைட்டனைப் போலவே எதிர்கால நம்பிக்கையளிக்கக் கூடியது.
எதிர்காலத் தேவை விண்வெளி ஆய்வின் அடுத்த கட்ட வளர்ச்சி என்ற அடிப்படையில் சூரியமண்டலத்தில் உயிர் தேடுதல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. சூரியமண்டலத்திற்கு வெளியேயான உயிர்த் தேடல் விஞ்ஞானிகள் உட்பட அறிவியல் ஆர்வம் கொண்ட அனைவருக்குமானது. இதன் வெளிப்பாடாகவே பறக்கும் தட்டு கதைகள். பறக்கும் தட்டுகள் உண்மையில்லை என அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா உறுதிசெய்துள்ளது. ஆனால் கென்னத் ஆர்னால்டு என்பவர் "மூன்றடி வெள்ளி மனிதர்கள்" என்ற நூலை வெளியிட்டு பலகோடி டாலர்கள் சம்பதித்தார். ஹர்பெர்ட்ஜார்ஜ் எழுதிய "உலகங்களுக்கிடையே போர்" போன்ற நாவல்களும், மென்இன்பிளாக், மார்ஸ்ஆட்டாக், அவதார் போன்ற திரைப்படங்களும் வந்துள்ளன.
நாம் வாழும் பிரபஞ்சம் மிகப் பிரமாண்டமான பிரபஞ்சத்தின் ஒருபகுதியே. இதில் உயிர்களைத் தேடுவது அசாத்தியமான பணியாகும். பல சமன்பாடுகள், டெலஸ்கோப்புகள், ஒளியுணர்கருவிகள், டிஸ்ஆண்டனாக்கள், செயற்கைகோள்கள் மூலமாக விண்வெளியில் பிற கிரகவாசிகளைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
எல்லையற்ற இந்த பிரபஞ்சத்தில் வேறு கிரகவாசிகள் நிச்சயமாய் இருப்பார்கள் என்கிறார் பிராங்டிரேக் என்ற விஞ்ஞானி. அவரின் கணிப்புப்படி நம் சூரியன் அங்கம் வகிக்கும் ஆகாயகங்கை நட்சத்திர மண்டலத்தில் 60 கோடி கிரகங்களில் உயிர் வசிக்கலாம். அதிலும் சிலநூறு கிரகங்களில் வளர்ச்சியடைந்த உயிர்கள் வசிக்கலாம் என்கிறார். இந்த முடிவை ஒருசமன்பாட்டின் மூலம் தெளிவுபடுத்துகிறார்.
N=n.p1,p2,p3,p4ti/t
N-வெளியுலக சமுக எண்ணிக்கை, n- பால்வெளிமண்டல நட்ச்சத்திரங்களின் எண்ணிக்கை, p1-நட்சத்திரங்களை சுற்றி கிரகங்கள் இருப்பதற்கான நிகழ்தகவு, p2-கிரகத்தில் உயிர் தோன்றுவதற்கான் நிகழ்தகவு, p3-நூண்ணிய பரிணாம வளர்ச்சிக்கான நிகழ்தகவு, p4-நூண்தொழில் சகாப்த நிகழ்தகவு, t1- தொழில் கலை சகாப்த நிகழ்தகவு, T- பால்வெளிமண்டலத்தின் வயதுடன் ஒப்பிடக்கூடிய கால அளவு.
இந்த சமன்பாட்டை வைத்து கொண்டு ஆகாயகங்கை நட்சத்திர மண்டலத்தில் தேட ஆரம்பித்தால் தேடிக்கொண்டே இருக்கவேண்டியது தான்.
இதுபோன்ற விண்வெளி மனிதர்களைத் தேடுவதற்கு 'சேதி'(SETI) என்று பெயர்.(SETI- search for terrestial intelligen). 1974 நவம்பர் 16ல் நமது சூரியனுக்கு ஓர் ஓளியாண்டு தூரத்தில் உள்ள சீரிஸ் நட்சத்திரத்திற்கு மின் அலைகள் மூலம் விண்வெளி மனிதர்களுக்கான முதல் செய்தி அனுப்பப்பட்டது. இதில் ஒரு சிக்கல் உள்ளது. நாம் அனுப்புகிற செய்தி சரியான நட்சத்திரத்திற்கு போய்ச் சேருமா? சந்தேகம் தான். ஏன் என்றால் பிரபஞ்ச வெடிப்பு கொள்கைப்படி பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துப் பொருள்களும் ஒரு மையத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன. நாம் செய்தி அனுப்பிய நட்சத்திரம் ஓர் ஒளியாண்டு தூரத்தில் (ஒரு நொடியில் ஒளிசெல்லும் வேகம் 1 லட்சத்து 80 ஆயிரம் கிலோமீட்டர்) இருப்பதாக வைத்துக் கொண்டால் நாம் பார்க்கும் நட்சத்திரத்தின் ஒளியானது ஓர் ஆண்டுக்கு முன் அந்த நட்சத்திரத்தில் இருந்து புறப்பட்டு வந்த ஒளியாகும். இந்த சூழ்நிலையில் நாம் செய்தி அனுப்புவதோ, பெறுவதோ மிகமிக சிரமமான பணியாகும்.வேறு என்ன தான் வழி?. விண்வெளி மனிதர்கள் செய்தி அனுப்பினால் பெறுவதற்காக 1985 முதல் ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தில் மாபெரும் அலைதிரட்டி செயல்பட்டு வருகிறது. இதைப்போன்று ஒளி சமிக்ஞை மூலம் செய்தி அனுப்பினால் ஒரு நொடியில் நூற்றில் ஒருபங்கு நேரத்தில் ஏற்படும் மாறுதல்களை பதிவு செய்ய ஒளிவாங்கி அமைத்து கண்காணிக்கிறார்கள். ஆனால் இதுவரை நாம் சந்தோசப்படும்படியாக எந்த செய்தியும் வரவில்லை.
மற்ற நட்சத்திரங்ளை சுற்றி வருகிற கிரகங்களைக் கண்டுபிடித்திருந்தாலும் கூட ஒரு கிரகத்தில் உயிர் தோன்றி நிலைத்து பரிணாம வளர்ச்சியடைவது சாதாரண விசயம் அல்ல. பூமி தோன்றி 400 கோடி ஆண்டுகளில் 150 கோடி ஆண்டுகளாகத்தான் உயிர்த் தோற்றமும், அதிலும் சில லட்சம் ஆண்டுகளாகத்தான் மனிதப் பரிணாமமும் ஏற்பட்டுள்ளது. எப்படி இருந்தாலும் நமது ஆகாய கங்கையில் மட்டுமே 1 அல்லது 2 கிரகங்களில் அறிவுஜீவி உயிர்கள் வாழ்வது சாத்தியமே என்கிறார்கள் விஞ்ஞானிகள். பிறகு ஏன் அவர்கள் நம்முடன் தொடர்பு கொள்ள மறுக்கிறார்கள்? சில விஞ்ஞானிகள் சொல்வதைப்போல நம் பூமியில் இருக்கும் விலங்குகள், தாவரங்கள், பூச்சிகளுக்கு இடையே ஏற்படும் மிகநுட்பமான தகவல் பரிமாற்றத்தைக் கூட நம்மால் புரிந்து கொள்ள முடியாத போது பிறகிரகவாசிகள் அனுப்பும் செய்திகளை நாம் எப்படி புரிந்து கொள்ளமுடியும் என்கிறார்கள்.
யாதார்த்தமாகப் பார்த்தால் இது வரை பூமியைத் தவிர வேறு எங்கும் உயிரினங்களோ, வேற்றுகிரகவாசிகளோ இல்லை. அரிதிலும் அரிதாக பூமியில் உயிர்கள் அதிலும் தன்னையும், தன் சுற்றுப்புறத்தையும் புரிந்துகொள்ளக்கூடிய மனிதர்கள். பிறகு ஏன் நம்மை நாம் அழித்துக்கொள்ள அணு ஆயுதங்கள் எதற்கு? மனிதன் மனிதன் சுரண்டுவது எதற்கு? நாடு, இனம், மதம் என்ற பாகுபாடு எதற்கு? பூமியைப் பாதுகாப்போம், மனிதநேயத்தை வளர்ப்போம்.
நன்றி: அ.தமிழ்ச்செல்வன்
நீண்ட நெடுங்காலமாகவே வானவியல் விஞ்ஞானிகளுக்கு ஒரு `பிரபஞ்சத் தனிமையில்' இந்த உலகம் இருக்கிறதா என்ற கேள்வி ஏற்பட்டது. இந்த பரந்த பிரபஞ்சத்தை ஆராயவும், தெரிந்து கொள்ளவும் நாம் மட்டுமே முயற்சி செய்கிறோமா, நமக்கு துணையாக வேறு கிரகவாசிகள் இல்லையா என்ற ஆதங்கம் இருக்கிறது.
பிரபஞ்சத் தனிமை ஒரு பக்கம் இருந்தாலும், உயிர் தேடலில் மற்றொரு விசயமும் அடங்கியுள்ளது. கொஞ்சம்,கொஞ்சமாக பூமிக்கு வயது ஆகிக்கொண்டே போகிறது. அதோடு நாமும் பூமியை ஒரு கழிவுகளை கொட்டும் இடமாக மாற்றிவிட்டோம். இதனால் பூமி மனிதர்கள் வாழத் தகுதியில்லாத இடமாக மாறிவருகிறது. எதிர்காலத்தில் மனித இனம் தளைக்க வேறு ஒரு இடம்(கிரகம்) வேண்டுமே.
இது போன்ற தேவைகளைப் பூர்த்தி செய்ய விஞ்ஞானிகள் செயற்கைகோள்களையும், `கலீலியோ' போன்ற வானில் மிதந்த கொண்டே ஆராய்கிற டெலஸ்கோப்புகள், பூமியில் அமைக்கப்பட்டுள்ள மிகப் பிரமாண்டமான டெலஸ்கோப்புகளை கொண்டு இந்த பிரபஞ்சத்தை துருவித்துருவி ஆராந்து கொண்டிருக்கிறார்கள்.
உயிர்களைத் தேடுவதற்கு முன்னால் உயிர் என்பது என்ன என தெரிந்துகொள்வோம். 'புரதப்பொருட்களின் புதிர் வடிவமே உயிர்' என்கிறார்கள் விஞ்ஞானிகள். இவை போக இன்னும் சில நிபந்தனைகளும் உண்டு.
1. டி.என்.ஏ (டி ஆக்ஸிரிபே நியூக்ளீக் அமிலம்), ஆர்.என்.ஏ (ரீபோ நியூக்ளீக் அமிலம் கொண்டதாக இருக்க வேண்டும்
2. இனப்பெருக்கம், உறுப்பசைவு, நகர்தல் இருக்கவேண்டும்.
3.ஒரு உயிர் மற்றொரு உயிராக மாறுதல் அடையவேண்டும்(பரிணாமம்)
4.வளர்ச்சிதைமாற்றம்.
5.வேதிமாற்றம் போன்ற செயல்பாடுகள் இருக்கவேண்டும்.
உயிர் என்றால் என்ன எனப் பார்த்தாயிற்று.
உயிர் உருவாக என்ன மாதிரியான சூழ்நிலைகள் வேண்டும். ஒரு கிரகத்தின் சூழ்நிலையை மாற்ற இயலாதவை, மாற்றக்கூடியவை என இரண்டு விதமாக பிரிக்கலாம். ஒரு கிரகம் சூரியனில் இருந்து உள்ள தொலைவு, சுழற்சி வேகம்,நாள் சலனம், ஆண்டு சலனம், சுழற்ச்சி ஆச்சின் சரிவு, நிறை, ஆரம், சுற்றும் பாதை இவை மாற்ற இயலாதவை. மாற்றகூடிய சூழ்நிலைகள் என சில உண்டு. மனிதனின் விஞ்ஞான முயற்சியால் ஒரு கிரகத்தின் வளிமண்டலம், வளிமகலவை, அழுத்தம், தட்பவெப்பம், ஈரப்பதம் இவற்றை மாற்றலாம்.
இந்த விதிமுறைகளுக்கு உட்பட்டு நமது சூரியமண்டலத்தில் உயிர் வாழத் தகுதியான, அல்லது ஏதேனும் புதிய உயிர்கள் வாழ்கின்றதா எனத் தேடுவோம்.
வேற்று கிரகங்களில் உயிர்தேடல் என பேச ஆரம்பித்தாலே நமக்கு முதலில் தோன்றுவது செவ்வாய் கிரகமாகத்தான் இருக்கும். நமது சூரியமண்டலத்தில் பூமியை அடுத்த நான்காவது கிரகமாகும். கிட்டதட்ட பூமியின் பரப்பளவு கொண்டது. தன்னைத்தானே சுற்றிக்கொள்ள 24 1/2 மணிநேரம் ஆகிறது. சூரியனை சுற்ற இரண்டு வருடங்கள் (பூமி வருடங்களில்). தைமாஸ், போபாஸ் என இரண்டு சந்திரன்கள். தைமாஸ் 16 கிமீ சுற்றளவு, போபாஸ் 28 கிமீ. சுற்றளவு கொண்டது. தைமாஸ் செவ்வாயை கிழக்கிலிருந்து மேற்காகவும், போபாஸ் மேற்கிலிருந்து கிழக்காகவும் சுற்றுகின்றன. செவ்வாயின் மேற்பரப்பு இயக்கமற்று காணப்பட்டாலும் எரிமலை வெடிப்புகள் அவ்வப்போது நிகழ்கின்றன. செவ்வாயின் அதிகாலைப் பொழுது பூமியின் காலை பொழுதைப்போலவே மெல்லிய பனிப்படலத்துடனேயே துவங்கிறது. மிக மெல்லிய காற்றுமண்டலம் அதில் குறைந்த அளவில் ஆக்ஸிஸன், கார்பன்டை ஆக்ஸைடு, நைட்ரஜன் உள்ளது. ஒரு காலத்தில் ஆறுகள் ஒடி வற்றிப்போன கிரகமாக செவ்வாய் காட்சியளிக்கிறது. பாத்பைன்டர் ஆய்வுகள் செவ்வாயின் மையப்பகுதியல் செய்யப்பட்டது. துருவப்பகுதியில் நீர் பனிகட்டியாக இருக்கிறது. பாக்டிரீயாக்கள் போன்ற சிறு உயிரினங்கள் இருக்கலாம். தற்பொழுது உயிர் இருக்கிறதோ இல்லையோ எதிர்காலத்தில் நமது சந்ததியினர் வாழ ஏற்ற கிரகம்.
செவ்வாய்க்கு அடுத்தாக சனிகிரகத்தின் சந்திரனான டைட்டன். கி.பி.1655ல் கிருஸ்டியன் ஹூயுஜென்னால் கண்டுபிடிக்கபட்ட்து. 400 கோடி ஆண்டுகளுக்கு முன் பூமி எப்படி இருந்ததோ அதே போன்ற தன்மையில் இருக்கிறது. சனிகிரகத்திலிருந்து 12,22,000 கி.மீ. துரத்தில் உள்ளது. 180 டிகிரியில் தண்ணீர் உறைந்திருக்கிறது. அந்த கிரகம் முழுவதும் மீத்தேனும், ஈத்தேனும் நிறைந்தருக்கிறது. இக்கிரகம் உயிர்வாழ தகுதியானதாக மாற 400 கோடி ஆண்டுகளாகலாம். காத்திருப்போம்!!
சூரிய மண்டலத்தில் மற்றொரு நம்பிக்கை தரும் கிரகமாக வியாழன் கிரகத்தின் யூரோப்பா. வியாழன் கிரகம் மற்றொரு சூரியமண்டலத்தை போலவே 20க்கும் மேற்பட்ட சந்திரன்களுடன் திகழ்கிறது. வியாழனின் காந்தப்புலனும், ஈர்ப்புவிசையும் சூரியனின் ஆற்றலில் பாதியைப் பெற்றுள்ளது. யுரோப்பாவின் மேற்பரப்பில் 10 கி.மீ. அழத்தில் தண்ணீர் உள்ளது என்றும், அதன் வளிமண்டல அழுத்தம், வாயுகள், தட்பவெப்பநிலை, சுழற்சிவேகம் போன்றவை டைட்டனைப் போலவே எதிர்கால நம்பிக்கையளிக்கக் கூடியது.
