<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-3683345437092478883</id><updated>2012-02-13T21:37:21.209-08:00</updated><category term='மொழி'/><category term='அணுஉலை'/><category term='இருதயம்'/><category term='மக்கள்'/><category term='Agriculture Crisis'/><category term='மூங்கில்'/><category term='தஞ்சை கோயில்: ஆயிரமாண்டு அதிசயம்'/><category term='குழந்தைகள்'/><category term='தேநீர் வரலாறு'/><category term='Food Security'/><category term='மருத்துவ குணங்கள்'/><category term='வரலாறு'/><category term='Global Warming'/><category term='இந்திய அறிவியல் விஞ்ஞானி'/><category term='தன்னுணர்வு அறிவியல் ஆராய்ச்சி'/><category term='அணு உலைகள்'/><category term='வரி உருவான விதம்'/><category term='கிருமி'/><category term='செயற்கைக்கோள்'/><category term='நிலநடுக்கம்'/><category term='உலக புத்தக தினம்'/><category term='பேரழிவு'/><category term='Medical'/><category term='குளோபல் warming'/><category term='மூளை வளர்ச்சி'/><category term='காற்று மண்டலத்தில் மாசுகள்'/><category term='உடல் பருமன்'/><category term='புவி வெப்பமயமாதல்'/><category term='பூமி'/><category term='இயற்கை'/><category term='Science Technology'/><category term='ஹோமியோபதி மருத்துவம்'/><category term='மயில்'/><category term='உலகமயமாக்கல்'/><category term='கணினி துறை'/><category term='நகரமயமாக்கல்'/><category term='Astronomy'/><category term='GK'/><category term='கலாச்சாரம்'/><category term='ஐன்ஸ்டீன்'/><category term='காகிதம்'/><category term='விவசாயம்'/><category term='நிலவில் உப்புநீர்'/><category term='பரிணாம வளர்ச்சி'/><category term='மலேரியா'/><category term='Evolution'/><category term='செவி  பாதுகாப்பு'/><category term='கணினி பயன்பாடு'/><category term='பிரச்சனைகள்'/><category term='சாதனை குழந்தைகள்'/><category term='திப்பு சுல்தான்'/><category term='காற்று'/><category term='வாழ்க்கை முறை'/><category term='தமிழர் பண்பாடு'/><category term='மரபுசாரா எரிசக்தி'/><category term='யானை'/><category term='இயற்கைகாட்டுயிர்கள்'/><category term='மெடிக்கல் சயின்ஸ்'/><category term='மனிதன்'/><category term='ஆரோக்கியம்'/><category term='மாற்று மருத்துவம்'/><category term='கண்'/><category term='பாம்பு'/><category term='தண்ணீர்'/><category term='ரசாயன உரம்'/><category term='இயற்கை சூழல்'/><category term='சிறுநீர் பிரச்னை'/><category term='வர்த்தகம்'/><category term='மெடிக்கல் Technology'/><category term='கோள்கள்'/><category term='மருத்துவ தகவல்'/><category term='சுற்றுச்சூழல் - புவி வெப்பமயமாதல்'/><category term='இளம் விஞ்ஞானிகள்'/><category term='வலைத்தளம்'/><category term='வாய் துர்நாற்றம்'/><category term='aids'/><category term='இயற்கை  காட்டுயிர்கள்'/><category term='நாய்கடி'/><category term='சுற்றுசூழல்'/><category term='மரபணு தொழில்நுட்பம்'/><category term='Information - Science'/><category term='காட்டுயிர்கள்'/><category term='உயிர் அணுக்கள்'/><category term='க்ளோனிங்'/><category term='வரலாற்று துணுக்குகள்'/><category term='இயற்கை உயிர்கள்'/><category term='அறிவியல் விதி'/><category term='Agriculture'/><category term='நாசா'/><category term='மரம்'/><category term='காசநோய்'/><category term='இயற்கை காட்டுயிர்கள்'/><category term='வளங்குன்றா விவசாயம்'/><category term='Earth'/><category term='குளோபல் வார்மிங்'/><category term='நறுமணப்பொருள்'/><category term='விஞ்ஞானி'/><category term='பார்வையற்றோர்'/><category term='புவியியல்'/><category term='புலிகள்'/><category term='உணவு பாதுகாப்பு'/><category term='பொது அறிவியல்'/><category term='முட்டை'/><category term='காற்றில் மின் உற்பத்தி'/><category term='தண்ணீர் பாதுகாப்பு'/><category term='தேனிக்கள் உணவு உற்பத்தி'/><category term='பல்'/><category term='உடல் பிரச்சனைகள்'/><category term='மூடநம்பிக்கை'/><category term='சூரிய சக்தி'/><category term='சூரிய கரும்புள்ளிகள்'/><category term='ஒலி சத்தம்'/><category term='இயற்கை வளங்கள்'/><category term='நீர்நிலைகள்'/><category term='மின்னணு கழிவுகள்'/><category term='மருத்துவ தகவல்கள்'/><category term='விலங்குகள் காடுகள் சுற்றுசுழல்'/><category term='உயிர்'/><category term='தேடல்'/><category term='puvi ariviyal'/><category term='நீரிழிவு  நோய்'/><category term='அறிவியல் மனப்பான்மை'/><category term='எய்ட்ஸ்'/><category term='நைட்ரஜன்'/><category term='கல்வி முறை - தனியார் பள்ளி'/><category term='தவளை'/><category term='Food scarcity'/><category term='Agri'/><category term='சுற்றுசூழல் மாசுபாடு'/><category term='ஓசோன் மண்டலப் பாதுகாப்பு'/><category term='குழந்தை நலம்'/><category term='டெலஸ்கோப் வரலாறு'/><category term='அனல் மின்நிலையம்'/><category term='சர்வதேச வேதியியல் ஆண்டு'/><category term='காற்று மாசுப்பாடு'/><category term='சூரிய கிரகணம்'/><category term='புவி வெப்பமடைதல்'/><category term='தொழில்நுட்பம்'/><category term='Scientist'/><category term='சூரியன்'/><category term='சுகாதாரம்'/><category term='காற்றாலை'/><category term='அறிவியல் தொழில்நுட்பம்'/><category term='புவிப்பொறியியல்'/><category term='மின்சாரம்'/><category term='ஊக வணிகம்'/><category term='Sparrow'/><category term='சமையல் தொழில்நுட்பம்'/><category term='மரபணு மற்று விதைகள்'/><category term='பருவ நிலை மாற்றம்'/><category term='பிரபஞ்சம்'/><category term='உணவு பழக்கம்'/><category term='பயிற்சி'/><category term='கணினி கதிர்'/><category term='காடுகள்'/><category term='Technology'/><category term='குப்பை'/><category term='உளவியல்'/><category term='environment'/><category term='சிட்டுகுருவி புறா'/><category term='ரசாயன பூச்சி கொல்லி'/><category term='வளர்ச்சி'/><category term='climate'/><category term='சுற்றுசூழல் ஒலி மாசு'/><category term='வாழ்க்கைமுறை'/><category term='மருத்துவம்'/><category term='நோய்'/><category term='மின்னஞ்சல்'/><category term='மின் கண்ணாடி'/><category term='உணவு உற்பத்தி'/><category term='வாட்டர் பாலிசி'/><category term='வரலாற்றுத் துணுக்குகள்'/><category term='பருவநிலை மாற்றம்'/><category term='பறவைகள்'/><category term='ஒரு திரையரங்கின் கதை'/><category term='அறிவியல் கண்டுபிடிப்புகள்'/><category term='கல்வி உரிமை சட்டம்'/><category term='பொழுதுபோக்குமுறை'/><category term='மன அழுத்தம்'/><category term='அறிவியல் அறிஞர்'/><category term='Agriculture Technology'/><category term='சுகாதார சீர்கேடு'/><category term='அறிவியல்  தொழில்நுட்பம்'/><category term='புற்றுநோய்  மருத்துவம்'/><category term='மடிக் கணினி'/><category term='ஆப்பிள்'/><category term='மனிதன் அன்பு'/><category term='அறிவியல் துறை'/><category term='சயின்ஸ்'/><category term='Science'/><category term='எரிபொருள் செல் என்றால் என்ன எதிர்கால எரிபொருள் ஹைட்ரஜனே'/><category term='புகைப்பழக்கம்'/><category term='History of Laser'/><category term='நிற உணர்வு'/><category term='மருத்துவ செய்தி'/><category term='அறிவியல் கதிர்'/><category term='கிரேக்க பொருளாதாரம்'/><category term='மனித குல வரலாறு'/><category term='ரத்தம்'/><category term='வானவியல்'/><category term='மனித மூளை'/><category term='மெடிக்கல் Science'/><category term='உடல்பருமன்'/><category term='அறிவியல் தகவல்'/><category term='எண்டோசல்பான்'/><category term='பெட்ரோல் டீசல்'/><category term='பிளாஸ்டிக்'/><category term='இலங்கை'/><category term='மருத்துவ ஆய்வு'/><category term='இந்திய பொருளாதாரம் வளர்ச்சி நிலை'/><category term='அறிவியல் விஞ்ஞானியின் வரலாறு'/><title type='text'>அறிவியல் மக்களுக்கே! அறிவியல் சமூக மாற்றத்திற்கே!!</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://muruganthiru.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3683345437092478883/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://muruganthiru.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3683345437092478883/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>அறிவியல் விழிப்புணர்வு</name><uri>http://www.blogger.com/profile/14816292961575112498</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='7' src='http://2.bp.blogspot.com/_-B1lk_hlPgA/SbYP5SBQ4CI/AAAAAAAAAHc/wBrjaI1emS4/S220/PSF_logo.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>294</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-3683345437092478883.post-5015441732832493854</id><published>2012-02-13T21:34:00.000-08:00</published><updated>2012-02-13T21:37:21.244-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மூளை வளர்ச்சி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மருத்துவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குழந்தை நலம்'/><title type='text'>பதப்படுத்தப்பட்ட உணவுகள் குழந்தையின் மூளை வளர்ச்சியை பாதிக்கும்</title><content type='html'>பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை உண்ணும் குழந்தைகளின் மூளை வளர்ச்சி குறைவாக உள்ளதாக அறிவியலாளர்கள் உறுதி செய்துள்ளனர்.&lt;br /&gt; &lt;br /&gt;4000 குழந்தைகளிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பதப்படுத்தப்பட்ட உணவு, கொழுப்பு மற்றும் இனிப்புகள் அவர்களின் 8 1/2 வயதில் மூளை வளர்ச்சி குறைபாட்டை உண்டாக்குவதாக அறியப்பட்டுள்ளது. எந்த அளவிற்கு இத்தகைய உணவுகளை அவர்கள் உண்கிறார்களோ அவ்வளவு அவர்களின் பொது அறிவுத்திறன் குறைகின்றது.&lt;br /&gt; &lt;br /&gt;ஆனால் பழைய முறைப்படி சமைக்கப்பட்ட இறைச்சி வகைகள், மீன் வகைகள் அவர்களின் அறிவுச் செயல்பாட்டை அதிகரிக்கும். இந்த ஆரோக்கிய உணவு வகைகள் அறிவுத் திறனை1.20 புள்ளிகள் அதிகரிக்கும். இந்த ஆய்வு முடிவுகள் மிக முக்கியமானதாக அமைகிறது. இதற்கு காரணம் குழந்தைகளின் மூளை வளர்ச்சி முதல் மூன்றாண்டுகளில் வேகமாக இருக்கின்றது.&lt;br /&gt; &lt;br /&gt;இதைப்பற்றி ஆய்வு செய்த பிரிஸ்டல் பல்கலைக்கழக டாக்டர் கேடே நார்த்ஸ்டோன் கூறியதாவது: தற்கால பிரிட்டிஷ் குழந்தைகளின் சத்தற்ற, பதப்படுத்தப்பட்ட கொழுப்பும்,இனிப்பும் அதிகமுள்ள உணவு வகையே 8 1/2 வயதில் அவர்களின் அறிவித் திறனுக்கு காரணம் என்கிறார்.&lt;br /&gt; &lt;br /&gt;மேலும் ஆரோக்கியமான உணவு வகைகள் அதிகபட்ச மூளை வளர்ச்சிக்கு உதவும். அதே வேளையில் சிறுவயதில் ஆரோக்கியமான உணவு முறை என்பதைப் பற்றிய ஆய்வுகள் இன்னும் அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார். ஒவ்வொருவரும் சத்தான உணவுகளை உண்ணும் அதே சமயத்தில் சில விருந்து உணவுகளை உண்பதில் தவறில்லை என்றும் அவர் கூறினார்.&lt;br /&gt; &lt;br /&gt;பள்ளிக் குழந்தைகளுக்கு சத்தான உணவு முறைகளை பிரச்சாரம் செய்யும் அமைப்பினர் இந்த ஆய்வு மூலம் மேலும் ஊக்கமடைந்துள்ளனர். ஆயினும் சில நிபுணர்களோ உடனடி உணவு வகைகளை சார்ந்திருக்கும் சில பெற்றோருக்கு இது எரிச்சலூட்டும் என்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: இளைஞர் முழக்கம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3683345437092478883-5015441732832493854?l=muruganthiru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muruganthiru.blogspot.com/feeds/5015441732832493854/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3683345437092478883&amp;postID=5015441732832493854' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3683345437092478883/posts/default/5015441732832493854'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3683345437092478883/posts/default/5015441732832493854'/><link rel='alternate' type='text/html' href='http://muruganthiru.blogspot.com/2012/02/blog-post_953.html' title='பதப்படுத்தப்பட்ட உணவுகள் குழந்தையின் மூளை வளர்ச்சியை பாதிக்கும்'/><author><name>அறிவியல் விழிப்புணர்வு</name><uri>http://www.blogger.com/profile/14816292961575112498</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='7' src='http://2.bp.blogspot.com/_-B1lk_hlPgA/SbYP5SBQ4CI/AAAAAAAAAHc/wBrjaI1emS4/S220/PSF_logo.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3683345437092478883.post-1950398914045836615</id><published>2012-02-13T01:27:00.001-08:00</published><updated>2012-02-13T01:29:29.516-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அறிவியல் தொழில்நுட்பம்'/><title type='text'>ஒரு பொருளை நாம் பார்ப்பது எப்படி?</title><content type='html'>நிறம் என்பது என்ன? இது சாதாரணமான கேள்வியாகத் தோன்றினாலும், அதன் தேடலில் இயற்கையின் பல ஆழமான இரகசியங்கள் உண்டு. ஒளி என்பது என்ன? ஒரு பொருளை அறிவது எப்படி? நாம் பார்ப்பது எப்படி? போன்ற பல கேள்விகள் இதில் ஒளிந்துள்ளன.&lt;br /&gt; &lt;br /&gt;ஒளி என்பது என்ன?&lt;br /&gt; &lt;br /&gt;கடந்த நூற்றாண்டின் பெரும்பான்மையான இயற்பியல் ஆராய்ச்சிகள் ஒளியை சார்ந்தே இருந்தது. ஒளியைப் பற்றிய இந்த ஆராய்ச்சிகளின் விடை தான் இயற்கையின் அடிப்படை வேக-வரம்பு, மேக்ஸ்வெல் மின்காந்த அலை (Electromagnetic Wave) சமன்பாடு, ஐன்ஸ்டீனின் சார்பியல் தத்துவம் (Relativity), குவாண்டம் இயக்கவியல் (Quantum Mechanics), பொருள்-ஆற்றல் சமன்பாடு E=me2, முதலியவை!&lt;br /&gt; &lt;br /&gt;ஆக, ஒளி என்பது என்ன? மேக்ஸ்வெல் சமன்பாட்டின்படி, அது மின்காந்த அலை. இன்னும் துல்லியமாகச் சொல்ல வேண்டுமானால், குவாண்டம் இயக்கவியலின் படி, அதுஃபோட்டான் (Photon) எனப்படும் ஒரு விசை (Force) அடிப்படைத் துகள் (Elementary Particle).&lt;br /&gt; &lt;br /&gt;ஒளிக்கு பல பண்புகள் உண்டு. அதில் முக்கியமானவை: செறிவு (Intensity), அதிர்வெண் அல்லது அலைநீளம் (Frequencey or wavelength), முனைவாக்கம் (Polarization), முதலியவை. ஒளியின் அதிர்வெண் மிகச்சிறியது முதல் மிகப்பெரியது வரை இருக்கலாம். ஒளி அதன் அதிர்வெண் அடிப்படையில் பல்வேறு பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றது. கீழே உள்ள படம் அதை அதிர்வெண் மற்றும் அலைநீளம் என இரண்டு அளவுகோல்களிலும் விளக்குகின்றது. ரேடியோ மற்றும் பார்க்கக்கூடிய ஒளி-பகுதி பெரிதுபடுத்தி காட்டப்பட்டுள்ளது. இப்படி பல பண்புகள் ஒளிக்கு இருந்தாலும், நிறம் என்பது உண்மையில் ஒளியின் பண்பல்ல!&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பொருளை அறிவது எப்படி?&lt;br /&gt; &lt;br /&gt;எந்த ஒரு பொருளைப் பற்றி (வடிவம் என்ன? எங்கே உள்ளது? அதன் வேகம் என்ன?) அறியவேண்டுமானால், அதை விட மிகச்சிறிய துகள்களை அல்லது அலைகளை அனுப்பி, அதிலிருந்து பிரதிபலித்த துகள்களை/ அலைகளை கொண்டு கணிக்கலாம். அது எவ்விடங்களிலிருந்து பிரதிபலிப்பாகி உள்ளது, துகள்களின் பண்புகள் ஏதாவது மாறியுள்ளதா என்று பல்வேறு காரணிகளைக் கொண்டு கணிக்கலாம். உதாரணமாக, எலக்ட்ரான் நுண்ணோக்கியில் எலக்ட்ரான் துகள்களும், ரேடாரில் ஒளியும், சோனாரில் ஒலியலைகளும் பயனபடுத்தப்படுகின்றது. இது போலவே வௌவால்கள் ஒலியலைகளைப் பயன்படுத்தப் படுகின்றன.&lt;br /&gt; &lt;br /&gt;பார்ப்பது என்பது உலகிலுள்ள பொருட்களை அறிவது தான். அதற்கு நாம் ஒளியை பயன்படுத்தினாலும் அவற்றை நம்மிடமிருந்து அனுப்புவதில்லை. அதனால் வெளிப்புற ஒளிமூலம் (சூரிய ஒளி) தேவைப்படுகின்றது. நாம் ஒளியை நம்மிடமிருந்து அனுப்பாததால், பிரதிபலிப்பாகி வர ஆன நேரத்தைக் கணிக்க முடியாது; எனவே பார்க்கும் பொருளின் தூரத்தையும் கணிக்க முடியாது. இதனால், நமக்கு இரண்டு கண்கள் தேவைப்படுகின்றது. பார்க்கும் பொருளிலிருந்து வரும் ஒளி அலைகள், இரு கண்களுக்கும் வெவ்வேறு கோணத்தில் வருவதை கொண்டு தூரத்தை கணிக்கலாம்.&lt;br /&gt; &lt;br /&gt;கண்கள் ஒளியலைகளை உணரும் உறுப்புகள். அவ்வலைகளை மின்னலைகளாக மூளைக்கு அனுப்புகின்றன. அவற்றைக் கொண்டு, மூளை பல்வேறு வகையான பொருள்களை அறிகின்றன. இரு கண்களுக்கும் வெவ்வேறு கோணத்தில் வரும் ஒளியலையின் வித்தியாசங்களைக் கொண்டு, பொருட்களின் தூரங்களையும், அவை நகரம் வேகங்களையும் மூளை கணிக்கின்றது. ஒளியலையின் செறிவு, அதிர்வெண் போன்ற பண்புகளைக் கொண்டு மறைமுகமாக பொருட்களின் பண்புகளையும் மூளை கணிக்கின்றது. இப்படி கணிக்கப்பட்ட செய்திகளை, மூளை எண்களாக அட்டவணையிட்டுக் காட்டுவதில்லை. அதற்குப் பதில் வண்ணமயமான முப்பரிமாண (3D) மாதிரிகளாகக் காட்டுகின்றது.&lt;br /&gt; &lt;br /&gt;முப்பரிமாண (3D) படம் எப்படி செயல்படுகின்றது?&lt;br /&gt; &lt;br /&gt;ஒரு காட்சியை நம் இரு கண்கள் வெவ்வேறு கோணத்தில் பார்ப்பது போல், இரண்டு புகைப்படக் கருவிகள் (Cameras) கொண்டு படம் எடுக்க வேண்டும். இப்பொழுது முதல் புகைப்படக் கருவியின் படத்தை ஒரு கண்ணிற்கும், மற் றொன்றை அடுத்த கண்ணிற்கும் தனித்தனியாக கொடுத்தால் மூளை அதை முப்பரிமாணத்தில் (3D) காட்டும். ஆனால் திரையரங்கில் ஒரே திரையில் தான் இரண்டு புகைப்படக் கருவிகளின் படமும் திரையிடப்படுகின்றது. இதனால், இரண்டு படங் களும் இரண்டு கண்களுக்குச் செல்லும். இதை எப்படி தனித்தனியே அனுப்புவது? இதற்கு நம் மூளை பயன்படுத்தாத, ஒளியின் மற்றொரு பண்பான முனைவாக்கம் (Polarization) பயன் படுத்தப்படுகின்றது. முதல் புகைப்படக் கருவியின் படத்தை செங்குத்து-முனைவாக்கத்திலும். இரண்டாவது புகைபடக் கருவியின் படத்தை கிடைமட்டு-முனைவாக்கத்திலும் திரையிட வேண்டும். ஒரு கண்ணிற்கு செங்குத்தாகவும், மற்றொரு கண்ணிற்கு கிடைமட்டமாகவும் முனைவாக்கம் செய்யப்பட்ட கண்ணாடி அணிந்து பார்க்க வேண்டும். இப்பொழுது இரண்டு படங்களும் தனித்தனியாக இரண்டு கண்களுக்கும் செல்வதால் மூளை அதை முப்பரிமாணத்தில் (3D) காட்டும்.&lt;br /&gt; &lt;br /&gt;நாம் பார்ப்பது எப்படி?&lt;br /&gt; &lt;br /&gt;எந்த ஒன்றின் தகவல்களை வேறொரு முறையில் குறிப்பதை மாதிரி-குறியீடு எனலாம். உதாரணமாக, ஒலியை (பேச்சை அல்லது பாடலை) பதிவு- தகட்டில் (Record-Disk) சேமிக்கும்போது, பதிவு-தகட்டில் உள்ள மேடு-பள்ளங்கள் அவ்வொலியின் மாதிரி-குறியீடு. அதையே காந்த-தகட்டில் (Magnetic-Disk) சேமிக்கும்போது, அதன் காந்த-புலன்-வேறுபாடுகள் அவ்வொலியின் மாதிரி-குறியீடு. அதையே எண்மயப்படுத்தி (Digitize) கணினியில் சேமித்தால் அந்த கோப்பு (File) அவ்வொலியின் மாதிரி-குறியீடு. டி.என்.ஏ (DNA) நம் உடலின் மாதிரி –குறியீடு. இது போலவே, மூளை ஒவ்வொன்றிக்கும் மாதிரி-குறியீடுகளை உருவாக்கு கின்றது. இவ்வாறே, கண்களுக்கு வரும் ஒளி வண்ணமயமான முப்பரிமாண (3D) தோற்றமாகின்றது. அதில் ஒளியலையின் செறிவை வெளிச்சமாகவும், அதிர்வெண்களை நிறங்களாகவும் குறிக்கப்படுகிறது. (இது போன்ற மாதிரி- குறியீடுகள் மற்ற உணர்வுகளுக்கு உண்டு)&lt;br /&gt; &lt;br /&gt;புகைப்படக் கருவி (Camera) ஒளியலை அப்படியே படம் பிடிகின்றது. அது பொருட்களை அறிவதில்லை. ஆனால், பார்ப்பது என்பது பொருட்களை, அதன் பண்புகளை அறிவது. அதை மூளை கற்க வேண்டும். நடப்பது, பேசுவது போன்றவை வெளியீடு (Output) விடயங்களாக இருப்பதால், நாம் கற்பது எளிதாகத் தெரிகின்றது. கேட்பது, பார்ப்பது, போன்றவை உள்ளீடு (Input) விடயங்களாக இருப்பதால், நாம் சிறுவயதில் கற்பது எளிதாகத் தெரிவதில்லை. ஆனால், அவற்றையும் மூளை சிறுகச் சிறுக படிப்படியாக கற்றுக் கொள்கின்றது.&lt;br /&gt; &lt;br /&gt;உலகத்திலுள்ள பொருட்கள் அறிய, அதிலிருந்து மூளை அதன் மாதிரிகளை படிப்படியாக மூளையில் உருவாக்குகின்றது. அந்த மாதிரிகளை படிப்படியாக உருவாக்க, ஒவ்வொரு படியிலும் அதற்கு முன் மூளையில் உள்ள மாதிரிகளை, மூளை அறிந்து கொள்ள வேண்டும். அதற்கு மூளை மாதிரிகளை உருவாக்க வேண்டும்-இது மாதிரிகளுக்கான மாதிரி! மேலும் மாதிரிகளுக்கான மாதிரி வேண்டும்- இது ஒரு முடிவில்லா தொடர்ச்சி! இப்படி தொடர்ச்சியாக மாதிரிகளை உருவாக்காமல், மூளை ஒரு மாதிரியை அதன் மாதிரியாக பயன்படுத்தலாம்-இது ஒரு வினோதமான சுழற்சி. இது கணினியின் தன்-மீள்சுரூள்-நிரல்களை (Self Recursive Programs) ஒத்து இருக்கலாம்.&lt;br /&gt; &lt;br /&gt;இப்படி மூளை தன் மாதிரிகளை தானே நோக்குவதையே (தன்-மீள்சுருளாக), நாம் பார்ப்பதாக உணருகின்றோம். இது தான் நனவுநிலையின் (Consciousness) அடிப்படை. இந்த நனவுநிலை தான், இன்ப உணர்வு, வலி உணர்வு, காதல் உணர்வு, சுய உணர்வு என நம்முடைய அனைத்து உணர்வுகளுக்கும் காரணம். இந்த நனவுநிலை தான், காதுகளுக்கு வரும் ஒலியை சத்தமாகவும், நாக்கிற்கு வரும் சில வேதியல்-மூலக்கூறுகளின் செய்தியை சுவையாகவும், மூக்கிற்கு வரும் சில வேதியல்-மூலக்கூறுகளின் செய்தியை மணமாகவும், உடலின் அழுத்தங்கள் பரிசமாகவும் உணர வைக்கின்றன! இந்த உணர்வுகளுக்கு வெளி உலகத் தூண்டல்கள் அவசியம் இல்லை. மூளை அதன் மாதிரி குறியீடுகளைக் கொண்டு, எந்த உணர்ச்சிகளையும் நேரடியாக உருவகப்படுத்த முடியும். அப்படித் தான் நாம் கனவுகளில் பார்க்கின்றோம்.