Showing posts with label புவி வெப்பமடைதல். Show all posts
Showing posts with label புவி வெப்பமடைதல். Show all posts

Friday, May 7, 2010

மூலபூஜ்ய வெப்பநிலை

வெப்பநிலையை அளக்க சென்டிகிரேட், ஃபாரன்ஹீட் என்ற இரண்டு அளவை முறைகள் இருப்பது நமக்குத் தெரியும். இந்த அளவை முறைகளில் ஐஸ் உருகும் வெப்பநிலை - அதாவது நீர் உறையும் வெப்பநிலை - 0 டிகிரி சென்டிகிரேட் (32 டிகிரி ஃபாரன்ஹீட்) என்றும், நீரின் கொதிநிலை 100 டிகிரி சென் டிகிரேட் (212 டிகிரி ஃபாரன் ஹீட்) என்றும் வரையறை செய்யப்பட்டுள்ளன. ஐஸின் உருகுநிலைக்குக் கீழே உள்ள வெப்பநிலையை -10உ, -20உ ... எனக் குறிப்பது வழக்கம். எந்தவொரு பொருளின் வெப் பநிலையையும் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குக் கீழே கொண்டு செல்ல முடியாது. எந்த வெப்ப நிலைக்குக் கீழே கொண்டு செல்ல முடியாதோ அதுவே மூல பூஜ்ய வெப்பநிலை எனப்படுகிறது. இதைக் கண்டுபிடித்தவர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இயற்பிய லாளர் கெல்வின் வில்லியம் தாம்சன் என்பதால், அது அவர் பெயரில் 00மு (கெல் வின்) எனக் குறிப்பிடப்படு கிறது. இது -2730 சென்டி கிரேட் வெப்பநிலைக்குச் சமம். இந்த வெப்பநிலையில் ஒரு வாயுவின் கனஅளவு பூஜ்யமாக வேண்டும் ! கன அளவு எப்படி பூஜ்யமாக முடியும்? அதனால் நடைமுறை யில் இந்த வெப்பநிலையை எட்டவே முடியாது. அதே போல் ஒரு வாயுவின் மூலக் கூறுகளின் இயக்கம் 00மு வெப்பநிலையில் முற்றிலும் நின்றுபோக வேண்டும். இது வும் நடைமுறையில் சாத்திய மில்லை. உண்மையில் எல்லா வாயுக்களும் 00மு-ஐ நெருங் குவதற்குள் முதலில் திரவங் களாகவும் பின்னர் திடப் பொருட்களாகவும் மாறிவிடும்.

கெல்வின் அளவு முறை பொருட்களின் மிகக் குறைந்த வெப்பநிலையைக் குறிக்கப் பயன்படுகிறது. உதாரண மாக, ஹைட்ரஜன் வாயு திரவ மாக உறையும் வெப்பநிலை 200மு. ஹீலியத்தின் உறை நிலை 4.20மு. ஒரு பொரு ளின் குணாதிசயங்கள் மிகக் குறைந்த வெப்பநிலையில் எப்படி மாறும் என்பது பற்றி ஆய்வு நடத்த திரவநிலையில் உள்ள ஹைட்ரஜன், ஹீலியம் போன்றவை அப்பொருளைச் சூழ்ந்திருக்குமாறு ஏற்பாடு செய்து பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.

ஒரு வாளியில் அல்லது குடத்தில் குழாய்த் தண்ணீர் விழும்போது ஒலி மாறிக் கொண்டே வருவது ஏன்?

ஒரு வாளியில் அல்லது குடத்தில் குழாய்த் தண்ணீர் விழும்போது தட்டையாகத் தொடங்கும் ஒலி தண்ணீர் நிரம்ப நிரம்ப கிறீச்சென மாறுவதைப் பார்த்திருக்கிறோம். வீணையின் தந்திகள், புல்லாங்குழலில் உள்ள காற்று, மத்தளத்தில் இழுத்துக் கட்டப்பட்டுள்ள தோல் போன்ற பொருட்கள் வேகமாக அதிரும்போது உண்டாகும் ஒலி அலைகள் நம் செவிப்பறையில் விழுந்ததும் நாம் அந்த ஒலியைக் கேட்கிறோம். குடத்தில் தண்ணீர் விழும்போது நீர்ப்பரப்பிற்கு மேல் காற்று உள்ள பகுதி அதிர்வதால் உருவாகும் ஒலியையே நாம் கேட்கிறோம். முதலில் அப்பகுதியின் நீளம் அதிகமாக இருக்கும். தண்ணீர் நிரம்ப நிரம்ப, அந்த நீளம் குறைந்துகொண்டே வரும். நீளம் அதிகமாக இருக்கும்போது ஒலியின் அதிர் வெண் குறைவாக இருக்கும். நீளம் குறையும்போது ஒலி யின் அதிர்வெண் அதிகரிக்கும். ஒலியின் அதிர்வெண் அதிகரிக்க அதிகரிக்க ஒலியின் கிறீச்சுத்தன்மை அதிகரித்துக் கொண்டே வரும். ஒலியின் அதிர் வெண் நீர்ப்பரப்பிற்கு மேல் உள்ள காற்றுப் பகுதியின் நீளத்தைப் பொறுத்து மாறுவதாலேயே குடத்தில் குழாய்த் தண்ணீர் விழும்போது ஒலி மாறிக் கொண்டே வருகிறது.