எதிர்காலத் தேவை விண்வெளி ஆய்வின் அடுத்த கட்ட வளர்ச்சி என்ற அடிப்படையில் சூரியமண்டலத்தில் உயிர் தேடுதல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. சூரியமண்டலத்திற்கு வெளியேயான உயிர்த் தேடல் விஞ்ஞானிகள் உட்பட அறிவியல் ஆர்வம் கொண்ட அனைவருக்குமானது. இதன் வெளிப்பாடாகவே பறக்கும் தட்டு கதைகள். பறக்கும் தட்டுகள் உண்மையில்லை என அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா உறுதிசெய்துள்ளது. ஆனால் கென்னத் ஆர்னால்டு என்பவர் "மூன்றடி வெள்ளி மனிதர்கள்" என்ற நூலை வெளியிட்டு பலகோடி டாலர்கள் சம்பதித்தார். ஹர்பெர்ட்ஜார்ஜ் எழுதிய "உலகங்களுக்கிடையே போர்" போன்ற நாவல்களும், மென்இன்பிளாக், மார்ஸ்ஆட்டாக், அவதார் போன்ற திரைப்படங்களும் வந்துள்ளன.
நாம் வாழும் பிரபஞ்சம் மிகப் பிரமாண்டமான பிரபஞ்சத்தின் ஒருபகுதியே. இதில் உயிர்களைத் தேடுவது அசாத்தியமான பணியாகும். பல சமன்பாடுகள், டெலஸ்கோப்புகள், ஒளியுணர்கருவிகள், டிஸ்ஆண்டனாக்கள், செயற்கைகோள்கள் மூலமாக விண்வெளியில் பிற கிரகவாசிகளைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
எல்லையற்ற இந்த பிரபஞ்சத்தில் வேறு கிரகவாசிகள் நிச்சயமாய் இருப்பார்கள் என்கிறார் பிராங்டிரேக் என்ற விஞ்ஞானி. அவரின் கணிப்புப்படி நம் சூரியன் அங்கம் வகிக்கும் ஆகாயகங்கை நட்சத்திர மண்டலத்தில் 60 கோடி கிரகங்களில் உயிர் வசிக்கலாம். அதிலும் சிலநூறு கிரகங்களில் வளர்ச்சியடைந்த உயிர்கள் வசிக்கலாம் என்கிறார். இந்த முடிவை ஒருசமன்பாட்டின் மூலம் தெளிவுபடுத்துகிறார்.
N=n.p1,p2,p3,p4ti/t
N-வெளியுலக சமுக எண்ணிக்கை, n- பால்வெளிமண்டல நட்ச்சத்திரங்களின் எண்ணிக்கை, p1-நட்சத்திரங்களை சுற்றி கிரகங்கள் இருப்பதற்கான நிகழ்தகவு, p2-கிரகத்தில் உயிர் தோன்றுவதற்கான் நிகழ்தகவு, p3-நூண்ணிய பரிணாம வளர்ச்சிக்கான நிகழ்தகவு, p4-நூண்தொழில் சகாப்த நிகழ்தகவு, t1- தொழில் கலை சகாப்த நிகழ்தகவு, T- பால்வெளிமண்டலத்தின் வயதுடன் ஒப்பிடக்கூடிய கால அளவு.
இந்த சமன்பாட்டை வைத்து கொண்டு ஆகாயகங்கை நட்சத்திர மண்டலத்தில் தேட ஆரம்பித்தால் தேடிக்கொண்டே இருக்கவேண்டியது தான்.
இதுபோன்ற விண்வெளி மனிதர்களைத் தேடுவதற்கு 'சேதி'(SETI) என்று பெயர்.(SETI- search for terrestial intelligen). 1974 நவம்பர் 16ல் நமது சூரியனுக்கு ஓர் ஓளியாண்டு தூரத்தில் உள்ள சீரிஸ் நட்சத்திரத்திற்கு மின் அலைகள் மூலம் விண்வெளி மனிதர்களுக்கான முதல் செய்தி அனுப்பப்பட்டது. இதில் ஒரு சிக்கல் உள்ளது. நாம் அனுப்புகிற செய்தி சரியான நட்சத்திரத்திற்கு போய்ச் சேருமா? சந்தேகம் தான். ஏன் என்றால் பிரபஞ்ச வெடிப்பு கொள்கைப்படி பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துப் பொருள்களும் ஒரு மையத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன. நாம் செய்தி அனுப்பிய நட்சத்திரம் ஓர் ஒளியாண்டு தூரத்தில் (ஒரு நொடியில் ஒளிசெல்லும் வேகம் 1 லட்சத்து 80 ஆயிரம் கிலோமீட்டர்) இருப்பதாக வைத்துக் கொண்டால் நாம் பார்க்கும் நட்சத்திரத்தின் ஒளியானது ஓர் ஆண்டுக்கு முன் அந்த நட்சத்திரத்தில் இருந்து புறப்பட்டு வந்த ஒளியாகும். இந்த சூழ்நிலையில் நாம் செய்தி அனுப்புவதோ, பெறுவதோ மிகமிக சிரமமான பணியாகும்.வேறு என்ன தான் வழி?. விண்வெளி மனிதர்கள் செய்தி அனுப்பினால் பெறுவதற்காக 1985 முதல் ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தில் மாபெரும் அலைதிரட்டி செயல்பட்டு வருகிறது. இதைப்போன்று ஒளி சமிக்ஞை மூலம் செய்தி அனுப்பினால் ஒரு நொடியில் நூற்றில் ஒருபங்கு நேரத்தில் ஏற்படும் மாறுதல்களை பதிவு செய்ய ஒளிவாங்கி அமைத்து கண்காணிக்கிறார்கள். ஆனால் இதுவரை நாம் சந்தோசப்படும்படியாக எந்த செய்தியும் வரவில்லை.
மற்ற நட்சத்திரங்ளை சுற்றி வருகிற கிரகங்களைக் கண்டுபிடித்திருந்தாலும் கூட ஒரு கிரகத்தில் உயிர் தோன்றி நிலைத்து பரிணாம வளர்ச்சியடைவது சாதாரண விசயம் அல்ல. பூமி தோன்றி 400 கோடி ஆண்டுகளில் 150 கோடி ஆண்டுகளாகத்தான் உயிர்த் தோற்றமும், அதிலும் சில லட்சம் ஆண்டுகளாகத்தான் மனிதப் பரிணாமமும் ஏற்பட்டுள்ளது. எப்படி இருந்தாலும் நமது ஆகாய கங்கையில் மட்டுமே 1 அல்லது 2 கிரகங்களில் அறிவுஜீவி உயிர்கள் வாழ்வது சாத்தியமே என்கிறார்கள் விஞ்ஞானிகள். பிறகு ஏன் அவர்கள் நம்முடன் தொடர்பு கொள்ள மறுக்கிறார்கள்? சில விஞ்ஞானிகள் சொல்வதைப்போல நம் பூமியில் இருக்கும் விலங்குகள், தாவரங்கள், பூச்சிகளுக்கு இடையே ஏற்படும் மிகநுட்பமான தகவல் பரிமாற்றத்தைக் கூட நம்மால் புரிந்து கொள்ள முடியாத போது பிறகிரகவாசிகள் அனுப்பும் செய்திகளை நாம் எப்படி புரிந்து கொள்ளமுடியும் என்கிறார்கள்.
யாதார்த்தமாகப் பார்த்தால் இது வரை பூமியைத் தவிர வேறு எங்கும் உயிரினங்களோ, வேற்றுகிரகவாசிகளோ இல்லை. அரிதிலும் அரிதாக பூமியில் உயிர்கள் அதிலும் தன்னையும், தன் சுற்றுப்புறத்தையும் புரிந்துகொள்ளக்கூடிய மனிதர்கள். பிறகு ஏன் நம்மை நாம் அழித்துக்கொள்ள அணு ஆயுதங்கள் எதற்கு? மனிதன் மனிதன் சுரண்டுவது எதற்கு? நாடு, இனம், மதம் என்ற பாகுபாடு எதற்கு? பூமியைப் பாதுகாப்போம், மனிதநேயத்தை வளர்ப்போம்.
நன்றி: அ.தமிழ்ச்செல்வன்
Friday, November 12, 2010
புதிய கோள் கண்டுபிடிப்பு
நமது சூரிய குடும்பம் போலவே, இரவு வானில் தெரியும் விண்மீன்களுக்கும் குடும்பம் உண்டு; அதனைச் சுற்றும் கோள் களும் உண்டு. நம் சூரியனைவிட சிறிய, சிவப்பு குள்ள விண்மீன் ஒன்றை 2005ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் கண்டுபிடித்தனர். சுமார் 20.3 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள அதற்கு கிளிஸ் 581 என பெயர் வைத்தனர். அப்போது கிளிசை சுற்றும் கோளையும் கண்டனர். இவற்றிற்கு கிளிஸ் 581பி என பெயர் சூட்டினர் . அந்த கிளிஸ் 581பி. நமது பூமியைப் போல், 10 மடங்கு நிறை கொண்டது; அதாவது, நம் சூரிய மண்டலத்தில் உள்ள நெப்டியூனின் அளவு இருக்கும். இந்த கோள், அந்த சிவப்பு குள்ள விண்மீனை 5.4 நாட்களில் சுற்றி விடுகிறது. அந்த சிவப்பு குள்ள விண்மீன், விண்வெளியில் உள்ள துலா ராசி விண்மீன் படலத்தில் உள்ளது.
சூரியன் நமது பால்வழி மண்டலத்திலுள்ள, ஓரியன் கைகளுக்குள் உள்ளது. சூரியனின் நிறையில் மூன்றில் ஒரு பங்கு அள வுள்ள கிளிஸ் 581, சூரியனுக்கு அருகிலுள்ள விண்மீன்களில், 87வது இடத்தில் உள்ளது. இதன் மையத்தில், ஹைடிரஜன் மிகக் குறைந்த வேகத்திலேயே எரிகிறது. இந்த விண்மீன் நம் சூரியனின் பிரகாசத்தோடு ஒப்பிடும் போது 0.2%அளவிற்கு பிரகாசிக்கும். அதன் மேல் பகுதி வெப்பம் 2,926.85 சென்டிகிரேடாகவும்/ 5,300.33 பாரன்ஹீட்டாகவும் உள்ளது. நமது சூரியனின் மேற்பரப்பு வெப்பம், 5,505சென்டிகிரேடாகவும்/9,941பாரன்ஹீட்டாகவும் உள்ளது.
கிளிஸ் 581ன் மற்றொரு கோளை 2007 ஏப்ரல் மாதத்தில் கண்டுபிடித்தனர். அதற்கு கிளிஸ் 581சி என பெயர் சூட்டப்பட்டது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட வெளிக் கோள்களில் இதுதான் மிகக் குறைந்த நிறை உடையது என அப்போது கருதப்பட்டது. மேலும், இது நம் பூமி போன்றே வாழிட சூழல் உள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனாலும், இதன் மேற்பரப்பு வெள்ளியின் தன்மை கொண்டது என கருதப்பட்டதால், இங்கு உயிர் வாழும் சூழல் இல்லை. இதன் மேற்பரப்பு வெப்பம் _3சென்டிகிரேட் முதல் _40 சென்டிகிரேட் உரை உள்ளது. இது 13 நாட்களில் அதன் சூரியனை சுற்றுகிறது.
இதே காலகட்டத்தில், கிளிஸ் 581_ன் அடுத்த கோளும் கண்டறியப்பட்டது. அதற்கு கிளிஸ் 581டி என பெயரிடப்பட்டது. இது நம் பூமியைப் பூமியைப் போல 7 மடங்கு பெரியது. நமது யுரேனசின் அளவு இருக்கும். இது கிளிஸ் 581ஐ 66.8 நாட்களில் சுற்றுகிறது. இந்த கிளிஸ் 581டி_யில் கூட உயிர்கள் வசிக்கும் சூழல் உள்ளதாக சொல்லப்பட்டது.
அதன்பின், கிளிசின் அடுத்த கோள், 2009 ஏப்ரல் 21அன்று கண்டுபிடித்ததாக அறிவிக்கப்பட்டது. இதுவே, மிகக் குறைந்த நிறையுள்ள வெளிக்கோள். இது பூமியை போல் 1.9 மடங்கு நிறை கொண்டது. ஆனால், கிளிஸ் 581ஐ 3.4 நாட்களில் சுற்றிவிடுகிறது.
கிளிஸ் 581ன் அடுத்த கோள் 2010 செப்டம்பர் 29ல் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை, ஹவாய் தீவிலுள்ள வானோக்கு நிலையம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வானோக்கு நிலையம் ஓர் இறந்த எரிமலையான மௌனா கியா மேல் அமைந்துள்ளது. இங்குள்ள தொலைநோக்கி ஆடியின் விட்டம் 10 மீ. உலகின் இரண்டாவது மிகப்பெரிய தொலை நோக்கி இது. இந்த கோளுக்கு, கிளிஸ் 581ஜி என பெயரிடப்பட்டது. இதனை,வானவியல் பேராசிரியர்,ஸ்டீவன் வோக்ட், கலிபோர்னியா பல்கலைக் கழக சாண்டா க்ருஸ், வாஷிங்டன் கார்னேஜி நிறுவனத்தைச் சேர்ந்த பால் புட்லரும் இணைந்த குழு கண்டுபிடித்தது.
இது தன் சூரியனான கிளிஸ் 581ஐ, 37 நாட்களில் சுற்றுகிறது. அதன் தாய் விண்மீனிலிருந்து 0.146 வானியல் அலகு தொலைவில் உள்ளது. இது நம் பூமி போல் 3.1 முதல் 4.3 மடங்கு நிறையும், 1.3 முதல் 2 மடங்கு ஆரமும் உள்ளதாக தெரிகிறது.
மேலும், இந்த கோள் பூமி போல் 1.3 முதல் 1.5 மடங்கு கற்பாறைகளாலும், 1.7 முதல் 2 மடங்கு வரை நீரினாலும் ஆனது என கருதப்படுகிறது. இதன் மேற்பரப்பு ஈர்ப்பு விசை, பூமியைப் போல் 1.1 முதல் 1.7 மடங்கு உள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு உயிரினம் வாழும் சூழல் உள்ளதாவும் கருதப்படுகிறது.
கிளிஸ் 581 ன் , 581ஜி கோளில் நிச்சயம் 100% உயிரினம் இருக்கும் என ஸ்டீவன் வோக்ட் உறுதியாக கூறுகிறார். ஆனால் அது மற்றவர்கள் சொல்வதுபோல, வேற்றுகிரக வாசியாக இருக்க வேண்டியதில்லை. அவை பாக்டீரியா, அதற்கு இணையான பாசி வகையாகக் கூட இருக்கலாம். இதுதான் பூமியின் தனித்துவம் என கருத்து தெரிவித்துள்ளார் ஸ்டீவன் வோக்ட். எதிர்காலத்தில் நாம் இந்த கோளுக்கு சென்று பார்க்கலாம்.
நன்றி: பேரா.சோ.மோகனா
சூரியன் நமது பால்வழி மண்டலத்திலுள்ள, ஓரியன் கைகளுக்குள் உள்ளது. சூரியனின் நிறையில் மூன்றில் ஒரு பங்கு அள வுள்ள கிளிஸ் 581, சூரியனுக்கு அருகிலுள்ள விண்மீன்களில், 87வது இடத்தில் உள்ளது. இதன் மையத்தில், ஹைடிரஜன் மிகக் குறைந்த வேகத்திலேயே எரிகிறது. இந்த விண்மீன் நம் சூரியனின் பிரகாசத்தோடு ஒப்பிடும் போது 0.2%அளவிற்கு பிரகாசிக்கும். அதன் மேல் பகுதி வெப்பம் 2,926.85 சென்டிகிரேடாகவும்/ 5,300.33 பாரன்ஹீட்டாகவும் உள்ளது. நமது சூரியனின் மேற்பரப்பு வெப்பம், 5,505சென்டிகிரேடாகவும்/9,941பாரன்ஹீட்டாகவும் உள்ளது.