&lt;br /&gt; &lt;br /&gt;இது மூளை உருவாக்கும் ஒரு வகையான வினோத மெய்நிகர் உலகம் (Virtual World)! இந்த மெய்நிகர் உலகில் தான், நம்முடைய அனைத்து உணர்வுகளும் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: முனைவர் க.மணி&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3683345437092478883-1950398914045836615?l=muruganthiru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muruganthiru.blogspot.com/feeds/1950398914045836615/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3683345437092478883&amp;postID=1950398914045836615' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3683345437092478883/posts/default/1950398914045836615'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3683345437092478883/posts/default/1950398914045836615'/><link rel='alternate' type='text/html' href='http://muruganthiru.blogspot.com/2012/02/blog-post_13.html' title='ஒரு பொருளை நாம் பார்ப்பது எப்படி?'/><author><name>அறிவியல் விழிப்புணர்வு</name><uri>http://www.blogger.com/profile/14816292961575112498</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='7' src='http://2.bp.blogspot.com/_-B1lk_hlPgA/SbYP5SBQ4CI/AAAAAAAAAHc/wBrjaI1emS4/S220/PSF_logo.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3683345437092478883.post-7073865527248870441</id><published>2012-02-11T08:07:00.000-08:00</published><updated>2012-02-11T08:09:20.434-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='puvi ariviyal'/><title type='text'>மூளை - நம்பிக்கைகளின் மூலம்</title><content type='html'>கார்-எஞ்சின் எப்படி வேலை செய்கின்றது என்பதை அறியாமல், நாம் கார் ஓட்ட கற்றுக் கொள்ள முடியும். அது போலவே, எப்படி நம்-மூளை கற்கின்றது... சிந்திக்கின்றது என்பதை அறியாமல் நாம் கற்றுக் கொள்கின்றோம்... சிந்திக்கின்றோம். மூளை என்பது ஒரு கற்றுக் கொள்ளும் எந்திரம். சிறுவயது முதல், அது படிப்படியாக சிறுகச்சிறுக கற்றுக் கொள்கின்றது. இவ்வாறே நாம் கேட்க, பார்க்க, பேச. நடக்க, ஓட, சிந்திக்க, பகுத்து-அறிய என பலவற்றை கற்றுக் கொள்கின்றோம். நாம் எப்படி கற்றுக் கொள்கின்றோம் என்பதை இரு முக்கிய காரணிகள் நிர்ணயிக்கின்றன. நம் ஜீன்கள், நாம் வளர்ந்த/வாழும் சூழல். இதில் இரு முக்கிய சூழல்கள் உள்ளன: சிறுவயதில் நெருங்கிய பந்தங்கள், பிற்பாடு நாம் வாழும் சமூகம். சிறுவயதில் பதிந்து போனவை பசுமரத்தில் அடித்த ஆணி போன்றது தான்; பிறகு மாற்றுவது எளிதல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;மூளை எப்படி கற்று கொள்கின்றது?&lt;br /&gt;&lt;br /&gt;மூளை என்பது நரம்பு-செல்கள் (Neurons) பிணையப்பட்ட வலை (Neural Network). நாம் கற்கும்போது, புதிய நரம்பு-செல்-இணைப்புகளை உருவாக்கியோ அல்லது இணைப்புகளின் பலத்தை கூட்டியோ/குறைத்தோ நம் மூளை கற்றுக் கொள்கின்றது. இவ்வாறு புலன்கள் மூலமாக செல்லும் உலக விசயங்களை கொண்டு, மூளை மாதிரிகளை (Models) உருவாக்குகின்றது. இதில் ஒரு மாதிரியின் பலம் அல்லது நம்பிக்கை அதன் நிகழ்தகவை பொருத்தது. நாம் கற்று கொள்ளும்போது, அந்த மாதிரியின் நம்பிக்கை-நிகழ்தகவு அதிகரிக்கவோ, குறையவோ செய்யும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மாதிரிகளைக் கொண்டே, நாம் வாழ்க்கையை/உலகைப் புரிந்து/கணித்து வாழ்கின்றோம். புலன்கள் மூலமாக மூளைக்கு செல்லும் எந்த விடயங்களும் உலகைப் பற்றிய முழுமை அல்ல. அந்த முழுமையற்ற விடயங்களிலிருந்து மூளை ஒரு மாதிரியை (அறிவியல் தியரி போல்) உருவாக்கி, உலகை... வாழ்க்கையைப் புரிந்து... கணிப்பதையே அறிவு என்கின்றோம். அனைத்துமே முழுமையற்று இருப்பதால், அனைத்துமே நம்பிக்கை தான்; நம்பிக்கையின் நிகழ்தகவு வேறாக இருக்கலாம்; 100% நிச்சயம் என்று ஒன்றும் இல்லை. ஒவ்வொருவரின் மூடநம்பிக்கையும், அவரின் மூளையின்படி நம்பிக்கையே. ஆக, நம் நம்பிக்கை தற்சார்புடையது (Subjective). எனவே தான், பாரபட்சமற்ற வெளிசார்புடைய (Objective) ஆராய்ச்சி (அறிவியல்) தேவைப்படு கின்றது. அதைத் தான், கலிலியோ உட்பட பல அறிஞர்கள் நமக்கு காட்டினர். ஆனால், அதை எப்படி எல்லோருக்கும் நம்ப/புரிய வைப்பது?&lt;br /&gt;&lt;br /&gt;எந்த ஒன்றும், பரிணாம வளர்ச்சி அடைய சில முக்கிய அம்சங்கள் உண்டு: (1) அதை சேமிக்க இடம் (Storage); (2) அதை நகல்கள் எடுத்தல் (Genes) இருக்கும்/சேமித்த இடம் DNA; அதன் நகல் எடுத்தலை இனப்பெருக்கம் என்றும் அதன் பிழைகளை மரபு-பிழைகள் என்கின்றோம். பரிணாம வளர்ச்சிக்கு நல்லது கெட்டதெல்லாம் தெரியாது; சூழலுக்கு ஏற்ப தக்கவைகள் பிழைத்து வளர்ச்சி அடையும். பரிணாம வளர்ச்சிக்கு மற்றொரு உதாரணம் மெம்கள் (Memes). மெம் என்பது ஒரு யோசனையைக் (Idea) குறிக்கும். கடவுள், மதம், அறிவியல், ஜாதகம், கலாச்சாரம், ஜாதி... இவை எல்லாம் மெம்கள் தான். இவை இருக்கும்/சேமித்த இடம் மூளை. இவை ஒரு மூளையிலிருந்து மற்றொன்றிக்கு காலகாலமாக மொழி, கலாச்சாரம் மூலம் பரவுகின்றது அல்லது நகல் எடுக்கப்படுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt; ஜீன்களைப் போலவே செத்துப்போன மெம்கள் கோடான கோடி. செத்துப்போன கடவுள்களும் கோடான கோடி. இன்று பிழைத்திருக்கும் அனைத்து மெம்களும் ஏதாவது ஒரு வகையில் சூழலுக்கு ஏற்ப வளர்ச்சி அடைந்தவைகளே! அந்த சூழலில், பல மூடநம்பிக்கைகளுக்கு நம் உணர்ச்சிகள் (உணர்ச்சிகள் ஜீன்களின் பரிணாம வளர்ச்சி) முக்கிய காரணிகளாக இருக்கின்றன. மனிதனின் ஆரம்ப கட்டத்தில், அறியாமையும் பய-உணர்ச்சியும் பல மூடநம்பிக்கைகளுக்கு முக்கிய காரணிகளாக இருந்திருக்கலாம். மெம்கள் வளர்ச்சி அடைய தேர்ந்த மொழி மற்றும் கலாச்சாரம் தேவை என்பதாலே, அதைக் கொண்ட மனிதனிடத்தில் மூடநம்பிக்கைகளும், அறிவியல் வளர்ச்சிகளும் காணமுடிகின்றது; மற்ற விலங்குகளில் அவற்றை காண முடிவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பகுத்தறிவு என்பது (Critical Thinking), ஒவ்வொரு விடயத்தையும் சீர்தூக்கி வெளிசார்புடன் (Objective) கற்று, அதற்கு ஏற்ப நம்பிக்கை-நிகழ்தகவுகளை அமைப்பது. ஆனால், அந்த அறிவும் நாம் வளர்ந்த/வாழும் சூழல்களைப் பொருத்தது. முறையான பகுத்தறிவு இல்லாத போது, மூளை எளிதாக ஏமாந்து நம்பிக்கை-நிகழ்தகவுகளை வெளிசார்பு-அறிவுக்கு (Objective-Knowledge) எதிராக அமைப்பதை மூடநம்பிக்கை எனலாம். ஆனால், பகுத்தறிவு என்பது நம் மூளையின் அறிவு-பகுதியைப் மட்டுமே ஏற்பதல்ல, நம் உணர்ச்சி-பகுதியையும் ஏற்பது தான்! மானிட உணர்ச்சி களுக்கு வடிகாலாகவும், சமூதாய வளர்ச்சிக்காகவும் சில விடயங்களை கடைபிடிப்பதும் பகுத்தறிவு தான்! இறந்தவருக்கு அஞ்சலி செலுத்துவதும், நினைவு சின்னங்கள் எழுப்புவதும், பாடுவதும், கொண்டாடுவதும் பகுத்தறிவு தான். பகுத்தறிவு என்பது, நாம் எதை செய்தாலும் அதை புரிந்து கொண்டு செய்கின்றோமா அல்லது குருட்டுத்தனமாக செய்கின்றோமா என்பதில் தான் உள்ளது!&lt;br /&gt;&lt;br /&gt;Courtesy to Dr.Ka.Mani&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3683345437092478883-7073865527248870441?l=muruganthiru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muruganthiru.blogspot.com/feeds/7073865527248870441/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3683345437092478883&amp;postID=7073865527248870441' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3683345437092478883/posts/default/7073865527248870441'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3683345437092478883/posts/default/7073865527248870441'/><link rel='alternate' type='text/html' href='http://muruganthiru.blogspot.com/2012/02/blog-post_11.html' title='மூளை - நம்பிக்கைகளின் மூலம்'/><author><name>அறிவியல் விழிப்புணர்வு</name><uri>http://www.blogger.com/profile/14816292961575112498</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='7' src='http://2.bp.blogspot.com/_-B1lk_hlPgA/SbYP5SBQ4CI/AAAAAAAAAHc/wBrjaI1emS4/S220/PSF_logo.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3683345437092478883.post-2480752535602652199</id><published>2012-02-10T05:31:00.000-08:00</published><updated>2012-02-10T05:39:17.069-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காற்று மண்டலத்தில் மாசுகள்'/><title type='text'>காற்று மண்டலத்தில் மாசுகள்</title><content type='html'>சென்னை போன்ற மாநகரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்வோரில் சிலர் தலைக்கவசம் மட்டுமின்றி மூக்கு வரை முகத்தை மூடிக்கொண்டு செல்வதைப் பார்க்க முடியும். அவர்கள் முகமூடிக் கொள்ளையர்களோ, பயங்கரவாதிகளோ அல்ல. சுற்றுப்புற மாசுகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவே இப்படி முகத்தை மூடிக்கொள்ள வேண்டிய தேவை அவர்களுக்கு ஏற்பட்டு விடுகிறது. இருசக்கர வாகனங்களில் செல்வோர் போக்குவரத்து சிக்னல் களில் நிற்கும்போது, நூற்றுக்கணக்கான வாகனங்களிலிருந்து கிளம்பும் புகை பலரை மூச்சுத் திணறடிக்கிறது. ஆனால் அன்றாடம் வாழ்க்கைப் போராட்டத்தை நடத்தும் அவர்கள், இதையெல்லாம் பார்த்தால் தங்கள் பணியை நிறை வேற்ற முடியுமா? காற்று மண்டலத்தில் உள்ள தூசுகளும் மாசுகளும் உடல் நலத்திற்குக் கேடு விளைவிப்பவை என்று தெரிந்தாலும் பலர் அதைப் பொருட்படுத்துவதில்லை. பொருட்படுத்த முடிவதில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;குளிர்பருவத்து இரவுகளில் சென்னை போன்ற கடற்கரையோர நகரங்களில் காற்றில் ஈரத்தன்மை அதிகரித்து, தூசுகள் அப்படியே தங்கிவிடுகின்றன. சாலைகளிலிருந்து கிளம்பும் புழுதி, வாகனங்கள் வெளியிடும் புகை காரணமாக காற்று மண்டலத்தில் தூசுகளும் மாசுகளும் சேருகின்றன. தூசுகளின் அளவைக் குறைக்க சாலைகளை நன்கு பெருக்கி, நீர்விட்டுக் கழுவிவிட வேண்டும் என்று சென்னை ஐ.ஐ.டி. நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக பரிந்துரைத்தது. ஆனால் மாநகராட்சியை அசைப்பது அவ்வளவு எளிதா என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;தற்போது தெருக்கூட்டும் இயந்திரங்களை வாங்க சென்னை மாநகராட்சி முடிவு செய்திருக்கிறது. இந்த இயந்திரங்கள் குடியிருப்போர் உள்ள சாலைகளிலும் உலா வருமா என்பது தெரியவில்லை. அங்கெல்லாம் வீடுகளுக்கு வெளியே பொருத்தப்படும் கண்ணாடிகளி லும் சுவர்களிலும் சாலைப்புழுதி படிந்து அசுத்தமாகி விடுகிறது. அதைச் சுத்தம் செய்ய வேண்டியது அவரவர் பாடு. சாலைகள் கிளப்பும் தூசுகள் அனைவரையும் பாதித்தாலும், கூடுதல் பாதிப்பு குழந்தைகளுக்கும் முதியோருக்கும்தான். சுற்றுப்புற மாசுகள் அதிகம் உள்ள தெருக்களில் நடைப்பயிற்சி செல்வோருக்கு சுத்தமான காற்று எங்கிருந்து கிடைக்கும்? உடற்பயிற்சிக்குப் போய் உபத்திரவத்தை வாங்கிவருவதுதான் மிஞ்சும்.&lt;br /&gt;&lt;br /&gt;மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சாலைகளில் சேரும் தூசுகளின் அளவைக் கண்காணித்தாக வேண் டும். கண்காணிப்பு மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும். ஒரு சில வாகனங்கள் நம்மைக் கடந்து சென்ற பிறகு அந்த வாகனமே கண்ணுக்குத் தெரியாத அளவில் அது கிளப்பும் புகை நம்மைச் சூழ்ந்து கொள்கிறது. நம்மை இடித்துவிட்டுத் தள்ளிவிட்டுச் சென்றால் கூட, அப்படிப்பட்ட வாகனங்களின் நம்பர் பிளேட்டைப் பார்ப்பது சாத்தியமே இல்லை. இப்படிப் பட்ட வாகனங்களை சாலைகளில் செல்ல அரசு அனுமதிக்கலாமா? சென்னையில் வாகனப் புகையைச் சோதிப்பதற்கு 1997-ல் 130 மையங்கள் இருந்தன. தற்போது 30 மையங்களாகக் குறைந்துவிட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;போக்குவரத்து நெருக்கடி, நெருக்கடியின் காரணமாக மெல்ல மெல்ல ஊர்ந்து செல்லும் வாகனங்களிலிருந்து, கிளம்பும் கூடுதல் புகை, மெட்ரோ ரயில் பணி, குறுகலான சாலைகள் போன்ற காரணிகளால் சென்னை மாநகரில் தூசுகளின் அளவு மிகவும் கூடிவிட்டது. தும்மல், ஆஸ்துமா போன்ற பாதிப்புகளுக்கு டீசல் புகை முக்கியக் காரணமாக அமைகிறது. மூக்குச் சவ்வு வீக்கம், ஆஸ்துமா, மூச்சுக் குழல் பிரச்சனைகள், சுவாச உறுப்புகளில் பாதிப்பு, நுரையீரல் நோய்கள் போன்ற பல்வேறு உபாதைகளோடு நோயாளிகள் மருத்துவமனைகளை நாடுவது அன்றாடம் அதிகரித்து வருகிறது. கண், மூக்கு, தொண்டை, மார்புப் பகுதி மருத்துவர்கள் காற்றில் மாசுகள் அதிகரித்ததுதான் இதற்குக் காரணம் என்கின்றனர். முன்பு தீபா வளியை ஒட்டி வரும் இப்படிப்பட்ட நோயாளிகள் வருடம் முழுவதுமே வரத் தொடங்கிவிட்டனர் என்கிறார்கள் மருத்துவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தூசுகள், மாசுகள் நிரம்பிய காற்றைத் தொடர்ந்து சுவாசிப்பது உடல் நலத்தைக் கடுமையாகப் பாதிக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. தில்லியில் வாகனங்கள் இயற்கை எரிவாயு உருளைகளைப் பரவலாகப் பயன்படுத்தத் தொடங்கிய பிறகு காற்று மண்டலத்தில் மாசுகள் கணிசமாகக் குறைந்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பிற நகரங்களிலும் தொழில்நுட்ப ரீதியாக மாசுகளைக் கட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை மாநகராட்சிகளும் உள்ளாட்சி அமைப்புகளும் உடனடியாக எடுத்தாக வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தீக்கதிர்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3683345437092478883-2480752535602652199?l=muruganthiru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muruganthiru.blogspot.com/feeds/2480752535602652199/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3683345437092478883&amp;postID=2480752535602652199' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3683345437092478883/posts/default/2480752535602652199'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3683345437092478883/posts/default/2480752535602652199'/><link rel='alternate' type='text/html' href='http://muruganthiru.blogspot.com/2012/02/blog-post_10.html' title='காற்று மண்டலத்தில் மாசுகள்'/><author><name>அறிவியல் விழிப்புணர்வு</name><uri>http://www.blogger.com/profile/14816292961575112498</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='7' src='http://2.bp.blogspot.com/_-B1lk_hlPgA/SbYP5SBQ4CI/AAAAAAAAAHc/wBrjaI1emS4/S220/PSF_logo.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3683345437092478883.post-1991265700861881836</id><published>2012-02-06T02:32:00.000-08:00</published><updated>2012-02-06T02:33:58.913-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இருதயம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மருத்துவ செய்தி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ரத்தம்'/><title type='text'>குறைந்த, அதிக இரத்த அழுத்தங்கள் எப்படி உருவாகின்றன?</title><content type='html'>இரத்தக் குழாய்களில் இரத்தம் செல்லும்போது, குழாய்களின் சுவர்களில் இரத்தம் ஏற்படுத்தும் விசையே இரத்த அழுத்தம் எனப்படும். மேலும், இதயம் தொடர்ச்சியாக இரத்தத்தை குழாய்களின் மூலம் உடலின் அனைத்து பாகங்களுக்கும் சுழற்றிக் கொண்டே இருப்பதால் இரத்த அழுத்தம் சீராக இருக்கின்றது. இரத்தக் குழாய்களில் ஓடும் இரத்தத்தின் அழுத்த விசையினை அளக்கும் கருவிக்கு ஸ்பிக்மோமேனோ மீட்டர் (Sphigmomanometer) என்று பெயர். இக்கருவியில் உள்ள பாதரசத் தம்பம் (Mercury Pellet) அழுத்தத்தைத் துல்லியமாகக் காட்டுகிறது.&lt;br /&gt; &lt;br /&gt;இரத்த அழுத்தம் எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்பதில்லை. மேலும் இது ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் ஆகியோருக்குக் கணிசமான அளவில் மாறுபடுகின்றது. எடுத்துக்காட்டாக 30-லிருந்து 40 வயதுள்ள சராசரி ஆணுக்கு இரத்த அழுத்தம் 120/90 இருக்கலாம். இதையே சாதாரண இரத்த அழுத்தம் என்று கூறுவார்கள். இந்த அளவிற்குக் குறைந்தால் Hypo Tension எனப்படும். குறைந்த இரத்த அழுத்தம் (Low Blood Pressure) என்றும், அதிகமானால் Hyber Tension எனப்படும் அதிக இரத்த அழுத்தம் (High Blood Pressure) என்றும் சொல்லலாம்.&lt;br /&gt; &lt;br /&gt;குறைந்த இரத்த அழுத்தத்திற்கு இரத்தச் சேதமோ, இரத்தத்தின் திரவ அளவு குறைவதோ அல்லது Electrolytes எனப்படும் துகள்கள் குறைவதோ காரணமாக இருக்கலாம். அதிக இரத்த அழுத்தத்திற்கான காரணங்கள், அதிகக் கொழுப்பு (Cholestrol) சேருதல், நீரிழிவு நோய் (Diabetes), சிறுநீரகப் பாதிப்புகள், சில நேரங்களில் பெண்களின் கர்ப்பநிலை ஆகியவையாகும்.&lt;br /&gt; &lt;br /&gt;இரத்த அழுத்தம் அதிகமானால் இரத்தக் கொதிப்பு ஏற்படுகிறது என்று கூறப்படுவது தவறானது. இரத்தம், எந்த நேரத்திலும் கொதி நிலையை அடைவதில்லை. இரத்த அழுத்தம் அதிகமானால் இதயம் அதிகமான வேலை செய்ய வேண்டியதாகி விடுகிறது. எனவேதான் அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இதய நோய்கள் ஏற்பட அதிக வாய்ப்புகள் ஏற்படுகின்றன.&lt;br /&gt; &lt;br /&gt;(அறிவியல் ஒளி - 2012 ஜனவரி இதழில் வெளியானது)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3683345437092478883-1991265700861881836?l=muruganthiru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muruganthiru.blogspot.com/feeds/1991265700861881836/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3683345437092478883&amp;postID=1991265700861881836' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3683345437092478883/posts/default/1991265700861881836'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3683345437092478883/posts/default/1991265700861881836'/><link rel='alternate' type='text/html' href='http://muruganthiru.blogspot.com/2012/02/blog-post_06.html' title='குறைந்த, அதிக இரத்த அழுத்தங்கள் எப்படி உருவாகின்றன?'/><author><name>அறிவியல் விழிப்புணர்வு</name><uri>http://www.blogger.com/profile/14816292961575112498</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='7' src='http://2.bp.blogspot.com/_-B1lk_hlPgA/SbYP5SBQ4CI/AAAAAAAAAHc/wBrjaI1emS4/S220/PSF_logo.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3683345437092478883.post-2753100170613724205</id><published>2012-02-05T23:06:00.000-08:00</published><updated>2012-02-05T23:08:21.159-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இயற்கை உயிர்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தவளை'/><title type='text'>உலகின் மிகச் சிறிய முதுகெலும்பி... குட்டியூண்டு தவளை..!</title><content type='html'>அமெரிக்க ஐக்கிய நாட்டு விஞ்ஞானிகளின் குழுவைச்சேர்ந்த கிரிஸ் ஆஸ்டின் என்ற விஞ்ஞானி , சமீபத்தில் நியூகினியாவில் இரண்டு புதிய இனங்களைச் சேர்ந்த தவளைக் கண்டுபிடித்துள்ளார். எலும்புள்ள விலங்குகளில் இதுதான் உலகிலேயே மிக மிகச் சிறியது என்பது வியப்புக்குரிய விஷயமாகும். இந்த தவளை எவ்வளவு பெரிசு தெரியுமா? சொன்னால் நீங்கள் நம்பமாட்டீர்கள். இதன் அளவு 7 .7 மி.மீ தான். ஒரு இன்ச் நீளம் என்றால் உங்களுக்குத் தெரியுமல்லவா ? அந்த ஒரு இன்ச்சில் மூன்றில் ஒரு பகுதியைவிடச் சிறியது. இதற்கு முன் உலகின் சிறிய முதுகெலும்பி என்று பெயரும், பெருமையும் பெற்றிருந்த 8 மி.மீ நீளமுள்ள இந்தோனீசிய சின்ன மீனை இந்த தவளை பின்னுக்குத் தள்ளி விட்டது. இந்த குழு மூன்று மாதங்களாக உலகில் மிகப் பெரியதும், உயரமான வெப்ப மண்டல தீவான நியூகினியாவின் தீவை ஆராய்ந்து தேடித் தேடி இந்த தவளை இனங்களை கண்டுபிடித்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பானது ஆஸ்டின் குழு வினருக்கு மிகப் பெரிய சவாலும்,சாதனையுமாகும். &lt;br /&gt; &lt;br /&gt;இம்மாத்தூண்டு தவளையைக் கண்டு பிடிப்பது ஒன்றும் சாதாரண விஷயமல்ல. இதன் பெயர் பீடோ பைரினி அமானூன்சிஸ் (Paedophryne amauensis) என்பதாகும் .இதன் ஆண் தவளையின் கீச்சிடும் ஒலி, ஒரு பூச்சியின் ஒலியைப் போலிருக்குமாம் . அதன் மூலம்தான் இந்த தவளையைக் கண்டுபிடித்தோம் என்று ஆஸ்டின் கூறுகிறார் . ஆனால் இது மிக மிகப் பெரிய கண்டுபிடிப்புதான்...! இதனைக் கண்ணால் காண்பதே பெரிய் விஷ்யம்தான். பொதுவாக நியூகினியா அதிகவகையான உயிரினங்கள் வாழும் ஓர் உயிரிப்பன்மையின் உச்ச பட்ச இடம். அந்த இடத்தில் எப்போதுமே புதிய வகை உயிரினங்களை கண்டுபிடிக்கலாம். கண்டுபிடிக்க முடியும்.அதனால்தான் ஏதாவது புதிய வகை உயிரினங்கள் கிடைக்குமா என்று தேடியவர்களுக்கு மிகப் பெரிய புதையல் அகப்பட்டதுபோல் கிடைத்ததுதான் இந்தப் புள்ளித் தவளை.இந்த தவளை பற்றிய தகவல் வெளியுக்லகுக்கும், அறிவியல் இதழிலும் 2012 , ஜனவரி 11 ம் நாள் வெளியிடப்பட்டது.&lt;br /&gt; &lt;br /&gt; அங்கு கிடைத்த இரண்டாவது தவளை., இந்த பீடொபைரீன் அமானூன்சிஸைவிட துளியூண்டு பெரிது. அதன் அளவு, 8 .5 மி.