பூமியின் மேற்பரப்பிலிருந்து மேலே செல்லச் செல்ல சூரியனுக்கு அருகில் செல்கிறோம். கடல் மட்டத்தைவிட மலை உச்சியில் வெப்பநிலை அதிகமாக அல்லவா இருக்க வேண்டும்? ஆனால் குறைவாக இருக்கிறதே, அது எப்படி?

காற்று சூரியவெப்பத்தை எளிதில் உள் வாங்கக் கூடிய பொருள் அல்ல. ஆனால் பூமி சூரியவெப்பத்தை அப்ப டியே உள்வாங்கிக் கொள்கிறது. பூமியின் மேற்பரப்பு, பூமியை ஒட் டியுள்ள காற்று மண்ட லத்தை சூடாக்குகிறது. இப்படி சூடான காற்றின் அடர்த்தி குறைகிறது. அடர்த்தி குறைந்த காற்று மேலே செல்கிறது. (ஒரு குவளையில் தண்ணீரும் மண்ணெண்ணெய்யும் இருந்தால் தண்ணீருக்கு மேலே மண்ணெண்ணெய் மிதக்குமே அது மாதிரி. இங்கே தண்ணீ ரின் அடர்த்தியைவிட மண்ணெண்ணெய்யின் அடர்த்தி குறைவு என்பதால் இப்படி நிகழ்கிறது).

காற்று மண்டலத்தின் அழுத்தம் மேலே செல்லச் செல்லக் குறைகிறது. அதனால் அடர்த்தி குறைந்த காற்று தரையி லிருந்து மேலே எழும்பும்போது அது விரிவடைகிறது. சுற்றி லும் உள்ள காற்று மண்டலத்திற்கு எதிராக விரிவடைவதற்கு அது சக்தியைச் செலவிட வேண்டும். அந்த சக்தியை அது தன்னிடமிருந்தே எடுத்துக் கொள்கிறது. ஆகவே, குளிர்ச்சி யடைகிறது. இதுதான் மலை உச்சியில் வெப்பநிலை குறை வாக இருப்பதற்குக் காரணம்.

nanri: Theekkathir

Tuesday, February 17, 2009

கார்பன் கிரகிப்பானாகச் செயல்படும் நெல்வயல்கள்


மேற்கத்திய விஞ்ஞானிகளின் மோசடி அம்பலம்


riceland நெல்வயல்கள் மீதேனை வெளியிடும் என்று பணக்கார நாடுகள் முன்வைத்த குற்றச்சாட்டு பொய் என்கிறது இந்திய விஞ்ஞானிகள் புதிதாக மேற்கொண்ட ஓர் ஆராய்ச்சி. புவி வெப்பமடைதலுக்கு பசுமையில்ல வாயுக்களே காரணம். கார்பன் டை ஆக்சைடு, மீதேன், நைட்ரஸ் ஆக்சைடு போன்றவை பசுமையில்ல வாயுக்கள் எனப்படுகின்றன. மனித செயல்பாடுகளே இந்த வாயுக்களை உருவாக்குகின்றன. சர்வதேச பேச்சுவார்த்தைகளில் ஒவ்வொரு முறை பசுமையில்ல வாயுக்களுக்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட வேண்டும் என்று பணக்கார நாடுகளை வலியுறுத்தும்போதும், அவை பதிலுக்கு இந்தியா, சீனாவை கைகாட்டுகின்றன. இங்குள்ள நெல்வயல்களும், கால்நடைகளும் பெருமளவு மீதேனை வெளியிடுவதே முக்கிய காரணம் என்று அவை குற்றஞ்சாட்டுகின்றன. ஆனால் இது எந்த அளவு உண்மை?