கிளிஸ் 581ன் மற்றொரு கோளை 2007 ஏப்ரல் மாதத்தில் கண்டுபிடித்தனர். அதற்கு கிளிஸ் 581சி என பெயர் சூட்டப்பட்டது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட வெளிக் கோள்களில் இதுதான் மிகக் குறைந்த நிறை உடையது என அப்போது கருதப்பட்டது. மேலும், இது நம் பூமி போன்றே வாழிட சூழல் உள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனாலும், இதன் மேற்பரப்பு வெள்ளியின் தன்மை கொண்டது என கருதப்பட்டதால், இங்கு உயிர் வாழும் சூழல் இல்லை. இதன் மேற்பரப்பு வெப்பம் _3சென்டிகிரேட் முதல் _40 சென்டிகிரேட் உரை உள்ளது. இது 13 நாட்களில் அதன் சூரியனை சுற்றுகிறது.
இதே காலகட்டத்தில், கிளிஸ் 581_ன் அடுத்த கோளும் கண்டறியப்பட்டது. அதற்கு கிளிஸ் 581டி என பெயரிடப்பட்டது. இது நம் பூமியைப் பூமியைப் போல 7 மடங்கு பெரியது. நமது யுரேனசின் அளவு இருக்கும். இது கிளிஸ் 581ஐ 66.8 நாட்களில் சுற்றுகிறது. இந்த கிளிஸ் 581டி_யில் கூட உயிர்கள் வசிக்கும் சூழல் உள்ளதாக சொல்லப்பட்டது.
அதன்பின், கிளிசின் அடுத்த கோள், 2009 ஏப்ரல் 21அன்று கண்டுபிடித்ததாக அறிவிக்கப்பட்டது. இதுவே, மிகக் குறைந்த நிறையுள்ள வெளிக்கோள். இது பூமியை போல் 1.9 மடங்கு நிறை கொண்டது. ஆனால், கிளிஸ் 581ஐ 3.4 நாட்களில் சுற்றிவிடுகிறது.
கிளிஸ் 581ன் அடுத்த கோள் 2010 செப்டம்பர் 29ல் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை, ஹவாய் தீவிலுள்ள வானோக்கு நிலையம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வானோக்கு நிலையம் ஓர் இறந்த எரிமலையான மௌனா கியா மேல் அமைந்துள்ளது. இங்குள்ள தொலைநோக்கி ஆடியின் விட்டம் 10 மீ. உலகின் இரண்டாவது மிகப்பெரிய தொலை நோக்கி இது. இந்த கோளுக்கு, கிளிஸ் 581ஜி என பெயரிடப்பட்டது. இதனை,வானவியல் பேராசிரியர்,ஸ்டீவன் வோக்ட், கலிபோர்னியா பல்கலைக் கழக சாண்டா க்ருஸ், வாஷிங்டன் கார்னேஜி நிறுவனத்தைச் சேர்ந்த பால் புட்லரும் இணைந்த குழு கண்டுபிடித்தது.
இது தன் சூரியனான கிளிஸ் 581ஐ, 37 நாட்களில் சுற்றுகிறது. அதன் தாய் விண்மீனிலிருந்து 0.146 வானியல் அலகு தொலைவில் உள்ளது. இது நம் பூமி போல் 3.1 முதல் 4.3 மடங்கு நிறையும், 1.3 முதல் 2 மடங்கு ஆரமும் உள்ளதாக தெரிகிறது.
மேலும், இந்த கோள் பூமி போல் 1.3 முதல் 1.5 மடங்கு கற்பாறைகளாலும், 1.7 முதல் 2 மடங்கு வரை நீரினாலும் ஆனது என கருதப்படுகிறது. இதன் மேற்பரப்பு ஈர்ப்பு விசை, பூமியைப் போல் 1.1 முதல் 1.7 மடங்கு உள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு உயிரினம் வாழும் சூழல் உள்ளதாவும் கருதப்படுகிறது.
கிளிஸ் 581 ன் , 581ஜி கோளில் நிச்சயம் 100% உயிரினம் இருக்கும் என ஸ்டீவன் வோக்ட் உறுதியாக கூறுகிறார். ஆனால் அது மற்றவர்கள் சொல்வதுபோல, வேற்றுகிரக வாசியாக இருக்க வேண்டியதில்லை. அவை பாக்டீரியா, அதற்கு இணையான பாசி வகையாகக் கூட இருக்கலாம். இதுதான் பூமியின் தனித்துவம் என கருத்து தெரிவித்துள்ளார் ஸ்டீவன் வோக்ட். எதிர்காலத்தில் நாம் இந்த கோளுக்கு சென்று பார்க்கலாம்.
நன்றி: பேரா.சோ.மோகனா
Friday, July 9, 2010
24 தேமிஸ் சிறுகோள் மேற்பரப்பில் ஐஸ்
24 தேமிஸ் சிறுகோள் மேற்பரப்பில் ஐஸ்
24 தேமிஸ் என்பது செவ்வாய், வியாழன் ஆகிய இரு கிரகங்களுக் கிடையேயுள்ள 200 கி.மீ. அகலமுள்ள சிறுகோள். அமெரிக்கா வின் மேரிலாண்டிலுள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஜோஸ் எமெரியும் ஆன்ட்ரூ ரிவ்கினும் அந்தக் கோளின் மேற்பரப்பை அகச் சிவப்புநிறக் கதிர் தொலைநோக்கி வழியே ஆய்வு செய்து வந்தனர்.
பூமிக்கு நீர் கிடைத்தது எப்படி?
சிறுகோளிலிருந்து பிரதிபலிக்கப்ப டும் அகச்சிவப்பு ஒளியின் நிறப்பிரிகையில் உறைநிலையில் உள்ள நீருடன் பொருந்தக்கூடிய ஒளிக்கற்றை இருப்பதைக் கண்ட அவர்கள் 24 தேமி ஸின் மேற்பரப்பு மெல்லிய ஐஸ் திரை யினால் மூடப்பட்டிருக்கிறது என்ற முடி வுக்கு வந்தனர். சிறுகோள்கள் இருண்ட, வறண்டுபோன, உயிரற்ற பாறைகளால் ஆனவை என்று நீண்டகாலமாக விஞ்ஞானிகள் கருதி வந்தனர். தற்போதைய கண்டுபிடிப்பு அது சரியல்ல எனத் தெரிவிக்கிறது. அத்துடன் பூமிக்கு நீரையும் உயிரிப் பொருளையும் கொண்டு வந்தது சிறுகோள்களாகவே இருக்கக் கூடும் எனக் கருத இக்கண்டுபிடிப்பு வழிகோலியிருக்கிறது.
“நாங்கள் கண்டுபிடித்த உயிரிகள் சிக்கலான, நீண்ட சங்கிலிகளால் பிணைக் கப்பட்ட மூலக்கூறுகளே. அவற்றை வறண்ட, உயிரினமற்ற பூமியின்மீது எரிநட்சத்திரங்கள் மழை போல் பொழிந்து பூமியில் உயிரினம் தோன்றுவதற்கு உந்துசக்தியாக இருந்தி ருக்கக் கூடும் ... 24 தேமிஸ் மேற்பரப்பில் ஐஸ் இருப்பது ஆச்சரியமானது. ஏனெ னில் அங்கு இருக்கும் வெப்பத்தைப் பார்க்கும்போது ஐஸ் நீண்ட நேரத்திற்கு அதில் ஒட்டிக் கொண்டிருக்க முடியாது. எனவே, மேற்பரப்பில் உள்ள ஐஸ் சூரிய வெப்பத்தினால் ஆவியாகும்போது அதை ஈடுகட்டும் விதத்தில் சிறுகோளின் உட் புறத்தில் அதிக அளவில் ஐஸ் இருக்க வேண்டும். 24 தேமிஸில் ஏராளமான அள வில் ஐஸ் இருப்பதைக் கண்டுபிடித்த தானது, சிறுகோள்கள் இருக்கும் மெயின் பெல்ட் பகுதியில் தண்ணீர் இருப்பதை உறுதி செய்துள்ளது. ” என் கிறார் எமெரி (தகவல் : தி இந்து).
சிறுகோள்கள் பாறைகளால் ஆன வை என்றும் வால் நட்சத்திரங்கள் (உடிஅநவள) ஐஸ் கட்டிகளால் ஆனவை என்றும் நீண்ட காலமாகக் கருதப்பட்டு வந்தது. வால் நட்சத்திரங்கள் பூமிக்குத் தண்ணீரைக் கொண்டு வந்திருக்கக் கூடும் என்று ஒரு கட்டத்தில் நம்பப்பட் டது. தற்போதைய கண்டு பிடிப்பு சிறு கோள்களுக் கும் வால்நட் சத்திரங்க ளுக்கும் உட்கட்டமைப் பில் பெரிய வித்தியாசமில்லை என்பதையும் பூமிக்கு சிறு கோள்களே நீரைக் கொண்டு வந்திருக்கக் கூடும் என்ப தையும் எடுத்துக் காட்டியுள்ளது.
விண்வெளியில் ஒரு வாயு நிலையம்
சிறுகோள்களில் தண் ணீர் கண்டுபிடிக்கப்பட் டது, மனிதர்களை ஏற்றிச் செல்லும் விண்வெளிப் பயணங்களுக்கு உதவும் வகையில் விண்வெளியி லேயே ஒரு வாயு நிலை யத்தை (பயள ளவயவiடிn) நிறு விக் கொள்ளும் சாத்தியக் கூறு இருப்பதை எடுத்துக் காட்டியுள்ளது. தண்ணீரி லிருந்து மின்னாற்பகுப்பு மூலம் ஹைட்ர ஜன் வாயுவைப் பிரித்து எடுக்க முடியும். அது மட்டுமல்ல, விண்வெளி மனிதர்கள் அந்தத் தண்ணீரைச் சுத்தப் படுத்தித் தங்களுக்குத் தேவையான குடிதண்ணீரைத் தயாரித்துக் கொள்ள முடியும். இப்போது விண்கலங்களில் பூமியிலிருந்து தண்ணீரைக் கொண்டு செல்ல வேண்டியிருப்பதால், விண்கலத் தின் எடை மிக அதிகமாக உள்ளது. விண்வெளிப் பயணத்தின் போது தண் ணீரைச் சேகரித்துக் கொள்ள முடியுமா னால் இங்கிருந்து நீரைச் சுமந்து செல்ல வேண்டிய தேவை எழாது. விண்கலத் தின் எடையைக் கணிசமாகக் குறைக்க முடியும். எடை குறைந்தால் எடையைச் சுமந்து செல்வதற்கு தற்போது செல வழிக்கப்படும் சக்தியையும் குறைத்துக் கொள்ளலாம்.
பூமியின் ஈர்ப்புவிசையைவிட சிறு கோளின் ஈர்ப்புவிசை மிகமிகக் குறைவா னது. தன்னந்தனியாக இருக்கும் சிறு கோளிலிருந்து தண்ணீரைப் பிரித்து எடுத்துப் பயன்படுத்துவதென்பது சவால் மிகுந்த ஒரு பிரச்சனையாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
கோள்களும் சிறுகோள்களும் ஆரம் பகால சூரியக் குடும்பத்தில் உருவான சமயத்தில், சிறுகோள்கள் இருக்கும் மெயின்பெல்ட் பகுதியில் ஐஸ் பரவியதன் காரணமாக, மற்ற நட்சத்திரங்களைச் சுற்றியுள்ள கிரகங்களிலும் முதன்முதலில் நீரும் உயிரிகளும் தோன்றியிருக்கக் கூடும். உயிரினம் அந்த கிரகங்களில் தோன்றியுள்ளதாவென அறிந்துகொள்ள வானவியலாளர்களுக்கு அரிய வாய்ப்பு கிட்டியிருக்கிறது. இந்தக் கண்ணோட்டத் தில் பார்க்கும்போது வரும் ஆண்டுகள் சுவாரசியமானவை என்பதில் சந்தேகம் இல்லை.
Courtesy : Theekkathir
24 தேமிஸ் என்பது செவ்வாய், வியாழன் ஆகிய இரு கிரகங்களுக் கிடையேயுள்ள 200 கி.மீ. அகலமுள்ள சிறுகோள். அமெரிக்கா வின் மேரிலாண்டிலுள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஜோஸ் எமெரியும் ஆன்ட்ரூ ரிவ்கினும் அந்தக் கோளின் மேற்பரப்பை அகச் சிவப்புநிறக் கதிர் தொலைநோக்கி வழியே ஆய்வு செய்து வந்தனர்.
பூமிக்கு நீர் கிடைத்தது எப்படி?
சிறுகோளிலிருந்து பிரதிபலிக்கப்ப டும் அகச்சிவப்பு ஒளியின் நிறப்பிரிகையில் உறைநிலையில் உள்ள நீருடன் பொருந்தக்கூடிய ஒளிக்கற்றை இருப்பதைக் கண்ட அவர்கள் 24 தேமி ஸின் மேற்பரப்பு மெல்லிய ஐஸ் திரை யினால் மூடப்பட்டிருக்கிறது என்ற முடி வுக்கு வந்தனர். சிறுகோள்கள் இருண்ட, வறண்டுபோன, உயிரற்ற பாறைகளால் ஆனவை என்று நீண்டகாலமாக விஞ்ஞானிகள் கருதி வந்தனர். தற்போதைய கண்டுபிடிப்பு அது சரியல்ல எனத் தெரிவிக்கிறது. அத்துடன் பூமிக்கு நீரையும் உயிரிப் பொருளையும் கொண்டு வந்தது சிறுகோள்களாகவே இருக்கக் கூடும் எனக் கருத இக்கண்டுபிடிப்பு வழிகோலியிருக்கிறது.
“நாங்கள் கண்டுபிடித்த உயிரிகள் சிக்கலான, நீண்ட சங்கிலிகளால் பிணைக் கப்பட்ட மூலக்கூறுகளே. அவற்றை வறண்ட, உயிரினமற்ற பூமியின்மீது எரிநட்சத்திரங்கள் மழை போல் பொழிந்து பூமியில் உயிரினம் தோன்றுவதற்கு உந்துசக்தியாக இருந்தி ருக்கக் கூடும் ... 24 தேமிஸ் மேற்பரப்பில் ஐஸ் இருப்பது ஆச்சரியமானது. ஏனெ னில் அங்கு இருக்கும் வெப்பத்தைப் பார்க்கும்போது ஐஸ் நீண்ட நேரத்திற்கு அதில் ஒட்டிக் கொண்டிருக்க முடியாது. எனவே, மேற்பரப்பில் உள்ள ஐஸ் சூரிய வெப்பத்தினால் ஆவியாகும்போது அதை ஈடுகட்டும் விதத்தில் சிறுகோளின் உட் புறத்தில் அதிக அளவில் ஐஸ் இருக்க வேண்டும். 24 தேமிஸில் ஏராளமான அள வில் ஐஸ் இருப்பதைக் கண்டுபிடித்த தானது, சிறுகோள்கள் இருக்கும் மெயின் பெல்ட் பகுதியில் தண்ணீர் இருப்பதை உறுதி செய்துள்ளது. ” என் கிறார் எமெரி (தகவல் : தி இந்து).
சிறுகோள்கள் பாறைகளால் ஆன வை என்றும் வால் நட்சத்திரங்கள் (உடிஅநவள) ஐஸ் கட்டிகளால் ஆனவை என்றும் நீண்ட காலமாகக் கருதப்பட்டு வந்தது. வால் நட்சத்திரங்கள் பூமிக்குத் தண்ணீரைக் கொண்டு வந்திருக்கக் கூடும் என்று ஒரு கட்டத்தில் நம்பப்பட் டது. தற்போதைய கண்டு பிடிப்பு சிறு கோள்களுக் கும் வால்நட் சத்திரங்க ளுக்கும் உட்கட்டமைப் பில் பெரிய வித்தியாசமில்லை என்பதையும் பூமிக்கு சிறு கோள்களே நீரைக் கொண்டு வந்திருக்கக் கூடும் என்ப தையும் எடுத்துக் காட்டியுள்ளது.