மீ ஆகும். இந்த குட்டியூண்டு தவளையின் பெயர் பீடோபைரினி ஸ்விப்ட்டோரம் (Paedophryne swiftorum ). பொதுவாக முதுகெலும்பிகளில் மிகச் சிறியதும், மிகப் பெரியதும் கொஞ்சம் பெருமையும், பிரபலமும் உடையவை. மனித இனம் அறிந்த 60,000 வகை முதுகெலும்பிகளில், மிகப் பெரியது நீலத் திமிங்கலமே..! அது எவ்வளோ பெரிசு தெரியுமா? சுமார் 25 மீட்டர் அளவு இருக்கும். அதாவது 75 அடி. அம்மாடியோவ் ஒரு வீடு சைஸ் என்று சொல்லலாமா? அதற்கு அடுத்த படி, மிகச் சிறிய முதுகெலும்பி, இந்தோனீசிய மீன்தான் என்று இதுவரை நம்பிக் கொண்டிருந்தோம்.அதன் சைஸ் வெறும் எட்டு மி.மீ மட்டுமே. ஆனால் அந்த எண்ணத்தை தூக்கி கபளீகரம் பண்ணி சாப்பிட்டுவிட்டது இந்த துளியூண்டு பூச்சி சைஸ் தவளை. ஒரு தண்ணீர்ப் பூச்சியைவிடச் சிறியது. இந்த குட்டி,பொட்டுத் தவளையின் சைஸ் 7 .7 மி.மீ. இதுவரை உலகின் மிகப் பெரிய மற்றும் மிகச் சிறிய முதுகெலும்பிகள் நீரில்தான் இருக்கும் என்றும் நினைத்தோம். அந்த எண்ணத்தையும் முறித்துவிட்டது இந்த தவளையார். ஆமாம் இது தரை வாழ் விளங்கல்லவா ? வாழிட சூழலில் மழைக்காடுகளின் தரையில், இலைகளில்தான் இந்த மாதிரி சிறிய விலங்குகள் வாழ்க்கை நடத்துகின்றன என்று ஆஸ்டின் தெரிவிக்கிறார் . அமெரிக்க பணமான டைமில்(Dime) .(.நம்ம ஊரு ஒரு பைசா நாணயம் போலத்தான் இந்த டைம்.).இந்த தவளையை வைத்து படம் எடுத்துள்ளனர். பாருங்களேன்..!&lt;br /&gt; &lt;br /&gt;நன்றி: பேரா.சோ.மோகனா&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3683345437092478883-2753100170613724205?l=muruganthiru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muruganthiru.blogspot.com/feeds/2753100170613724205/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3683345437092478883&amp;postID=2753100170613724205' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3683345437092478883/posts/default/2753100170613724205'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3683345437092478883/posts/default/2753100170613724205'/><link rel='alternate' type='text/html' href='http://muruganthiru.blogspot.com/2012/02/blog-post.html' title='உலகின் மிகச் சிறிய முதுகெலும்பி... குட்டியூண்டு தவளை..!'/><author><name>அறிவியல் விழிப்புணர்வு</name><uri>http://www.blogger.com/profile/14816292961575112498</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='7' src='http://2.bp.blogspot.com/_-B1lk_hlPgA/SbYP5SBQ4CI/AAAAAAAAAHc/wBrjaI1emS4/S220/PSF_logo.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3683345437092478883.post-40006683822984497</id><published>2011-12-21T23:18:00.000-08:00</published><updated>2011-12-21T23:20:53.396-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மரபணு தொழில்நுட்பம்'/><title type='text'>உயிர் வாழும் உரிமைக்கு உலை வைக்கும் மரபணு தொழில்நுட்பம்</title><content type='html'>தக்காளிக்குள் மீனின் மரபணு&lt;br /&gt;&lt;br /&gt;நாம் அன்றாடம் உண்ணும் உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் தக்காளியில் மீனின் மரபணுவும் உள்ளது. நீங்கள் வெஜிடேரியனா? சிகிச்சை மற்றும் பல காரணங்களுக்காக புலால் உணவு தவிர்ப்பவரா? அப்படியானால் இன்னுமொரு கூடுதல் அதிர்ச்சியும் காத்திருக்கிறது. தக்காளிக்குள் தவளையின் மரபணுவும் உள்ளது. இந்தத் தகவல் உங்களுக்கு குமட்டலை ஏற்படுத்தினாலும் அதிர்ச்சியில் மயக்கமே வந்தாலும் இது தான் உண்மையாகும். எந்த உண்மையும் சற்று கசக்கவே செய்யும் என்பார்கள். ஆனால் இந்த உண்மை கசக்க மட்டும் செய்யாது பலவீனமானவர்களுக்கு மாரடைப்பையே ஏற்படுத்தும்.&lt;br /&gt;&lt;br /&gt;இவையெல்லாம் மரபணு தொழில்நுட்பம் என்ற பெயரில் நடைபெற்று வரும் காய்கறி உற்பத்திகள். இந்தத் துறையில் இன்னும் நடைபெறப்போகும் சில உண்மைகளைக் காண்போம். நீங்கள் உங்கள் நண்பரின் பிறந்த நாள் பரிசாக பூங்கொத்து ஒன்றைக் கொடுக்கும்போது அதை மல்லிகை மணம் கொண்ட பச்சை வண்ணத் தாமரை மலராகக் கூட கொடுக்கலாம். அந்த நண்பரின் விழாவில் விருந்தாக பழங்களும் உணவு வகைகளும் சதுரமாகவும் நீளமாகவும் வழங்கப்படலாம். விழா வானவில்லின் ஏழு நிறங்களான புல் தரையில் கூட நிகழலாம். மூன்று மாதங்களுக்கு முந்தைய தக்காளியில் பழச்சாறு பிழிந்து குடிக்கலாம். அந்தத் தக்காளியும் தற்போது பறித்ததுபோல் பளபளப்பாகவும் அழகாகவும் இருக்கும். அதே சமயம் வனங்களுக்கு நீங்கள் சுற்றுலா சென்றால் அங்கே தேளின் கொடுக்கை கொண்ட யானையைப் பார்க்கலாம். பறக்கும் எட்டுக்கால் பூச்சியை நீங்கள் பார்க்க நேரிடலாம். இவை எல்லாம் காமிக்ஸ் படங்களில் வருவது போன்று அதிசயமாக இருக்கலாம். இன்னும் எவ்வளவோ வியப்புகள் உள்ளன. இவற்றை நிகழ்த்தி வருவது மரபணு பொறியியல். இப்படி ஆராய்ச்சிக்கூடங்களில் உருவாக்கப்பட்ட உயிரினங்கள் (செடிகள் உள்ளிட்ட பல வகை தாவரங்கள், விலங்குகள்) மரபிணி மாற்ற உயிரினங்கள் (genetically modified organisms) என்றழைக்கப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;தக்காளியில் தவளையும் மீனும் வருவது எப்படி? காய்கறிகளையும் பழங்களையும் சதுரமாகவும் நீளமாகவும் எப்படி உருவாக்குகிறார்கள்? எதற்காக உருவாக்குகிறார்கள்? ஏன்? இந்த கேள்விகளுக்கு பதில் காண வேண்டுமானால் நீங்கள் மரபணு தொழில்நுட்பத்தை புரிந்து கொள்ள வேண்டும். அறிவியலில் ஏற்பட்டுள்ள பிரம்மாண்டமான வளர்ச்சியின் முக்கிய மைல்கல்லாக மரபணு தொழில் நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டது. இது மரபணு தொழில் நுட்பம் என்றும் மரபணு பொறியியல் என்றும், உயிரியல் தொழில்நுட்பம் என்றும் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. பன்னாட்டு நிறுவனங்களின் கட்டுப்பாட்டிலும் ஆதரவிலும் இலாப நோக்கத்திற்காக இப்படிப்பட்ட விபரீதமான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு காய்கறிகளிலும் தாவரங்களிலும் விலங்குகளிலும் மரபணு மாற்றங்கள் செய்யப்பட்டு அவை மக்களின் பயன்பாட்டிற்காக சந்தையில் விடப்பட்டுள்ளன. முதலில் மரபணு தொழில் நுட்பம் மிக முன்னேறிய தொழில் நுட்பம் என்றும் மனிதனுக்கு கிடைத்துள்ள வரப்பிரசாதம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் உயிர் வாழும் உரிமைக்கும் இயற்கைக்கும் எதிரானதாக மரபணு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.™ எனவே சமூக மாற்றத்திற்காகவும் மனித உரிமைகளுக்காகவும் பாடுபடுபவர்கள் மரபணு தொழில்நுட்பத்தை புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;மரபிணிகள் (Genes) எனப்படுபவை உயிரினங்களின் மரபியல் பண்புகளைத் தலைமுறை தலைமுறையாக சுமந்து வரும் தூதர்கள் ஆகும். உயிரினங்கள் அமீபா போன்ற ஒரு செல் நிலையில் தொடங்கி மக்கள், யானை, திமிங்கலங்கள் போன்ற பல கோடி செல்களைக் கொண்டதாகப் பல உயிரினங்கள் உள்ளன. இந்த செல்களை உயிரினங்களின் அடிப்படை அலகுகள் என்று கூறலாம். செல்களுக்குள் உட்கரு (nucleus) எனப்படும் ஒரு பகுதி உள்ளது. அதற்குள் குருமேனியன்கள் எனப்படும் குரோமோசோம்கள் உள்ளன. இவை குச்சி வடிவத்தில் காணப்படும். குரோமோசோம்களை உள்ளடக்கிய டி.என்.ஏ அமைப்பு உள்ளது. இந்த டி.என்.ஏவில் உள்ளதுதான் மரபிணிகள் ஆகும். மரபிணிகளைக் கொண்ட டி.என்.ஏ வில் குறியன்கள் எனப்படும் (codens) பண்புக்கூறுகள் உள்ளன. இவைதாம் உயிரினங்களின் உடலியல் கூறுகளைத் தீர்மானிப்பவையாகும். வம்சாவழித்தகவல்களை சுமந்து வருபவையும் இவைதான். மரபிணிப் பொறியியல் என்பது ஏற்கனவே கூறியுள்ள குறியன்கள் எனப்படும் மரபிணிக் கூற்றை மாற்றியமைப்பதாகும். அதாவது ஒவ்வொரு உயிரினமும் தனக்கேயுரிய தனித்த பண்புகளைக் கொண்டுள்ளன. (மாங்கொட்டையிலிருந்து மாமரம் வளர்வதுபோல) இவை மரபிணிகளின் அமைப்பிற்கு ஏற்ப உருவாகின்றன. ஆனால் அறிவியலாளர்கள் உயிரினங்களின் தனித்தன்மையான பண்புகளைக் கூட மாற்றி வெவ்வேறு உயிரினங்களில் அமைத்து விடுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;டி.என்.ஏ விலுள்ள ஒரு மரபுக்கூற்றைத் தனியே பிரித்தெடுத்து அதே இனத்திலோ அல்லது மற்றொரு இனத்திலுள்ள மரபுக்கூற்றில் பொருத்தி புதியதொரு மாற்று மரபு கொண்ட உயிரினத்தை உருவாக்குவதாகும். மரபணு பொறியியலின் மூலம் நாம் விரும்புகின்ற உயிரினத்தையோ தாவரத்தையோ உருவாக்க முடியும். அதே போல நாம் விரும்பாத பண்பை நீக்கி விட்டு ஒரு உயிரினத்தை உருவாக்கிட முடியும். இந்த மாற்றம் திடீரென்று ஏற்பட்டதல்ல. இந்த வரலாறு அறிவியல் பல மைல்கல்களை கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;1957ல் கிரிகர் மெண்டல் என்ற துறவியார் பட்டாணிச் செடிகளில் பல ஆய்வுகளை அவர் நிகழ்த்தி வந்தார். அவர் நிறம், உயரம் போன்றவை அடுத்தடுத்த தலைமுறைச் செடிகளுக்கும் கடத்தப்படுவதை கண்டறிந்தார். மெண்டல் அதை மரபியல் காரணிகள் என்று கருதினார். ஆனால் அவருடைய ஆய்வுகள் அப்போது யாராலும் கணக்கிலெடுத்துக் கொள்ளப்படாமல் கிடப்பில் போடப்பட்டன. பின்னர் 1940களில் கனடா நாட்டு மருத்துவர் ஆஸ்வால்ட் ஆவரி, மெண்டலால் கண்டுபிடிக்கப்பட்ட மரபியல் காரணிகளை டி.என்.ஏ என்று தெளிவாக நிறுவினார். அவரும் அவருடன் உடன் பணிபுரிந்த அறிவியலாளர்களும் ஒரு நுண்ணுயிரிலிருந்து மற்ற உயிரினத்திற்கு அதை மாற்ற முடியும் எனவும் கண்டறிந்தனர். 1953ல் வாட்சனும் கிரிக்கும் முப்பரிமான டி.என்.ஏ அமைப்பை இரட்டைத்தன்மை வடிவமுள்ளதாக கண்டறிந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;1950முதல் 1960களுக்கு இடைப்பட்ட காலத்தில் அறிவியலாளர்கள் மரபினிச் செய்திகள் எவ்வாறு பொதிந்துள்ன? எவ்வாறு பெருக்கமடைகின்றன? தலைமுறைக்கு தலைமுறை எவ்வாறு கடத்தப்படுகின்றன? என்பனவற்றை தெளிவாகக் கண்டறிந்தனர். 1970களிலிருந்து 1980கள் வரை மரபணுவை ஒரு உயிரினத்திலிருந்து மற்ற உயிரினத்திற்கு மாற்ற முடியும் என்பதை நிருபித்தனர். இதற்காக கட்டுப்பாட்டு நொதிமங்கள் (restriction enzymes) கண்டுபிடிக்கப்பட்டன. இது அறிவியலாளர்களுக்கு மாபெரும் கருவியாக அமைந்து விட்டன.      இப்போதுள்ள பல்வேறு நுண்ணுயிரிகள் இப்படிப்பட்ட நொதிமங்கள் மரபிணிக் கத்திரிகளாக உள்ளன. இவை குறிப்பிட்ட மரபினிகளை அவை சூழ்ந்துள்ள டி.என்.ஏவில் இருந்து வெட்டி எடுக்க உதவுகின்றன. பல நூறு நொதிமங்கள் இவ்வாறு கண்டறியப்பட்டுள்ளன. மரபினிப் பொருட்களை ஒரு புதிய ஓம்புநர் உயிரிக்கு (host) மாற்றும்போது ஓட்டுதல் பணி குறிப்பிட்ட ஒரு நொதிமத் தொகுப்பால் நடைபெறுகின்றது. 1970களில் முதல் வணிக உயிரி நுட்ப மருந்து இம்முறையில் கண்டறியப்பட்டது. மனிதரின் மரபினி இன்சுலின் சுரப்பிற்கு ஒரு நுண்ணுயிரில் செலுத்தப்பட்டு புதிய வகை இன்சுலின் உருவாக்கப்பட்டது.(இப்போது நீரிழிவு நோயாளிகளுக்கு பெரும்பாலும் விலங்குகளின் இன்சுலின்தான் விற்கப்படுகின்றன என்பதை கவனத்தில் கொள்க)&lt;br /&gt;&lt;br /&gt;நுண்ணுயிரிகளில் மரபினி மாற்றம் நடத்தியவுடன் அறிவியலாளர்களின் கவனம் செடிகளுக்கு சென்றது. செடிகளில் மரபினி மாற்றப் பணி கடுமையாக இருந்தது. முதலில் சிறு நுண்ணுயிரிகளை விடக் கூடுதலான வகை மரபினிகளை அவை கொண்டிருந்தன. மேலும் இவற்றின் இவற்றின் செல்களின் சுவர்கள் ஊடுருவதற்கு கடினமாக இருந்தன. ஆனால் இயற்கையே இதற்கு ஒரு தீர்வையும் வழங்கியது. அகரச்குச்சில் (agrobacterium)என்னும் நுண்ணுயிரிச் செடிகளின் மரபினியில் இயற்கையாகவே ஊடுருவிச் செல்லும் தன்மை கொண்டது. இருப்பினும் அகரச்குச்சிகளால் அனைத்துச் செடிகளையும் ஊடுருவிச் செல்ல முடியவில்லை. இதற்கும் தீர்வாக நச்சுயிரிகளில் இருந்து மரபினிகளைப் பெறுகின்றனர். இதன் உச்சகட்டமாக மரபினித் துப்பாக்கி ஒன்றை உருவாக்கியுள்ளனர். இதன்      மூலம் எந்த செடியையும் எந்த உயிரினத்தையும் நேரடியாகத் துளைக்க முடியும் அதாவது வைரஸ் மூலமாக விரும்புகின்ற மரபணுவை மரபினி துப்பாக்கியின் மூலமாக செலுத்தி உயிரினத்தில் செலுத்த முடியும் என்ற நிலை ஏற்பட்ட பின்னர் இலாப நோக்கிலும் பல விபரீதங்களைத் தொடங்கினர். ஏனெனில் இந்த மரபினித் துப்பாக்கியின் உரிமையை டூபாண்ட் என்ற பன்னாட்டு நிறுவனம் வைத்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;விலங்குகளின் கருமுட்டையிலேயே உள்ள மரபணுவை மாற்றத் தொடங்கினர். இதன் அடிப்படையில் புதிய இன சுண்டெலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு நுண் ஊசி வழியாக சுண்டெலியின் கருவில் ஒரு மரபணுவைப் புகுத்தி மைந்து சுண்டெலி என்ற புதிய இன சுண்டெலி உருவாக்கப்பட்டது. இதே போல பிரிட்டானிய அறிவியலாளர்கள் வெள்ளாட்டையும் செம்மறி ஆட்டையும் இணைத்து வெண்மறி ஆட்டை உருவாக்கினர்.&lt;br /&gt;&lt;br /&gt;கடையில் இருக்கும்போது தக்காளி நீண்ட நாட்களுக்கு மிகவும் கனிந்து அழுகிப்போகாமல் இருக்க வேண்டும். அது குளிர்சாதனப் பெட்டியில் வைத்தாலும் அது விரைத்துப் போய் உடைந்து விடாமல் இருக்க வேண்டும். செடியிலிருந்து பறித்த பின்னரும் அது நீண்ட நாட்களுக்கு உறுதியாகவும் புதிதாகவும் அப்போது பறித்தது போன்று பளபளப்பாக இருக்க வேண்டும். அதற்கு என்ன செய்வது?. அதற்கு கண்டுபிடித்த வழிமுறைதான் மீனின் மரபணுவை தக்காளியில் புகுத்துவது ஆகும். கடுமையான தட்பவெப்ப நிலைகளிலும் நீரில் இருக்கும் உயிரினங்களின் மரபணுவை தக்காளியில் சேர்ப்பது. பிளவுண்டர் என்ற ஆர்டிக் உறைபனி சமுத்திரத்திலுள்ள மீன் வகையானது இயல்பிலேயே எவ்வளவு குளிரிலும் விரைத்து விடாத தன்மையுடையது. இதனால் இம்மீன்களின் விரைத்து விடாத தன்மையைக் கொண்ட அந்த மரபணுவை தனியே பிரித்தெடுத்து தக்காளியின் டி.என்.ஏவில் சேர்த்து அதை குளிர்சாதனப்பெட்டியில் வைத்தாலும் விரைத்துவிடாத தன்மைகொண்ட தக்காளியாக மாற்றுகின்றனர். இதே போல கத்திரிக்காய், அரிசி, சோயா பீன்ஸ், காபி மிளகு, காலி பிளவர் முட்டைக்கோஸ் பட்டாணி, முலாம்பழம், உருளைக்கிழங்கு, நிலக்கடலை, வெண்டை, வள்ளிக்கிழங்கு, கூவைக்கிழங்கு, ஏலக்காய், மொச்சை, மாதுளை பருத்தி, சணல், உதட்டுச்சாயத்திற்கான செவ்வண்ணம் தரும் உலர் குசும்பப்பூ போன்று மரபணு ரீதியான மாற்றியமைக்கப்பட்ட பொருட்களின் பட்டியல் நீளுகிறது. அடுத்த முறை நீங்கள் காய்கறி கடைக்குச் செல்லும் போது பளபளப்பாக அழகாக இருக்கும் காய்கறிகளைக் கண்டு மயங்கி விடாதீர்கள் எச்சரிக்கை. இந்த அழகுக்கு பின்னேதான் ஆபத்து மறைந்து கிடக்கிறது. அது என்ன ஆபத்து?&lt;br /&gt;&lt;br /&gt;உயிர் வாழும் உரிமைக்கு உலை வைக்கும் மரபணு தொழில்நுட்பம்&lt;br /&gt;&lt;br /&gt;மரபணுரீதியாக மாற்றியமைக்கப்பட்டவை காய்கறிகள், பழங்கள் மற்றும் பொருட்கள் மட்டுமல்ல, பல புதிய தாவர அடிப்படையிலான இனிப்பூட்டிகளும் இந்த பட்டியலில் உள்ளன. இவை சந்தைக்கு வர அணி வகுத்து நிற்கின்றன. இந்த இனிப்பூட்டிகளில் தவ்மாட்டின், மோனெல்லின், ஹெர்னாண்டல்சின், ஸ்டீவியோசை, மிராக்குலின், பிரேஸியன் போன்றவை அடங்கும். இவையெல்லாம் சக்ரோஸ் எனப்படும் சர்க்கரையைப் போல ஆயிரக்கணக்கான மடங்கு அதிகமாக இனிப்பூட்டுபவை. தாவரங்களிலிருந்து இந்த இனிப்பூட்டிகளை பிரித்தெடுப்பதற்கு அதிகமாக செலவாகும். எனவே, இந்த மரபினிகளைத் தனிமைப்படுத்தி அவைகளை பாக்டீரியாவாக மாற்றுவதை நோக்கிய ஆராய்ச்சிகள் பெருமளவில் நடைபெறுகின்றன. மரபினிப் மாற்றப்பயிர்களினால் பாதிப்புகள் இல்லையா? அந்த பாதிப்புகளை ஊடகங்கள் வெளிச்சத்திற்கு கொண்டு வருவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மரபினிப் மாற்றப் பயிர்கள் மனிதர் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களின் ஆரோக்கியம், மண் வளம், சூழல் மீது ஏற்படுத்தும் பாதிப்புகளை காண்போம். முதலாவதாக மரபணுக்கள் ஒரு உடலிலுள்ள சூழலிருந்து மற்றொரு சூழலுக்கு மாற்றப்படுவதால், மாற்றப்படும் புதிய சூழலுக்கு ஒத்துப் போவது மிகவும் குறைவாகும். அங்கிருந்தே பிரச்சினைகள் தொடங்குகின்றன. செம்மறி ஆட்டையும் வெள்ளாட்டையும் இணைத்து புதிய வெண்மறி ஆட்டை உருவாக்கியது குறித்த பரபரப்பான செய்திகள்தான் ஊடகங்களில் வந்தன. ஆனால் அந்த ஆடு மலடாகி குருடாகிப்போனது பற்றி எந்த ஊடகங்களும் செய்தி வெளியிடவில்லை. பிரிட்டனிலுள்ள ஒரு ஆய்வுக்கூடத்தில் எட்டுக்கால் பூச்சிக்கு பறவையின் மரபணுவை செலுத்தினர். ஆனால் சில மணி நேரங்களில் அந்தப் பூச்சி இறந்து விட்டது. இயற்கையின் வரம்புகளை மீறினால் இப்படித்தான் நடக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;வட அமெரிக்க தேசிய அறிவியல் கழகம் தனது அறிக்கையில் மரபினிப் மாற்ற பயிர்கள் உணவில் எதிர்பாராத அழற்சிப் பொருட்களையும் நச்சுப்பொருட்களையும் உண்டாக்கும் ஆற்றல் பெற்றவை என்றும் அவை கடுமையான சுற்றுச்சூழல் விளைவுகளையும் கட்டுப்படுத்தாத உயிரிகளையும் மண்ணிலுள்ள உயிர்மங்களின் மீது தீய விளைவுகளையும் உண்டாக்கும் ஆற்றலையும் பெற்றவை என்றும் கூறுகின்றது. பூச்சி எதிர்ப்பு என்ற பெயரில் மரபணுப் பொறியியல் முறையில் தயாரிக்கப்பட்ட பி.டி பயிர்களை சுவீடன் நாட்டின் இரண்டு விஞ்ஞான பரிசோதனைக் கூடங்கள் ஆய்வு செய்தன. இந்த ஆய்வில் மரபணுப் பொறியியல் முறையில் நோவர்ட்டீஸ் என்ற சோள வகைப் பயிரிலிருந்து சோளத்தை உட்கொண்ட பசுமை நாடாப் பூச்சிகளின் இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது. மேலும் இந்த ஆய்வில் இந்த பயிர்களில் உள்ள பி.டி நஞ்சானது மற்ற உயிரினங்களைக் கொல்வதோடு நாம் உண்ணும் உணவிலும் நுழைந்து விடும் என்பதும் இதன் தொடர்ச்சியாக உண்ணும் உணவின் மூலம் நமது உடலில் இருக்கும் பி.டி நஞ்சானது நமது நோய்களுக்கு எந்த ஆன்டிபயோடிக் மருந்தை உட்கொண்டாலும் அதை செயல் இழக்கச் செய்து விடுகின்றன என்பதும் தெரிய வந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;கூடுதலாக, மரபணுப் பொறியியல் முறையில் உருவான பூச்சி எதிர்ப்பு நஞ்சினைத் தாவரங்களாவது தங்கள் பாகங்கள் முழுவதும் உற்பத்தி செய்யும் ஆற்றல் பெறுகின்றன. இதனால் இப்பயிர்கள் அறுவடைக்குப் பின்னர் கழிவாகிப் புதைவதனால் மண் முழுவதும் நச்சுத்தன்மை கொண்டதாக மாறி விடுகிறது. இந்த நச்சுத்தன்மையையும் அப்பயிர்கள் உறிஞ்சிக் கொள்கின்றன. அது மற்ற உயிரினங்களான மனித குலத்திற்கு சேவை செய்யும் தேனி, சுருள் பூச்சி, வண்ணத்துப் பூச்சி மற்றும் முக்கியமாக விவசாயிகளின் நண்பனான மண் புழு ஆகியவற்றைக் கொன்று விடும். இது மட்டுமின்றி அந்த நிலங்களில் மேயும் ஆடு மாடுகள் மற்ற உயிரினங்கள் இறந்து விடுகின்றன. ஆந்திராவில் பி.டி. பருத்திச் செடியை சாப்பிட்ட 1500க்கும் மேற்பட்ட ஆடுகள் இறந்து விட்டன. ஆந்திராவில் கரீம் நகரிலிருந்து 80 கி.மீ தொலைவில் உள்ள மாமிடலப்பள்ளி கிராமத்தில் பி.டி பயிரிடப்பட்ட நிலத்தில் மேய்ந்த 12 மயில்கள் இறந்து விட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;எந்தப் பூச்சிக்காக இப்பூச்சி எதிர்ப்பு நஞ்சுடன் மரபணுக்கள் செலுத்தப்படுகின்றனவோ, அந்தப்பூச்சிகள் தங்களின் உடலில் இந்த நஞ்சிற்கு எதிர்ப்பு சக்தியையும் நாளடைவில் வளர்த்துக் கொள்கின்றன. அந்தப் பூச்சியானது 3லிருந்து 5 ஆண்டுகளுக்குள் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக்கொள்வதாக அமெரிக்க சுற்றுச் சூழல் பாதுகாப்பு நிறுவனம் ஒன்று தனது ஆய்வின் மூலம் கண்டுபிடித்துள்ளது. மண்ணின் உவர் நிலைமையை சகித்துக் கொள்ளும் மரபணுக்கள் பொருத்தப்பட்ட பயிர்கள் வளர்க்கப்படுவதால் பகுதியின் சூழல் மாசாவதோடு உவர் மண்ணுக்கேற்ப இயற்கையாக விளையும் பயிர்களுக்கு இடமில்லாத சூழ்நிலையும் ஏற்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு முறை மரபணுப் பொறியியல் முறையில் உருவாக்கப்பட்ட உயிரினங்களையும் தாவரங்களையும் மீண்டும் கட்டுபடுத்த முடியாது. அவை எங்குள்ளது என்பதையும் கண்டுபிடிக்காத அளவில் பெருகி விடும். இந்த முறையில் தயாரிக்கப்படாத உயிரினங்கள், தாவரங்கள் ஆகியவற்றுடன் அவை இணைந்து பரவி விடும். ஜெர்மனியில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் மரபணுப் பொறியியலுக்கு உட்படுத்தி வளர்க்கப்பட்ட பயிர்கள் 200 மீட்டர் வரை பரவியுள்ளதை கண்டுபிடித்தனர். அமெரிக்காவிலும் நார்வேயிலும் சால்மன் மீன் வகைகளில் மிக நீளமாகவும் அதிக எடையுடன் வளர்வதற்கு மரபணுக்கள் பொருத்தப்பட்டன. இம்மீன்களுக்கு இருந்த எடையுடன் 5 மடங்கு அதிகரித்தது. ஆனால் மிக வேகமாக பரவி இத்தொழில் நுட்பத்திற்குள்ளாகாத மீன்களை விட ஒன்றுக்கு 5 மடங்கு விகிதத்தில் அதிகரித்து விட்டன. இதே போல் பயோ டெக்னிக்கல் இன்டர்நேசனல் என்ற பன்னாட்டு நிறுவனம் சோயா பீன்ஸ்களுக்கு இந்த உற்பத்தி முறையைக் கடைபிடித்தது. தொடர்ந்து கண்காணித்ததில் 4 ஏக்கரில் இதே பயிர்கள் பரவியது கண்டுபிடிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு ஆண்டும் 30 ஆயிரம் உயிரினங்கள் சுற்றுச்சூழல் மாசினாலும் காடுகளை அழிப்பதாலும் அழிந்து வருகின்றன. ஐ.