Thursday, February 18, 2010

பூமி சூடாவதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள்

பூமி சூடாவதைப் பற்றி உலகம் முழு வதும் விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. அண்மையில், கோபன்ஹேகனில் நடந்த மாநாடு, வளர்ந்த நாடுகளின்- குறிப்பாக அமெரிக்காவின்- பிடிவாதம் காரணமாக பசுங்குடில் வாயுக்கள் வெளியேற்றம் பற்றி தெளிவான இலக்குகள் நிர்ணயிக் கப்படாமலேயே முடிவடைந்தது. வளர்முக நாடுகள் ஒன்றுபட்டு அந்த நாடுகள் மீது நிர்ப்பந்தங்களைக் கொண்டுவந்தால் தான் பூமியும், மக்களும் தப்பிக்க முடியும் என்பது தெளிவு.


பூமி சூடாவதால் ஏற்படும் பல்வேறு பாதிப்புகள் குறித்து அறிவியல் கதிரில் ஏற்கனவே பார்த்திருக்கிறோம். மக்களு டைய உடல்நலத்திற்கு அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் நாம் அறிந்து கொள்ளவேண்டும்.


உலக சுகாதார நிறுவனம் செவ்வி றைச்சி (சநன அநயவ) புற்றுநோய் உருவாகக் காரணமாக இருப்பதால் அதை உட் கொள்ளுவதைக் குறைக்க வேண்டு மெனப் பரிந்துரைக்கிறது. “தொற்றுநோய் கள் பரவும்போது மட்டும் நாம் தடுப் பூசிகளைத் தேடி அங்குமிங்கும் ஓடு கிறோம். கடந்த 30 வருடங்களில் கிட்டத் தட்ட ஒவ்வோர் ஆண்டும் புதிய புதிய தொற்றுநோய்கள் ஏன் முளைக்கின் றன என்று நாம் யோசிப்பதில்லை. தொற்றுநோய்களில் 60 சதத்திற்கும் மேல் விலங்கினங்களிடமிருந்தே தோன்று கின்றன. பெரிய மிருகங்களை மோச மான சூழ்நிலைகளில் அடைத்து வைப்ப தால் அவை நோயை உருவாக்கும் நுண்ணுயிர்களைப் பரப்புகின்றன. அவற்றின் உணவுத்தேவைக்காக காடு களும் தாவரங்களும் அழிபடுகின்றன. இதன் காரணமாக உணவுப் பாதுகாப் பின்மை, புற்றுநோய், இதய நோய் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. எனவே, கால்நடைகளின் எண்ணிக்கை யைக் குறைக்க வேண்டிய தேவை ஏற் பட்டிருக்கிறது” என்கிறார் இந்திய பொது சுகாதார அமைப்பின் தலைவர் கே. ஸ்ரீநாத் ரெட்டி.


“பருவநிலை மாற்றம் காரணமாக கடலோரப் பகுதிகள் அதிக பாதிப்புக்குள் ளாகும். கடல் நீர்மட்டம் உயர்வதன் காரணமாக குடிநீரின் உப்புத்தன்மை அதிகரிப்பதால் இதயக் கோளாறுகளும், இரத்த அழுத்தமும் அதிகரிக்கும். நோயை உருவாக்கும் பூச்சி இனங்கள் பெருகவும் சூடேறும் பூமி வழிவகுக்கும்” என எச்சரிக்கிறார்கள் உடல்நல வல் லுநர்கள்.

1 comment:

அகல்விளக்கு said...

நல்ல விழிப்புணர்வு பதிவு...

நன்றி. :)