விண்வெளியில் ஒரு வாயு நிலையம்
சிறுகோள்களில் தண் ணீர் கண்டுபிடிக்கப்பட் டது, மனிதர்களை ஏற்றிச் செல்லும் விண்வெளிப் பயணங்களுக்கு உதவும் வகையில் விண்வெளியி லேயே ஒரு வாயு நிலை யத்தை (பயள ளவயவiடிn) நிறு விக் கொள்ளும் சாத்தியக் கூறு இருப்பதை எடுத்துக் காட்டியுள்ளது. தண்ணீரி லிருந்து மின்னாற்பகுப்பு மூலம் ஹைட்ர ஜன் வாயுவைப் பிரித்து எடுக்க முடியும். அது மட்டுமல்ல, விண்வெளி மனிதர்கள் அந்தத் தண்ணீரைச் சுத்தப் படுத்தித் தங்களுக்குத் தேவையான குடிதண்ணீரைத் தயாரித்துக் கொள்ள முடியும். இப்போது விண்கலங்களில் பூமியிலிருந்து தண்ணீரைக் கொண்டு செல்ல வேண்டியிருப்பதால், விண்கலத் தின் எடை மிக அதிகமாக உள்ளது. விண்வெளிப் பயணத்தின் போது தண் ணீரைச் சேகரித்துக் கொள்ள முடியுமா னால் இங்கிருந்து நீரைச் சுமந்து செல்ல வேண்டிய தேவை எழாது. விண்கலத் தின் எடையைக் கணிசமாகக் குறைக்க முடியும். எடை குறைந்தால் எடையைச் சுமந்து செல்வதற்கு தற்போது செல வழிக்கப்படும் சக்தியையும் குறைத்துக் கொள்ளலாம்.
பூமியின் ஈர்ப்புவிசையைவிட சிறு கோளின் ஈர்ப்புவிசை மிகமிகக் குறைவா னது. தன்னந்தனியாக இருக்கும் சிறு கோளிலிருந்து தண்ணீரைப் பிரித்து எடுத்துப் பயன்படுத்துவதென்பது சவால் மிகுந்த ஒரு பிரச்சனையாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
கோள்களும் சிறுகோள்களும் ஆரம் பகால சூரியக் குடும்பத்தில் உருவான சமயத்தில், சிறுகோள்கள் இருக்கும் மெயின்பெல்ட் பகுதியில் ஐஸ் பரவியதன் காரணமாக, மற்ற நட்சத்திரங்களைச் சுற்றியுள்ள கிரகங்களிலும் முதன்முதலில் நீரும் உயிரிகளும் தோன்றியிருக்கக் கூடும். உயிரினம் அந்த கிரகங்களில் தோன்றியுள்ளதாவென அறிந்துகொள்ள வானவியலாளர்களுக்கு அரிய வாய்ப்பு கிட்டியிருக்கிறது. இந்தக் கண்ணோட்டத் தில் பார்க்கும்போது வரும் ஆண்டுகள் சுவாரசியமானவை என்பதில் சந்தேகம் இல்லை.
Courtesy : Theekkathir
Thursday, July 8, 2010
நூறாண்டுகளாக வழங்கிவந்த நட்சத்திரப் புதிர்
எப்சிலான் ஆரிகே என்பது வட வானில் மின்னும் பிரகாசமான நட்சத்திரம். இது 27 ஆண்டுகளுக்கு ஒரு முறை மெள்ள பார்த்துக் கொண்டிருக்கும் போதே பார்வையிலிருந்து மறைந்து போகும் அதிசய நட்சத்திரம். மறுபடியும் 2 ஆண்டுகளுக்குப் பிறகு புலப்படும். சூரியக் கிரகணத்தைப் போல இது தோன்றினாலும் ஏன் 2 ஆண்டுகள் அது நீடிக்கிறது? ஏன் 27 ஆண்டுகளுக்கு ஒரு முறை மறைந்துவிடுகிறது என்பதற்கான சரியான விளக்கம் கிடைக்காமல் சென்ற 100 ஆண்டுகளாக விஞ்ஞானிகள் திணறிக்கொண்டிருந்தனர்.
சென்ற வருடம் ஆகஸ்ட் அன்று எப்சிலான் ஆரிகே மீண்டும் மறைய ஆரம்பித்ததும் நாசாவின் ஸ்பிட்செர் ஆகாயத் தொலைநோக்கி அதை தனது புற ஊதாக்கதிர் கேமரா மூலம் படம்பிடித்தது. எப்சிலான் நட்சத்திர கிரகணத்திற்கு விளக்கம் உருவாகியிருக்கிறது. அது: எப்சிலான் ஆரிகே ஒரு பிரம்மாண்டமான நட்சத்திரம். அதைச் சுற்றியபடி இரண்டு நட்சத்திரங்கள் உள்ளன. அவை பிரும்மாண்டமான தூசிப்படலத்தில் மூழ்கியுள்ளதால் ஒவ்வொரு முறையும் அந்தத் துணை நட்சத்திரங்கள் நமக்கும் எப்சிலானுக்கும் இடையில் வரும்போது குறிப்பிட்ட கிரகணம் நிகழ்கிறது; எப்சிலான் மறைந்துவிடுகிறது.
Nanri: Dr.Mani
சென்ற வருடம் ஆகஸ்ட் அன்று எப்சிலான் ஆரிகே மீண்டும் மறைய ஆரம்பித்ததும் நாசாவின் ஸ்பிட்செர் ஆகாயத் தொலைநோக்கி அதை தனது புற ஊதாக்கதிர் கேமரா மூலம் படம்பிடித்தது. எப்சிலான் நட்சத்திர கிரகணத்திற்கு விளக்கம் உருவாகியிருக்கிறது. அது: எப்சிலான் ஆரிகே ஒரு பிரம்மாண்டமான நட்சத்திரம். அதைச் சுற்றியபடி இரண்டு நட்சத்திரங்கள் உள்ளன. அவை பிரும்மாண்டமான தூசிப்படலத்தில் மூழ்கியுள்ளதால் ஒவ்வொரு முறையும் அந்தத் துணை நட்சத்திரங்கள் நமக்கும் எப்சிலானுக்கும் இடையில் வரும்போது குறிப்பிட்ட கிரகணம் நிகழ்கிறது; எப்சிலான் மறைந்துவிடுகிறது.
Nanri: Dr.Mani
Thursday, June 17, 2010
ஜூன் மாத வால்மீன் - மெக் நாட்.c/2009,R1
இந்த ஜூன் மாதம் நாம் ஒரு வால்மீனை விடிகாலை வேளையில் பார்க்க முடியும். வால்மீன், அதாங்க வால் நட்சத்திரம்னு சொல்றோமே அதுதான். ஆனால் அது விண்மீன்/நட்சத்திரம் இல்லை. அதுவும் நம் சூரிய குடும்பத்தின் உறுப்பினர்தான். கடைசி உறுப்பினர். ஆனா சொன்ன பேச்சு கேக்காத தறுதலைப் பிள்ளை. இதுபோல ஏராளமான தறுதலைப் பிள்ளைகள் சூரியனுக்கு உண்டு. நினைத்த நேரத்தில் வந்து, நினைத்த நேரத்தில் தன் சொந்த வீட்டை, தந்தையை, தான் நினைக்கும் காலம் வரை சுற்றி விட்டு ஓடிப் போய்விடும். சில சில சமயம் நினைத்தபோது மீண்டும் வரும் பிள்ளை. இப்போது வந்துள்ள இந்த பிள்ளையைப்போல் இன்னும் 54 தறுதலைப் பிள்ளைகள் இந்த வகையில் உண்டு. இந்த வகை வால்மீனுக்கு மெக் நாட் வால் மீன்கள் என்று பெயர். மெக் நாட் என்ற ஆஸ்திரேலியர் தான் இந்த வகையிலான வால் மீன்களைக் கண்டுபிடித்தார். அதனால் அவர் பெயரையே இவைகளுக்கு வைத்து விட்டோம்.
இப்போது, மெக் நாட் வால் மீன்களில் ஒருவர், ஜூன் மாதம் வருகிறார் நம் குடும்பத்தைச் சுற்றிப் பார்க்க. அவர் பெயர் வால்மீன், c/2009 R1, (மெக் நாட் - McNaught). இந்த மாதம்தான் இதனை நாம் நன்றாகப் பார்க்க முடியும். இது விடிகாலையில் வடகிழக்கே, பெர்சியஸ் (persius) என்னும் விண்மீன் படலத்தைக் கடந்து போகிறது. மேலும் இந்த மாதம்தான் இது மிகவும் பிரகாசமாக இருக்கும். இந்த வால்மீன் 5வது பிரகாச நிலையில் உள்ளது. ஒரு சின்ன இருகண் நோக்கி மூலம் பார்க்கலாம். வெறும் கண்ணாலும் பார்க்க முடியும். இப்போது வால்மீன் வரும் நேரம், நிலா காயும் நேரமாக இல்லாததால், நிலஉலக மக்கள் நிறைய பேர் இதன் பிரகாசத்தைப் பார்த்து மகிழ்ந்து உள்ளனர். இதன் மெலிதான நீளமான வாலையும் கூட பார்த்து பரவசப் பட்டனராம்.
ஜூன் 9ம் தேதியிலிருந்து மெக் நாட், விடிகாலை 3 .30௦ மணியிலிருந்து நன்றாகத் தெரிகிறதாம். அடிவானிலிருந்து நன்றாகப் பார்க்கும்படியான உயரத்தில், பெர்சியஸ் விண்மீன் படலத்திலுள்ள மூன்று விண்மீன்கள், முக்கோணமாக அமைந்துள்ள இடத்தில், வெறும் கண்ணாலேயே பார்க்குபடி உள்ளது. பொதுவாக வால்மீனுக்கு தலையும் வாலும் இருக்கும். வால் பல வடிவத்தில் இருக்கலாம். இங்கே மெக் நாட் வால் மீனுக்கு, சிறிய தலையும் , மெலிதான வாலும் உள்ளது. நிலநடுக்கோட்டின் வட பகுதியில் உள்ளவர்கள் எல்லோரும், விடிகாலையில் வடகிழக்கில் இந்த மெக் நாட் வால்மீனைப் பார்க்கலாம்.
மெக் நாட்டின் விஜயம் மே மாதமே துவங்கிவிட்டது. அப்போது இது நமது பால்வழிஅண்டத்தின் அடுத்த வீடான ஆண்ட்ரோமிடாவில் (Andromedae) காணப்பட்டது. ஜூன் 5 ம் நாளிலிருந்து இன்னும் கொஞ்சம் வடக்கு நோக்கி நகர்ந்து,
பெர்சியசின் எல்லைக்குள் வந்து விட்டது. இப்போதுதான் வால்மீனின் பிரகாசம் கூடிக்கொண்டே இருக்கிறது. இதுதான் நாம் பார்க்க மிகவும் சாதகமான காலம். இது ஜூன் 23 -24 தேதிகளில், ஔரிகா(Auriga ) விண்மீன் படலத்தின் அருகில் இருக்கும். அப்போது மெக் நாட் இப்போதைவிட இன்னும் பிரகாசமாக இருக்கும். ஆனால், நமக்கு ஒரே ஒரு கஷ்டம்தான். அதான் நிலா வலம் வந்து, மெக் நாட் அருகே நிற்பார். அப்புறம் எப்படி அவரது ஆட்சியில், இந்தத் துளியுண்டு ஒளி வெளியிடும் மெக் நாட்டைப் பார்க்க?
மெக் நாட் ஒவ்வொரு நாளும், 1 டிகிரி கிழே இறங்கிக் கொண்டே இருக்கிறது. ஜூன் மாத இறுதியில் மெக் நாட் நம் பார்வையைவிட்டே ஓடி விடும்; ஓடியே ஓடிப் போய்விடும். இது ஹைப்பர்போலிக் வளையத்தை கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கிக்கொண்டு இருக்கிறது. இதன் தாயகமான ஊர்ட் மேகத்தை விட்டு புறப்பட்டதிலிருந்து இப்போதுதான் முதன் முறையாக பயணத்தை துவங்கி இருக்கிறது. இதன் பயணம் அடுத்த ஆண்டும் தொடரும். ஆனால் நமது கண் பார்வைக்குத்தான் தெரியாது.
இதுவரை வந்த மெக் நாட் குழும உறுப்பினரில், 2007ம் ஆண்டு, ஜனவரியில் பொங்கலுக்குப் பின் வந்த வால் மீன்தான் மிகவும் பிரகாசமானது. அதனை வெறும் கண்ணால், சூரியன் மறைந்த உடனேயே, மேற்கு வானில் 40 ௦டிகிரி உயரத்தில் பார்த்து மகிழ்ந்தோம்
பேரா.சோ.மோகனா
இப்போது, மெக் நாட் வால் மீன்களில் ஒருவர், ஜூன் மாதம் வருகிறார் நம் குடும்பத்தைச் சுற்றிப் பார்க்க. அவர் பெயர் வால்மீன், c/2009 R1, (மெக் நாட் - McNaught). இந்த மாதம்தான் இதனை நாம் நன்றாகப் பார்க்க முடியும். இது விடிகாலையில் வடகிழக்கே, பெர்சியஸ் (persius) என்னும் விண்மீன் படலத்தைக் கடந்து போகிறது. மேலும் இந்த மாதம்தான் இது மிகவும் பிரகாசமாக இருக்கும். இந்த வால்மீன் 5வது பிரகாச நிலையில் உள்ளது. ஒரு சின்ன இருகண் நோக்கி மூலம் பார்க்கலாம். வெறும் கண்ணாலும் பார்க்க முடியும். இப்போது வால்மீன் வரும் நேரம், நிலா காயும் நேரமாக இல்லாததால், நிலஉலக மக்கள் நிறைய பேர் இதன் பிரகாசத்தைப் பார்த்து மகிழ்ந்து உள்ளனர். இதன் மெலிதான நீளமான வாலையும் கூட பார்த்து பரவசப் பட்டனராம்.
ஜூன் 9ம் தேதியிலிருந்து மெக் நாட், விடிகாலை 3 .30௦ மணியிலிருந்து நன்றாகத் தெரிகிறதாம். அடிவானிலிருந்து நன்றாகப் பார்க்கும்படியான உயரத்தில், பெர்சியஸ் விண்மீன் படலத்திலுள்ள மூன்று விண்மீன்கள், முக்கோணமாக அமைந்துள்ள இடத்தில், வெறும் கண்ணாலேயே பார்க்குபடி உள்ளது. பொதுவாக வால்மீனுக்கு தலையும் வாலும் இருக்கும். வால் பல வடிவத்தில் இருக்கலாம். இங்கே மெக் நாட் வால் மீனுக்கு, சிறிய தலையும் , மெலிதான வாலும் உள்ளது. நிலநடுக்கோட்டின் வட பகுதியில் உள்ளவர்கள் எல்லோரும், விடிகாலையில் வடகிழக்கில் இந்த மெக் நாட் வால்மீனைப் பார்க்கலாம்.
மெக் நாட்டின் விஜயம் மே மாதமே துவங்கிவிட்டது. அப்போது இது நமது பால்வழிஅண்டத்தின் அடுத்த வீடான ஆண்ட்ரோமிடாவில் (Andromedae) காணப்பட்டது. ஜூன் 5 ம் நாளிலிருந்து இன்னும் கொஞ்சம் வடக்கு நோக்கி நகர்ந்து,
பெர்சியசின் எல்லைக்குள் வந்து விட்டது. இப்போதுதான் வால்மீனின் பிரகாசம் கூடிக்கொண்டே இருக்கிறது. இதுதான் நாம் பார்க்க மிகவும் சாதகமான காலம். இது ஜூன் 23 -24 தேதிகளில், ஔரிகா(Auriga ) விண்மீன் படலத்தின் அருகில் இருக்கும். அப்போது மெக் நாட் இப்போதைவிட இன்னும் பிரகாசமாக இருக்கும். ஆனால், நமக்கு ஒரே ஒரு கஷ்டம்தான். அதான் நிலா வலம் வந்து, மெக் நாட் அருகே நிற்பார். அப்புறம் எப்படி அவரது ஆட்சியில், இந்தத் துளியுண்டு ஒளி வெளியிடும் மெக் நாட்டைப் பார்க்க?