நாவின் உணவு மற்றும் விவசாய அமைப்பானது 75 விழுக்காடு மரபணு பெருக்கமானது இந்த நூற்றாண்டிலேயே அழிந்து விட்டது என்றும் இதற்கு முக்கிய காரணமாக தாவரங்களின் பன்முகத்தன்மையை அழித்து செயற்கையான மரபணுப் பொறியியல் முறையில் ஒருமைத் தன்மையுடன் (mono culture) வளர்க்கப்படுவதே என்று கூறியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;மரபணு பொறியியல் மூலம் ஒரே தன்மை கொண்ட ஒரே பயிர்கள் வளர்க்கப்படுவதால் அவை ஒரு நோய் தாக்கினாலே விரைவாக அழிந்து பஞ்சம் ஏற்படுகிறது. அதே சமயத்தில் பன்முகத் தன்மையுடன் பல வகைப் பயிர்கள் வளர்க்கப்படும்போது அவை எந்த வகை நோயையையும் எதிர்த்து நிற்கும் ஆற்றலைப் பெற்று விடுகின்றன. மெக்சிகோவிலும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலத்திலும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் முன்னதில் 300 வகையான பயிர்களும் வளர்க்கப்பட்டதால் இவ்விரு பகுதிகளும் அனைத்து விதமான பூச்சிகளையும் எதிர்கொள்ளும் ஆற்றலைப் பெற்றதாகத் தெரிய வந்துள்ளது. மரபணு பொறியியலின் இன்னொரு பாதக விளைவாக ஒரு பகுதியின் தட்ப வெப்ப சூழ்நிலைக்கேற்ப விளையும் பயிர்களை அழிப்பது உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;சில காலத்திற்கு முன்னதாக மான்சான்டோ என்ற பன்னாட்டு கம்பெனி மரபணு பொறியியல் மூலமாக தயாரிக்கப்பட்ட பருத்தி விதைகளை அறிமுகப்படுத்தியது. அதிக மகசூல் கிடைக்கும் என்ற இந்த கம்பெனியின் பொய்ப் பிரச்சாரத்தை நம்பி ஏராளமான விவசாயிகள் அதிக கடன் வாங்கி இந்த விதைகளை பயிரிட்டனர். ஆனால் இவை மறுபடியும் பயிரிட முடியாத மலட்டு விதைகள் என்பதாலும் அதிக மகசூல் கிடைக்காததாலும் விவசாயிகள் ஆயிரக்ககணக்கானோர் தற்கொலை செய்து கொண்டனர் என்பது அனைவரும் அறிந்த செய்தி. இந்திய அரசு இப்போது இந்த கம்பெனியின் விதைகளுக்கு மட்டுமல்ல ஏறத்தாழ 144 கம்பெனிகளின் விதைகளை இந்திய மண்ணில் பரிசோதித்து பார்ப்பதற்கு அனுமதி அளித்துள்ளது. நமது நாட்டின் இறையாண்மை தன்னிறைவான உணவு உற்பத்தியில் உள்ளது. விவசாயத்தை அழிப்பது நாட்டின் இறையாண்மையை அழிப்பதாகும். நமது நாட்டின் அடிப்படை ஆதாரமாகவும் முதுகெலும்பாகவும் உள்ள விவசாயத்தை பன்னாட்டு நிறுவனங்களுக்கு அடகு வைக்கப்படும் இந்த நாசகரமான போக்கை எப்படி தடுத்து நிறுத்தப் போகிறோம்? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: திரு சேது இராமலிங்கம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3683345437092478883-40006683822984497?l=muruganthiru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muruganthiru.blogspot.com/feeds/40006683822984497/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3683345437092478883&amp;postID=40006683822984497' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3683345437092478883/posts/default/40006683822984497'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3683345437092478883/posts/default/40006683822984497'/><link rel='alternate' type='text/html' href='http://muruganthiru.blogspot.com/2011/12/blog-post_21.html' title='உயிர் வாழும் உரிமைக்கு உலை வைக்கும் மரபணு தொழில்நுட்பம்'/><author><name>அறிவியல் விழிப்புணர்வு</name><uri>http://www.blogger.com/profile/14816292961575112498</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='7' src='http://2.bp.blogspot.com/_-B1lk_hlPgA/SbYP5SBQ4CI/AAAAAAAAAHc/wBrjaI1emS4/S220/PSF_logo.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3683345437092478883.post-3954769320188553239</id><published>2011-12-11T22:53:00.000-08:00</published><updated>2011-12-11T22:57:23.169-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுற்றுசூழல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வளங்குன்றா விவசாயம்'/><title type='text'>வளங்குன்றா விவசாயமும் பல்லுயிர்ப் பாதுகாப்பும்</title><content type='html'>தேசியப் பூங்காக்கள், சரணாலயங்கள் போன்ற பாதுகாக்கப்பட்ட பகுதிகளே இந்தியாவில் பல்லுயிரியத்தின் புகலிடமாக உள்ளன. அரிய தாவரங்களும் காட்டுயிரும் இப்பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் மட்டும்தான் பார்க்க முடியுமா? அவை அப்பகுதிகளில் மட்டும்தான் குடிகொண்டிருக்க வேண்டுமா? எல்லைக்கோடு என்பது மனிதனுக்கு மட்டும்தானே, மற்ற உயிரினங்களுக்குக் கிடையாதல்லவா?&lt;br /&gt;&lt;br /&gt;மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பல இடங்களில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியை ஒட்டியே தேயிலை, காப்பி, ஏலக்காய் போன்றவை விளைவிக்கப்படுகின்றன. இது போன்ற அரசுக்குச் சொந்தமில்லாத தனியார் விளைநிலங்களிலும் அரிய தாவரங்களும் காட்டுயிரும் தென்படும். இவற்றை பாதுகாக்க வேண்டியது மிகவும் முக்கியம். ஏனெனில் வனப்பகுதிகளுக்கு இடையே உள்ள தொடர்பு துண்டிக்கப்பட்டும், வனப்பகுதிகள் குறைந்தும், சிதைவுற்றும், அங்கு வாழும் உயிரினங்கள் வேட்டையாடப்பட்டும், வாழிட இழப்பால் அருகியும் வரும் இச்சூழலில் பல்லுயிர் பாதுகாப்பு என்பது பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் மட்டுமல்லாமல், வனச்செல்வங்கள் தென்படும் இடங்கள் அனைத்தையும் நல்ல முறையில் பாதுகாப்பது அவசியம்.&lt;br /&gt;&lt;br /&gt;மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியின் நிலப்பரப்பு பல ஆண்டுகளாக பல்வேறு மாற்றங்களை சந்தித்து வந்திருக்கிறது. இப்பகுதியில் இருந்த அடர்ந்த வனப்பகுதி 1920லிருந்து 1990 வரை 40% திருத்தப்பட்டு காப்பி, தேயிலை போன்ற தோட்டங்களாகவும், நீர்மின் திட்டங்களுக்காகவும் மாற்றப்பட்டுள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தேயிலைத் தோட்டங்களின் மொத்தப் பரப்பு சுமார் 1,19,000 ஹெக்டேர், காப்பி சுமார் 3,40,000 ஹெக்டேர் மற்றும் ஏலக்காய் சுமார் 73,000 ஹெக்டேர். இவை அனைத்தும் தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகப் பகுதிகளில் பரவியுள்ளன. மிகப்பெரிய நிலப்பரப்பில் இத்தோட்டங்கள் இருந்தாலும், இவற்றில் பெரும்பான்மையான பகுதிகள் அரசால் பாதுகாக்கப்பட்ட, பல்லுயிரியம் மிகுந்த இடங்களுக்கு மிக அருகிலேயே அமைந்துள்ளன. பலவிதமான காட்டுயிர்களும், அரிய தாவரங்களும் காப்பி மற்றும் தேயிலைத் தோட்டங்களில் தென்படுவதற்கு இதுவே காரணம். ஆனால் இப்பகுதிகளில் வாழும் இந்த உயிரினங்களைப் பாதுகாக்கவோ, சரியான முறையில் பராமரிக்கவோ எந்த முறையான திட்டமோ, சரியான மேலாண்மைக் கொள்கைகளோ இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;தேயிலை, காப்பி மற்றும் இதர தோட்டங்களில் அவற்றைப் பராமரிக்கவும் உற்பத்தியைப் பெருக்கவும் கையாளப்படும் செயற்கை, வேதி முறைகள் அப்பகுதியில் உள்ள பல்லுயிரியத்தையும், சுற்றுச்சூழலையும் பெரும்பாலும் பாதிக்கின்றன. இதற்கு பல உதாரணங்களைப் பட்டியலிடலாம். உற்பத்தியை பெருக்குவதற்காக எஞ்சியுள்ள மழைக்காட்டுத் தீவுகள், மலை உச்சியிலமைந்த புல்வெளிகள் ஆகியவற்றை முழுவதுமாகத் திருத்தி ஓரினப் பயிர்களை பயிரிடுதல், எஞ்சியுள்ள வனப்பகுதிகளையும் சீரழித்தல், திருட்டு வேட்டை, தோட்டங்களில் தென்படும் உயிரினங்களுக்கு எந்த வகையிலும் பயன்படாத வெளிநாட்டு மரங்களை நிழலுக்காகவும், விறகுக்காகவும் வளர்த்தல், நச்சுமிக்க, தடைசெய்யப்பட்ட வேதி உரங்களை கட்டுப்பாடில்லாமல் பரவலாக பயன்படுத்துதல், தொழிற்சாலை, குடியிருப்புக் கழிவுகளை ஓடையில் கலந்து நல்ல தண்ணீரை மாசுபடுத்துதல், தோட்டத்தில் அம்மண்ணில் இயற்கையாக வளரும் இயல்தாவரங்களை களைக்கொல்லிகளை அடித்தும், வெட்டியும் அப்புறப்படுத்துதல், ஓடைகளின் கரைப்பகுதி வரை பயிரிட்டு வேதி உரங்களை தெளிக்கும்போது அவை தூய நீரோடு கலத்தல் போன்றவை இதற்கான உதாரணங்களில் சில.&lt;br /&gt;&lt;br /&gt;தேயிலை, காப்பித் தோட்ட நிர்வாகிகளில் பெரும்பாலோர் அவற்றின் உற்பத்தியை பெருக்கும் வியாபார நோக்குடன் மட்டுமே செயல்படுகின்றனர். மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளிலுள்ள இத்தோட்டங்களால் அங்குள்ள பல்லுயிரியத்துக்கும் சுற்றுச்சூழலுக்கும் எப்படிப்பட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பதைப் பற்றிய விழிப்புணர்வும், அந்த பாதிப்புகளை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதும் தோட்ட நிர்வாகத்தின் அடிப்படைக் கடமை. வியாபாரத்தையும், பயிர் உற்பத்தியையும் மேம்படுத்த சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத நடவடிக்கைள் எடுப்பது அவசியம். எனினும் அது போன்ற செயல்பாடுகள், இந்தியாவில் மிகச்சில இடங்களில், மிகச்சொற்பமான அளவிலேயே நிகழ்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;தோட்ட நிர்வாகம் எவ்வாறு சுற்றுச்சூழலுக்கும் பல்லுயிர்ப் பாதுகாப்புக்கும் எவ்வாறு துணைபுரிய முடியும்? மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள தேயிலை, காப்பி மற்றும் இதர தோட்டங்களில் எஞ்சியுள்ள, அங்குமிங்கும் சிதறிக்கிடக்கும் சிறுசிறு மழைக்காட்டுத் தீவுகளையும், சோலைப் புல்வெளிகளையும், ஓடைகளையும், ஓடையோரக் காடுகளையும் கவனமாகப் பாதுகாக்க வேண்டும். முக்கியமாக பல்லுயிரியம் மிகுந்துள்ள ஆனைமலை மற்றும் நீலகிரிப் பகுதிகளில் அமைந்துள்ள தீவுக்காடுகளை மேலும் சீரழிக்காமல் அங்கு தஞ்சமடைந்துள்ள அரிய உயிரினங்களான யானை, பெரிய இருவாசி (Hornbill) மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மட்டுமே வாழும் ஓரிட வாசிகளான சோலை மந்தி (சிங்கவால் குரங்கு), நீலகிரி கருமந்தி, மலபார் இருவாசி போன்ற உயிரினங்களையும் பாதுகாக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தோட்டங்களில் நிழலுக்காக வளர்க்கப்படும் சில்வர் ஓக், அல்பீசியா, மீசோப்சிஸ் போன்ற நம் மண்ணுக்குச் சொந்தமில்லாத அயல்மரங்களை வளர்ப்பதைத் தவிர்த்து தோட்டம் அமைந்துள்ள இடம், மழையளவு மற்றும் உயரத்துக்கு ஏற்றவாறு அப்பகுதியில் இயற்கையாக வளரும் மரங்களை வளர்க்கலாம். இது அப்பகுதியிலுள்ள உயிரினங்களுக்கு வாழ்வதற்கான இடத்தையும், உணவையும், இடம்பெயர்வதற்கு உதவியாகவும், அம்மண்ணுக்கு இயற்கையான செழிப்பையும் தரும். மண்ணரிப்பைத் தடுக்கும் வகையில் தாவரங்களை மலைச்சரிவுகளில் வளர்த்தல், ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை, வேதி உரங்களின் பயன்பாட்டைக் குறைத்தல் அல்லது முற்றிலுமாக தவிர்த்தல், தோட்டப் பண்ணைகளிலும் அது சார்ந்த தொழிற்சாலைகளிலும், வீட்டுக் குடியிருப்புப் பகுதிகளிலும் சரியான கழிவுக் கட்டுப்பாடு மற்றும் கழிவு மேலாண்மையை கடைபிடித்தல் போன்றவை தோட்ட நிர்வாகங்கள் கடைபிடிக்க வேண்டிய நல்ல செயல்பாடுகளில் சில. அதோடு மட்டுமல்லாமல் தோட்டத் தொழிலாளர்களுக்கு முறையான வீடு, கல்வி, மருத்துவ வசதி, சரியான சம்பளம் போன்ற செயல்பாடுகள் தோட்ட நிர்வாகத்தின் சமுதாய கடமையுணர்வை எடுத்துக்காட்டவும், சமூகத்தில் நற்பெயரைப் பெறவும், விளைபொருளின் தரத்தை உயர்த்தவும் உதவும்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி, இவ்வாறு ஒரு தோட்ட நிர்வாகம் நல்ல செயல்பாடுகளை கடைபிடிப்பதால் அவர்களுக்குக் கிடைக்கும் நற்பெயரைத் தவிர வேறு என்ன லாபம்? இது எவ்வாறு அவர்களது தொழில் முன்னேற்றதுக்கும், விளைபொருளின் தரத்தை உயர்த்தவும் வழி அமைக்கும்?&lt;br /&gt;&lt;br /&gt;நமக்கு பரிச்சயமான ISI, Agmark போன்ற ஒரு பொருளின் தரத்தைக் குறிக்கும் முத்திரைகளைப் போல் “வளங்குன்றா விவசாய கட்டமைப்பு” (Sustainable Agriculture Network  SAN) வகுத்துள்ள நியமங்களை பின்பற்றி தேயிலை, காப்பித் தோட்டங்களில் நடவடிக்கை மேற்கொண்டால், “மழைக்காடு கூட்டமைப்பு” (Rainforest Alliance) தரும் சான்றிதழையும், அதன் முத்திரையையும் தங்களது விளைபொருட்களின் மீது பதித்துக்கொள்ளும் உரிமையையும் அந்நிர்வாகம் பெறலாம். சர்வதேச சந்தையில் இம்முத்திரை கவனம் பெற்று அவர்களின் விளைபொருள்கள் சிறந்த அளவில் விலைபோகும் வாய்ப்புகளை அதிகரிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;சர்வதேச அளவில் இதுவரை பல நாடுகளில் சுமார் 35,000 ஹெக்டேர் பரப்புள்ள தேயிலை, காப்பித் தோட்டங்கள் மழைக்காடு கூட்டமைப்பின் சான்றிதழைப் பெற்றுள்ளன. தேயிலை மற்றும் காப்பி போன்ற தோட்டப் பண்ணைகள் பின்பற்ற வேண்டிய பத்து நியமங்களை SAN வகுத்துள்ளது. அவை:&lt;br /&gt;&lt;br /&gt;1.     சமூக மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மை&lt;br /&gt;2.     இயற்கைச்சூழல் பாதுகாப்பு&lt;br /&gt;3.     காட்டுயிர் பாதுகாப்பு&lt;br /&gt;4.     நீர்நிலைகள் பாதுகாப்பு&lt;br /&gt;5.     தொழிலாளர்கள் உரிமை&lt;br /&gt;6.     தொழிலாளர்கள் உடல்நலம், பாதுகாப்பு&lt;br /&gt;7.     சமூக உறவு மேம்பாடு&lt;br /&gt;8.     ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை&lt;br /&gt;9.     மண்வள மேலாண்மை, பாதுகாப்பு&lt;br /&gt;10.    ஒருங்கிணைந்த கழிவு மேலாண்மை&lt;br /&gt;இந்தியாவில் வளங்குன்றா விவசாயத்தின் அவசியம், பல்லுயிர்ப் பாதுகாப்பு, ஷிகிழி நியமங்களை பின்பற்றுவதால் ஏற்படும் நல்ல விளைவுகள் ஆகியவற்றைப் பற்றிய விழிப்புணர்வை தேயிலை, காப்பித் தோட்டப் பண்ணை நிர்வாகங்களுக்கு ஏற்படுத்த வேண்டியது அவசியம்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் விவரங்களுக்கு: www.ecoagriculture.in இணையதளத்தைப் பார்க்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: ப.செகநாதன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3683345437092478883-3954769320188553239?l=muruganthiru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muruganthiru.blogspot.com/feeds/3954769320188553239/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3683345437092478883&amp;postID=3954769320188553239' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3683345437092478883/posts/default/3954769320188553239'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3683345437092478883/posts/default/3954769320188553239'/><link rel='alternate' type='text/html' href='http://muruganthiru.blogspot.com/2011/12/blog-post_11.html' title='வளங்குன்றா விவசாயமும் பல்லுயிர்ப் பாதுகாப்பும்'/><author><name>அறிவியல் விழிப்புணர்வு</name><uri>http://www.blogger.com/profile/14816292961575112498</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='7' src='http://2.bp.blogspot.com/_-B1lk_hlPgA/SbYP5SBQ4CI/AAAAAAAAAHc/wBrjaI1emS4/S220/PSF_logo.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3683345437092478883.post-1608849631660888189</id><published>2011-12-06T23:04:00.000-08:00</published><updated>2011-12-06T23:06:10.182-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மின்சாரம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அணுஉலை'/><title type='text'>கூடங்குளம் - ஆற்றலா? அழிவா?</title><content type='html'>குவலயத்தின் உயிர்களையெல்லாம் வெற்றி கொண்டு செழித்திருக்கும் மனித இனம் தன் கண்டுபிடிப்புகளால் தன்னைத் தானே அழித்துக்கொள்வதும் நடந்துகொண்டுதானிருக்கிறது. அவ்வாறான கண்டுபிடிப்புகளில் ஒன்றுதான் அணுஉலை.&lt;br /&gt;&lt;br /&gt;1930ல் முதன்முதலில் அணுவின் கூறாக நியூட்ரான் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர்தான் அணுஉலைகள் தோன்றின. அணுவைப் பிளக்கும்போது கிடைக்கும் பேராற்றல் பேராசை கொண்ட மனிதனை ஈர்த்தது. பூமியில் கிடைக்கும் யுரேனியம், தோரியம், புளூட்டோனியம் ஆகிய தனிமங்களை அணுவில் செலுத்திப் பிளந்து அதன் மூலம் கிடைக்கும் ஆற்றலைக் கொண்டு நீரை ஆவியாக்கி அதன் மூலம் டர்பனைச் சுழற்றி, அதனோடு பொருத்தப்பட்டிருக்கும் ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் தயாரிப்பதே அணு உலைகளின் செயல்பாடு. அவற்றில் பயன்படுத்தப்படும் தண்ணீரின் தன்மையைப் பொருத்தும், பயன்படுத்தும் முறை பொருத்தும் அணு உலைகளை நான்கு வகைகளாக பிரித்துள்ளனர் விஞ்ஞானிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;அணு உலைகளின் கழிவுகளான யுரேனியத்தையும் புளூட்டோனியத்தையும் கொண்டு நீர்மூழ்கிக் கப்பல்களை இயக்கலாம், அணுகுண்டு தயாரிக்கலாம். வல்லரசு நாடுகள் இதையே செய்கின்றன. சப்பானில் வீசியது கூட இவ்வாறு செய்யப்பட்ட அணுகுண்டின் சக்தியை சோதித்துப் பார்க்கும் முயற்சிதான் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இந்த வல்லாண்மையில்தான் ஒளிந்துகொண்டுள்ளது இரகசியம். இதுதான் அணுசக்தி விஞ்ஞானிகளும், 2020ல் இந்தியா வல்லரசு என்ற கனவைக் கடைவிரித்த மேதகு அப்துல் கலாம் அவர்களும் கூடங்குளம் அணு உலைக்கு பரிந்து வரக் காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைக்கு சற்றேறக்குறைய 400 அணுஉலைகள் உலகெங்கிலும் செயல்படுகின்றன. இதில் அமெரிக்காவில் மட்டும் 104 அணு உலைகளும், சப்பான், செருமனி, ஃபிரான்ஸ் போன்ற நாடுகளில் தலா 40-50 அணு உலைகளும், இந்தியாவில் 20 அணு உலைகளும் அதில் தமிழகத்தில் 1 அணு உலையும் செயல்படுகின்றன. தற்போது இந்தியாவில் நம் கவனம் கோரும் கூடங்குளத்தையும் சேர்த்து 10 அணு உலைகள் தயாரிப்பில் உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி எவ்வளவுதான் மின்சாரம் தேவை இந்தியாவிற்கு? இவ்வாண்டிற்கான தேவை 175000 மெகாவாட். இதில் 60-65 சதவிகிதம் நிலக்கரி மூலம் தயாரிக்கப்படுகிறது. 25% நீர் மற்றும் காற்று மூலம் பெறப்படுகிறது. சூரிய வெப்பம் மற்றும் இதர வழிகள் போக 4780 மெகாவாட் அதாவது 2.73% சதவிகித மின்சாரமே அணு உலைகளால் தயாரிக்கப்படுகிறது. இதில் மின்பகிர்வின்போது ஏற்படும் இழப்பினால் வீணாவதே அதிகம் என்கிறார்கள் கூடங்குளத்தில் 2 அணு உலைகள் முடியும் தருவாயிலும், 4 அணு உலைகள் அனுமதி வழங்கப்பட்டு தயாரிப்பிலும் இருக்கின்றன. மின் உற்பத்திக்குத் தயாராக இருக்கும் அணு உலையின் திட்டச் செலவு ரூபாய் 13615 கோடி. உற்பத்தித் திறன் 2000 மெகாவாட்.&lt;br /&gt;&lt;br /&gt;நிலக்கரி பற்றாக்குறையாகி வரும் வேளையில் அணு உலைகள் இந்திய அமெரிக்க அணு ஒப்பந்தத்தின் அமெரிக்கப் பிரதிநிதி ஆஷ்லே டெல்லிஸ் சொல்வது போல் சொகுசு வசதிதானா? இருப்பின் மக்கள் ஏன் பீதியடைய வேண்டும்? தெருவில் இறங்கி போராடவேண்டும்?&lt;br /&gt;&lt;br /&gt;அணு உலைகள் உலகில் செயல்பட ஆரம்பித்த இந்த 80 ஆண்டுகளில் இதுவரை 1979ல் அமெரிக்காவில் 3மைல் தீவு விபத்து, 1986ல் ருசியாவில் செர்னோபில் விபத்து, மிக அண்மையில் 2011ல் சப்பானில் புகுஷிமா விபத்து போன்ற பெரும் விபத்துக்களைச் சந்தித்துள்ளது மனித இனம். இது தவிர சிறு விபத்துகள் எங்கெங்கும் நடந்த வண்ணமே உள்ளன. அணு உலைகள் தயாரிப்பு வெகு சில முதலாளிகள் கையிலேயே இருப்பதால் அதன் கட்டுமானக் குறைபாடுகளை கண்காணிப்பதோ, குறைபாடுள்ள உலைகளை நிராகரிப்பதோ நடப்பதில்லை. அவ்வாறான குறைபாடுகளால் கதிர்வீச்சுக் கசிவு என்பது ஒரு நிரந்தர அச்சுறுத்தலாகவே இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அணு உலைக் கழிவுகளை அழிப்பதற்கான தொழில்நுட்பம் இதுவரை மனிதனால் கண்டுபிடிக்கப்படவில்லை. அதுமட்டுமல்லாமல் ஒரு அணு உலையின் ஆயுட்காலம் 40-50 ஆண்டுகள் மட்டுமே. அதன்பிறகும் அதில் கதிர்வீச்சு இருக்கும். அதனைப் பாதுகாப்பதே ஒரு பெருஞ்செலவு பிடிக்கும் தொழில்நுட்பம். அணுக்கழிவான யுரேனியம் 2 லட்சம் ஆண்டுகளுக்கு கதிர்வீச்சை வெளியிடுமாம். அதனினும் இக்கதிர்வீச்சு பல்லாயிரம் மைல்கள் கடக்கவல்லது என்பதும் அணு உலைகளின் ஆபத்தை நமக்கு உணர்த்துகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;அண்மையில் நடந்த புகுஷிமா விபத்தில் புகுஷிமாவிலிருந்து 8600 கி.மீ. தொலைவில் இருக்கும் அமெரிக்க மாகாணம் கலிபோர்னியாவிலும் தலைநகர் வாஷிங்டனிலும் கதிர்வீச்சு பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்ற தகவல் நிலைமையின் தீவிரத்தை நமக்கு தெரிவிக்கின்றன. புகுஷிமாவிலிருந்து சென்னை 6600 கி.மீ. தொலைவே. காற்றின் பாதை அமெரிக்கா நோக்கி இருந்ததால் நமக்கு பாதிப்பு இல்லை என்று அதிகாரிகள் சமாளித்தார்கள். ஆனால் அடுத்து பெய்த மழைக்கு கொரியா கதிர்வீச்சிலிருந்து பாதுகாக்க பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தது. எனில் காற்றின் திசை இந்தியா நோக்கியும் திரும்பும் என்றுதானே பொருள்?&lt;br /&gt;&lt;br /&gt;அணுஉலைக் கழிவுகளின் கதிர்வீச்சு பல தலைமுறைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தவல்லன. புற்றுநோய், மலட்டுத்தன்மை, ஊனமுற்ற குழந்தைகள் பிறப்பு போன்றவற்றை ஏற்படுத்துவன. அயோடின் 131 எனும் வாயுக்கழிவு வெளியேறுவதால் ஆட்டோ இம்யூன் தைராய்டு வியாதியும் தைராய்டு புற்றுநோயும் ஏற்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;சப்பானில் புகுஷிமா அணு உலையின் மூன்றடுக்கு குளிர்விப்பான்கள் அடுத்தடுத்து பழுதடைந்த விபத்தில் உயிரிழப்பு சில நூறு மட்டுமே. பேரிடர் மேலாண்மையில் கொட்டை போட்டவர்கள் சப்பானியர்கள். அவர்கள் கண்டிராத பேரிடர்களே இல்லை எனலாம். அணு உலை விபத்து நடந்தவுடன் அந்நாட்டு அரசு மக்களுடன் இருப்பதாக அறிவித்தது. 2 நாட்களில் 20 கி.மீ விட்டத்திற்கு 2 லட்சம் மக்களை அப்புறப்படுத்தினார்கள் அவர்கள். மேலும் 2 லட்சம் பேரை வீட்டுக்குள் இருக்க வைத்தார்கள். ஆனால் இங்கு நிலைமை அப்படியா? உண்மை இருக்கிறதா முதலில் நம் அதிகாரிகளிடம்?&lt;br /&gt;&lt;br /&gt;சுனாமிக்கு முன் கூடங்குளத்தில் அணு உலை கடல்மட்டத்திலிருந்து 5 மீட்டர் உயரத்தில் உள்ளதென தெரிவித்தவர்கள், சுனாமிக்குப் பின் 10 மீட்டர் உயரத்தில் உள்ளதென்றும், தற்பொழுது 7 மீட்டர் உயரத்தில் உள்ளதென்றும் சொல்வதன் காரணி என்ன? சுனாமியின் போது கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் விஞ்ஞானிகளும் உயர் அதிகாரிகளும் மட்டுமே பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;சப்பானியக் கப்பல்கள் அணுஉலைகளைக் குளிர்வித்த கதிர்வீச்சு நிறைந்த கடல்நீரை அடி நீராக (பல்லஸ்ட் வாட்டர்) கொணர்ந்து சத்தமின்றி சென்னைத் துறைமுகத்தில் கலந்ததாக டைம்ஸ் ஆஃப் இந்தியா கடந்த மே மாதம் செய்தி வெளியிட்டது. சீனா மற்றும் ஐரோப்பிய துறைமுகங்கள் அபாயச் செய்தி வெளியிட்டு தடுத்தன. கோவா துறைமுகத்தில் அக்கப்பல்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இங்கு?&lt;br /&gt;&lt;br /&gt;1948ல் ஏற்படுத்தப்பட்டது இந்திய அணுசக்தி ஆணையம். 