நெல்வயல்கள் பெருமளவு மீதேனை உற்பத்தி செய்யும் என்ற நம்பிக்கைக்கு மாறாக, நெல் வயல்களை கார்பன் கிரகிப்பான்களாகச் செயல்படுகின்றன என்ற புதிய ஆராய்ச்சி முடிவை இந்திய விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர். நெல் வயல்கள் வளிமண்டலத்தில் இருந்து கரிம கார்பனை கிரகித்துக் கொண்டு புவி வெப்பமடைதலை குறைக்கின்றன என்று இந்த ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறது.

ஒரு ஹெக்டேரில் நெல் பயிரிடுவதன் மூலம் 5.5 டன் கரிம கார்பன் நிலத்தில் சேகரிக்கப்படுகிறது என்று இந்த ஆராய்ச்சியை நடத்திய ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தின் பிதிஷா மஜும்தார் மற்றும் கொல்கத்தாவிலுள்ள கல்யாணி பல்கலைக்கழகத்தின் விஸ்வபதி மண்டல் தெரிவிக்கின்றனர். ஒரிசா நெல் வயல்களில் சேகரித்த மண்ணில் அவர்கள் சோதனை நடத்தினர்.

நெல்வயல்கள் வளிமண்டலத்தில் பெருமளவு மீதேனை வெளியிடுகின்றன என்றே இதுவரை நம்பப்பட்டு வந்தது. இதற்கு மாறாக, மீதேனை உருவாக்க மண்ணிலிருந்து எடுத்துக் கொள்ளப்படும் கார்பனைவிட பெருமளவு கார்பன் மண்ணில் சேகரமாகிறது. நெல் வயல்கள் மண்ணில் சேகரிக்கும் கார்பனில் வெறும் 2.5-5 சதவிகிதம் மட்டுமே மீதேனாக மாறுகிறது, எஞ்சியது முழுவதும் மண்ணில் சேருகிறது. நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி இருப்பதால் கார்பன் ஆக்சிஜனேற்றம் அடைந்து வெளியேறாமல் மண்ணில் சேகரிக்கப்படுகிறது என்று தெரிய வந்துள்ளது.

''இது உண்மைதான். வயல்கள் உருவாக்கும் மீதேனில் 90 சதவிகிதம் வேரால் கிரகித்துக் கொள்ளப்படுகிறது'' என்கிறார் ஐ.நா. காலநிலை மாற்ற பணித்திட்ட பேரவைக்கான (யு.என்.எப்.சி.சி.சி.) இந்தியாவின் தேசிய தொடர்பு அதிகாரி மகாதேஸ்வர சாமி.

''வளரும் நாடுகளில் உள்ள நெல்வயல்களில் இருந்து வெளியாகும் மீதேனின் அளவை மேற்கத்திய விஞ்ஞானிகள் அதிகப்படியாக காட்டிவிட்டார்கள்'' என்று 1998ம் ஆண்டிலேயே வளிமண்டல விஞ்ஞானி ஏ.பி. மித்ரா தெரிவித்திருக்கிறார். நெல்வயல்களில் நடந்துள்ள புதிய ஆராய்ச்சிகளின் அடிப்படையில் காலநிலை மாற்ற பன்னாட்டு அரசுக் குழு (ஐ.பி.சி.சி.), மீதேன் வெளியிடும் அம்சங்கள் எவை என்பதை மறுநிர்ணயம் செய்ய வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

''கொல்கத்தா விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. இந்த ஆராய்ச்சியின் அடிப்படையில் இன்னும் அதிக ஆதாரங்கள் தேவை. வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டைஆக்சைடில் இருந்து நிலத்தில் சேகரமாகும் கார்பனின் அளவை மதிப்பிடுவது தொடர்பாக இன்னும் அதிக ஆராய்ச்சிகள் நடத்த வேண்டும்.

மேலும் கார்பன் தற்காலிகமாக மண்ணில் சேகரமாகலாம். வெயில் காலத்தில் வெப்பநிலை மிக அதிகரிக்கும்போது, அவை ஆக்சிஜனேற்றம் அடைந்து கார்பன் டைஆக்சைடாக வெளியேறலாம். 'தேசிய வேளாண் புதுப்பித்தல் திட்ட'த்தின் கீழ் இதேபோன்று இன்னும் சில ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன'' என்கிறார் லூதியானாவில் உள்ள பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழக பேராசிரியர் பிஜய் சிங்.

எப்படியோ, காலநிலை மாற்ற பேச்சுவார்த்தைகளில் இந்தியாவின் வாதத்தை வலுப்படுத்த புதிய ஆராய்ச்சி உதவும் என்று நம்புவோம்.

நன்றி : ஆதி