மெக் நாட் ஒவ்வொரு நாளும், 1 டிகிரி கிழே இறங்கிக் கொண்டே இருக்கிறது. ஜூன் மாத இறுதியில் மெக் நாட் நம் பார்வையைவிட்டே ஓடி விடும்; ஓடியே ஓடிப் போய்விடும். இது ஹைப்பர்போலிக் வளையத்தை கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கிக்கொண்டு இருக்கிறது. இதன் தாயகமான ஊர்ட் மேகத்தை விட்டு புறப்பட்டதிலிருந்து இப்போதுதான் முதன் முறையாக பயணத்தை துவங்கி இருக்கிறது. இதன் பயணம் அடுத்த ஆண்டும் தொடரும். ஆனால் நமது கண் பார்வைக்குத்தான் தெரியாது.
இதுவரை வந்த மெக் நாட் குழும உறுப்பினரில், 2007ம் ஆண்டு, ஜனவரியில் பொங்கலுக்குப் பின் வந்த வால் மீன்தான் மிகவும் பிரகாசமானது. அதனை வெறும் கண்ணால், சூரியன் மறைந்த உடனேயே, மேற்கு வானில் 40 ௦டிகிரி உயரத்தில் பார்த்து மகிழ்ந்தோம்
பேரா.சோ.மோகனா
Thursday, June 3, 2010
மதவாதிகளால் ஒடுக்கப்பட்ட பழங்கால வானவியல்
ழங்கால வானியல் பதிவுகளைப் புரட்டினால் அவற்றை வானவியலாளர்கள் கலை நுணுக்கத்துடன் செய்துள்ளது தெரிய வருகிறது. 20 ம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்துதான் வானைநோக்கி அறிவது தனியான துறையாக கணிக்கப்பட்டது. நிலா ஒவ்வொரு மாதமும் 8 நிலைகளை கடக்கிறது. ஒரு முறை பூமியைச் சுற்றிவர எடுத்துக்கொள்ளும் 29.5 நாட்களை ஒரு மாதம் எனக் கணக்கிடுகிறோம். இதனால் 27 வருடங்களுக்கு ஒருமுறை ஒரு மாதத்தில் இருமுறை முழுநிலா, பௌர்ணமி ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை நீல நிலா என்கிறோம்.
தொலைநோக்கி கண்டுபிடிக்கும் முன்பே சில முக்கிய வானியல் கண்டுபிடிப்புகள் அக்கால கட்டத்தில் நிகழ்ந்தன. சாய்வான சூரியக்கதிர்வீதி கி.மு. முதலாம் நூற்றாண்டிலேயே சீனர்களால் கண்டறியப்பட்டது. சால்டீன் என்ற விஞ்ஞானி சூரியனில் கொஞ்சூண்டு, வெப்பம் குறைவான பகுதி உள்ளது என்றார். அவற்றை கரும்புள்ளிகள் எனவும் குறிப்பிட்டார். அவை மீண்டும் மீண்டும் ஒரு காலகதியில் (11 ஆண்டுகள்) சுழன்று மீண்டும் அவ்விடத்திற்கே வரும் என்றும் சொன்னார். கி.மு.2ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஹப்பார்க்கஸ் பூமிக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம் 3.2 இலட்சம் கி.மீ. என்று கணித்தார். கி.மு.276-195ல் வாழ்ந்த எரட்டோதெனிஸ் என்ற கணிதவியலாளர் எந்தவித கருவியும் இன்றி பூமியின் சுற்றளவைத் துல்லியமாகக் கண்டறிந்தார். அவரே அட்சரேகை. தீர்க்க ரேகைகளையும் கண்டுபிடித்தவர். மத்திய காலங்களில் 13ம் நூற்றாண்டு வரை ஐரோப்பாவில் அறிவியலில் ஒரு தேக்கம் ஏற்பட்டது. இதனை கருப்பு ஆண்டுகள் என்று கூறுகிறோம். பின்னர் நாம் இன்று பார்க்கும் வானவியல் பெர்சிய சாம்ராஜ்ஜியத்திலும், இஸ்லாமிய உலகிலும் பெரிதளவில் வளர்ந்தது. இன்று விண்மீன் கூட்டத்திற்கு சூட்டப்பட்ட பெயர்கள் அனைத்தும் அரேபியப்பெயர்களே; இஸ்லாமியர் நாமகரணம் செய்தவையே.
இந்தியாவில் பிறந்து வாழ்ந்த ஆரியபட்டர் (பிறப்பு கி.பி.496), வராகமிகித (499-577), பாஸ்கரா (பிறப்பு 1114) போன்றோர் நம்மிடம் போதுமான கருவிகள் சாதனங்கள் இன்றியே சூரிய கிரகணம், சந்திர கிரகணம், பூமியின் வடிவம், அதன் சுற்றுவேகம், அது சூரியனைச் சுற்றி வருவது மற்றும் பிறகோள்களின் புறச்சூழல்கள் போன்றவற்றை கணிதத்தின் மூலம் அனுமானித்து கண்டறிந்தனர்.
விண்மீனின் தூரம் மற்றும் கோணம் அறியும் கருவியைக் கண்டுபிடித்த ஹைப்பேஷியாவும் (கி.மு.37-410) பூமி சூரியனைச் சுற்றுகிறது என்று சொன்ன ஜியார்டானோ புரூனோவும் (கி.பி.1545-1600) கொடூரமாக மதவாதிகளால் கொலைசெய்யப்பட்டனர். மறுமலர்ச்சிக்காலத்தில் வாழ்ந்த நிகோலஸ் கோப்பர் நிக்கஸ் (கி.மு.1473-1449) இந்த உலகம் அதாங்க நம்ம பூமி சூரியனை மையமாக வைத்து சுற்றுகிறது என்பதை ரகசியமாக (மதவாதிகளுக்கு பயந்துதான்) எழுதிவைத்தார். இந்த விஷயம் மதவாதிகளுக்குத்தெரிந்தால் தலையை ஒரே சீவுதான். எனவே அவர் இறக்கும்வரை அவர் எழுதி வைத்த தகவல்கள் வெளிவரவில்லை. இறப்பதற்கு நான்கு நாட்களுக்கு முன்புதான் அவரது சீடர்கள் கோப்பர் நிக்கஸின் கருத்துக்களை புத்தகமாக வெளியிட்டனர். கோப்பர் நிக்கஸ் எழுதிய சூரியனை மையமாக வைத்த சூரிய மண்டலமும், பூமி சூரியனைச்சுற்றுவதும் அவர் இறந்தபின்பே இந்த உலகத்திற்குத் தெரியவந்தது.
கலிலீயோ கலிலி என்ற இத்தாலிய விஞ்ஞானி (கி.பி.1564-1642) பூமி சூரியனை மையமாக வைத்து சுற்றுகிறது என வெளிப்படையாக சொன்னார். கடவுள் உருவாக்கிய பூமி சூரியனைச் சுற்ற முடியாது என நம்பிய மதவாதிகள் கலிலியோவை சிறையில் அடைத்தனர், சித்திரவதை செய்தனர். அவர் சிறையில் பைத்தியம் பிடித்து செத்துப்போனார். பிறகு ஐசக் நியூட்டன் (1642-1727) தலையில் ஆப்பிள் விழுந்தது. நண்பருடன் இருந்த நியூட்டனுக்கு ஞானம் பிறந்ததது. ஆச்சரியம். ஈர்ப்பு விசைக்கொள்கையை, வானவியலின் ஆற்றலை, கோள்களின் நகர்வு பற்றிய விஷயங்களை தெளிவாகக் கூறினார் நியூட்டன். வில்லியம் ஹெர்சல் 1781ல் யுரேனஸ் என்ற கோளைக் கண்டுபிடித்தார். அதன் கிரிடம்... அதாம்பா அதன் வளையம் பற்றி இப்போதுதான் அறிகிறோம்.
1846ல் செப்டம்பர் 23-ம் நாள் ஜெர்மனின் காட்பிரட் கேலி சூரியனைச்சுற்றும் எட்டாவது கோளைக் கண்டுபிடித்தார். அதற்கு ரோமானிய நீர்க்கடவுளின் பெயரான நெப்டியூனை சூட்டினார். நாம் சூரிய மண்டலத்தில் தனியாக இல்லை, நம் குடும்பம் மிகப்பெரி..ய்..ய..து. கோள்களுக்கு வெளியே கியூப்பியர் வளையம், அதைத்தாண்டி ஊர்ட் மேகங்கள், அவைகளிலிருந்து கிளம்பி ஒழுங்காகவும், தன் இஷ்டப்படியும் சூரியனை வலம்வரும் வால்மீன்கள் எல்லாம் சூரியக்குடும்ப உறுப்பினர்களே. எனவே நம் குடும்பம் மிகப்பெரியதாக பால்வழி மண்டலம் வரையில் நீண்டுள்ளது. சூரியக்குடும்பம் பால்வழி மண்டத்தின் ஒரு ஓரத்தில், ஆப்பத்தின் ஓரத்தில் ஒட்டிய சர்க்கரைத்துளி போல ஒட்டிக்கொண்டு சுற்றுகிறது. இந்த உண்மை 20ம் நூற்றாண்டில் தான் நமக்கு தெரியவந்தது.
உலகில் முதன் முதலில் பதிவு செய்யப்பட்ட சூப்பர் நோவா, கி.பி.1054ல் சீன வானிலையாளர்களால் கண்டறியப்பட்டது. அது காணப்பட்ட நாள் ஜூலை 4 (அமெரிக்காவின் சுதந்திர நாள். ஆனால் சூப்பர் நோவா கண்டறியப்பட்டபோது, அமெரிக்கா என்ற கண்டத்தில் மக்கள் வாழ்க்கை இல்லை. அதன் வயது 400 வருடங்கள் தானே). சூப்பர் நோவா தொலைதூர அண்டங்களில் அடிக்கடி உருவாகி வருகிறது. டேனீஸ் நாட்டு வானிலையாளர் டைகோபிராகி 1572ல் ஒரு சூப்பர் நோவாவை கண்டுபிடித்தார். அது இன்றும்கூட தெரிகிறது. அதிலிருந்துதான் முதன்முதலில் காமா கதிர்கள் (வானின் வண்ணக்கோலங்கள்) கண்டுபிடிக்கப்பட்டன. பிராக்கியின் சூப்பர் நோவாவை மக்கள் பகலில் பார்த்தனராம். பின்னர் ஜெர்மன் வானிலையாளர் ஜொகன்ஸ் கெப்பளர் 1605ல் ஒரு சூப்பர் நோவாவைப் பார்த்து பதிவு செய்தார்.
நன்றி: பேரா.சோ.மோகனா
தொலைநோக்கி கண்டுபிடிக்கும் முன்பே சில முக்கிய வானியல் கண்டுபிடிப்புகள் அக்கால கட்டத்தில் நிகழ்ந்தன. சாய்வான சூரியக்கதிர்வீதி கி.மு. முதலாம் நூற்றாண்டிலேயே சீனர்களால் கண்டறியப்பட்டது. சால்டீன் என்ற விஞ்ஞானி சூரியனில் கொஞ்சூண்டு, வெப்பம் குறைவான பகுதி உள்ளது என்றார். அவற்றை கரும்புள்ளிகள் எனவும் குறிப்பிட்டார். அவை மீண்டும் மீண்டும் ஒரு காலகதியில் (11 ஆண்டுகள்) சுழன்று மீண்டும் அவ்விடத்திற்கே வரும் என்றும் சொன்னார். கி.மு.2ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஹப்பார்க்கஸ் பூமிக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம் 3.2 இலட்சம் கி.மீ. என்று கணித்தார். கி.மு.276-195ல் வாழ்ந்த எரட்டோதெனிஸ் என்ற கணிதவியலாளர் எந்தவித கருவியும் இன்றி பூமியின் சுற்றளவைத் துல்லியமாகக் கண்டறிந்தார். அவரே அட்சரேகை. தீர்க்க ரேகைகளையும் கண்டுபிடித்தவர். மத்திய காலங்களில் 13ம் நூற்றாண்டு வரை ஐரோப்பாவில் அறிவியலில் ஒரு தேக்கம் ஏற்பட்டது. இதனை கருப்பு ஆண்டுகள் என்று கூறுகிறோம். பின்னர் நாம் இன்று பார்க்கும் வானவியல் பெர்சிய சாம்ராஜ்ஜியத்திலும், இஸ்லாமிய உலகிலும் பெரிதளவில் வளர்ந்தது. இன்று விண்மீன் கூட்டத்திற்கு சூட்டப்பட்ட பெயர்கள் அனைத்தும் அரேபியப்பெயர்களே; இஸ்லாமியர் நாமகரணம் செய்தவையே.
இந்தியாவில் பிறந்து வாழ்ந்த ஆரியபட்டர் (பிறப்பு கி.பி.496), வராகமிகித (499-577), பாஸ்கரா (பிறப்பு 1114) போன்றோர் நம்மிடம் போதுமான கருவிகள் சாதனங்கள் இன்றியே சூரிய கிரகணம், சந்திர கிரகணம், பூமியின் வடிவம், அதன் சுற்றுவேகம், அது சூரியனைச் சுற்றி வருவது மற்றும் பிறகோள்களின் புறச்சூழல்கள் போன்றவற்றை கணிதத்தின் மூலம் அனுமானித்து கண்டறிந்தனர்.
விண்மீனின் தூரம் மற்றும் கோணம் அறியும் கருவியைக் கண்டுபிடித்த ஹைப்பேஷியாவும் (கி.மு.37-410) பூமி சூரியனைச் சுற்றுகிறது என்று சொன்ன ஜியார்டானோ புரூனோவும் (கி.பி.1545-1600) கொடூரமாக மதவாதிகளால் கொலைசெய்யப்பட்டனர். மறுமலர்ச்சிக்காலத்தில் வாழ்ந்த நிகோலஸ் கோப்பர் நிக்கஸ் (கி.மு.1473-1449) இந்த உலகம் அதாங்க நம்ம பூமி சூரியனை மையமாக வைத்து சுற்றுகிறது என்பதை ரகசியமாக (மதவாதிகளுக்கு பயந்துதான்) எழுதிவைத்தார். இந்த விஷயம் மதவாதிகளுக்குத்தெரிந்தால் தலையை ஒரே சீவுதான். எனவே அவர் இறக்கும்வரை அவர் எழுதி வைத்த தகவல்கள் வெளிவரவில்லை. இறப்பதற்கு நான்கு நாட்களுக்கு முன்புதான் அவரது சீடர்கள் கோப்பர் நிக்கஸின் கருத்துக்களை புத்தகமாக வெளியிட்டனர். கோப்பர் நிக்கஸ் எழுதிய சூரியனை மையமாக வைத்த சூரிய மண்டலமும், பூமி சூரியனைச்சுற்றுவதும் அவர் இறந்தபின்பே இந்த உலகத்திற்குத் தெரியவந்தது.
கலிலீயோ கலிலி என்ற இத்தாலிய விஞ்ஞானி (கி.பி.1564-1642) பூமி சூரியனை மையமாக வைத்து சுற்றுகிறது என வெளிப்படையாக சொன்னார். கடவுள் உருவாக்கிய பூமி சூரியனைச் சுற்ற முடியாது என நம்பிய மதவாதிகள் கலிலியோவை சிறையில் அடைத்தனர், சித்திரவதை செய்தனர். அவர் சிறையில் பைத்தியம் பிடித்து செத்துப்போனார். பிறகு ஐசக் நியூட்டன் (1642-1727) தலையில் ஆப்பிள் விழுந்தது. நண்பருடன் இருந்த நியூட்டனுக்கு ஞானம் பிறந்ததது. ஆச்சரியம். ஈர்ப்பு விசைக்கொள்கையை, வானவியலின் ஆற்றலை, கோள்களின் நகர்வு பற்றிய விஷயங்களை தெளிவாகக் கூறினார் நியூட்டன். வில்லியம் ஹெர்சல் 1781ல் யுரேனஸ் என்ற கோளைக் கண்டுபிடித்தார். அதன் கிரிடம்... அதாம்பா அதன் வளையம் பற்றி இப்போதுதான் அறிகிறோம்.