1954லிருந்து இயங்குகிறது இந்திய அணுசக்தித் துறை. அணுசக்தியை நெறிப்படுத்தவும் வாரியம் செயல்படுகிறது. ஆனால் இவை நம் மக்கள் நலன்களை இன்று பேணுகின்றனவா? பாதுகாப்பு குறித்த பயத்தைப் போக்குகின்றனவா? பொதுநல வழக்குகள் கூட அணு உலைப் பாதுகாப்பு அணுசக்தி சட்டப்பிரிவு 18ந் கீழ் இரகசியமானது என தள்ளுபடி செய்யப்படுகின்றன. அமெரிக்காவுடனான 123 ஒப்பந்தம் அணு விபத்து எப்பொழுது ஏற்பட்டாலும் ரூ.2500 கோடி இழப்பீடு வழங்கினால் போதுமானது என்கிறது. 35 ஆண்டுகள் கழித்து நிகழ்ந்தாலும்!&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் சொல்லும் உலையையே வாங்கவேண்டும். அதன் பராமரிப்புக்கும் அவர்களையே கூப்பிடவேண்டும். மொத்தத்தில் சப்பானில் விபத்துக்கு காரணமான அணு உலைகளை வழங்கிய அமெரிக்க நிறுவனமான ஜெனெரல் எலக்ட்ரிக் நிறுவனத்திற்கு சாதகமாகவே அந்த ஒப்பந்தம் அமைந்திருக்கிறது. அணுசக்தி இழப்பீட்டுத் தொகை மசோதா இயற்கை இடர்ப்பாடுகளால் அணு உலைகளில் விபத்து நடந்தால் இழப்பீட்டுத் தொகை வழங்கத் தேவையில்லை என்று கூறுகிறது. சுனாமிக்குப் பிறகு கல்பாக்கத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் நோய்ப்பரவலும் ஊனமும் அதிகமாகியுள்ளன. புதுச்சேரியைச் சேர்ந்த 4 மீனவக் குப்பங்களில் சுனாமிக்குப் பிறகு புற்றுநோய், பிறவி ஊனம், கருக்கலைதல் அதிகமாகியிருப்பதை புதுச்சேரி அரசே ஒப்புக்கொண்டுள்ளது. கதிர்வீச்சு காரணமா என்று கண்டறியப்படவேண்டியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கல்பாக்கம் அணுமின் நிலைய ஊழியர்களிடையே மல்டிபில் மயலோமா எனும் எலும்பு மஜ்ஜை புற்றுநோய் தாக்குதல் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் அரசோ அதிகாரிகளோ இன்றுவரை சரியான முறையில் பொதுமக்கள் மற்றும் சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்களின் கேள்விகளுக்கு பதிலிறுக்கவில்லை. மாறாக அவர்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள். கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு குறித்து தொடர்ந்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் மருத்துவர் புகழேந்திக்கு சரியான விளக்கங்களைத் தர அதிகாரிகள் மறுக்கின்றனர். அரசுக்கு கிண்கிணி அடிக்கும் சில நாளேடுகள் மக்கள் போராட்டங்களை முன்னெடுக்கும் போராளிகளைக் கொச்சைப்படுத்திய வண்ணம் இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;அணு உலைகள் இன்றி நம் வாழ்க்கை நகரும். கிரீன்லாந்தில் 100% மாற்று எரிசக்திக்கு மக்கள் மாறி இருக்கிறார்கள். 2040 க்குள் செருமனி மொத்த அணு உலைகளையும் மூடப்போவதாக அறிவித்திருக்கிறது. இவை ஒரு நல்ல தொடக்கமே. மின் பகிர்வின் இழப்பை ஈடுகட்ட நிலக்கரி மற்றும் நீர் மின் நிலையங்களை அதிக இடங்களில் அமைத்து மின்சாரத்தை சேமிப்பதும் நம்மிடம் பெருமளவில் இருக்கும் இயற்கையின் கொடையான சூரியசக்தியை பயன்படுத்துவதும் மாற்று எரிசக்திகளை ஊக்குவிப்பதுமே நம் இன்றைய தேவையாகும். வல்லரசு கனவில் இந்தியாவை ஒருங்கிணைப்பதை விடவும் பாதுகாப்பான மண்ணையும் நீரையும் காற்றையும் நம் வருங்கால இளைய தலைமுறைக்கு விட்டுச்செல்வது நம் ஒவ்வொருவர் மட்டுமல்லாது நம் அரசின் தலையாய கடமையுமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: பூவுலகு மற்றும் திரு.சாருமா&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3683345437092478883-1608849631660888189?l=muruganthiru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muruganthiru.blogspot.com/feeds/1608849631660888189/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3683345437092478883&amp;postID=1608849631660888189' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3683345437092478883/posts/default/1608849631660888189'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3683345437092478883/posts/default/1608849631660888189'/><link rel='alternate' type='text/html' href='http://muruganthiru.blogspot.com/2011/12/blog-post_06.html' title='கூடங்குளம் - ஆற்றலா? அழிவா?'/><author><name>அறிவியல் விழிப்புணர்வு</name><uri>http://www.blogger.com/profile/14816292961575112498</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='7' src='http://2.bp.blogspot.com/_-B1lk_hlPgA/SbYP5SBQ4CI/AAAAAAAAAHc/wBrjaI1emS4/S220/PSF_logo.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3683345437092478883.post-5472329969106344319</id><published>2011-12-05T02:53:00.000-08:00</published><updated>2011-12-05T02:54:37.775-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அறிவியல் அறிஞர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இயற்கை'/><title type='text'>பறவையியல் அறிஞர் சாலிம் அலி - வாழ்வும் பணியும்</title><content type='html'>இன்று நாம் பார்த்து மகிழ்ந்து அனுபவித்துக் கொண்டிருக்கும் காடு, மலைகள், ஏரிகள், பறவைகள், விலங்குள், பூச்சிகள் யாவும் சாலிம் அலி என்ற ஒற்றைச் சொல்லின் பின்னணியில் அடங்கியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;பத்தாவது வயதில் தனது தாய் மாமா பரிசாக கொடுத்த காற்று விசை துப்பாக்கி மூலம் இயற்கையுடனான தமது நேசத்தை தொடங்கிய சாலிம் அலி, இறக்கும் வரை, சற்றேறக் குறைய எண்பது ஆண்டுகள் பறவையியல் துறையில் கடுமையாக களமாற்றினார்.&lt;br /&gt;&lt;br /&gt;சாலிம் அலி யார் என்று கேட்டால், பள்ளி மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும், பெரியவர்களுக்கும் இன்று தெரியாத நிலை. இதுதான் நமது சூழல் அறிவு. நமக்கான சூழல் பாடங்களும் பொத்தாம் பொதுவாகவே உள்ளது. சூழல் ஆர்வலர்களுக்கு மட்டுமே தெரிந்தவராக சாலிம் அலி உள்ளார் என்பது பள்ளிகளின் தோல்விகளில் ஒன்றாகும். கி.பி 1896ம் ஆண்டு நவம்பர் 12ஆம் தேதி மும்பையில் சாலிம் அலி பிறந்தார். ஐந்து சகோதரர்கள், நான்கு சகோதரிகளுக்கு கடைக்குட்டியாக பிறந்தார். பிறந்த சில வருடங்களில் தாய், தந்தை இருவரையும் இழந்த சாலிம் அலி, குடும்பத்தை அவருடைய மாமா அமரிருத்தீன் குழந்தைகள் அனைவரையும் கல்வி கற்பித்து வளர்த்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;தனது பத்தாவது வயதில் வீட்டில் கூடு கட்டியிருந்த மஞ்சள் குருவியை சுட்டு, அது குறித்து விளக்கம் பெற பம்பாய் இயற்கை வரலாற்று கழகத்தை அணுகியதில் இருந்து அவருடைய இயற்கை வரலாறு தொடங்கியது எனலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளியில் சாதாரண மாணவனாகவே பள்ளிப் படிப்பை முடித்த சாலிம் அலி, உறவினர்களின் வற்புறுத்தலுக்காகவே மேற்படிப்பு படித்தார். ஆனால், மனம் முழுக்க இயற்கை மீதே இருந்தது. பழைய மியான்மரில் (பர்மா) தனது சகோதரர் நடத்தி வந்த தொழிலை நிர்வகிக்க பத்தாண்டுகளுக்கும் மேலாக இருந்த போதும் விடுமுறை நாட்களில் குதிரையை எடுத்துக் கொண்டு காடு, மலைகள் என சுற்றியலைவது தான் அவருக்கு பிடித்தமான பொழுது போக்காக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மும்பை திரும்பிய பின் 1918 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தெஹ்பினாவை கரம் பிடித்தார் சாலிம் அலி. பறவைகள் பற்றிய தேடல், காடு, மலைகள் என சுற்றுவது என அனைத்திலும் தெஹ்பினா கணவரின் மனம் ஒத்து பங்கேற்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;சாலிம் அலிக்கு பல நேரங்களில் வேலை கிடைக்காமல் சுற்றிக் கொண்டிருப்பதை பார்த்த உறவினர்கள் மிகவும் கேவலமாக பேசினர். தெஹ்பினா அதையெல்லாம் பொருட்படுத்தாமல் கணவரின் வேலைகளுக்கு உதவிகரமாக இருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;1929ஆம் ஆண்டு ஜெர்மனியில் உள்ள பெர்லின் பல்கலைக் கழகத்தில் பறவையியல் குறித்து முறையானதொரு கல்வி கற்க கடும் பொருளாதார சிரமத்தில் புறப்பட்டுச் சென்றார். பேரா. இர்வின் ஸ்ட்ரிங்ஸ்மர் அவர்கள் வழிகாட்ட கல்வியுடன் அனுபவ அறிவை பக்கத்தில் அமைந்துள்ள தீவுகளில் வலசை வரும் பறவைகள் பற்றி சுற்றியலைந்து கற்றுத் தேர்ந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;1930ம் ஆண்டு இந்தியா திரும்பிய பிறகும் சரியான வேலை கிடைக்காமல் மிகவும் அவதியுற்றார். பறவைகளை பற்றி கணக்கெடுக்க ப.இ.வ.க சாலிம் அலியை கேட்க உடனடியாக ஒப்புக் கொண்டார். அதே சந்தர்ப்பத்தில் அதற்குரிய நிதியை டீசniவாடிடடிபல ளுரசஎநல என்ற தலைப்பின் கீழ் தர ஐதராபாத் சமஸ்தானம் சம்மதம் தெரிவித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;5 மாதங்கள் கடுமையான காட்டுப் பாதை, ஏரி, குளம், மாட்டு வண்டி சவாரி, மலைகள், சதுப்பு நிலங்கள் என பல்வேறு பறவைகளின் வாழ்விடங்களில் நேரிடையாக பார்த்து குறிப்புகள் எழுதி, அதை ஆவணமாக்கினார். இந்த அரும் பணி அவருக்கு பெரும் புகழைத் தேடித் தந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;1939ம் ஆண்டு ஜூலை மாதம் அவரது அன்பு மனைவி தெஹ்பினாஅறுவை சிகிச்சையில் எதிர்பாராத விதமாக இறக்க சாலிம் அலி மிகவும் சோர்வுற்றார். சிறிது கால இடைவெளியில் அவரது பணி மீண்டும் தொடங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;1941ம் ஆண்டு Book of Indian Birds என்ற சாலிம் அலியின் புகழ் பெற்ற முதல் நூல் வெளியானது. இந்நூல் இதுவரை 20 பதிப்புகளை கண்டுள்ளது. பாரம்பரிய மூடநம்பிக்கைகள், பத்தாம் பசலித் தனமான கருத்துக்கள் நிரம்பியுள்ள இந்திய சமூகத்தில் பறவையியல் துறையில் விஞ்ஞான பூர்வமான அணுகுமுறையை நடைமுறைப்படுத்தினார்.&lt;br /&gt;&lt;br /&gt;குஜராத் மாநிலத்தில் கட்ச் பகுதியில் 50 லட்சம் பூ நாரைகள் ஒன்று கூடி, கஞ்முகப் பகுதியில் இனப்பெருக்கம் செய்வதை கண்ட சாலிம் அலி, ஆசியாவின் பெரிய பூ நாரைகள் நகரம் என குறிப்பிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;1938 நவம்பரில் இந்திய பிரதிநிதி (வைஸ்ராய்) வின் லித்கோ பிரபு தமது நண்பர்களுடன் இணைந்து ஒரே நாளில் 4233 வாத்துக்களை சுட்டுக் கொன்றதை நேரில் பார்த்து வேதனையுற்ற சாலிம் அலி, ஆழமில்லாத அபூர்வமான ஏரியை காக்க போராடி வென்றார். அந்தப் பகுதியே இன்று உலகப் புகழ்பெற்ற பரத்பூர் பறவைகள் சரணாலயம் ஆகும். இது இராஜஸ்தானில் அமைந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய பறவைகளின் வலசை முறையை ஆராய வளையமிடுதலை பரத்பூரில் தான் சாலிம் அலி அறிமுகப்படுத்தினார். சைபீரியக் கொக்கு, சரகக் கொக்கு, பட்டை தலை வாத்து போன்ற பல பறவையினங்களுக்கு ஏற்ற உறைவிடமாக பரத்பூர் அமைந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;சர்குஜா மன்னர் 1970ம் ஆண்டு வரை தமது பிரதேசங்களில் 1170 க்கும் மேற்பட்ட புலிகளை கொன்றிருக்கிறார். அங்கு சென்ற சாலிம் அலி இந்திய புலிகளின் நிலையை எண்ணி, அதனைக் காக்க அரசியல் தலைவர்களுக்கு தமது கருத்தாழமிக்க கடிதங்கள் மூலம் புரிய வைத்து அந்த பகுதியை காப்பாற்றினார். அந்தக் காடுகள் தான் இன்று கன்ஹா புலிகள் சரணாலயம் மற்றும் தேசிய பூங்கா வாக உலகப் புகழ்பெற்று விளங்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கேரள மாநிலத்தில் அமைந்துள்ள அமைதி பள்ளத்தாக்கு சாலிம் அலியின் கடின போராட்டத்தின் மூலம் காப்பாற்றப்பட்டு இன்று புகழ்பெற்று விளங்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சாலிம் அலி தனது நண்பரான தில்லானின் உதவியோடு இந்தியா, பாகிஸ்தானின் பறவைகள் கையேடு என்ற நூலை 10 தனித் தனி தொகுதியாக வெளியிட்டார். அனைத்து நூல்களும் உலகப் புகழ் பெற்றன.&lt;br /&gt;&lt;br /&gt;சாலிம் அலியின் திறமைகளை அங்கீகரித்த இந்திய அரசு, நிலையானதொரு ஆய்வுக் கூடம் கட்டுவதற்கான ஒப்புதலை வழங்கி கட்டியது தான் இன்று அமைந்துள்ள ஹார்ன் பில் பவனாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;சாலிம் அலியின் இந்தியா என்ற தலைப்பில் அவரது வாழ்வை 1983ம் ஆண்டு ஆவணப்படமாக்கி சிறப்பித்தது இந்திய அரசின் செய்தி, தகவல் தொடர்புத் துறை. ஒரு சிட்டுக் குருவியின் வீழ்ச்சி என்ற சுயசரிதையை நண்பர்கள் உதவியுடன் தமது கடைசி காலத்தில் சாலிம் அலி செய்து முடித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;தனது 70 வது வயதில், ஆரம்ப பாடம் கற்ற பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது அவரது உழைப்பிற்கான அங்கீகாரமாக கருதப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;முனைவர் சாலிம் அலியை பல்வேறு பரிசுகள் பதவிகள் தேடிச் சென்று புகழ் ஈட்டிக் கொண்டன. இந்திய அரசின் பத்மபூஷன் 1958, பத்ம விபூஷன் 1976 விருதுகளை தமது பறவையியல் சேவைக்காக பெற்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;நோபல் பரிசுக்கு இணையான ஜே. பால்கெய்பு பன்னாட்டு பரிசை 1976ம் ஆண்டு காட்டுயிர் பாதுகாப்புக்காக பெற்றார். இந்திய அரசு நாடாளுமன்றத்தில் நியமன உறுப்பினர் பதவியை சாலிம் அலிக்கு வழங்கி கௌரவித்தது. இதுபோல் எண்ணற்ற விருதுகள் அவரை தேடிச் சென்றன. 1987 ம் ஆண்டு தாம் இறக்கும் வரை 10 க்கும் மேற்பட்ட நூல்களை இந்திய சமூகத்திற்கு அளித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;தமது வாழ்நாள் முழுவதும் இயற்கை, காட்டுயிர் பாதுகாப்பு என்று விளங்கிய சாலிம் அலி, தாம் அனுபவித்த எழிலார்ந்த இயற்கை, காடுகள், மலைகள், காட்டுயிர்கள் என அனைத்தையும் காப்பாற்றி நம் கையில் ஒப்படைத்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: இளைஞர் முழக்கம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3683345437092478883-5472329969106344319?l=muruganthiru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muruganthiru.blogspot.com/feeds/5472329969106344319/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3683345437092478883&amp;postID=5472329969106344319' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3683345437092478883/posts/default/5472329969106344319'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3683345437092478883/posts/default/5472329969106344319'/><link rel='alternate' type='text/html' href='http://muruganthiru.blogspot.com/2011/12/blog-post.html' title='பறவையியல் அறிஞர் சாலிம் அலி - வாழ்வும் பணியும்'/><author><name>அறிவியல் விழிப்புணர்வு</name><uri>http://www.blogger.com/profile/14816292961575112498</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='7' src='http://2.bp.blogspot.com/_-B1lk_hlPgA/SbYP5SBQ4CI/AAAAAAAAAHc/wBrjaI1emS4/S220/PSF_logo.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3683345437092478883.post-4135953936511896745</id><published>2011-11-12T05:20:00.000-08:00</published><updated>2011-11-12T05:24:33.629-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காற்று மாசுப்பாடு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகரமயமாக்கல்'/><title type='text'>இந்திய நகரங்களில் தீவிரமடையும் சுவாசப் பிரச்சனை</title><content type='html'>இந்திய நகரங்களில் பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து, காற்று மாசு கடுமையாகி வருகிறது. இதனால் மக்களுக்கு சுவாசப் பிரச்சனையும் தீவிரமடைந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய நகரங்களில் வாழும் நடுத்தர வர்க்கத்து மக்கள், தங்கள் வீடுகளில் இரு சக்கர மோட்டார் வாகனங்கள் இருக்க வேண்டுமென அதிக அளவில் வாங்கி வருவதால் வாகனப் புகையால் காற்றுப் பகுதி மாசடைந்து, மக்களுக்கு பெரும் தீங்கு விளைவிப்பதாக உள்ளது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவிலும், சீனாவில் உள்ள நகரங்களிலும் கடல்போல, மோட்டார் வாகனங்கள் பெருகி உள்ளன. தீவிரமான மற்றும் நீண்ட கால சுவாசப் பிரச்சனைகள், நுரையீரல் புற்றுநோய் ஆகியவை காற்று மாசடைவதால் ஏற்படுகின்றன என ஐக்கிய நாடுகள் சபையின் இந்த அமைப்பு எச்சரித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;எஸ்யுவி எனப்படும் இலகுரக வாகனங்கள், கார்கள், மோட்டார் சைக்கிள்கள் போன்றவை அளவுக்கு அதிகமாக பெருகி, சாலைகளில் ஓடுவதால் மக்களின் ஆரோக்கியத்தில் விபரீத விளைவை ஏற்படுத்தியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;சுவாச நோய்கள் மற்றும் புற்றுநோய் காரணமாக 13 லட்சத்து 40 ஆயிரம் முன்கூட்டிய மரண நிகழ்வுகள் 2008ம் ஆண்டில் நிகழ்ந்துள்ளன. வாகனப் புகையால் காற்று மாசடைந்திருப்பதன் காரணமாகவே இந்த மரணங்கள் ஏற்பட்டுள்ளன என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;சீனா, இந்தியா மற்றும் இதர வளரும் நாடுகளில் உள்ள தொழில் நகரங்கள் பெருக்கத்தால் நுரையீரல் நோய்கள் ஏற்படுகின்றன. 2008ம் ஆண்டில் 10 லட்சத்து 90 ஆயிரம் முன்கூட்டிய மரணங்களை தவிர்த்திருக்க முடியும் என்று இந்த அமைப்பின் பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் நிர்வாக இயக்குநர் மரியா நெய்ர்ஸ் தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;91 நாடுகளில் உள்ள ஆயிரம் நகரங்களில் காற்றின் தன்மைக்குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வில் மாசடைந்த காற்றால் ஏற்படும் அபாயகரமான நோய்கள் விவரம் பற்றி தெரியவந்தது. பொது சுகாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக சீனா மற்றும் இந்தியா நகரங்கள் உள்ளன. இந்த நாடுகளின் நகரங்களில் அதிகபட்ச தொழில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்று நெய்ர்ஸ் தெரிவித்தார். இந்த நாடுகளில் நீண்டகால சுவாசப் பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன. போர்க்கால அடிப்படையில் இந்த நாடுகளில் காற்றின் தூய்மையை சூழலை மேம்படுத்தத் தவறினால் இதயம் மற்றும் நுரையீரல் புற்றுநோய், ஆஸ்துமா மற்றும் தீவிர சுவாசத் தொற்றுகள் ஏற்படும் என்றும் அவர் எச்சரித்தார். தொழில் நகரங்களில் தொழிற்சாலைப் புகை, வாகனப்புகைகள் கடுமையாக இந்திய நகரங்களின் காற்றை மாசுபடுத்தி வருகின்றன. 10 மைக்ரோ மீட்டர் அல்ல, அதற்கு சற்றுக் குறைவான மாசுத் துகள்கள் நுரையீரலில் கலந்து ரத்த ஓட்டத்தில் கலக்கும். இதன் காரணமாக இதய நோய் மற்றும் இதர நோய்கள் ஏற்படும் என்றும் நெய்ர்ஸ் எச்சரித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;உலக சுகாதார அமைப்பின் காற்று வரையறையை பல நகரங்கள் மீறியுள்ளன.கன அடி மீட்டருக்கு 300 மைக்ரோ கிராம் என்ற அளவில் இந்தியா, சீனா, தொழில் நகரங்களில் காற்று மாசுத் துகள்கள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கனமீட்டரில் 20 மைக்ரோ கிராம் அளவே காற்று மாசுத் துகள்கள் இருக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியிருந்தது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3683345437092478883-4135953936511896745?l=muruganthiru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muruganthiru.blogspot.com/feeds/4135953936511896745/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3683345437092478883&amp;postID=4135953936511896745' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3683345437092478883/posts/default/4135953936511896745'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3683345437092478883/posts/default/4135953936511896745'/><link rel='alternate' type='text/html' href='http://muruganthiru.blogspot.com/2011/11/blog-post_12.html' title='இந்திய நகரங்களில் தீவிரமடையும் சுவாசப் பிரச்சனை'/><author><name>அறிவியல் விழிப்புணர்வு</name><uri>http://www.blogger.com/profile/14816292961575112498</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='7' src='http://2.bp.blogspot.com/_-B1lk_hlPgA/SbYP5SBQ4CI/AAAAAAAAAHc/wBrjaI1emS4/S220/PSF_logo.