1846ல் செப்டம்பர் 23-ம் நாள் ஜெர்மனின் காட்பிரட் கேலி சூரியனைச்சுற்றும் எட்டாவது கோளைக் கண்டுபிடித்தார். அதற்கு ரோமானிய நீர்க்கடவுளின் பெயரான நெப்டியூனை சூட்டினார். நாம் சூரிய மண்டலத்தில் தனியாக இல்லை, நம் குடும்பம் மிகப்பெரி..ய்..ய..து. கோள்களுக்கு வெளியே கியூப்பியர் வளையம், அதைத்தாண்டி ஊர்ட் மேகங்கள், அவைகளிலிருந்து கிளம்பி ஒழுங்காகவும், தன் இஷ்டப்படியும் சூரியனை வலம்வரும் வால்மீன்கள் எல்லாம் சூரியக்குடும்ப உறுப்பினர்களே. எனவே நம் குடும்பம் மிகப்பெரியதாக பால்வழி மண்டலம் வரையில் நீண்டுள்ளது. சூரியக்குடும்பம் பால்வழி மண்டத்தின் ஒரு ஓரத்தில், ஆப்பத்தின் ஓரத்தில் ஒட்டிய சர்க்கரைத்துளி போல ஒட்டிக்கொண்டு சுற்றுகிறது. இந்த உண்மை 20ம் நூற்றாண்டில் தான் நமக்கு தெரியவந்தது.
உலகில் முதன் முதலில் பதிவு செய்யப்பட்ட சூப்பர் நோவா, கி.பி.1054ல் சீன வானிலையாளர்களால் கண்டறியப்பட்டது. அது காணப்பட்ட நாள் ஜூலை 4 (அமெரிக்காவின் சுதந்திர நாள். ஆனால் சூப்பர் நோவா கண்டறியப்பட்டபோது, அமெரிக்கா என்ற கண்டத்தில் மக்கள் வாழ்க்கை இல்லை. அதன் வயது 400 வருடங்கள் தானே). சூப்பர் நோவா தொலைதூர அண்டங்களில் அடிக்கடி உருவாகி வருகிறது. டேனீஸ் நாட்டு வானிலையாளர் டைகோபிராகி 1572ல் ஒரு சூப்பர் நோவாவை கண்டுபிடித்தார். அது இன்றும்கூட தெரிகிறது. அதிலிருந்துதான் முதன்முதலில் காமா கதிர்கள் (வானின் வண்ணக்கோலங்கள்) கண்டுபிடிக்கப்பட்டன. பிராக்கியின் சூப்பர் நோவாவை மக்கள் பகலில் பார்த்தனராம். பின்னர் ஜெர்மன் வானிலையாளர் ஜொகன்ஸ் கெப்பளர் 1605ல் ஒரு சூப்பர் நோவாவைப் பார்த்து பதிவு செய்தார்.
நன்றி: பேரா.சோ.மோகனா
Tuesday, May 25, 2010
பிரபஞ்சத்தின் எல்லையில்லா தொடர் பயணம்
நம் தாயகம் பால்வழி மண்டலம்
நிலவற்ற மேகமற்ற வானை மின்விளக்குகளின் தொந்தரவு இன்றி அண்ணாந்து பாருங்கள்... தெற்கில் இருந்து வடக்காக உச்சிவானில் லேசான மெல்லிய பால் மேகம் போல் மிதப்பது போன்ற ஒரு காட்சி விண்மீன்களின் ஊடே தெரியும். அதுதான் நம் சூரியக்குடும்பத்தின் தாய் வீடான பால்வழி மண்டலம். இதில் வைரத்தைக் கொட்டியது போல எக்கச்சக்கமான விண்மீன்கள் தெரியும். இங்கே 20 பில்லியன் விண்மீன் தொகுதிகள் அடங்கியுள்ளன. இவைகள் எல்லாம் ஏதோ அசையாமல் நிற்பது போலவும், அருகருகே உள்ளது போலவும் தோன்றுகிறது. அது உண்மையல்ல. அவைகளுக்கிடையே பல்லாயிரம் ஒளி ஆண்டுகள் இடைவெளி உண்டு. ஆனால் உண்மையில் விண்மீன்களுக்கிடையே சூன்ய வளியே காணப்படுகிறது. இரவில் நாம் பால்வழி மண்டலத்தின் ஒரு ஓரத்தில் நின்றுகொண்டுதான் அதன் உட்புறத்தை பார்வையிடுவோம். எப்படி தெரியுமா, வீட்டின் வெளியே நின்று கொண்டு வீட்டிற்குள்ளே எட்டிப்பார்த்து தெரிந்துகொள்வது போன்றுதான்.
நிற்பதுவே நகர்வதுவே பறப்பதுவே
உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? நம் சூரியக்குடும்பம் நிற்காமல் சுற்றிக்கொண்டே இருக்கிறது. நம் மைய நாயகனான பால்வழி மண்டலத்தை இதுவரை 20 சுற்றுகள் சுற்றியுள்ளது. பால்வழி மண்டலமாவது சும்மா இருக்கிறதா. அதுவும் ஓயாமல் நகர்ந்துகொண்டே சுற்றுகிறது. எப்படித்தெரியுமா? பிரம்மாண்டமான ராட்சச குடைராட்டினம்போல சுற்றி சுற்றி வருகிறது. அதன் வேகம் எவ்வளவு தெரியுமா? பூமி வினாடிக்கு 30 கி.மீ. வேகத்திலும், சூரியன் வினாடிக்கு 250 கி.மீ. வேகத்திலும் பால்வழி மண்டலம் சூரியக்குடும்பத்துடன் சேர்ந்து வினாடிக்கு சுமார் 390 கி.மீ. வேகத்திலும் அண்டவெளியில் நகர்ந்து கொண்டே செல்கிறது. அப்போது பால்வழி மண்டலங்களுக்கிடையே உள்ள உள்ளூர் தொகுதிகள் (Local Groups) சுமார் நொடிக்கு 60 கி.மீ. வேகத்தில் செல்கின்றன. நாம் நகரும் வேகத்தை கணக்கிட்டால் ஆடாமல், அசங்காமல், அலுங்காமல், குலுங்காமல் வினாடிக்கு 30+250+140(+ 250) + 60 சுமார் 480 கி.மீ. வேகத்தில் பிரபஞ்சவெளியில் நாம் பயணிக்கிறோம். நண்பா... என்ன ஆச்சரியமாக இருக்கிறதா... இதுதான் உண்மை.
சொகுசான பயணம்
இந்த குடை ராட்டின பால்வழி மண்டலத்திற்குள் விண்மீன் தொகுதிகள், விண்மீன் குடும்பங்கள், நம் சூரியக்குடும்பம், அவற்றின் துணைக்கோள்கள் என எதுவுமே கீழே விழாமல் எப்படி... எப்படி.. இலாவகமாக சுழன்று.. சுழன்று.. பம்பரமாய் நடனமாடுகின்றன.. இந்த அண்டங்கள்.. யார் இவற்றை ஆட்டி வைப்பது.. வேறு யார், மைய அழுத்தமும், ஈர்ப்பு விசையும் தான். இடைவிடாத வேகமான பேரியக்கம் இது. நெடுஞ்சாலையில் ஒரு கார் 100 கி.மீ. வேகத்தை தாண்டினாலே என்னப்பா வேகம் என பிரமிக்கிறோம். ஆனால் நாம் அண்டராட்டினத்தில் ஒரு மோதல், ஓரு குலுக்கல், ஆட்டம் இன்றி பூமியில் உள்ள அனைவருமே. ஒரு மணி நேரத்தில் சுமார் 8,04,500 கி.மீ. தூரத்தை கடக்கிறோம் தெரியுமா..? எவ்வளவு சொகுசான பயணம் இது!!
எல்லையில்லா தொடர் பயணம்
சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் பால்வழி மண்டலம் தான் எல்லை எனக்கருதியிருந்தோம். பிரபஞ்சமையம் என்பது பூமிதான் என சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் நம்பினர். ஆனால் இந்த பெரிய பால்வழி மண்டலமும் இப்பிரபஞ்சத்தில் உள்ள பல அண்டங்களில் ஒன்று என இப்போது தெரிந்து போயிற்று. நம் பால்வழி மண்டலம் என்பது பிரபஞ்சத்தில் எவ்வளவு பெரியது தெரியுமா? ஒரு பெரிய ரொட்டித் துண்டில் உள்ள சிறிய துணுக்கு தான் நம் பால்வழி மண்டலம். ஆனால் பிரபஞ்சம் எல்லையற்றது. இப்பிரபஞ்சமோ மேலும் மேலும் விரிந்துகொண்டே செல்கிறது. ஒருக்கால் வெடித்துவிடுமோ? இல்லவே இல்லை. ஓட்டம் நிற்குமா? ஒருபோதும் இல்லை. நீங்கள் எவ்வளவு தொலைவில் அண்டங்களை கடந்து சென்றாலும் வேண்டாம், வேண்டாம் நில்லுங்கள்... இதோ பிரபஞ்சம் முடியப்போகிறது என எச்சரிக்க முடியுமா? அங்கு யாராவது உண்டா? இல்லவே இல்லை. எல்லையே இல்லையே.. இது முடிவற்ற வெளி...
அதுமட்டுமா நம் சூரியக்குடும்பம், பால்வழி மண்டலம், நம் பிரபஞ்சம் எல்லாம் தொடர்ந்து ஓரிடத்தில் நில்லாமல் நகர்ந்து நகர்ந்து விரிந்து போய்க்கொண்டே முடிவில்லா பயணத்தை நீட்டிக்கொண்டே இருக்கின்றன. நீங்கள் நேற்று இருந்த இடத்தில் இன்றில்லை நண்பா! நேற்று என்ன ஒரு மணி நேரத்திற்கு முன்பு இருந்த இடத்தில் கூட இப்போது நீங்கள் இல்லையே! சுமார் 8,00,000 கி.மீ தூரம் நகர்ந்திருக்கீறீர்களே. பின் என்ன இது, என்ன இங்க இருக்கிறது, இது என் ஊர், இது என் வீடு, இது என் மாநிலம் என்பதெல்லாம் எவ்வளவு நிஜமானது? போலியானது தானே! நிலம் நிற்கிறதா, கடல் நிற்கிறதா, யார் நிற்கின்றனர் இந்த பிரபஞ்சத்தில்? எல்லாமே எப்போதுமே ஓடிக்கொண்டே நிற்க நேரமின்றி ஓடிக்கொண்டே இருக்கிறோம்.
நன்றி: பேரா.சோ.மோகனா
நிலவற்ற மேகமற்ற வானை மின்விளக்குகளின் தொந்தரவு இன்றி அண்ணாந்து பாருங்கள்... தெற்கில் இருந்து வடக்காக உச்சிவானில் லேசான மெல்லிய பால் மேகம் போல் மிதப்பது போன்ற ஒரு காட்சி விண்மீன்களின் ஊடே தெரியும். அதுதான் நம் சூரியக்குடும்பத்தின் தாய் வீடான பால்வழி மண்டலம். இதில் வைரத்தைக் கொட்டியது போல எக்கச்சக்கமான விண்மீன்கள் தெரியும். இங்கே 20 பில்லியன் விண்மீன் தொகுதிகள் அடங்கியுள்ளன. இவைகள் எல்லாம் ஏதோ அசையாமல் நிற்பது போலவும், அருகருகே உள்ளது போலவும் தோன்றுகிறது. அது உண்மையல்ல. அவைகளுக்கிடையே பல்லாயிரம் ஒளி ஆண்டுகள் இடைவெளி உண்டு. ஆனால் உண்மையில் விண்மீன்களுக்கிடையே சூன்ய வளியே காணப்படுகிறது. இரவில் நாம் பால்வழி மண்டலத்தின் ஒரு ஓரத்தில் நின்றுகொண்டுதான் அதன் உட்புறத்தை பார்வையிடுவோம். எப்படி தெரியுமா, வீட்டின் வெளியே நின்று கொண்டு வீட்டிற்குள்ளே எட்டிப்பார்த்து தெரிந்துகொள்வது போன்றுதான்.
நிற்பதுவே நகர்வதுவே பறப்பதுவே
உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? நம் சூரியக்குடும்பம் நிற்காமல் சுற்றிக்கொண்டே இருக்கிறது. நம் மைய நாயகனான பால்வழி மண்டலத்தை இதுவரை 20 சுற்றுகள் சுற்றியுள்ளது. பால்வழி மண்டலமாவது சும்மா இருக்கிறதா. அதுவும் ஓயாமல் நகர்ந்துகொண்டே சுற்றுகிறது. எப்படித்தெரியுமா? பிரம்மாண்டமான ராட்சச குடைராட்டினம்போல சுற்றி சுற்றி வருகிறது. அதன் வேகம் எவ்வளவு தெரியுமா? பூமி வினாடிக்கு 30 கி.மீ. வேகத்திலும், சூரியன் வினாடிக்கு 250 கி.மீ. வேகத்திலும் பால்வழி மண்டலம் சூரியக்குடும்பத்துடன் சேர்ந்து வினாடிக்கு சுமார் 390 கி.மீ. வேகத்திலும் அண்டவெளியில் நகர்ந்து கொண்டே செல்கிறது. அப்போது பால்வழி மண்டலங்களுக்கிடையே உள்ள உள்ளூர் தொகுதிகள் (Local Groups) சுமார் நொடிக்கு 60 கி.மீ. வேகத்தில் செல்கின்றன. நாம் நகரும் வேகத்தை கணக்கிட்டால் ஆடாமல், அசங்காமல், அலுங்காமல், குலுங்காமல் வினாடிக்கு 30+250+140(+ 250) + 60 சுமார் 480 கி.மீ. வேகத்தில் பிரபஞ்சவெளியில் நாம் பயணிக்கிறோம். நண்பா... என்ன ஆச்சரியமாக இருக்கிறதா... இதுதான் உண்மை.
சொகுசான பயணம்
இந்த குடை ராட்டின பால்வழி மண்டலத்திற்குள் விண்மீன் தொகுதிகள், விண்மீன் குடும்பங்கள், நம் சூரியக்குடும்பம், அவற்றின் துணைக்கோள்கள் என எதுவுமே கீழே விழாமல் எப்படி... எப்படி.. இலாவகமாக சுழன்று.. சுழன்று.. பம்பரமாய் நடனமாடுகின்றன.. இந்த அண்டங்கள்.. யார் இவற்றை ஆட்டி வைப்பது.. வேறு யார், மைய அழுத்தமும், ஈர்ப்பு விசையும் தான். இடைவிடாத வேகமான பேரியக்கம் இது. நெடுஞ்சாலையில் ஒரு கார் 100 கி.மீ. வேகத்தை தாண்டினாலே என்னப்பா வேகம் என பிரமிக்கிறோம். ஆனால் நாம் அண்டராட்டினத்தில் ஒரு மோதல், ஓரு குலுக்கல், ஆட்டம் இன்றி பூமியில் உள்ள அனைவருமே. ஒரு மணி நேரத்தில் சுமார் 8,04,500 கி.மீ. தூரத்தை கடக்கிறோம் தெரியுமா..? எவ்வளவு சொகுசான பயணம் இது!!