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3683345437092478883.post-1384405841561544824</id><published>2011-11-07T01:30:00.000-08:00</published><updated>2011-11-07T01:33:18.176-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஒரு திரையரங்கின் கதை'/><title type='text'>உலக உள்ளூர் சினிமாவுக்குள் ஒரு பயணம்</title><content type='html'>இன்றைக்கும் சிறு நகரமொன்றை ரயிலிலோ ... பேருந்திலோ ... நீங்கள் கடந்து செல்லுகையில், தன் பிரம்மாண்டத்தை இழந்துவிட்டு, முட்புதர் மண்டிக்கிடக்கும் பாழடைந்த திரையரங்குகளை எங்காவது காண நேரிடலாம். இளமையின் வசீகரம் தொலைத்து நிற்கும் கிழட்டு கணிகையைப் போல அந்தத் திரையரங்கம் உங்களை கடந்து போகையில், உங்கள் மனம் உங்களின் பால்ய காலத்துக்குத் திரும்ப நேரிடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொருவரின் பால்ய காலத்து நினைவடுக்குகளிலும் கூடப்படித்த ஒரு பெண்ணோ, நேசிப்புக்குரிய ஒரு டீச்சரோ, நிழலாய் பிரியாமல் கூடவே திரிந்த நட்போ, அழியாமல் இருப்பதைப் போலவே, அதாவது ஒரு திரையரங்கமும் உங்கள் நினைவில் அழிக்க முடியாமல் படிந்திருக்கும். அம்மாவின் முந்தானைக்குள் ஒளிந்தபடி இனம் புரியாத ஒரு மிரட்சியுடன் முதன் முதலில் பார்த்த சினிமாவும் ... முதன் முதலில் போன திரையரங்கம் மங்கலான ஏடுகளுடன் இன்னமும் நினைவிருக்கக்கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;சின்னஞ்சிறு வயதில் சினிமா தியேட்டர் குப்பைகளில் தேடிப் பொறுக்கியெடுத்த பிலிம் துண்டுகளை வைத்து, வீட்டுச் சுவரிலோ. இழுத்துக்கட்டிய அப்பாவின் பழைய வெள்ளை வேட்டியிலோ படம் காட்டிய அனுபவமும் எல்லாருக்கும் இருக்கும். அல்லது சினிமா டிக் கெட்டுக்காக ஊறுகாய் வற்ற லையோ, மல்லாட்டை காய் களையோ பண்ட மாற்று கொடுத்து, தெருப்பசங்க காட்டிய சினிமாவைப் பார்த்த அனுபவமா வது நிச்சயம் இருக்கும். இப்படி ஓவ்வொருவருக்குள்ளும் சினிமாவும், சினிமா திரையரங்கும் எதாவது ஒருவிதத்தில் பதிவாகியிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆயிரம் பேர் ஒரேநேரத்தில் ஒன்றாக அமர்ந்து தனித்தனியாகவும், அதே சமயம் கூட்டாகவும் கனவு காண்கிற அத்தகைய திரையரங்குகள் குறித்து சொல்வதற்கு. நம் ஒவ்வொருவரிடமும் நிச்சயம் ஒரு கதை மிச்சமிருக்கும், அப்படி சொல்லப்பட்ட ஒரு கதையின் திரைவடிவம்தான் சினிமா பாரடைசோ (ஊiநேஅய ஞயசயனளைடி) என்கிற இத்தாலிய மொழித் திரைப்படம். ஒரு சிறுவனுக்கும் திரையரங்கிற்குமான உறவை உயர்ந்த அழகியலோடு சொல்கிறது இப்படம், சல்வடோர் டி விட்டா. இவர் ரோம் நகரத்தின் பிரபலமான திரைப்பட இயக்குநர். சில உறுதியான லட்சியங்களுடன் 30 வருடங்களுக்கு முன்பு தனது கிராமத்திலிருந்து வந்து ரோமில் திரைப்படத் துறையில் நிலையான இடத்தை பிடித்தவர். தனது பணிகளை முடித்துக்கொண்டு வீடு திரும்பும் அவருக்கு அவரது சொந்த ஊரில் இருந்து வந்த ஒரு செய்தி காத்திருக்கிறது,. சொந்த ஊரில் அல்ஃபிரதோ இறந்து விட்டார் என்ற அந்த செய்தி சல்வடோருக்குச் சொல்லப்பட்டதும், தனிமையில் அவரது நினைவுகள் சொந்த ஊருக்குச் செல்கிறது, பிளாஷ் பேக்கில் பயணம் தொடங்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சல்வடோர் அப்போது எட்டு வயது சிறுவன், டோட்டோ என்ற செல்லப் பெயருடன் பள்ளிக்குச் செல்வது, மற்ற நேரங்களில் அங்கிருக்கும் தேவாலயத்தில் பாதிரியாருக்கு உதவுவது என்று போய்க் கொண்டிருக்கும் டோட்டோவுக்கு, அந்த ஊரின் மையத்தில் இருக்கும் சினிமா பாரடைசோ ஏன்ற திரையரங்கத்தின் ஆபரேட்டரான அல்ஃபிரதோவின் நட்பு கிடைக்கிறது, 60 வயதைத் தாண்டிவிட்ட முதியவரான அல்ஃபிரதோவும் ஏட்டு வயது சிறுவன் டோட்டோவும் நண்பர்களாகிறார்கள். இந்த நட்பால் எந்நேரமும் தியேட்டரிலேயே இருக்கிற வாய்ப்பும் டோட்டோவுக்குக் கிடைக்கிறது, அந்தத் தியேட்டரில் திரையிடப்படும் எல்லாப் படங்களையும் அந்த ஊரின் பாதிரியார்தான் முதலில் பார்ப்பார். படத்தில் இருக்கும் முத்தக் காட்சிகளை தணிக்கை செய்து வெட்டிவிடுவார். அல்ஃபிரதோவும் அவ்வாறே வெட்டிவிட்டு படத்தைத் திரையிடுவார். அப்படி வெட்டப்பட்டு கிடக்கும் முத்தக்காட்சிகள் கொண்ட திரைப்படச் சுருளைத் தனக்குத் தர முடியுமா என்று டோட்டோ கேட்கிறான், நேரம் வரும்போது தருகிறேன் என்கிறார் அல்ஃபிரதோ.&lt;br /&gt;&lt;br /&gt;டோட்டோவின் அப்பா ராணுவத்திற்கு போய்விட்டார், அவனது அம்மா எப்போதும் தனிமையில் எம்பிராய்டரி போட்டுக் கொண்டேயிருக்கிறாள், டோட்டோவுக்கு ஒரு தங்கையும் உண்டு, ஒரு நாள் பால் வாங்கி வரச்சொல்லி அம்மா கொடுத்த பணத்தில் சினிமா பார்க்கிறான் டோட்டோ. படம் முடிந்து வெளியே வரும்போது, தியேட்டர் வாசலில் காத்திருக்கும் தாயிடம் 5 ரூபாய் தொலைந்துவிட்டதாக பொய் சொல்கிறான் டோட்டோ, இதனால் ஆத்திரமடையும் தாய் அவனை அடிக்கும் போது, அங்கு வரும் அல்ஃபிரதோ, வழியில் கிடைத்ததாகச் சொல்லி தன்னிடமிருக்கும் ஐந்து ரூபாயைக் கொடுத்து டோட்டோவைக் காப்பாற்றுகிறார், நீங்கதான் இவனை கெடுக்கறீங்க என்று அல்ஃபிரதோவை டோட்டோவின் அம்மா திட்டுவதால், இனி ஆபரேட்டர் அறை பக்கம் வராதே என்று கண்டிக்கிறார் அல்ஃபிரதோ.&lt;br /&gt;&lt;br /&gt;முதியோர் கல்வியில் பயிலும் அல்ஃபிரதோ, தேர்வு எழுதுவதற்காக டோட்டோவின் வகுப்புக்கு வருகிறார், கேள்விக்குப் பதில் தெரியாமல் தவிக்கும் அல்ஃபிரதோ, டோட்டோவிடம் உதவுமாறு கேட்கிறார், பதிலுக்கு, எனக்கு புரஜெக்டரை இயக்க சொல்லித் தருவாயா? என்று டோட்டோ நிபந்தனை வைக்கிறான். ஆல்ஃபிரதோவும் ஒப்புக்கொண்டு டோட்டோவின் உதவியுடன் தேர்வை எழுதி முடிக்கிறார். அடுத்த நாளிலிருந்து புரஜெக்டரை இயக்குவது பற்றி கற்றுத் தருகிறார் அல்ஃபிரதோ. மிகுந்த ஆர்வத்துடன் கற்றுக்கொள்கிறான் டோட்டோ.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நாள் தியேட்டரில் கட்டுக்கடங்காத கூட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;கடைசிக் காட்சி ஓடிக் கொண்டிருக்கிறது. மறுநாள் வேறு புதிய படம் திரையிடப் போகிறார்கள். அதனால் இப்போது அந்தப் படத்தை கடைசியாக பார்த்துவிட கூட்டம் முண்டியடிக்கிறது. அப்போது அல்ஃபிரதோ புரஜெக்டரின் லென்ஸைத் திருப்பி, அருகில் இருக்கும் வீட்டுச் சுவரின் மீது படத்தைத் திரையிடுகிறார், அதைப் பார்த்து மக்கள் கூட்டம் உற்சாகம் கொள்கிறது. அப்போது திடீரென புரஜெக்டர் சூடாகி, திரைப்படச் சுருள் பற்றியெரிந்து தியேட்டரில் தீப்பற்றிக் கொள்கிறது. பற்றி எரியும் தீயில் மயங்கி விழும் அல்ஃபிரதோவை டோட்டோ காப்பாற்றுகிறான். ஆனாலும் அந்த விபத்தில் ஆல்ஃபிரதோ கண்பார்வை ஈழந்து விடுகிறார், தீக்கிரையான தியேட்டரை, லாட்டரியில் பெரும் பணம் பெற்ற புதுப்பணக்காரன் ஒருவன் வாங்கி புதுப்பிக்கிறான். புதிதாக உருவான பாரடைசோ திரையரங்கின் ஆபரேட்டர் வேலை டோட்டோவுக்கு கிடைக்கிறது. ஆனால், இது உனக்கு வேண்டாம். நீ நன்றாக படிக்க வேண்டும் என்று ஆல்ஃபிரதோ வழிப்படுத்துகிறார். டோட்டோ படித்துக்கொண்டே மாலை நேரங்களில் தியேட்டரில் வேலை பார்க்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது இளைஞனாகிவிட்ட டோட்டோ, தனக்குக் கிடைத்த எட்டு எம்,எம், கேமிராவை வைத்துக் கொண்டு காண்பதையெல்லாம் படம் பிடிக்கிறான். அப்படியொரு சந்தர்ப்பத்தில் எலினா என்ற பெண் அவனது காமிராவுக்குள் விழுகிறாள். அதே சமயத்தில் எலினா மீது காதலில் விழுகிறான் டோட்டோ. காமிராவில் படம் பிடிப்பது போலவே எலினா மீதான டோட்டோவின் காதலும் சுருள் சுருளாய் வளர்கிறது. ஆனால் அவனது காதல், அல்ஃபிரதோவுக்குக் கவலையளிக்கிறது, அந்த காதல் வேண்டாம் என்று சொல்கிறார். ஆனால் காதலுக்குக் காதும் கிடையாதல்லவா?எலினாவின் தந்தைக்கு பணிமாறுதல் கிடைப்பதாலும், டோட்டோ ராணுவ சேவைக்குச் செல்ல வேண்டியிருப்பதாலும் இருவரும் பிரிய நேரிடுகிறது. கடைசியாக ஒரு வியாழக்கிழமையன்று திரையரங்கில் இருவரும் சந்தித்துக் கொள்வதென்று முடிவு செய்கிறார்கள். திரைக்கதையின் முடிச்சினால் இருவரும் சந்திக்க இயலாமல் போய்விடுகிறது. ராணுவ சேவைக்கு சென்றுவிட்ட டோட்டோ அங்கிருந்து எலினாவுக்கு எழுதும் கடிதங்கள் அனைத்தும் திரும்பி வருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ராணுவ சேவை முடித்து திரும்பி வரும் டோட்டோவுக்கு தியேட்டரில் வேலை இல்லை. எலினாவும் ஊரில் இல்லை. பித்துப் பிடித்து அலையும் டோட்டோவை, ஊரை விட்டுப் போகச் சொல்கிறார் அல்ஃபிரதோ. ரயில் நிலையத்தில் வழியனுப்பும் போது, நீ பெரிய ஆளாக வேண்டும். பழைய காதல் நினைவுகளை மறந்துவிடு, ஊருக்குத் திரும்பி வராதே. எனக்குக் கடிதம் கூட எழுதாதே. எந்த வேலையாக இருந்தாலும் தியேட்டர் ஆபரேட்டர் வேலையை போல நேசித்து செய். மனதை அலைய விடாதே என்று சொல்லியனுப்புகிறார் அல்ஃபிரதோ.&lt;br /&gt;&lt;br /&gt;பிளாஷ்பேக் முடிகிறது. அப்போது ஊரைவிட்டுப்போன சல்வதோர் என்கிற டோட்டோ இப்போதுதான் ... 30 வருடங்கள் கழித்து சொந்த ஊருக்கு வருகிறார். இளைஞனாக ரயிலேறியவன், வெற்றி பெற்ற திரைப்பட இயக்குநராக விமானத்தில் வந்து இறங்குகிறான். ஊரும் உறவுகளும் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போய் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று அல்ஃபிரதோவின் இறுதி ஊர்வலம் நடக்கிறது, மிகக்குறைந்தபேரே இருக்கும் அந்த ஊர்வலத்தில் தனது பால்ய காலத்து நண்பர்கள் சிலர் இருப்பதையும் காண்கிறார் சல்வடோர்,. சினிமா பாரடைசோ தியேட்டர் அருகே சவ ஊர்வலம் சிறிது நேரம் நின்று செல்கிறது. அந்த ஊர்வலத்தில் பழைய தியேட்டர் உரிமையாளரையும் பார்க்கிறார். அவர் தியேட்டரை விற்றுவிட்டதாகவும், நாளை தியேட்டரை இடித்துத் தள்ளப்போகிறார்கள் என்ற துயரச் செய்தியையும் கூறுகிறார். அந்தத் தியேட்டரை தனிமையில் சென்று பார்க்கிறார் சல்வடோர். பாழடைந்த ஆபரேட்டர் அறை, இடிந்து கிடக்கும் சுவர்கள் என எல்லாவற்றையும் ஈரம் கசியும் நினைவுகளோடு பார்க்கிறார் சல்வடோர்.&lt;br /&gt;&lt;br /&gt;தனது காதலி எலினாவை அந்த ஊரில், முப்பது வருடங்கள் கழித்து ஒரு காருக்குள் சந்தித்துப் பேசுகிறார். அவர்களின் கடைசி சந்திப்பு நிகழாமல் போனதற்கு அல்ஃபிரதோதான் காரணம் என்றும், அன்று உன்னை சந்தித்திருந்தால் உன் வாழ்க்கை மாறியிருக்கும். இவ்வளவு பெரிய ஆளாக நீ வந்திருக்க முடியாது என எலீனா சொல்கிறாள். அல்ஃபிரதோவை நினைத்து கலங்குகிறார் சல்வடோர், அல்ஃபிரதோவின் மனைவி சல்வடோரிடம், அல்ஃபிரதோ கொடுக்கச் சொன்னதாக படச்சுருள் அடங்கிய ஒரு பெட்டியை தருகிறாள், அடுத்த நாள் சினிமா பாரடைசோ இடித்துத் தள்ளப்படுகிறது. ஊர் மக்கள் தியேட்டரின் முன் கலங்கி நிற்கிறார்கள். நொறுங்கி விழும் கட்டடத்தின் தூசி மேலெழும்ப கனமான நினைவுகளுடன் ஊருக்குத் திரும்புகிறார் சல்வடோர்.&lt;br /&gt;&lt;br /&gt;அவரது அடுத்தப் படத்திற்குக் கிடைத்திருக்கும் விருதுக்காக பாராட்டவும், பேட்டி காணவும் காத்துக்கிடப்பவர்களை புறக்கணித்துவிட்டு, யாருமற்ற தனிமை நிறைந்த திரையரங்கில் அல்ஃபிரதோ கொடுத்தப் பெட்டியிலிருந்த படச்சுருளை திரையிட்டுப் பார்க்கிறார். சிறு வயதில் அல்ஃபிரதோவிடம் கேட்ட முத்தக் காட்சிகள் நிரம்பிய படச்சுருள் அது, திரையில் அடுத்தடுத்து முத்தக் காட்சிகள் ஓடுகிறது. விதவிதமான மனிதர்களின் விதவிதமான முத்தக் காட்சிகளுடன் கண்ணீர் வழிய அல்ஃபிரதோவை எண்ணி சல்வடோர் வியப்பதுடன் நிறைவடைகிறது படம்.&lt;br /&gt;&lt;br /&gt;1988ல் வெளியான இப்படத்தின் இயக்குநர் கி செப்பே டொர்னாடோரே. இத்தாலியில் பிறந்த இவர் நாடக, புகைப்படக் கலைஞராக இருந்தவர். 1986ல் தி புரொபசர் படத்தை இயக்கி சினிமாவுக்கு வந்தவர். இவரது 2வது படமான சினிமா பாரடைசோ ஆஸ்கர் உள்ளிட்ட எராளமான விருதுகளை அள்ளிக் குவித்திருக்கிறது, 185 நிமிடங்கள் ஓடக்கூடியதாகத் தயாரான இப்படம் முதலில் 155 நிமிடங்கள் ஓடக்கூடியதாகத்தான் திரையிடப்பட்டது. பின்னர் மீண்டும் 185 நிமிடப் படமாகவும் திரையிடப்பட்டது. ஒரு திரையரங்கை மையப் புள்ளியாகக் கொண்டு உருவாக்கப்பட்ட அப்படம் உலகின் மிகச்சிறந்த படங்களில் ஒன்றாக கொண்டாடப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;டிவிடி தொழில்நுட்பத்தின் வருகையால் இன்று திரையரங்குகள், வணிக வளாகங்களாகவும், கல்யாண மண்டபங்களாகவும் மாறிவிட்டன, நமது வீடுகளேக் கூட திரையரங்குகளாக மாறிப்போய்விட்டன. இங்கு உயரிய தொழில் நுட்பத்துடனான படத்தை நாம் காண முடியும் என்றாலும், அது கூட்டத்தோடு உட்கார்ந்து கனவு காண்கிற அனுபவத்தை தந்து விட முடியுமா?சினிமாவை நேசிப்பவர்களும், திரையரங்கை நேசிப்பவர்களும் இந்தப் படத்தை பார்த்தால், தங்கள் ஊரிலும் இடிக்கப்பட்டு தரைமட்டமாகிவிட்ட எதாவதொரு திரையரங்கின் நினைவுகளில் மூழ்கிப் போவதை தவிர்க்க இயலாது, தவிர்க்கவும் கூடாதுதானே.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: எஸ்.கருணா&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3683345437092478883-1384405841561544824?l=muruganthiru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muruganthiru.blogspot.com/feeds/1384405841561544824/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3683345437092478883&amp;postID=1384405841561544824' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3683345437092478883/posts/default/1384405841561544824'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3683345437092478883/posts/default/1384405841561544824'/><link rel='alternate' type='text/html' href='http://muruganthiru.blogspot.com/2011/11/blog-post_07.html' title='உலக உள்ளூர் சினிமாவுக்குள் ஒரு பயணம்'/><author><name>அறிவியல் விழிப்புணர்வு</name><uri>http://www.blogger.com/profile/14816292961575112498</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='7' src='http://2.bp.blogspot.com/_-B1lk_hlPgA/SbYP5SBQ4CI/AAAAAAAAAHc/wBrjaI1emS4/S220/PSF_logo.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3683345437092478883.post-4991587082233458457</id><published>2011-11-01T04:27:00.000-07:00</published><updated>2011-11-01T04:28:59.768-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அறிவியல் கண்டுபிடிப்புகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விஞ்ஞானி'/><title type='text'>தாமஸ் அல்வா எடிசன்</title><content type='html'>காது கேட்காதவன், மனநலம் பாதிக்கப்பட்டவன் என்று பள்ளியில் இருந்தே துரத்தப்பட்ட தாமஸ் அல்வா எடிசன் தான் இன்றளவும் விஞ்ஞானத்தை கற்பவர்களுக்கு முன்னோடி. அப்படி எடிசன் என்ன தான் செய்து விட்டார் என்று பார்க்கறீர்களா? ஆம் மக்களே ஒலிபெருக்கி, தந்திக்கருவி, மின்சார விளக்கு, மின்சார இயந்திரம், மின்சார இருப்புப் பாதை, தொலைபேசி, கிராம‌போன், திரைப்பட ஒளிப்பதிவுக் கருவி(காமிரா) என மலைக்க வைக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அறிவியல் படைப்புகளை படைத்தவர் கடவுளல்ல; சிறுவயதில் 'மக்கு' என்று பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்ட எடிசன் தான் இவற்றின் படைப்பாளி.&lt;br /&gt;&lt;br /&gt;எடிசன் ஒரு சாதாரண தச்சுத் தொழிலாளிக்கும், ஓர் ஆசிரியைக்கும் பிறந்த ஏழு குழந்தைகளில் கடைக்குட்டியாக பிப்ரவரி மாதம் 11 ம் தேதி 1847ல் அமெரிக்காவிலுள்ள 'மிலன்' எனும் ஊரில் பிறந்தவர். 'எதற்கும் உதவாதவன்' என்று பள்ளியிலிருந்து துரத்தப்பட்ட எடிசன் தன தாயாரிடமே அடிப்படைக் கல்வியை கற்றார். தன பதிமூன்றாவது அகவையில் கிராண்ட் டிரங்க் தொடர்வண்டி சாலையில் செய்தித்தாள் போடும் பையனாக சேர்ந்தவர், அங்குள்ள சரக்கு ஏற்றும் பெட்டியை வேதியியல் சோதனைச்சாலையாக மாற்றியும், அங்கேயே ஒரு அச்சகத்தை தன தந்தையின் உதவியால் நிறுவி 'கிரான்ட் டிரங்க் ஹெரல்ட்' என்ற பத்திரிகையையும் வெளியிட்டு வந்தார். சோதனைச் சாலையில் பற்றிய 'தீ' அவர் செயற்கூடத்தை நாசமாக்கவே அமெரிக்காவில் எங்கெல்லாம் 'தந்தி செயலி' வேலை கிடைக்கிறதோ அங்கெல்லாம் ஓடோடி வேலை செய்தும் தன் சோதனை முயற்சிகளையும் விடாமல் தொடர்ந்து கொண்டிருந்தார். பின்னர் போஸ்டனிலுள்ள 'வெஸ்டர்ன் பணமாற்று' அலுவலக பணியையும் மறுத்துவிட்டு முழு நேர‌ ஆராய்ச்சியில் ஈடுபட்டார் எடிசன்.&lt;br /&gt;&lt;br /&gt;தன் முதல் கண்டுப்பிடிப்பான 'மின்சார வாக்குப்பதிவு' இயந்திரத்திக்கு 1869ம் ஆண்டு காப்புரிமை கிடைத்தும் அரசியல்வாதிகள் அதை செயற்படுத்த விருபவில்லை. இதை எண்ணிப் பார்த்த எடிசன் 'மக்களுக்கு வேண்டாத பொருட்களை கண்டுப்பிடிப்பதில் நேரத்தை வீணாக்கக்கூடாது' என மக்கள் எதிர்காலத்தில் பயன்படுத்தக்கூடிய சாதனங்களைக் கண்டறிந்தார். தன் கண்டுப்பிடிப்புகளுக்கு காப்புரிமை, வழக்குகள் என அனைத்தையும் எதிர்நின்று சாதித்தார் எடிசன்.&lt;br /&gt;&lt;br /&gt;இதன் இடைவெளிகளில் அவர் மண‌முடிக்கவே அவருக்குப் பிறந்த இரு குழந்தைகளுக்கும் 'டாட்,டாஷ்' என தந்தி சங்கேத மொழியிலேயே செல்லப் பெயரிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;சினிமா, புகைப்படக் கலை வளர்ச்சிக்கு எடிசன் தான் முழுமுதற் உழைப்பாளி என்றால் அது மிகையாகாது. ஆம் ஒளிப்பதிவுக் கருவியையும், பேச்சு வரும் கைநெட்டோபோன் கருவியையும் எடிசனே கண்டறிந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;எடிசன் கண்டுப்பிடிப்புகளின் நினைவாக அவரது நெருங்கிய நண்பர் 'ஹென்றி போர்ட்' அவரது 'சோதனைச் சாலையை'அருங்கட்சியகமாகவே மாற்றி அமைத்தார். வாழ்வின் இறுதி நாட்களில் சுயநினைவற்ற கோமா நிலையில் இருக்கும்போதே எடிசனின் உயிர் 1931ம் ஆண்டு அக்டோபர் 18ம் தேதி நியூ ஜெர்சியிலுள்ள 'க்லேன்மொன்ட்' எனப்படும் அவர் இல்லத்தில் பிரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அண்டம் கட‌வுளால் தான் உருவாகிறது என்பதை பொய்ப்பித்துக்காட்டி விஞ்ஞானத்திலே இவ்வுலகம் சுழல்கிறது என்று நிரூபித்தவர் தாமஸ் ஆல்வா எடிசன்.&lt;br /&gt;&lt;br /&gt;'முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்' என்ற தன்னம்பிக்கை வரிகளுக்கு சான்றாக வெற்றிக்கான பலத்தோடு வாழ்ந்து சாதித்தவர் எடிசன்!&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: மகா.தமிழ்ப் பிரபாகரன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3683345437092478883-4991587082233458457?l=muruganthiru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muruganthiru.blogspot.com/feeds/4991587082233458457/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3683345437092478883&amp;postID=4991587082233458457' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3683345437092478883/posts/default/4991587082233458457'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3683345437092478883/posts/default/4991587082233458457'/><link rel='alternate' type='text/html' href='http://muruganthiru.blogspot.com/2011/11/blog-post.html' title='தாமஸ் அல்வா எடிசன்'/><author><name>அறிவியல் விழிப்புணர்வு</name><uri>http://www.blogger.com/profile/14816292961575112498</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='7' src='http://2.bp.blogspot.com/_-B1lk_hlPgA/SbYP5SBQ4CI/AAAAAAAAAHc/wBrjaI1emS4/S220/PSF_logo.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3683345437092478883.post-5587245536668990077</id><published>2011-10-31T04:06:00.000-07:00</published><updated>2011-10-31T04:08:48.728-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புவியியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வானவியல்'/><title type='text'>எரடோஸ்தனிஸ்... உலகின் முதல் புவியியலாளர்</title><content type='html'>உலகின் பழங்கால அறிவியல் மையம்!&lt;br /&gt;&lt;br /&gt; பழங்கால கிரேக்கம் தான் இன்றைய எகிப்து. கிரேக்கம் நைல் நதியின் கொடை என வரலாற்றாளர்களால் வருணிக்கப்படுகிறது. அந்த எகிப்து, ஆப்பிரிக்காவின் வட பகுதியில் உள்ளது. உலகில் மனித நாகரிகம் உருவாகி வளர்ந்த ஆற்றுச் சமவெளிகளில் ஒன்றுதான் இந்த நைல் நதியின் நாகரிக களமான எகிப்து. இங்கே சுமார் 7,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வரலாற்றுப் பதிவுகள் கிடைத்துள்ளன. கிரேக்கத்தின் பெரிய நகரும், எகிப்தின் இரண்டாவது பெரிய நகரும் அலேக்சாண்டிரியாதான். இதனை மகா அலெக்சாண்டர் என்ற பேரரசர் கி.மு.337ல் (2,400 ஆண்டுகளுக்கு முன்) நிறுவினார். மத்தியதரைக்கடல் ஓரத்தில் அழகாக அமர்ந்துள்ள அலெக்சாண்டிரியாவின் கடற்கரை 32 கி.மீ நீளமுள்ளது. அன்றைய உலகின் பெரிய நூலகமான அலெக்சாண்டிரியாவும், அலெக்சாண்டிரியா பல்கலைக்கழகமும் இங்குதான் இருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;அலெக்சாண்டிரியா நூலகம்&lt;br /&gt;&lt;br /&gt;அலெக்சாண்டிரியா நூலகத்தில் பல்லாயிரக்கணக்கான பாப்பிரஸ் சுருள்களும், ஆட்டுத் தோலில் எழுதப்பட்ட வரலாற்று ஆவணப் பதிவுகள் சுமார், 400,000-700,000 எழுத்துச் சுருள்கள் இங்கே வைக்கப்பட்டுள்ளன. இந்த நூலகத்தில், மாணவர்கள் படிக்க, விவாதிக்க, எழுத, ஆராய்ச்சி செய்ய என சுமார் 5,000 அறைகள் இருந்தன. இந்த நூலகத்தில் மூன்றாவது நூலகராகவும், நிர்வாக இயக்குனராகவும் இருந்தவர்தான் எரடோஸ்தனிஸ் என்ற கிரேக்க விஞ்ஞானி. இந்த அலெக்சாண்டிரியா நூலகம் பண்பாடு மற்றும் அறிவின் கிரீடம் ஆகத் திகழ்ந்தது. இங்கே அறிவுஜீவிகள் சுமார் 700 ஆண்டுக்காலம் அதனை ஆட்சி புரிந்தனர். ஆனால் இந்த அலெக்சாண்டிரியா சுமார் 1600 ஆண்டுகளுக்கு முன் அழிந்து போனது.&lt;br /&gt;&lt;br /&gt;கிரேக்கத்தின் விஞ்ஞானி எரடோஸ்தனிஸ்! &lt;br /&gt; &lt;br /&gt; பழங்காலத்தில் கிரேக்கம்தான் அறிவியல் உலகில் கொடி கட்டிப் பறந்தது. அங்குதான் உலகின் தலைசிறந்த தத்துவஞானிகளும், அறிஞர்களும் வாழ்ந்தனர். கணிதத்தின் விற்பன்னர்களே, வானவியல் மற்றும் புவியியல் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினர். கி.மு. 276 -194களில் வாழ்ந்த எரடோஸ்தனிஸ், சைராகுயூசின் (Syracuse) ஆர்கிமிடீசுக்கு நெருங்கிய நண்பர். ஆனால் எரடோஸ் வசித்தது அலெக்சாண்டிரியா நகரில்தான். இவர் சைரீனில் (Cyrene) பிறந்தார். இப்போது வட ஆப்பிரிக்க லிபியாவில் உள்ள ஷஹட்(Shahhat) தான் அன்றைய சைரீன். கிரேக்க அறிஞர் எரடோஸ் பல்துறை வித்தகர். இவரே கிரேக்கத்தின் மிகப் பெரிய கணித மேதை, அற்புதமான கவிஞர், சிறந்த விளையாட்டு வீரர், முக்கியமான வரலாற்றியலாளர் மற்றும் புவியியல் கண்டுபிடிப்பாளரும் கூட!&lt;br /&gt;&lt;br /&gt;நூலகரும் வானவியலாளரும் பல்துறை வித்தகரும் .!&lt;br /&gt;&lt;br /&gt;எரடோஸ்தனிஸின் பன்முகத்தன்மையால் இவர், பஞ்சாவதானி (Pentathalus) என்று பாராட்டப்பட்டவர். இவரை தத்துவத்தில் இரண்டாவது பிளேட்டோ என்றும், வானவியல் கணிப்பில் தாலஸூக்குப் பிறகு வந்த மிகச் சிறந்த வித்தகர் என்றும் பேசப்பட்டவர். இவருக்கு பீட்டா (Beta) என்ற பட்டப் பெயரும் உண்டு. புவியியல்(Geography) என்ற வார்த்தையை உருவாக்கியவர் இவரே. ஜியோகிரபி என்றால் பூமியைப் பற்றி எழுதப்பட்ட என்று பொருளாகும். உலகில் முதன் முதலில் பூமியின் விட்டத்தையும், சுற்றளவைவும் சரியாக அளந்தவர் எரடோஸ்தனிஸ்தான். அது மட்டுமல்ல பூமியின் அட்சரேகை, தீர்க்கரேகை என்ற முறையைக் கண்டுபிடித்தவரும் எரடோஸ்தனிஸ்தான். புவியியலின் ஒழுங்குமுறை விதிகளை நிர்ணயித்தவரும் இவரே..! ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக அலெக்சாண்டிரியா நூலகத்தின் நிர்வாக இயக்குநராக இருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;சூரிய ஒளியும் நிழலும்= பூமியின் சுற்றளவு!&lt;br /&gt;&lt;br /&gt; எரடோஸ்தனிஸ் கி.மு.276ம் ஆண்டு வட ஆப்பிரிக்காவின் சைரீன் எனற தற்போதைய லிபியாவில் பிறந்தார். அலெக்சாண்டிரியாவில் இலக்கணமும், ஏதென்ஸில் தத்துவமும் பயின்றார். கி.மு 236ல் மூன்றாம் தாலமி எரடோஸ்தனிஸை அலெக்சாண்டிரியா நூலகத்தின் நூலகராக நியமித்தார். அங்கே இவர் கணிதத்திலும், அறிவியலிலும் ஏராளமான முக்கியமான கண்டுபிடிப்புகளைத் தந்தார். சூரியனின் வெப்பமும், அதன் ஒளியால் ஏற்படும் விளைவுகளும் உண்டு என்பதை நாம் அறிவோம். ஒளியின் மூலம் நிழல் உண்டாவதும் நமக்குத் தெரியும். ஆனால் நிழல் வழியாக ஓர் அறிவியல் கண்டுபிடிப்பு நிகழ்த்தி உலகை அசர வைத்தது எரடோஸ்தனிஸ் மட்டுமே..! பூமியின் மேல், சூரிய ஒளியால் உருவாகும் நிழலை வைத்து பூமியின் அனைத்து பரிமாணங்களையும் கண்டறிந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;வானியல் உற்று நோக்கல் போலவே, புவிக்கோளின் பல்வேறு தகவல்களைக் கணக்கிட்டு, பல அறிவியல் விஷயங்களை அறிந்தது இவரது மகத்தான சாதனையாகும். பூமி தன் அச்சில் சாய்வாக சுற்றுகிறது என்ற உண்மையை முதலில் கண்டறிந்தவரும் எரடோஸ்தனிஸ்தான். அது மட்டுமல்ல, புவியின் சுற்றளவையும், சாய்மானத்தையும் துல்லியமாகச் சொன்னவரும் இவரே. அத்துடன் நம் புவிக்கோளில் நான்கு வருடத்திற்கு ஒரு முறை உருவாகும் லீப் தினத்தையும் கண்டறிந்தார். தனக்குக் கிடைத்த தகவல்களிலிருந்து, உலகின் வரைபடத்தையும் உருவாக்கினார். இதெல்லாம் எரடோஸ்தனிஸின் தலையாய சாதனையாகும். அதனால்தான் இவரை உலகின் நில அளவீட்டாளர்/கணக்காளார்/கணக்காயர் (Surveyor of the world) என்றும், புவியியல் தந்தை (Father of Geography) என்றும், அறிவியல் காலப்பட்டியலின் தந்தை (Father of Scientific Chronology) என்றும் பெருமையுடன் அழைக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் சில நாட்களில் நிழல் சாய்வாக..?&lt;br /&gt;&lt;br /&gt;சூரியக் கதிர்கள் விளைவால் ஒரு பொருளின் நிழல் பூமி மேல் விழுவதை எரடோஸ்தனிஸ் தொடர்ந்து கவனித்தார். வருடத்தின் ஒரு சில நாட்களில்/நாளில் சூரியக் கதிர் பகலில் உச்சி வேளையில், தலைக்கு மேலே இருப்பதையும், அதனால் ஒரு பொருளின் நிழல் அதன் அடிப்பகுதி/காலடியில் மட்டும் விழுவதையும் கவனித்தார். ஆனால் எல்லா நாட்களும் ஒரு பொருளின் நிழல் அவ்வாறு அதன் அடியில் மட்டுமே நேராக சரியாக விழுவதில்லை. அந்த நிழல் கொஞ்சம் வடக்கு/தெற்கே சாய்வாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சூரியனின் கதிர்களால் ஏற்படும் நிழல் என்பது, பூமி சுற்றுவதாலும், அது தன் அச்சில் 23.5 பாகை சாய்வாக உள்ளதாலும் உண்டாகிறது. எரடோஸ்தனிஸ் தினம் இடம் மாறும் நிழலைப் பார்த்தது மட்டுமின்றி, அதற்கான காரணமும் தேட ஆரம்பித்தார். எரடோஸ்தனிஸ் சூரியக் கதிர்கள் ஒரு பொருளின் மேல் படுவதால் ஏற்படும் நிழல் தினமும் ஒரே இடத்தில் ஒரே சாய்மானத்தில் இருப்பதில்லை. அந்த நிழலின் சாய்மானத்தையும், தினமும் சூரிய உதயம் என்பது 6 மாதம் வடக்கிலிருந்து தெற்காகவும், அடுத்த 6 மாதம் தெற்கிலிருந்து வடக்காகவும் நகர்ந்து கொண்டே இருக்கிறது என்பதை துல்லியமாக கவனித்தார். அதன் விளைவாக உருவானதுதான் பூமியின் சுற்றளவு எவ்வளவு என்ற வினாவும், அதற்கான விடை தேடுதலும். இதனை சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் யாரும் நினைத்துப் பார்க்க முடியாத காரியம். அதுவும் இருந்த இடத்தில் இருந்து கொண்டே பூமியின் சுற்றளவை ஆதிகாலத்தில், எந்த அறிவியல் ஆதாரமும் தெளிவாக அறிய முடியாத 2,000 ஆண்டுகளுக்கு முன் ஒருவர் கண்டுபிடிக்கிறார் என்றால், அது எத்தனை வியப்புக்குரிய விஷயம்..! பூமியின் சுற்றளவைக் கண்டறிய, எகிப்தை விட்டு நகராமல், சூரியனால் ஒரு பொருள் மேல் ஏற்படும் நிழலின் சாய்மானத்தை வைத்தே, பூமியின் சுற்றளவை ஒருவர் கண்டறிகிறார் என்றால் அவர் படு கில்லாடிதானே..!&lt;br /&gt;&lt;br /&gt;பூமியின் கோள வடிவமும், சுற்றளவும்..!&lt;br /&gt; &lt;br /&gt;அன்று கோடைகாலத்தின் மிக நீண்ட பகல் தினம் (summer solstice). அப்போது சூரியன் வானில் தலைக்கு மேலே சரியாக பவனி வந்து, வெய்யிலை நம் மேல் கொட்டுகிறது. அன்றைய எகிப்தின் ஸ்வேனெட் (Swenet/Syene) நகரில், இன்று நாம் சொல்லும் கடக ரேகை என்பது அப்போது கிடையாது. ஏனெனில் அந்த அட்ச ரேகையை அன்று யாரும் வரையவில்லை. ஆனால் சூரியன் அப்போது கடக ரேகையின் மேல் இருந்தது. அதுவும் சரியாக சூரியன் தலைக்கு மேல் கொளுத்திக் கொண்டிருந்தது. அப்போது யாராவது குனிந்து ஒரு ஆழமான கிணற்றில் எட்டிப் பார்த்தால், அது அப்போது சூரியனின் பிரதிபலிப்பை மறைத்துவிடும், இந்தத் தகவலை யாரோ தெரிவித்திருந்தனர்.. ஆனால் அவரும்கூட இந்த உண்மையை ஒரு சோதனை மூலம் நிரூபிக்க முயற்சி செய்தார். அவரது சொந்த ஊரான சைநீனுக்குச் சென்றார். அலெக்சாண்டிரியாவில் சூரியனின் சாய்மானம் என்பது, அந்த வட்டத்தில் 50ல் ஒரு பங்கு என தீர்மானித்தார். இது ஒரு வட்டத்தில் 7.12 பாகை என்பதை எரடோஸ் தெரிவித்தார். அதே சமயம், பூமி ஒரு கோளவடிவம் என்று கிரேக்கர்கள் புரிந்து கொண்டனர். அதே கருத்தைத்தான் எரடோஸ்தனிஸும் கொண்டிருந்தார். &lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt; அலெக்சாண்டிரியா சைனுக்கு (Syene) வடக்கே இருக்கிறது. எனவே, மெரிடியன் வளைவு (meridian arc) எனபது எவ்வளவு தூரம் எனபதை தூரத்துடன் இணைத்து கணக்கிட்டால், அந்த தூரம் என்பதுதான் புவியின் சுற்றளவு அறிய சரியான அளவுகோலாக அன்று எரஸ்டோஸ்தனிசுக்குப் பயன்பட்டது. ஏனெனில் சூரியனின் கதிர்கள் பூமி மீது இணை கோடுகளாகவே விழுகின்றன. அதன் சாய்மானம் அந்த இடத்தில் 50ல் ஒரு பங்கு என்றும், அதுதான் 1/50=7.2/360 பாகை என்ற கணக்கை படு துல்லியமாகப் போட்டார். அலெக்சாண்டிரியாவுக்கும், சைனீனுக்கும் இடையில் உள்ள தொலைவு என்ன என்று தெரிந்தால் இதற்கு விடை கண்டுபிடித்து விடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அலெக்சாண்டிரியாவுக்கும், சைனீனுக்கும் இடையில் உள்ள தொலைவு அறிய சைனீனிலிருந்து அலெக்சாண்டிரியாவுக்கு சில வீரர்களை ஒட்டகத்தின் மீது ஏற்றி அனுப்பினார். இரு ஊர்களுக்கும் இடையிலுள்ள தூரத்தை அறிந்து கொள்ள அவர் எடுத்த ஒட்டக முயற்சிகள் மிகவும் சுவையானவை. அதனால்தான் அன்றைய எரடோஸ்தனிஸின் கணிப்பிலிருந்து பூமியின் சுற்றளவு கொஞ்சமும் தப்பவில்லை. அன்றைய எகிப்திய அலகான ஸ்டேடியன் (stadion) என் ற அலகில்தான் பூமியின் சுற்றளவைக் கணக்கிட்டார். அந்த அலகுப்படி, எரடோஸ்தனிஸ் கணக்கிட்ட புவியின் சுற்றளவு 250,000 ஸ்டேடியா (46,250 கி.மீ.). ஆனால் நிலநடுக்கோட்டில் பூமியின் சுற்றளவு  40,075 கி.மீ. ஸ்டேடியன் அலகில் உள்ள மாறுதகளைக் கணக்கில் கொண்டு, அன்றைக்கு அவர் கண்டுபிடித்த புவியின் சுற்றளவு 39, 690 கி.மீ.என்பதும் தெரிய வந்தது. அதாவது இன்றைய புவியின் சுற்றளவில் சுமார் 2% மட்டும் வித்தியாசம் இருந்தது. இதனை நாம் கணக்கில் கொள்ள வேண்டியதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;புவி மீது சோதனைகள்..!&lt;br /&gt;&lt;br /&gt;எரடோஸ்தனிஸ் பூமியின் சுற்றளவு கண்டுபிடிக்கும் முயற்சி, ஒரே ஒரு சோதனையுடன் நிறைவு பெற்று விடவில்லை. அவரே. வேறு வேறு இடங்களுக்கு ஒட்டகத்தின் மேல் ஆட்களை அமரவைத்து அனுப்பி, அவைகளுக்கு இடையே உள்ள தூரம், சூரியக்கதிரின் சாய்மானம் போன்றவற்றைக்கொண்டு அந்த பகுதியிலும் புவியின் சுற்றளவு என்ன என்பது தெரிந்து கொண்டு, ஏற்கனவே கண்டுபிடித்திருந்த சுற்றளவுடன், மற்ற விடைகள் ஒத்துப் போனதால், முன்பு அலேக்சான்டிரிய-சைநினுக்கு இடையில் கண்டறிந்த பூமியின் சுற்றளவு சரியானதே என்ற முடிவுக்கு வந்தார். பூமியின் சுற்றளவை திரிகோணமிதி கணக்கியல் மூலமே கண்டறிந்தார். பூமியின் விட்டத்தையும் கூட, சுற்றளவு மூலம் கணக்கிட்டுத் தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;புவியியலின் முதல் பதிவும் புத்தகமும்!&lt;br /&gt;&lt;br /&gt;அந்த கால கட்டத்தில் எரடோஸ்தனிஸ் எழுதிய புவிவியல் புத்தகம் 3 பெரிய தொகுதிகளாக வெளிவந்தன. நீண்ட காலத்துக்கு அதுவே, புவியியலின் அசைக்க முடியாத ஆதாரமாக இருந்தது. எரடோஸ்தனிஸின் கண்டுபிடிப்பான பூமி சுற்றளவின் அளவு அடுத்த 100 ஆண்டுகளுக்கு எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே ஒப்புக்கொள்ளப்பட்டு பின்பற்றப்பட்டது. அதாவது அடுத்த நூறாண்டுக்காலமும் எந்தவித அறிவியல் கண்டுபிடிப்புகளும் பூமியின் சுற்றளவு பற்றி நடக்கவில்லை என்றே சொல்ல வேண்டும். அவருக்குப் பின் 150 ஆண்டுகள் கழித்து வந்த பாசிடோனியஸ் (Posidonius) பூமியின் சுற்றளவை அளக்க எரடோஸ்தனிஸின் செய்முறையையே பயன்படுத்தினார். இரு வேறு இடங்களின் மூலம் சுற்றளவு கணக்கைக் கணக்கிட்டு, முன்பு கணக்கிட்ட 252,000 என்ற ஸ்டேடிய எண்ணிக்கையே வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;எரடோதனிஸின் மற்ற கண்டுபிடிப்புகள்..!&lt;br /&gt;&lt;br /&gt; எரடோஸ்தனிஸ் பூமியின் சுற்றளவு, விட்டம் கண்டுபிடித்ததுடன் அவரது கண்டுபிடிப்பின் தாகம் தணிந்துவிடவில்லை. அவரது கண்டுபிடிப்புகள் வானவியலிலுக்கும் கூட பெருமை சேர்க்கிறது. பூமியிலிருந்து சந்திரனும், சூரியனும் எவ்வளவு தூரத்தில் இருக்கின்றன என்ற உண்மையைக் கண்டுபிடித்தவர் எரடோஸ்தனிஸ்தான். ஆனால் அவை பூமியின் சுற்றளவு போல் அவ்வளவு துல்லியமாக இல்லை. சூரியக் கதிரின் சாய்மானம், நிழலின் சாய்மானம் இவற்றை வைத்து பூமி சுழலும்போது 23.5 பாகை சாய்மானத்தில் சுழலுகிறது என்பதையும் கூட துல்லியமாகத் தீர்மானித்தார். மேலும் எரடோஸ்தனிஸ் அலெக்சாண்டிரியா நூலகத்தின் பொறுப்பாளாராகவும் இருந்தார். அதனாலும் மக்கள் எரடோஸ்தனிஸ் சொல்வதை ரொம்பவும் நம்பினார்கள். எக்கச்சக்கமான எரடோஸ்தனிஸின் வேலைகள், கண்டுபிடிப்புகள்.அனைத்தும் அலெக்சாண்டிரியா நூலகம் அழிந்த போது அழிந்துவிட்டன. அவரைப் பற்றி மற்ற நூலாசிரியர்கள் எழுதிய தகவல்களை வைத்தே இவையனைத்தும் எழுதப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;ஹெர்மஸ் கவிதையும்..லீப் வருடமும்..!&lt;br /&gt;&lt;br /&gt;எரடோஸ்தனிஸ்தான் முதன் முதல் பூமியின் உருவத்தை உத்தேசமாகக் கணித்து, அதன் வரைபடத்தை வரைந்து தந்தார். அதன் காலக் கணிப்பையும் பரிணாமக் காலத்தையும் கணக்கிட்டவர் இவர்தான். எரடோஸ்தனிஸுக்கு சரித்திரத்தின் மீது மீளாக் காதல் உண்டு. அதனால்தான் அவற்றை சுவைபட எழுதினார். வானில் வலம் வரும் விண்மீன் படலங்களுக்கும், கிரேக்க புராணங்களுடன் உறவு உண்டாக்கி, அவற்றிற்கிடையே உள்ள இணைப்பை அழகாக சித்தரித்தார். எரடோஸ்தனிஸ் இரவு வானின் விண்மீன்களைப் பட்டியலிட்டார். அன்றைக்கு அவற்றின் எண்ணிக்கை 675 உள்ளது என்றும் தெரிவித்தார். எரடோஸ்தனிஸ் ஹெர்ம்ஸ் Hermes, Erigone and Anterinys or Hesiod (apparently alternative titles)) என்ற அழகிய கவிதை ஒன்றைப் புனைந்தார். அதில் வானவியலின் அடித்தளம் பற்றி அழகாக, கோர்வையாக வடித்திருக்கிறார். அத்துடன், ஒவ்வொரு 4 ஆண்டுக்கு ஒரு முறை லீப் (Leap) வருடம் வருகிறது என்று பாட்டாக படித்தவரும் இவரே. அது மட்டுமின்றி அந்த சமயத்தில் நடைபெற்ற அரசியல் தகவல்களையும் , முக்கிய நிகழ்வுகளையும் குறிப்பிட்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;அலெக்சாண்டிரியா நூலகம் &amp; எரடோஸ்தனிஸின் எழுத்துக்கள் அழிவு!&lt;br /&gt;&lt;br /&gt;எரடோஸ்தனிஸ் கணிதத்தில் விற்பன்னர். தனது 30 ஆவது வயதில், மூன்றாம் தாலமியால் மீண்டும் அலெக்சாண்டிரியாவுக்கு அழைக்கப்பட்டார். அதுவும் தாலமியின் மகனுக்கு கல்வி புகட்ட வந்த எரடோஸ்தனிசை தாலமி III அலெக்சாண்டிரியா நூலகத்தின் முதன்மை நூலகராக நியமித்தார். அந்த நூலகத்தில் எரடோஸ்தனிஸ் நிலவியலின் அறிவியல் முழுவதையும் பாப்பிரஸ் மற்றும் ஆட்டுத்தோலில் பதிவு செய்து வைத்திருந்தார். பின்னர் அலெக்சாண்டிரியா நூலகம் அழிக்கப்பட்டபோது, ஆயிரக்கணக்கான பாப்பிரஸ் பட்டைச் சுருள்களும், ஆட்டுத்தோல் சுருள் பதிவுகளும் அப்படியே அழிக்கப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;தனது காலத்தில் அரிஸ்ட்டாட்டில் மனித இனத்தை கிரேக்கர்கள் மற்றும் காட்டுமிராண்டிகள் என்று கூறு போட்டதையும் எதிர்த்தவர் எரடோஸ்தனிஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;எரடோஸ்தனிஸின் எண்ணியல்..!&lt;br /&gt;&lt;br /&gt;அந்தக்காலத்தின் எண்ணியல் (Number Theory), வடிவியல் (Geometry) மற்றும் எண் கணிதம் (Arithmetic) ஆகியவற்றில் சிறந்து விளங்கினார் எரடோஸ்தனிஸ். இதில் முதன்மை எண்களைக் (Prime Numbers) கண்டுபிடிக்கும் முறையை அறிமுகப் படுத்தியவர் எரடோஸ்தனிஸ்தான். அதனால்தான் அவைகளை நாம் எரடோஸ்தனிஸின் சல்லடை (‘Sieve of Eratosthenes’) என்றே அழைக்கிறோம். இதுவும் கூட நிகோமாக்கஸ் (writings of Nicomachus) என்ற அறிஞரின் எழுத்துக்கள் மூலமே தெரிய வந்துள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;எளிதான அல்காரிதம்!&lt;br /&gt;&lt;br /&gt;சல்லடை/சீவ் என்ற சதுர வடிவ கணித சூத்திரம். படம் பார்க்க. இது ஒரு எளிதான அல்காரிதம் (simple algorithm). இது முதன்மை எண்கள் ஒரு குறிப்பிட்ட எண்கள் வரை செயல்பட முடிகிறது. மேலும் ஒரு கோடி வரை துல்லியமாய் அறிய முடிகிறது (The Sieve is a simple algorithm which works to identify all of the prime numbers up to a certain integer and is very accurate up to about 10 மில்லியன். Eratosthenes later erected a column at Alexandria with an epigram inscribed on it relating to his own mechanical solution to the cube problem.) இது 2, 3, 5, 7 போன்றவற்றின் இரட்டிப்பு பதின்மரை (Multiples) விட்டுவிட்டு செயல்படுகிறது. மீதமுள்ள எண்கள் முதன்மை எண்களாகும். இந்த எண் சல்லடை/சீவ் 18 ம் நூற்றாண்டின் லியோன்ஹார்ட் யூலர் (Leonhard Euler) வந்து தன் கருத்துக்களை சொல்லும் வரை நீடித்தது. அதுவே கணிதத் துறையை ஆட்சியும் செய்தது..&lt;br /&gt;&lt;br /&gt;வடிவியலின் தந்தை எரடோஸ்தனிஸ்..!&lt;br /&gt;&lt;br /&gt;எரடோஸ்தனிஸின் இன்னொரு முக்கிய புத்தகமும் அழிந்து போனது. அதன் பெயர் வழிகளிலே (On means ) -கணித வழிகள் என்பதாகும். இதுதான் வடிவியலின் இன்றியமையாத புத்தகங்களில் ஒன்றாகும். இதனைக் குறிப்பிட்டு, அதன் தகவல்களையும் தந்தவர் பாபஸ் ( Pappus) என்பவர். (another lost book written by Eratosthenes was On means. It is mentioned by Pappus as one of the great books of geometry.)&lt;br /&gt;&lt;br /&gt;பூமி-சூரியன் தொலைவினைக் கண்டுபித்த எரடோஸ்..!&lt;br /&gt;&lt;br /&gt;திரிகோணமிதியின் சூத்திரம் மற்றும் அப்போது கிடைத்த தகவல்களைக் கொண்டே பூமி-சூரியன் தொலைவினைக் கண்டறிந்தார். அப்போது இன்னொரு முக்கிய விஷயமும் அவருக்குக் கிடைத்தது. சூரியன் வெகு தொலைவில் உள்ளதால்தான் அதன் கதிர்கள் பூமியில் இணைகோடுகளாக (Parallel) வருகின்றன என்பதையும் அனுமானம் செய்தார். அது மட்டுமல்ல பூமி-சூரியனுக்கு இடையில் உள்ள தூரம் 149 மில்லியன் கி.மீ என்றும் தெரிவித்தார். இப்போது அறியப்படும் புவி-சூரிய தொலைவு 149 .5 மில்லியன் கி.மீ தான். அதாவது 1% மட்டுமே வித்தியாசம் இருந்தது. இந்த வித்தியாசம் ஒரு விஷயமே அல்ல. ஆனால் பூமியின் சாய்மானத்தை மிகத் துல்லியமாக 23.5 பாகை என்று கணக்கிட்டார். ஆனால் துரதிருஷ்டவசமாக பூமிக்கும் சந்திரனுக்கும் இடையில் உள்ள தூரம் என அவர் குறிப்பிட்ட 144,000 கி.மீ என்பது மட்டும் தவறாகி விட்டது. இது தற்போதைய தூரத்தை விட மூன்று மடங்கு அதிகம்.&lt;br /&gt;&lt;br /&gt;பீட்டா எரடோஸ்தனிஸ்..!&lt;br /&gt;&lt;br /&gt;எரடோஸ்தனிஸ் பல்துறை வித்தகராக இருந்தாலும் கூட எந்தத் துறையிலும் அவர் முதன்மையாய் இல்லாததால் அவரை இரண்டாம் நிலைக் குறியீடான பீட்டாவை வைத்து பீட்டா என்றே அழைக்கின்றனர். பீட்டா என்று குறியீட்டுப்பெயரில் இவரைக் கூறியவர் சுதா லெக்சிகான் (Suda Lexicon) மற்றும் அவரது சம காலத்தவருமே. ஆனால் முதன்மை அறிஞர்களை விட எரடோஸ்தனிஸ் மிக மிக முக்கியாமானவர். அவரது கண்டுபிடிப்புகளும், சூத்திரங்களும், கொள்கைகளும் இன்றும் மக்களால் பின்பற்றப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;எரடோசின் விமரிசனமும் பிளாட்டோவும்..!&lt;br /&gt; &lt;br /&gt; எரடோஸ்தனிஸ் எழுதிய கணித விமர்சனம் மிகவும் முக்கியமானது. அதுவே, பிளாட்டோவின் தத்துவத்திற்கு அடித்தளம் என்றும் சொல்லப்படுகிறது. எரடோஸ்தனிஸின் எழுத்தில் எண்கணிதம் (arithmetic) மற்றும் வடிவியல் (geometry) போன்றவற்றிற்கு கணித அடிப்படை விளக்கங்கள் சொல்லப்பட்டுள்ளன. அவற்றில் ஏராளமான விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. மேலும், அதில் (கணிதத்தில்) இசையையும் இணைத்தே கூறியுள்ளார் எரடோஸ்தனிஸ். இவற்றை எல்லாம் நாம் ஸ்மியார்னா(Smyrna)வில் வாழ்ந்த தியோனின் பதிவுகள் மூலமே அறிகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;கிரேக்க கணிதத்தில் வட்டத்தின் பரப்பு (squaring a circle), கனசதுரத்தின் இரட்டிப்பு (doubling a cube) மற்றும் ஒரு கோணத்தின் முப்பிரிவு (trisecting an angle) போன்ற மூன்று முக்கிய பிரச்சினைகள் இருந்தன. அதில் ஒன்றான கன சதுரத்தின் இரட்டிப்பு என்பதற்கான பிரச்சனையை எரடோஸ்தனிஸ் தீர்த்து வைத்தார் என்று தியோன்(Theon of Smyrna -Theon) மற்றும் ஈடோசியஸ்(Eutocius) தெரிவித்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;எரடோசின் முதுமையும் முடிவும்..!&lt;br /&gt; &lt;br /&gt;எரடோஸ்தனிசுக்கு முதுமை எட்டியதும் பல வகைகளில் சங்கடப்பட்டார். முக்கியமாக 80 வயதாகும்போது அவருக்கு பார்வை இழப்பு ஏற்படுகிறது. அதனால் மிகவும் மனம் நொந்த எரடோஸ்தனிஸ் கண்பார்வை போன பின் மனிதனுக்கு மதிப்பு மரியாதை இல்லை என்றும், அதனால் விரைவில் இறப்பது உசிதம் என்று எண்ணி பல நாட்கள் உண்ணா நோன்பிருந்து பின்னரே உயிர் நீத்தார். இதுதான் இவரது வாழ்வில் வேதனையான ஒரு நிகழ்வாகும். எரடோஸ்தனிசின் உயிர் இந்தப் புவியிலிருந்து பிரிந்த வருடம் கி.மு.192. தன் 84 வது வயதில் இந்த உலகைத் துறந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;எரடோஸ்தனிசுக்கு பெருமை சேர்க்கும் வகையில், சந்திரனில் உள்ள ஒரு பள்ளத்திற்கு எரடோஸ்தனிஸ் பெயர் சூட்டப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: பேரா.சோ.மோகனா&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3683345437092478883-5587245536668990077?l=muruganthiru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muruganthiru.blogspot.com/feeds/5587245536668990077/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3683345437092478883&amp;postID=5587245536668990077' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3683345437092478883/posts/default/5587245536668990077'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3683345437092478883/posts/default/5587245536668990077'/><link rel='alternate' type='text/html' href='http://muruganthiru.blogspot.com/2011/10/blog-post_31.html' title='எரடோஸ்தனிஸ்... உலகின் முதல் புவியியலாளர்'/><author><name>அறிவியல் விழிப்புணர்வு</name><uri>http://www.blogger.com/profile/14816292961575112498</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='7' src='http://2.bp.blogspot.com/_-B1lk_hlPgA/SbYP5SBQ4CI/AAAAAAAAAHc/wBrjaI1emS4/S220/PSF_logo.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3683345437092478883.post-7270566241763985238</id><published>2011-10-20T21:29:00.000-07:00</published><updated>2011-10-20T21:33:01.179-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நாய்கடி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மருத்துவம்'/><title type='text'>நாய்க் கடி ஆபத்தானதா?</title><content type='html'>நாய்க் கடி என்றால், முதலில் நமக்குத் தெரிய வேண்டிய தகவல், அது நல்ல நாயா, வெறிபிடித்ததா என்பதுதான். வெறிபிடித்த நாய் என்றால் பயந்தடித்துக் கொண்டு சிகிச்சையை ஆரம்பிக்க வேண்டும். சமயத்தில் அந்த நாய்க்கு வெறிநோய் இருப்பது கூட நமக்குத் தெரியாமல் இருக்கலாம். அந்த நாய்க்கு வெறிநோய் ஊசி போட்டிருந்தால் நாம் தப்பித்தோம், இல்லை எனில் பிரச்சினைதான். ஆனால் எப்படியானாலும் நாய்க் கடித்த உடனே அந்த இடத்தை நன்கு கழுவி உடனே மருத்துவ சிகிச்சை செய்ய வேண்டும். உடனடி சரியான சிகிச்சை கட்டாயம் உயிரைக் காப்பாற்றும். நாயில் குட்டி நாய், பெரிய நாய் என்றில்லை; எந்த நாய் கடித்தாலும் பாதிப்பு ஒன்றுதான். ஆனால் எந்த இடத்தில் கடித்தது என்பதைப் பொறுத்து அதன் பாதிப்பும், நோய் வரும் காலமும் வேறுபடலாம். உங்களுக்கு ஒரு புண் இருந்து, அதில் வெறிநோய் உள்ள நாய் நக்கினால் கூட, நமக்கும் வெறிநோய் வரும் என்பதே உண்மை. அதுதான் அறிவியல்.. அது வேண்டாம் வெறிநோய் பாதிப்புள்ள நாய் லேசாக கீறினால் கூட, லபக்கென்று வெறிநோயின் வைரஸ் அப்படியே நம்மிடம் ஒட்டிக்கொள்ளும். வெறிநோயின் அறிகுறிகள் நம்மிடம் உண்டாகிவிட்டால் நம்மை யாராலும் காப்பாற்ற முடியாது. அது என்னப்பா அப்படி ஒரு ராட்சச வெறிநோய். என்கிறீர்களா?