எல்லையில்லா தொடர் பயணம்
சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் பால்வழி மண்டலம் தான் எல்லை எனக்கருதியிருந்தோம். பிரபஞ்சமையம் என்பது பூமிதான் என சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் நம்பினர். ஆனால் இந்த பெரிய பால்வழி மண்டலமும் இப்பிரபஞ்சத்தில் உள்ள பல அண்டங்களில் ஒன்று என இப்போது தெரிந்து போயிற்று. நம் பால்வழி மண்டலம் என்பது பிரபஞ்சத்தில் எவ்வளவு பெரியது தெரியுமா? ஒரு பெரிய ரொட்டித் துண்டில் உள்ள சிறிய துணுக்கு தான் நம் பால்வழி மண்டலம். ஆனால் பிரபஞ்சம் எல்லையற்றது. இப்பிரபஞ்சமோ மேலும் மேலும் விரிந்துகொண்டே செல்கிறது. ஒருக்கால் வெடித்துவிடுமோ? இல்லவே இல்லை. ஓட்டம் நிற்குமா? ஒருபோதும் இல்லை. நீங்கள் எவ்வளவு தொலைவில் அண்டங்களை கடந்து சென்றாலும் வேண்டாம், வேண்டாம் நில்லுங்கள்... இதோ பிரபஞ்சம் முடியப்போகிறது என எச்சரிக்க முடியுமா? அங்கு யாராவது உண்டா? இல்லவே இல்லை. எல்லையே இல்லையே.. இது முடிவற்ற வெளி...
அதுமட்டுமா நம் சூரியக்குடும்பம், பால்வழி மண்டலம், நம் பிரபஞ்சம் எல்லாம் தொடர்ந்து ஓரிடத்தில் நில்லாமல் நகர்ந்து நகர்ந்து விரிந்து போய்க்கொண்டே முடிவில்லா பயணத்தை நீட்டிக்கொண்டே இருக்கின்றன. நீங்கள் நேற்று இருந்த இடத்தில் இன்றில்லை நண்பா! நேற்று என்ன ஒரு மணி நேரத்திற்கு முன்பு இருந்த இடத்தில் கூட இப்போது நீங்கள் இல்லையே! சுமார் 8,00,000 கி.மீ தூரம் நகர்ந்திருக்கீறீர்களே. பின் என்ன இது, என்ன இங்க இருக்கிறது, இது என் ஊர், இது என் வீடு, இது என் மாநிலம் என்பதெல்லாம் எவ்வளவு நிஜமானது? போலியானது தானே! நிலம் நிற்கிறதா, கடல் நிற்கிறதா, யார் நிற்கின்றனர் இந்த பிரபஞ்சத்தில்? எல்லாமே எப்போதுமே ஓடிக்கொண்டே நிற்க நேரமின்றி ஓடிக்கொண்டே இருக்கிறோம்.
நன்றி: பேரா.சோ.மோகனா
Saturday, April 24, 2010
லைரிட்.. விண்கற்கள்.. பொழிவு ..!!
நாம், நமது நாட்டின் முக்கிய தினங்கள் என சுதந்திரதினம், குடியரசு தினம் ஆகியவற்றைக் கொண்டாடுகிறோம். அதுபோலவே ஐக்கியநாடுகள் சபை, யுனஸ்கோ, உலக சுகாதார நிறுவனம், அறிவியலாளர்கள், அரசு அமைப்புகள், சில தன்னார்வ அமைப்புகள், சர்வதேச தினங்கள் பலவற்றை அறிவித்துள்ளன. அதன் முக்கியத்துவம் கருதி, மக்களிடையே விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்யவும், அதனால் பயனும், மகிழ்வும் பகிர்ந்தளிக்கவும், இந்த தினங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன. அவைகளுள் முக்கியமானவை பிப்ரவரி 28 அறிவியல் தினம், மார்ச் 8 உலக மகளிர் தினம், மார்ச் 15 -உலக ஊனமுற்றோர் தினம், மார்ச் 21- உலக வனதினம், இன ஒழிப்புதினம், மார்ச் 22 - உலக நீர்தினம், மார்ச் 23 உலக வானிலை தினம் போன்றவை. அது போலவே ஏப்ரலிலும் ஏப்ரல் 1- உலக முட்டாள்கள் தினம், ஏப்ரல்-7 உலக சுகாதாரதினம், ஏப்ரல் 21- உலக வானியல் தினம், ஏப்ரல் 22- உலக புவிதினம், ஏப்ரல் - 23 உலக புத்தக தினமாகும்.
இதற்கான சிறப்பு நிகழ்வுகளை அரசு, கல்வி நிறுவனங்கள், தன்னார்வ இயக்கங்கள், தனி நபர்களும் நடத்துகின்றனர். ஏப்ரல் முதல் நாளில்தான் வணிகர்கள் அனைவரும் புதுக்கணக்கைத் துவங்குகின்றனர். ஏப்ரல் மாதம் என்பது வசந்தத்தின் துவக்கம். நம்ம கோடை காலம் என்பதே வசந்தமாகும்.
ஏப்ரல் 21- உலக வானவியல் தினம்
நாம் அனைவரும், விரும்பியோ, விரும்பாமலோ, வானையும், வானில் வலம் வரும் சூரியன், சந்திரன், விண்மீன்கள், வான்மீன்கள், விண்கற்கள் எரிதல் போன்றவற்றைப் பார்க்கிறோம். சிலர் பார்த்து ரசிக்கின்றனர்; சிலர் அதன் வருகைகளைப் பதிவு செய்து, பண்ணங்கள், வடிவங்கள் சோதனை செய்து, மகிழ்கின்றனர். இதுதான் வானவியல் என்பது.
அனைவரும் பூமி வினாடிக்கு 30 கி.மீ. வேகத்தில் சூரியனைச் சுற்றி வருகிறது. அதுமட்டுமா- பிளாஸ்மா பொருளாலான நம் சூரிய விண்மீனும், தன் கோள்கள், வால்மீன்கள் என குடும்ப சமேதராய், தன் தாய்வீடான பால்வழி மண்டலத்தை சுமாராக வினாடிக்கு 250 கி.மீ. வேகத்தில் வட்டமடிக்கிறது. பால்வழி மண்டலமும் வினாடிக்கு 370 கி.மீ வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது. நாம் அனைவரும் உட்கார்ந்து இருந்தாலும், வினாடிக்கு 280 கி.மீ வேகத்தில் ஆடாமல் அசையாமல் சொகுசு ரங்கராட்டினத்தில் நகர்ந்து கொண்டே இருக்கிறோம். இப்படிப்பட்ட ஆச்சரியமான இயற்கை வானியல் நிகழ்வுகளை சாதாரண மக்களிடையே சொல்வதற்காக உருவான முக்கிய நாள்தான் உலக வானியல் தினம்.
வானியல் நிகழ்வுகளை, அதன் வியப்பை அடித்தட்டு பாமர மக்களிடம் பரப்பி, பகிர்ந்து, பங்குகொள்ள உருவாக்கப்பட்டதுதான் சர்வதேச வானியல் தினம். இது 1973-முதல் கொண்டாடப்படுகிறது. ஏப்ரல் 15ம் நாளுக்குப் பிறகு வரும், வளர்பிறையின் 4வது நிலவு நாளில் இந்த வானியல் தினம் அனுசரிக்கப்படுகிறது. இவ்வாண்டு 2010ல் ஏப்ரல் 21-தான் உலக/சர்வதேச வானியல் தினம். ஏப்ரல் மாதம் உலக வானியல் மாதமாக கொண்டாடப்படுகிறது.
வானியல் தினம்/வானியல் மாதத்தில் அனைவரும் அனுபவம் இன்றியும், கருவிகள் இன்றியும், வெறும் கண்ணால் பார்த்தே வானியல் பொருட்கள் நகர்வினைக் கண்டு களிக்கலாம். ஒளிமாசு குறைவான பொது இடங்களில், கிராமத்தின் வயல் வெளிகள், பூங்காக்களில் மக்களும், மாணவர்களும், குழந்தைகளும் ஒன்றுகூடி இதனைக் கொண்டாட வேண்டும். சூரியன், விண்மீன்கள் தினமும் உதிக்கும் நேரம் பார்க்கலாம், அது பற்றி பேசலாம்.
லைரிட்.. விண்கற்கள்.. பொழிவு ..!! ஏப்ரல் 21 & 22..!!!
lyra_finderவிண்கற்கள் பொழிவைப் பார்ப்பது என்பது மிகவும் எளிதான ஒன்றுதான். யார் வேண்டுமானாலும் இரவில் வீட்டின் பின்புறம் அமர்ந்து, நிலவற்ற வானைப் பாருங்கள். வானில் பளிச்சென்று தீக்குச்சி எரிவது போல் எரிந்து கிழே விழுவதுதான் விண்கல் எறிதல் /பொழிவு. இதனை நம் வழக்கில் எரிநட்சத்திரம் என்று அழைக்கிறோம். ஆனால் இது உண்மையில் விண்மீன் அல்ல; விண்கல் நமது வளிமண்டலத்தில் மோதி எரிந்து விழுகிறது. இப்படிப்பட்ட விண்கற்கள் பொழிவுகளை பதிவு செய்வதற்காக ஒரு அமைப்பு சர்வதேச அளவில் உள்ளது. அதன் பெயர் சர்வதேச விண்கற்கள் பொழிவு நிறுவனம்.
ஒவ்வொரு ஆண்டும் வருடத்தில் பலமுறை நம் பூமி மீது விண்கற்கள் பொழிவு நடந்துகொண்டு தான் இருக்கிறது. பூமியை வலம்வந்து விட்டுச்சென்ற அதன் தூசுதும்புகள் பூமியின் வளிமண்டலம் மீது மோதுவதால் ஏற்படும் விளைவுதான் இந்த விண்கற்கள் பொழிவு. ஆனால் இது ஒரு குறிப்பிட்ட விண்மீன் தொகுதியின் கீழே காணப்படும்போது, அதனை அந்த விண்மீன் தொகுதியின் விண்கற்கள் பொழிவு என்றே பெயர் சூட்டப்படுகிறது. இந்த மாதத்தில் வரும் விண்கற்கள் பொழிவின் பெயர் லைரிட் விண்கற்கள் பொழிவு(Lyrid meteor shower) என்பதாகும். இது இம்மாதம் 16-30 தேதிகளில் காணப்பட்டாலும், இதனை தெளிவாக , நன்றாக, நிறைய எண்ணிக்கையில், 21-22 தேதிகளில்தான் காணமுடியும். பொதுவாகவே விடியற்காலை பொழுதுகளில்தான் இதனை நன்றாக பார்க்கலாம். எனவே, 21 இரவு 10 மணிக்கு மேலிருந்து 22 விடிகாலை 4 மணி வரை கண்டு மகிழலாம்.
லைரிட் விண்கற்கள்
பொழிவு மணிக்கு சுமாராக 15-20 வரை காணப்படும். குறிப்பிட்ட நாளுக்கு முன்னும் பின்னும் விண்கற்கள் பொழிவின் எண்ணிக்கை குறைவாக இருக்கும்.
லைரிட் விண்மீன் தொகுதி என்பது வானில் வடக்கிலிருந்து கொஞ்சம் தள்ளி சற்று கிழக்காக சுமார் 50 டிகிரி /பாகை உயரத்தில் தெரியும்.இதனை இரவு 8 மணிக்கு மேல்தான் பார்க்க முடியும். அந்த விண்மீன் கூட்டத்தில் தெரியும் விண்மீன்களில் மிகவும் பளிச்சென தெரியும் விண்மீன் தான் "வேகா". அது வானில் தெரியும் பிரகாசமான 20 விண்மீன்களில், 5வது பிரகாசமான விண்மீன். யாருடைய கண்களிருந்தும் அது தப்பவே முடியாது. அவ்வளவு பளிச்சென இருக்கும். இது நம் சூரியனைவிட 3 மடங்கு பெரியது. இது சூரியனை விட பிரகாசமான, இளநீல வெண்மை ஒளி வீசும் விண்மீன். இது இன்னும் 14,000 ஆண்டுகளுக்குப் பிறகு, வடதுருவ விண்மீன் ஆக மாறப்போகிறது. ஏன் தெரியுமா? நாம் பூமியின் சுற்று வேகத்தால் வடதுருவம் லேசாக தலை சாய்ந்த பம்பரம் போல் வேகா விண்மீன் இருக்கும் பக்கமே திரும்பிவிடுவதால் வேகாவே துருவ விண்மீன் ஆகிவிடும். இது ஒரு தொடர்கதைதான்.
வேகாவுக்கு வடக்கிலும் பளிச்சென தெரியும் இரண்டு விண்மீன்கள்தான் வடக்கு கழுகின் டெனாப்பும், மேற்கே தெரியும் கும்பம் விண்மீன் தொகுதியின் திருவோணமும். இந்த முன்று விண்மீன்களும் சேர்ந்துதான் கோடை கால முக்கோணம் ஏற்படுகிறது. முதல் முதல் புகைப்படமாய் எடுக்கப்பட்ட விண்மீன் வேகாதான். எடுக்கப்பட்ட ஆண்டு ஜூலை 16, 1850.
இதற்கான சிறப்பு நிகழ்வுகளை அரசு, கல்வி நிறுவனங்கள், தன்னார்வ இயக்கங்கள், தனி நபர்களும் நடத்துகின்றனர். ஏப்ரல் முதல் நாளில்தான் வணிகர்கள் அனைவரும் புதுக்கணக்கைத் துவங்குகின்றனர். ஏப்ரல் மாதம் என்பது வசந்தத்தின் துவக்கம். நம்ம கோடை காலம் என்பதே வசந்தமாகும்.
ஏப்ரல் 21- உலக வானவியல் தினம்
நாம் அனைவரும், விரும்பியோ, விரும்பாமலோ, வானையும், வானில் வலம் வரும் சூரியன், சந்திரன், விண்மீன்கள், வான்மீன்கள், விண்கற்கள் எரிதல் போன்றவற்றைப் பார்க்கிறோம். சிலர் பார்த்து ரசிக்கின்றனர்; சிலர் அதன் வருகைகளைப் பதிவு செய்து, பண்ணங்கள், வடிவங்கள் சோதனை செய்து, மகிழ்கின்றனர். இதுதான் வானவியல் என்பது.
அனைவரும் பூமி வினாடிக்கு 30 கி.மீ. வேகத்தில் சூரியனைச் சுற்றி வருகிறது. அதுமட்டுமா- பிளாஸ்மா பொருளாலான நம் சூரிய விண்மீனும், தன் கோள்கள், வால்மீன்கள் என குடும்ப சமேதராய், தன் தாய்வீடான பால்வழி மண்டலத்தை சுமாராக வினாடிக்கு 250 கி.மீ. வேகத்தில் வட்டமடிக்கிறது. பால்வழி மண்டலமும் வினாடிக்கு 370 கி.மீ வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது. நாம் அனைவரும் உட்கார்ந்து இருந்தாலும், வினாடிக்கு 280 கி.மீ வேகத்தில் ஆடாமல் அசையாமல் சொகுசு ரங்கராட்டினத்தில் நகர்ந்து கொண்டே இருக்கிறோம். இப்படிப்பட்ட ஆச்சரியமான இயற்கை வானியல் நிகழ்வுகளை சாதாரண மக்களிடையே சொல்வதற்காக உருவான முக்கிய நாள்தான் உலக வானியல் தினம்.
வானியல் நிகழ்வுகளை, அதன் வியப்பை அடித்தட்டு பாமர மக்களிடம் பரப்பி, பகிர்ந்து, பங்குகொள்ள உருவாக்கப்பட்டதுதான் சர்வதேச வானியல் தினம். இது 1973-முதல் கொண்டாடப்படுகிறது. ஏப்ரல் 15ம் நாளுக்குப் பிறகு வரும், வளர்பிறையின் 4வது நிலவு நாளில் இந்த வானியல் தினம் அனுசரிக்கப்படுகிறது. இவ்வாண்டு 2010ல் ஏப்ரல் 21-தான் உலக/சர்வதேச வானியல் தினம். ஏப்ரல் மாதம் உலக வானியல் மாதமாக கொண்டாடப்படுகிறது.
வானியல் தினம்/வானியல் மாதத்தில் அனைவரும் அனுபவம் இன்றியும், கருவிகள் இன்றியும், வெறும் கண்ணால் பார்த்தே வானியல் பொருட்கள் நகர்வினைக் கண்டு களிக்கலாம். ஒளிமாசு குறைவான பொது இடங்களில், கிராமத்தின் வயல் வெளிகள், பூங்காக்களில் மக்களும், மாணவர்களும், குழந்தைகளும் ஒன்றுகூடி இதனைக் கொண்டாட வேண்டும். சூரியன், விண்மீன்கள் தினமும் உதிக்கும் நேரம் பார்க்கலாம், அது பற்றி பேசலாம்.
லைரிட்.. விண்கற்கள்.. பொழிவு ..!! ஏப்ரல் 21 & 22..!!!
lyra_finderவிண்கற்கள் பொழிவைப் பார்ப்பது என்பது மிகவும் எளிதான ஒன்றுதான். யார் வேண்டுமானாலும் இரவில் வீட்டின் பின்புறம் அமர்ந்து, நிலவற்ற வானைப் பாருங்கள். வானில் பளிச்சென்று தீக்குச்சி எரிவது போல் எரிந்து கிழே விழுவதுதான் விண்கல் எறிதல் /பொழிவு. இதனை நம் வழக்கில் எரிநட்சத்திரம் என்று அழைக்கிறோம். ஆனால் இது உண்மையில் விண்மீன் அல்ல; விண்கல் நமது வளிமண்டலத்தில் மோதி எரிந்து விழுகிறது. இப்படிப்பட்ட விண்கற்கள் பொழிவுகளை பதிவு செய்வதற்காக ஒரு அமைப்பு சர்வதேச அளவில் உள்ளது. அதன் பெயர் சர்வதேச விண்கற்கள் பொழிவு நிறுவனம்.
ஒவ்வொரு ஆண்டும் வருடத்தில் பலமுறை நம் பூமி மீது விண்கற்கள் பொழிவு நடந்துகொண்டு தான் இருக்கிறது. பூமியை வலம்வந்து விட்டுச்சென்ற அதன் தூசுதும்புகள் பூமியின் வளிமண்டலம் மீது மோதுவதால் ஏற்படும் விளைவுதான் இந்த விண்கற்கள் பொழிவு. ஆனால் இது ஒரு குறிப்பிட்ட விண்மீன் தொகுதியின் கீழே காணப்படும்போது, அதனை அந்த விண்மீன் தொகுதியின் விண்கற்கள் பொழிவு என்றே பெயர் சூட்டப்படுகிறது. இந்த மாதத்தில் வரும் விண்கற்கள் பொழிவின் பெயர் லைரிட் விண்கற்கள் பொழிவு(Lyrid meteor shower) என்பதாகும். இது இம்மாதம் 16-30 தேதிகளில் காணப்பட்டாலும், இதனை தெளிவாக , நன்றாக, நிறைய எண்ணிக்கையில், 21-22 தேதிகளில்தான் காணமுடியும். பொதுவாகவே விடியற்காலை பொழுதுகளில்தான் இதனை நன்றாக பார்க்கலாம். எனவே, 21 இரவு 10 மணிக்கு மேலிருந்து 22 விடிகாலை 4 மணி வரை கண்டு மகிழலாம்.
லைரிட் விண்கற்கள்
பொழிவு மணிக்கு சுமாராக 15-20 வரை காணப்படும். குறிப்பிட்ட நாளுக்கு முன்னும் பின்னும் விண்கற்கள் பொழிவின் எண்ணிக்கை குறைவாக இருக்கும்.
லைரிட் விண்மீன் தொகுதி என்பது வானில் வடக்கிலிருந்து கொஞ்சம் தள்ளி சற்று கிழக்காக சுமார் 50 டிகிரி /பாகை உயரத்தில் தெரியும்.இதனை இரவு 8 மணிக்கு மேல்தான் பார்க்க முடியும். அந்த விண்மீன் கூட்டத்தில் தெரியும் விண்மீன்களில் மிகவும் பளிச்சென தெரியும் விண்மீன் தான் "வேகா". அது வானில் தெரியும் பிரகாசமான 20 விண்மீன்களில், 5வது பிரகாசமான விண்மீன். யாருடைய கண்களிருந்தும் அது தப்பவே முடியாது. அவ்வளவு பளிச்சென இருக்கும். இது நம் சூரியனைவிட 3 மடங்கு பெரியது. இது சூரியனை விட பிரகாசமான, இளநீல வெண்மை ஒளி வீசும் விண்மீன். இது இன்னும் 14,000 ஆண்டுகளுக்குப் பிறகு, வடதுருவ விண்மீன் ஆக மாறப்போகிறது. ஏன் தெரியுமா? நாம் பூமியின் சுற்று வேகத்தால் வடதுருவம் லேசாக தலை சாய்ந்த பம்பரம் போல் வேகா விண்மீன் இருக்கும் பக்கமே திரும்பிவிடுவதால் வேகாவே துருவ விண்மீன் ஆகிவிடும். இது ஒரு தொடர்கதைதான்.
வேகாவுக்கு வடக்கிலும் பளிச்சென தெரியும் இரண்டு விண்மீன்கள்தான் வடக்கு கழுகின் டெனாப்பும், மேற்கே தெரியும் கும்பம் விண்மீன் தொகுதியின் திருவோணமும். இந்த முன்று விண்மீன்களும் சேர்ந்துதான் கோடை கால முக்கோணம் ஏற்படுகிறது. முதல் முதல் புகைப்படமாய் எடுக்கப்பட்ட விண்மீன் வேகாதான். எடுக்கப்பட்ட ஆண்டு ஜூலை 16, 1850.
Wednesday, April 21, 2010
ஏப்ரல் 21- உலக வானவியல் தினம்
நாம், நமது நாட்டின் முக்கிய தினங்கள் என சுதந்திரதினம், குடியரசு தினம் ஆகியவற்றைக் கொண்டாடுகிறோம். அதுபோலவே ஐக்கியநாடுகள் சபை, யுனஸ்கோ, உலக சுகாதார நிறுவனம், அறிவியலாளர்கள், அரசு அமைப்புகள், சில தன்னார்வ அமைப்புகள், சர்வதேச தினங்கள் பலவற்றை அறிவித்துள்ளன. அதன் முக்கியத்துவம் கருதி, மக்களிடையே விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்யவும், அதனால் பயனும், மகிழ்வும் பகிர்ந்தளிக்கவும், இந்த தினங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன. அவைகளுள் முக்கியமானவை பிப்ரவரி 28 அறிவியல் தினம், மார்ச் 8 உலக மகளிர் தினம், மார்ச் 15 -உலக ஊனமுற்றோர் தினம், மார்ச் 21- உலக வனதினம், இன ஒழிப்புதினம், மார்ச் 22 - உலக நீர்தினம், மார்ச் 23 உலக வானிலை தினம் போன்றவை. அது போலவே ஏப்ரலிலும் ஏப்ரல் 1- உலக முட்டாள்கள் தினம், ஏப்ரல்-7 உலக சுகாதாரதினம், ஏப்ரல் 21- உலக வானியல் தினம், ஏப்ரல் 22- உலக புவிதினம், ஏப்ரல் - 23 உலக புத்தக தினமாகும்.
இதற்கான சிறப்பு நிகழ்வுகளை அரசு, கல்வி நிறுவனங்கள், தன்னார்வ இயக்கங்கள், தனி நபர்களும் நடத்துகின்றனர். ஏப்ரல் முதல் நாளில்தான் வணிகர்கள் அனைவரும் புதுக்கணக்கைத் துவங்குகின்றனர். ஏப்ரல் மாதம் என்பது வசந்தத்தின் துவக்கம். நம்ம கோடை காலம் என்பதே வசந்தமாகும்.
ஏப்ரல் 21- உலக வானவியல் தினம்
நாம் அனைவரும், விரும்பியோ, விரும்பாமலோ, வானையும், வானில் வலம் வரும் சூரியன், சந்திரன், விண்மீன்கள், வான்மீன்கள், விண்கற்கள் எரிதல் போன்றவற்றைப் பார்க்கிறோம். சிலர் பார்த்து ரசிக்கின்றனர்; சிலர் அதன் வருகைகளைப் பதிவு செய்து, பண்ணங்கள், வடிவங்கள் சோதனை செய்து, மகிழ்கின்றனர். இதுதான் வானவியல் என்பது.
அனைவரும் பூமி வினாடிக்கு 30 கி.மீ. வேகத்தில் சூரியனைச் சுற்றி வருகிறது. அதுமட்டுமா- பிளாஸ்மா பொருளாலான நம் சூரிய விண்மீனும், தன் கோள்கள், வால்மீன்கள் என குடும்ப சமேதராய், தன் தாய்வீடான பால்வழி மண்டலத்தை சுமாராக வினாடிக்கு 250 கி.மீ. வேகத்தில் வட்டமடிக்கிறது. பால்வழி மண்டலமும் வினாடிக்கு 370 கி.மீ வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது. நாம் அனைவரும் உட்கார்ந்து இருந்தாலும், வினாடிக்கு 280 கி.மீ வேகத்தில் ஆடாமல் அசையாமல் சொகுசு ரங்கராட்டினத்தில் நகர்ந்து கொண்டே இருக்கிறோம். இப்படிப்பட்ட ஆச்சரியமான இயற்கை வானியல் நிகழ்வுகளை சாதாரண மக்களிடையே சொல்வதற்காக உருவான முக்கிய நாள்தான் உலக வானியல் தினம்.
வானியல் நிகழ்வுகளை, அதன் வியப்பை அடித்தட்டு பாமர மக்களிடம் பரப்பி, பகிர்ந்து, பங்குகொள்ள உருவாக்கப்பட்டதுதான் சர்வதேச வானியல் தினம். இது 1973-முதல் கொண்டாடப்படுகிறது. ஏப்ரல் 15ம் நாளுக்குப் பிறகு வரும், வளர்பிறையின் 4வது நிலவு நாளில் இந்த வானியல் தினம் அனுசரிக்கப்படுகிறது. இவ்வாண்டு 2010ல் ஏப்ரல் 21-தான் உலக/சர்வதேச வானியல் தினம். ஏப்ரல் மாதம் உலக வானியல் மாதமாக கொண்டாடப்படுகிறது.
வானியல் தினம்/வானியல் மாதத்தில் அனைவரும் அனுபவம் இன்றியும், கருவிகள் இன்றியும், வெறும் கண்ணால் பார்த்தே வானியல் பொருட்கள் நகர்வினைக் கண்டு களிக்கலாம். ஒளிமாசு குறைவான பொது இடங்களில், கிராமத்தின் வயல் வெளிகள், பூங்காக்களில் மக்களும், மாணவர்களும், குழந்தைகளும் ஒன்றுகூடி இதனைக் கொண்டாட வேண்டும். சூரியன், விண்மீன்கள் தினமும் உதிக்கும் நேரம் பார்க்கலாம், அது பற்றி பேசலாம். ஏப்ரல் 16-30 வரை இரவில் வடகிழக்கு வானில், சுமார் 50 பாகை உயரத்தில் லைரா என்ற விண்மீன் கூட்டத்தில் இருந்து விண்கற்கள் பொழிவு நிகழ உள்ளது. இது இரவு வானின் வண்ணமயமான வாணவேடிக்கை. இதனை ஏப்ரல் 16லிருந்தே காணலாம் என்றாலும் ஏப்ரல் 21ம் தேதிதான் சிறப்பாகப் பார்க்கலாம். அன்றைய தினம் இரவு 10 மணியிலிருந்து 22ம் நாள் விடிகாலை 3 மணி வரை மணிக்கு 20 என்ற எண்ணிக்கையில் கொட்டும்.
இதற்கான சிறப்பு நிகழ்வுகளை அரசு, கல்வி நிறுவனங்கள், தன்னார்வ இயக்கங்கள், தனி நபர்களும் நடத்துகின்றனர். ஏப்ரல் முதல் நாளில்தான் வணிகர்கள் அனைவரும் புதுக்கணக்கைத் துவங்குகின்றனர். ஏப்ரல் மாதம் என்பது வசந்தத்தின் துவக்கம். நம்ம கோடை காலம் என்பதே வசந்தமாகும்.
ஏப்ரல் 21- உலக வானவியல் தினம்
நாம் அனைவரும், விரும்பியோ, விரும்பாமலோ, வானையும், வானில் வலம் வரும் சூரியன், சந்திரன், விண்மீன்கள், வான்மீன்கள், விண்கற்கள் எரிதல் போன்றவற்றைப் பார்க்கிறோம். சிலர் பார்த்து ரசிக்கின்றனர்; சிலர் அதன் வருகைகளைப் பதிவு செய்து, பண்ணங்கள், வடிவங்கள் சோதனை செய்து, மகிழ்கின்றனர். இதுதான் வானவியல் என்பது.
அனைவரும் பூமி வினாடிக்கு 30 கி.மீ. வேகத்தில் சூரியனைச் சுற்றி வருகிறது. அதுமட்டுமா- பிளாஸ்மா பொருளாலான நம் சூரிய விண்மீனும், தன் கோள்கள், வால்மீன்கள் என குடும்ப சமேதராய், தன் தாய்வீடான பால்வழி மண்டலத்தை சுமாராக வினாடிக்கு 250 கி.மீ. வேகத்தில் வட்டமடிக்கிறது. பால்வழி மண்டலமும் வினாடிக்கு 370 கி.மீ வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது. நாம் அனைவரும் உட்கார்ந்து இருந்தாலும், வினாடிக்கு 280 கி.மீ வேகத்தில் ஆடாமல் அசையாமல் சொகுசு ரங்கராட்டினத்தில் நகர்ந்து கொண்டே இருக்கிறோம். இப்படிப்பட்ட ஆச்சரியமான இயற்கை வானியல் நிகழ்வுகளை சாதாரண மக்களிடையே சொல்வதற்காக உருவான முக்கிய நாள்தான் உலக வானியல் தினம்.
வானியல் நிகழ்வுகளை, அதன் வியப்பை அடித்தட்டு பாமர மக்களிடம் பரப்பி, பகிர்ந்து, பங்குகொள்ள உருவாக்கப்பட்டதுதான் சர்வதேச வானியல் தினம். இது 1973-முதல் கொண்டாடப்படுகிறது. ஏப்ரல் 15ம் நாளுக்குப் பிறகு வரும், வளர்பிறையின் 4வது நிலவு நாளில் இந்த வானியல் தினம் அனுசரிக்கப்படுகிறது. இவ்வாண்டு 2010ல் ஏப்ரல் 21-தான் உலக/சர்வதேச வானியல் தினம். ஏப்ரல் மாதம் உலக வானியல் மாதமாக கொண்டாடப்படுகிறது.
வானியல் தினம்/வானியல் மாதத்தில் அனைவரும் அனுபவம் இன்றியும், கருவிகள் இன்றியும், வெறும் கண்ணால் பார்த்தே வானியல் பொருட்கள் நகர்வினைக் கண்டு களிக்கலாம். ஒளிமாசு குறைவான பொது இடங்களில், கிராமத்தின் வயல் வெளிகள், பூங்காக்களில் மக்களும், மாணவர்களும், குழந்தைகளும் ஒன்றுகூடி இதனைக் கொண்டாட வேண்டும். சூரியன், விண்மீன்கள் தினமும் உதிக்கும் நேரம் பார்க்கலாம், அது பற்றி பேசலாம். ஏப்ரல் 16-30 வரை இரவில் வடகிழக்கு வானில், சுமார் 50 பாகை உயரத்தில் லைரா என்ற விண்மீன் கூட்டத்தில் இருந்து விண்கற்கள் பொழிவு நிகழ உள்ளது. இது இரவு வானின் வண்ணமயமான வாணவேடிக்கை. இதனை ஏப்ரல் 16லிருந்தே காணலாம் என்றாலும் ஏப்ரல் 21ம் தேதிதான் சிறப்பாகப் பார்க்கலாம். அன்றைய தினம் இரவு 10 மணியிலிருந்து 22ம் நாள் விடிகாலை 3 மணி வரை மணிக்கு 20 என்ற எண்ணிக்கையில் கொட்டும்.
Subscribe to:
Posts (Atom)