&lt;br /&gt;&lt;br /&gt; வெறிநோயின் சுவாரசிய தகவல்கள்..! &lt;br /&gt;&lt;br /&gt; வெறி பிடித்த நாயின் கடி/எச்சில் மூலம் வருவதுதான் வெறிநோய்(Rabies). வெறிநோய் வைரசின் பெயர் லைஸா வைரஸ் (Lyssavirus) என்பதாகும். குட்டியூண்டு சைஸ் உள்ள இந்த வைரஸ்தான் வெறிநோயை உண்டுபண்ணுகிறது. ரேபிஸ் (Rabies) என்பது ஒரு லத்தீன் வார்த்தை. இதன் பொருள், பைத்தியம் பிடித்த/சித்த சுவாதீனமற்ற(Rabies=Madness) என்பதாகும். வெறி நோயினால், அள்வுக்கதிகமான மூளை வீக்கம் (encephalitis) ஏற்படும். பின்னர் மூளையின் செயல்பாடுகளை மாற்றியமைத்து கண்டமேனிக்கு வைரஸின் போக்கில் செயல்பட வைக்கும். நமது இயல்பு நிலை பறி போய்விடும். நம்மை இவ்வளவு பாடுபடுத்தும் இந்த வைரஸ் அப்படி என்ன யானை பெரிதா என்றால் இல்லவே இல்லை. ஒரு எறும்பு அளவு என்ன, ஒரு மண் துகள் அளவு கூட இல்லை. மிக மிகச் சிறியது. அதன் நீளம் 180 நானோ மீட்டர். அகலம் 75 நானோமீட்டர். ஒரு நானோ மீட்டர் என்பது ஒரு மீட்டரில், 100 கோடியில் ஒரு பகுதி.(One nanometre is one billionth of metre (1/1000000000 of a metre, or 0.000000001 m). இந்த லைஸா வைரஸ் ஒற்றை RNA வில், குழந்தையைத் துணியில் சுற்றுவதுபோல் சுற்றி கட்டி வைக்கப் பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;மனிதர்/பாலூட்டியை குறி வைக்கும் வெறிநோய்..!&lt;br /&gt; &lt;br /&gt; வெறிநோய் வெப்ப ரத்த விலங்குகளிடம் மட்டுமே-அதாவது பாலூட்டிகளிடம் மட்டுமே - வருகிறது. அதுவும் விலங்குண்ணிகளிடம் மட்டுமே! நகங்கள் உடைய விலங்குகளிடம் மட்டுமே வரும். ஆனால் அது அங்கிருந்து வாய்ப்பு கிடைக்கும்போது, மனிதனிடம் ஒரே பாய்ச்சலாக பாய்ந்து வந்துவிடுகிறது. அது மட்டுமல்ல, இந்த வியாதி ஒரு விலங்கிடமிருந்து இன்னொரு விலங்குக்கும் பரவுகிறது. பொதுவாக இந்த வெறிநோய், வெறிநோய் பாதிப்புள்ள ஒரு விலங்கிலிருந்து (அது நாயாக இருக்கலாம், பூனையாக இருக்கலாம், ஆடாக இருக்கலாம், மாடாகவும் இருக்கலாம்) இன்னொரு விலங்கை/மனிதரைக் கடிப்பதன் மூலமே வருகிறது. ஆனால் அமெரிக்காவில் வௌவால் &amp; பூனைகள் மூலம் வருகிறது. பொதுவாக் இந்நோய் நரி, ராகூன்(raccoons) ஷங்க்(skunks) ஓநாய் மற்றும் கீரிகளிடம் காணப்படுகிறது. &lt;br /&gt; &lt;br /&gt;நாய்க்கடிக்கு சிகிச்சை எப்படி?&lt;br /&gt; &lt;br /&gt; பொதுவாக மனிதனுக்கு ஏற்படும் வெறிநோய் என்பது அதன் தீவிரமான அறிகுறிகள் ஏற்படும் முன், கடித்த உடனேயே அதற்கான நோய்த்தடுப்பு முறைகளை 48 மணி நேரத்துக்குள் தரவேண்டும். அப்படி நோய்த்தடுப்பு மருந்து தக்க தருணத்தில், வெறிநாய் கடித்தவுடன்/ நாய் கடித்தவுடன் கொடுத்துவிட்டால் கட்டாயம் வெறிநோயிலிருந்து தப்பித்துவிடலாம். ஆனால் உடனடி சிகிச்சை தராவிட்டால் அது உயிர் குடிக்கும் எமனாகவே மாறிவிடுகிறது. வெறி நோய்க்கான வைரஸ் மைய நரம்பு மண்டலத்தையும், முடிவில் மூளையையும் தாக்கி, இறப்பு ஏற்பட பாதை போட்டுத் தருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;முற்றிய வெறிநோய்!&lt;br /&gt;&lt;br /&gt; வாயில் நுரை தள்ளிக்கொண்டிருக்கும் வெறிநோய் முற்றிய வெறிநாயாக இருந்தாலும் கூட, கடித்த 48 மணி நேரத்திற்குள் அதற்கான தடுப்பு மருந்தைப் போட்டு விட்டால் வெறிநோயிலிருந்து நாய் கடித்த நபரைக் காப்பாற்றிவிட முடியும். ஆனால் வெறிநோயின் வைரஸ்கள் நமது நரம்பைத் தொட்டுவிட்டாலோ/வெறிநோயின் வெளிப்பாட்டு அறிகுறிகள் உண்டாகிவிட்டாலோ, காப்பாற்ற முடியாது. நிலைமை ரொம்ப மோசமாகி, கெட்டுப் போய், இறுதியில் சாவு ஒன்றுதான் ஒரே முடிவாக இருக்கும். &lt;br /&gt; &lt;br /&gt;நம்மிடையே நிலவும் மோசமான மூடநம்பிக்கைகள்..!&lt;br /&gt; &lt;br /&gt; நம் மக்களுக்கு வெறிநோய் பற்றிய தகவல் எதுவும் தெரியாமலேயே அவர்கள் மனம் போனபடி நாய்க்கடிக்கு மருத்துவம்/மாந்திரீகம்/ நாட்டு மருந்து சிகிச்சை என செய்து கடி பட்டவர்களின் உயிரைப் பணயம் வைத்து பலி கொடுக்கின்றனர். கிராமங்களில் மட்டுமல்ல, நகரங்களிலும்கூட வெறிநாய்க்கடி பற்றிய விழிப்புணர்வு இல்லாததுதான் வேதனை. படித்தவர்கள் கூட மூடநம்பிக்கையான பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிக்கின்றனர். நாய்க் கடித்தவுடன் அதனை சிலர் கண்டுகொள்ளாமல் விட்டு விடுகின்றனர். சிலர் உடனேயே நல்லெண்ணெய் முட்டை கொடுத்துவிட்டு மந்திரிப்பவரிடம் அழைத்துச் சென்று மந்திரிப்பார்கள். அவர் என்ன சொல்கிறாரே அதனை மட்டும் வேத வாக்காகக் கேட்பார்கள். அவர் நல்லெண்ணெயில் ஏதோ ஒரு பச்சிலையை பிழிந்து கொடுப்பார். பின்னர் 6 மாதத்துக்கு கோழிக்கறி, பூசணிக்காய் மற்றும் அகத்திக்கீரை சாப்பிடாமல் பத்தியமாக இருந்தால் வெறிநாய்க்கடி சரியாகி விடுமாம். கடித்த உடன் நல்லெண்ணெய், முட்டை கொடுப்பது விஷம் ஏறாமல் தடுப்பதிற்காம். சிலர் நாய்க்கடித்ததும், ஏதோ ஒரு மரத்தைக் கடிக்கச் செய்து, அப்படிச் செய்ததும் நாய்க்கடித்த இடத்திலிருந்து பச்சையாக ஏதோ வழியுமாம். நாய்க்கடியின் விஷம் இறங்கிவிடுமாம். இப்படி ஊருக்கு ஊர் வித்தியாசமான சிகிச்சைகள் உண்டு. ஆனால், கடித்த நாய் வெறிநாயாக இல்லாமல் சாதா நாயாக இருந்தால் பிழைத்துக் கொள்வார்கள். வெறிநாய் என்றால்.. அவ்வளவுதான்...&lt;br /&gt;&lt;br /&gt;வெறிநோயின் பயணப்பாதை..! &lt;br /&gt; &lt;br /&gt; வெறிநோய் பற்றிய தகவலே நம் வயிற்றில் புளியைக் கரைத்துவிடும். ஆனால் அது பயம் தரும் விஷயம் என்பதற்காக நாம் தெரிந்து கொள்ளாமல் இருக்க முடியுமா? நமது உயிரைக் காப்பாற்ற வேண்டுமே? வெறிபிடித்த நாய்க்கடி மூலம் நமக்குள் நுழைந்த வைரஸ், அது எந்த இடத்தில் நுழைந்ததோ அதைப் பொறுத்து, அது உடலுக்குள் வேகமாக நரம்பு மண்டலம் வழியே ஜாலியாகப் பயணம் செய்கிறது. பின்னர் இறுதியாக மூளைக்குள் போய் ஜம் என்று உட்கார்ந்துவிடுகிறது. பின்னர் அது ஆடும் ஆட்டம் இருக்கிறதே.. அது சொல்லி மாளாது.&lt;br /&gt;&lt;br /&gt;வைரஸின் அதிவேக செயல்பாடு!&lt;br /&gt; &lt;br /&gt; மனித உடம்பில் எந்த இடத்தில் நாய்க் கடித்தது என்பதைப் பொறுத்தே, அந்த வைரஸ் எத்தனை நாளில் மத்திய நரம்பு மண்டலத்தைப் போய் அடைந்து, நம் மூளையைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, வைரஸ் நம் உடலை ஆட்சி செய்யத் துவங்கும் என்பது தெரியும். அதனை ஒட்டி இதன் அடைகாப்புக் காலம்(Incubation period) சில மாதங்களிலிருந்து ஓராண்டு வரை இருக்கலாம். ஒரு முறை இந்த வெறிநோய் வைரஸ் மைய நரம்பு மண்டலத்திற்குள் காலடி எடுத்து வைத்துவிட்டால், அவ்வளவுதான்.. ! வெறிநோயின் அறிகுறிகள் உருவாகத் துவங்கும். அதன்பின் ஓரிரு நாட்களுக்குள் அதன் பிரச்சினைகளும் சிக்கல்களும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகி, மிகக் குறைந்த நாட்களிலேயே, அதாவது ஓரிரு நாட்களிலேயே இறப்பு நிகழ்ந்து விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;நோயின் அறிகுறிகள்..! &lt;br /&gt; &lt;br /&gt;துவக்க காலத்தில் முதலில் உடல்வலி, பின் தலைவலி அதன்பின் காய்ச்சல் என்று கொஞ்சம் கொஞ்சமாக நோய் முற்றும். பின் பொறுக்க முடியாத வலி உண்டாகும். கட்டுகடங்காத உடல் பிரச்சினை, மன அழுத்தம், நீரைக் கண்டால் பயமும் வெறியும் ஏற்படும். உணவை விழுங்க முடியாது. ஆனால் நீர் வேண்டும் வேண்டும் என்று கத்துவார்கள். அவர்களுக்கு மனப்பிரமை ஏற்படும். ஏராளமாய் பிதற்றுவார்கள். வாயில் எச்சில் அதிகமாக ஊற்றெடுக்கும்; ஒழுகும். மற்றவரைக் கண்டால் நாய் போலவே குரைப்பார்கள், ஓடிவந்து கடிக்க வருவார்கள். உடல் செயல்பாடுகள் வித்தியாசமாக இருக்கும். உடல் உறுப்புகள் சில செயலற்றுப் போய்விடும். பின் உடல் அசையாமை, சித்தம் மாறிய நிலை போன்றவை ஏற்படும். முடிவில் கோமா நிலையாகும். சுவாசிக்க முடியாமையால் உயிர்ப் பிரிதல் நேரிடும். &lt;br /&gt; &lt;br /&gt;வெறிநோய் உருவாக்கும் லைசாவின் தந்திரங்கள்..!&lt;br /&gt;&lt;br /&gt; வெறிநோய் வைரசான லைசாவில் உள்ள பிரச்சினை என்னவென்றால், நம் உடலின் படைவீரர்களான இரத்த வெள்ளையணுக்களின் ஒரு பிரிவான லிம்போசைட்டுகளிடம் (Lymphocytes) லைஸா வைரஸ் பெப்பே காண்பித்து நம் உடலுக்குள் நுழைந்துவிடும். பின் அதன் பார்வையிலிருந்து தப்பி மறைந்து வாழும் திறன் உள்ளது இந்த லைஸா வைரஸ். அதனால், இந்த வைரஸ் உடலுக்குள் நுழைந்தாலும், அதனைக் கண்டுபிடிக்க முடியாததால், உடலுக்குள் நுழைந்த வைரசுடன், போர்வீரர் வெள்ளையணுக்கள் போரிட முடியாது. எனவே, எந்த தற்காப்பு நடவடிக்கையும் நம் உடலால் எடுக்கப்பட மாட்டாது. உடலுக்குள் லைஸா கொலை வெறியுடன் ஜாலியாய் சுற்றி வரும். லைஸா வைரஸ் நம் உடம்பில் நுழைந்த சில நாட்கள்/வாரங்களுக்குள் (நுழையும் இடத்தைப் பொறுத்து, கால் என்றால் சில மாதங்கள், வயிறு என்றால் சில வாரங்கள் வாய்/கன்னம்/நெற்றி என்றால் 10 நாட்களில் ) வெறிநோயின் அடையாளங்களை/அறிகுறிகளை, உடலில் பதிவு செய்யும். சில சமயம் இந்த வைரசின் அடைகாக்கும் திறன் 7 ஆண்டுகள் கூட நீடிப்பதுண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;லைஸா வைரசின் தடுப்பூசி கண்டுபிடிப்பு ..!&lt;br /&gt;&lt;br /&gt; லைஸா வைரஸ் எந்த மூலக்கூறு செயல்பாட்டில் (Molicular mechanism ) ஏறிப் பயணம் செய்து தாவிப் பரவுகிறது என்ற தகவல் இதுவரை அறியப்படவில்லை. ஆனால் ஒரு முறை வெறிநோய் அறிகுறிகள் வெளிப்படையாய் தெரிய ஆரம்பித்து விட்டால் போதும். நம்மை இந்த உலகில் எந்த மருத்துவராலும், எந்த சக்தியாலும் எந்த வகையிலும் காப்பாற்றவே முடியாது. இந்த வைரஸ் செல்லுக்குள் தனியான வைரஸ் தொழிற்சாலை (Virus factory) உண்டாக்கி, அதில் தன் பெருக்கத்தைச் செய்யும். அதன் பெயர் நைக்ரி துண்டுகள் (Naigri bodies). இதனைக் கண்டுபிடித்தவர் மேற்கிந்தியத் தீவைச் சேர்ந்த டாக்டர். ஜோசப் லேன்னோக்ஸ் பாவன் என்ற ஒரு பாக்டீரியலாளர்.. (Dr. Joseph Lennox Pawan of Trinidad in the West Indies, a Government Bacteriologist ).இந்த நைகரி உடலை இவர் 1931 ல் வௌவால்களின் மூளையிலிருந்து கண்டறிந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;லைஸா வைரசின் மோதல்/போர் உடலுக்குள்..!&lt;br /&gt; &lt;br /&gt; இந்த வைரஸ் நம் உடலின் இண்டர்பெரானுடன் (interferon) முட்டி மோதி சண்டையிட்டு அதனை தோல்வியுறச் செய்கிறது. உடலின் தற்காப்புத் திறனைக் காலி செய்கிறது. மூளையின் பலவித நடவடிக்கைகளை முடக்குகிறது. அங்கிருந்து உடலின் மற்ற பாகங்களுக்கும் பரவுகிறது. பின் நமது உமிழ் நீர் சுரப்பிக்கும் தாவுகிறது. ஏராளமான உமிழ் நீர் கட்டுக்கடங்காமல் சுரக்கிறது. அந்த உமிழ்நீரில் எக்கச்சக்க வைரஸ் இருக்கும். அத்துடன் வாய் மற்றும் கன்னத்திலும் வைரஸ் கோடிக்கணக்கில் வழியும். எனவே நாய் கடித்து 2 நாளிலிருந்து-5 ஆண்டுகள் வரையிலும் வெளியிலேயே தெரியாமல் அடைகாத்து, இது உடலில் தங்கி, பின்னர் அறிகுறி உண்டாகி முடிவில் இறப்பு ஏற்படலாம். பெரும்பாலான பாதிப்புக்குள்ளான பாலூட்டிகள் கடித்த ஒரு சில வாரங்களிலேயே உலகை விட்டு சென்றுவிடும். ஆனால் ஆப்பிரிக்க கீரி மட்டும், இந்த உடல் உபாதைகளோடேயே பல ஆண்டுகள் வாழ்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;வைரசின் வாழ்க்கை முறை..!&lt;br /&gt;&lt;br /&gt; வைரசின் வாழ்க்கையில் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், வைரஸ் பெருக்கம் செய்ய/உயிர் வாழ கட்டாயமாய் இன்னொரு செல்/உயிர் வேண்டும். வைரஸ் தானே தனியாய் தனித்தியங்கி சுதந்திரமாய் வாழ இயலாது. இன்னொரு செல்/உயிர் கிடைக்கும் வரை வைரஸ் சிவனே என்று காத்துக்கிடக்கும். அந்த காத்திருத்தல் காலம், சில சமயம் 2 ஆண்டுகள்/200 ஆண்டுகள்/2000 ஆண்டுகள் கூட ஆகலாம். அதற்குப்பின்னும் கூட! ஆனால் ஓர் உயிர் மட்டும் கிடைத்துவிட்டால் வைரஸ் டபக்கென்று உயிர்த்தெழுந்து தன் இனத்தை விருத்தி செய்யும்.&lt;br /&gt;&lt;br /&gt;உலக நாடுகளில் வெறிநோய் நிலைமை..!&lt;br /&gt; &lt;br /&gt; உலகம் முழுவதும் 97% வெறிநோய், நாய்க்கடியிலிருந்துதான் உருவாகிறது. நாய்க்கு வெறிநோய் தடுப்பூசி போடுவதன் மூலம் இந்நோய் வராமல் தடுக்கலாம். நமக்கு வெறிநோய் தடுப்பு ஊசி போடுவதன் மூலம் நம்மை வெறிநாய்க்கடியிளிருந்து 3 ஆண்டுகள் தப்பிக்கலாம். அமெரிக்காவில் விலங்குகள் கட்டுப்பாடு மற்றும் தடுப்பூசி மூலம் வீட்டு நாய்களுக்கு வெறிநோய் வருவது கட்டுபடுத்தப்பட்டிருக்கிறது. ஆனாலும் கூட அமெரிக்காவில் வௌவால், பூனை மற்றும் ராகூன் மூலம் வெறிநோய் வருகிறது. ஆஸ்திரேலியா, ஜப்பான்,ஐரோப்பிய நாடுகள் போன்ற நாடுகளில் வெறிநோய் முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது. இந்த நோய் வௌவால் மூலம் காற்றின் வழியே பரவுகிறதாம்.&lt;br /&gt;&lt;br /&gt;வெறிநோய் இறப்பின் தகவல்கள்..!&lt;br /&gt;&lt;br /&gt; வெறிநோய் இன்று சுமார் 150 நாடுகளுக்கு மேல் காணப்படுகிறது. உலகம் முழுவதும் வெறிநாய் வாழும் இடங்களில்/வெறிநோய் வரும் வாய்ப்புள்ள இடங்களில் சுமார் 330 கோடி மக்கள் வாழ்கின்றனர். இவர்களில் ஆண்டுதோறும் 55,000௦௦௦ மனித உயிர்களைப் பலி வாங்குகிறது வெறிநோய். இந்த இறப்புகளில் 90% ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில்தான் நிகழ்கிறது. இந்தியாவில் மட்டும் ஒரு வருடத்தில் 20,000 பேர் வெறிநோயினால் இறக்கின்றனர். இது உலகில் ஏற்படும் வெறிநோய் சாவுகளில் 36% ஆகும். இறப்பு நிகழ்வில் 40% வெறிநோய் இறப்புக்கள் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கே ஏற்படுகிறது. இவர்களும் கடித்த நாய், வெறிநோய் வந்த நாய் என்று தெரியாமலே கடிபட்டு, பாதிக்கப்பட்டு இறக்கின்றனர். ஒரு விஷயம் என்னவென்றால் இந்த வெறிநோய் வியாதி முற்றும் வரை வெளியே தெரியாமல் கமுக்கமாய், அடக்கமாய் உடலுக்குள்ளேயே இருக்கும். வெறி முற்றிய பின்தான் அதன் அறிகுறிகள் வெளியே வெளிப்படும். &lt;br /&gt; &lt;br /&gt;வெறிநோயிலிருந்து காப்பாற்றப்படும் மனித உயிர்கள்..! &lt;br /&gt; &lt;br /&gt; ஒவ்வொரு ஆண்டும், உலகில் சுமார் 1 1/2 கோடிப்பேர், நாய்க்கடிக்கான தடுப்பு நடவடிக்கைகள் எடுத்துக் கொள்கின்றனர். இதன் மூலம் 32,700 இறப்புக்கள் தடுக்கப்படுகின்றன. இந்தியாவில் பெரும்பாலும் தெரு நாய்கள் மூலமும், சில சமயம் வளர்ப்பு நாய்கள் மூலமும் வெறிநோய் உண்டாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வெறிநோயின் ஆதிகால சரித்திரம்...!&lt;br /&gt;&lt;br /&gt; வெறிநோய் பற்றிய தகவல் சுமார் 5,500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இருந்ததாக பதிவுகள் சொல்கின்றன. கிரேக்கர்கள், ரோமானியர்கள் மற்றும் பாபிலோனியர்கள் வெறிநோய் பற்றிய பதிவுகளை களிமண் பலகைகளில் பதிவு செய்து வைத்துள்ளனர். மனிதன் எப்போது நாய் வளர்க்கத் தொடங்கினானோ அப்போதே, வெறிநோய் பாதிப்பும் ஏற்பட்டிருக்க வேண்டும் எனத் தவகல்கள் சொல்லுகின்றன. மனிதனுக்கு நாயுடன்தான் முதலில் பழக்கம் ஏற்பட்டிருந்தது. அதன் ஆதாரமாக, இஸ்ரேலில் ஒரு பெண்ணின் உடலுடன் ஒரு நாயும் சேர்த்து அடக்கம் செய்யப்பட்ட மம்மி கிடைத்துள்ளது. இதன் வயது சுமார் 12,000 வருடங்கள். ஆனாலும் கி.மு 1930களில் எஷ்னுன்னாவின் கோடக்சில்(Codex of Eshnunna)தான் வெறிநோய் பற்றி எழுதி வைக்கப்பட்டுள்ளது. அதாவது கியூநிபாரம் எழுத்துக்களில் பதிவிடப்பட்டுள்ளது. அதில் நாயின் சொந்தக்காரருக்கு எப்படி வெறிநோய் அறிகுறிகள் உருவாயின என்றும், அதற்கான தடுப்பு முறைகளும் கூட கூறப்பட்டுள்ளன. அதன் பின்னர் கி.மு 800-700௦௦களில் ஹோமர் பாதிப்பு வந்த நாய் பற்றி எழுதி உள்ளார். கி.மு 420களில் கிரேக்க தத்துவஞானியும் வீட்டு விலங்குகளில் வெறிநோய் வந்தது பற்றி குறிப்பிட்டுள்ளார். கி.மு. 400ல் வாழ்ந்த அரிஸ்ட்டாட்டில் நாய்கள் நோயினால பைத்தியம் பிடித்து திரிந்ததாகவும், அவை எரிச்சலோடு மற்ற விலங்குகளை கடித்ததாகவும் எழுதியுள்ளார்.&lt;br /&gt; &lt;br /&gt;வெறிநோய்த் தடுப்பு மருந்தும் உயிர் காத்தலும்!&lt;br /&gt; &lt;br /&gt; பொதுவாக மனித வெறிநோய் இறப்பு என்பது 1885ல் இதற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை தொடர்ந்து கொண்டே இருந்தது. இதன் தடுப்பு மருந்தை/ செயற்கை எதிர் உயிரியை 1885ல் லூயிஸ் பாஸ்டர் (Louis Pasteur) &amp; எமைலி ரௌக்ஸ் (Emile Roux) என்ற இரு விஞ்ஞானிகளும் இணைந்து வெறிநோய்க்கான தடுப்பூசியைக் கண்டுபிடித்தனர். இவர்கள் ஏற்கனவே வெறிநோய் வந்து இறந்த ஒரு முயலின் மூளையிலிருந்து செல்களை எடுத்து, அதிலிருந்தே இந்த தடுப்பு மருந்தை தயாரித்தனர். இந்த வகையில் செத்துப்போன வைரஸிலிருந்து தயாரிக்கும் மருந்துதான், புதிய வகையில் நவீனமாய் வளர்த்து தயாரிக்கும் மருந்தைவிட மலிவாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;முன்பெல்லாம் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் வெறிநாய் கடித்தால் 23 ஊசிகள் போடப்படும். அதன் பின், 25 ஆண்டுகளுக்கு முன் நாய் கடிக்கு தொப்புளைச் சுற்றி 14 ஊசிகள் போடுவார்கள். அந்த ஊசியின் வலி பிராணன் போய்விடும். பின்னர் 10 ஆண்டுகளுக்கு முன் 7 ஊசிகள் போட்டனர். இப்போது 3 ஊசிகள் மட்டும்தான். வலியும் அவ்வளவாக இருப்பதில்லை. முதல் 2 ஊசி ஒரு வார இடைவெளியிலும், கடைசி ஊசி 3 வாரத்துக்குப் பின்னும் போடுவார்கள்.வெறிநோய்த்தடுப்பு ஊசி சுமார் 3 வருடங்களுக்கு வெறிநோயிலிருந்து பாதுகாப்புத் தரும்.&lt;br /&gt;&lt;br /&gt;வெறிநோய்க்கான சிகிச்சை எப்படி?&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் காயம் பட்ட/ கடிபட்ட இடத்தை சுமார் 15 நிமிட நேரம் தொடர்ந்து சோப்புத் தண்ணீர்/சோப்புத்தூள்/ டிங்க்சர் அயொடின் (povidone iodine)/வெறிநோய் வைரஸைக் கொல்லும் பொருட்களால் அந்த இடத்தை தொடர்ந்து கழுவி, வெறிநோய் வைரஸைக் கொல்ல வேண்டும். நிறைய தண்ணீர் ஊற்றிக் கழுவ வேண்டும். பின் தடுப்பூசிகளை போடவேண்டும். ஊசியை தோள்பட்டையின் டெல்டாய்டு சதையில்(deltoid muscle) தான் போடுவார்கள். பின் ஒரு சில மணித் துளிகளுக்குள் தற்காப்புத் திறனுள்ள வெறிநோய் எதிர்ப்பானாகிய இம்முயூனோ குளோபுலின் (immune globulin) போடவேண்டும். பின் அதற்கு 4-5 தடுப்பூசியும் கடிபட்ட இடத்திற்கருகிலேயே போடவேண்டும். நமக்கு முன்பே வெறிநோய் தடுப்பூசி போட்டிருந்தால், நாய் கடித்த பின் இம்முயூனோ குளோபுலின் போட வேண்டாம். 4 தடுப்பூசி மட்டும் போதும். வெறிநோய் வராமல் இருக்க அதற்கான தடுப்பூசியும் முன்னமேயே போடலாம். வெறிநாயின் வெறிநோய்க்கடியை உடனடியாக கவனித்து அதற்கான சிகிச்சை செய்தால் காப்பாற்றிவிடமுடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;வெறிநோய் இருந்திருக்குமோ என சந்தேகப்படும் நாய் நக்கினால்/உணவு தரும்போது அந்த நாய் நம் உடலை தொட்டால், காயம் இன்றி இருந்தால், எந்த மருந்தும் தரவேண்டியதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கடித்த நாய் வெறிநோயுள்ளதோ என சந்தேகித்து, அதன் கடி லேசான பிறாண்டலுடன் இருந்தால், நம் உடலின் மேல் தோல் மட்டும் சுரண்டப்பட்டிருந்தால், இரத்தம் வரவில்லை என்றால், நீங்கள் கவலைப்படவேண்டாம். அதற்கு உடனடியாக தடுப்பூசியும், காயத்தைச் சுத்தம் செய்து, அதற்கான சிகிச்சையும் உடனடியாக செய்ய வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;நாய்க்கடியினால் அதன் ஒற்றைப் பல்/ பல பற்களின் பதிவு உடலில் உண்டானால், தோலுக்குக் கீழே காயம் இருந்தால், உடனடியாக தடுப்பூசியும் போட வேண்டும். பின்னர் வெறிநோயின் இம்முயூனோகுளோபுலினும் போடவேண்டும்; காயத்தை நன்கு துடைத்துவிட்டு அதற்கான சிகிச்சையும் தரவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;வளர்முக நாடுகளில், கடித்த நாய்க்கு தடுப்பூசி போடப்பட்டதா இல்லையா என்ற சந்தேகம் வந்தாலும், வராவிட்டாலும், கட்டாயமாய் சிகிச்சையைத் துவங்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;உலக நல நிறுவனத்தின் கூற்றின்படி, வெறிநோய் வந்துவிட்டால் எப்படி 100% இறப்பு என்பது எப்படி நிச்சமோ அதே போல, வெறிநாய் கடித்தபின் சரியான சிகிச்சையினைத் தந்தால் 100% தடுப்பு நடவடிக்கையும், உயிர் காப்பாற்றப்படுதலும் நிச்சயம்.&lt;br /&gt;&lt;br /&gt;வெறிநோய் உற்பத்திக்கூடம்..!&lt;br /&gt;&lt;br /&gt; இம்முயூனோகுளோபுலின் (Immunoglobulin) எனற தடுப்பு மருந்து உடல் செல்களுக்குள் வெறிநோய் வைரஸ் நுழையவிடாமல் தடுக்கிறது. சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் வரை, நீலகிரி மாவட்டத்தின் குன்னோரில் உள்ள பாஸ்டர் நிறுவனம், இந்தியா முழுமைக்கும் வெறிநோய் மருந்து தயாரித்துக் கொடுத்துக்கொண்டிருந்தது. ஆனால் புண்ணியவான் சுகாதார அமைச்சர் அன்புமணி ராமதாஸ், பெரிய மனது பண்ணி, இந்த நிறுவனத்துக்கு பால் ஊற்றி மூடுவிழா பணியினை மிகுந்த மக்கள் நல நிகழ்வாக நடத்திவிட்டார். அதன் பின் வெறிநோய் தடுப்பூசி பாவப்பட்ட மக்களால் வாங்கமுடியாத அளவுக்கு விலை வானத்தில் பறந்து உயர்ந்துவிட்டது. மக்கள் அரசு மருத்துவமனையையே நம்ப வேண்டி இருக்கிறது. தனியார் மருந்துக்கடைகளில் இதன் விலை ரூ.2,500/= க்கு மேல். இதனை எப்படி ஓர் உழைப்பாளி/ஏழைத் தொழிலாளி வாங்க முடியும்.? .இப்போது தடுப்பூசியின் எண்ணிக்கையும், அதன் வலியும் கூட குறைந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;உலக வெறிநோய் தினம்..!&lt;br /&gt;&lt;br /&gt; செப்டம்பர் 28 என்பது உலக வெறிநோய் நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று நாய்களுக்கும், மனிதர்களுக்கும் தடுப்பூசி போடப் படுகிறது. வெறிநோய் பாதுகாப்பு நடவடிக்களை கடைப்பிடிக்க மக்களிடம் ஒரு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்படுகிறது. இதுவரை உலகில் நிகழ்ந்துள்ள பதிவுகளில், 2005 ம் ஆண்டு விஸ்கான்சன் (Wisconsin) நகரில் ஜென்னா கீஸ் (Jeanna Giese)ஒரு இளம்பெண்ணுக்கு நிகழ்ந்த வெறிநோய்தான் குறிப்பிடத்தகுந்தது. வெறிநோய் வந்த துவக்கத்தில் அவரை மருந்த்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது எதிர் உயிரின் தற்காப்பு முறை நன்கு செயல்பட்டு வைரசுடன் போராடி வெற்றி கண்டார். இன்றும் உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அதன் பின் இரண்டு நோயாளிகள், கொலம்பியாவில் 2008 ல் 11 வயதுப் பையனும், கலிபோர்னியாவில் 2011, ஜூலையில் 8 வயது சிறுமியும் மட்டும் அதிசயமாக வெறிநோய் வந்த பின்னரும் பிழைத்திருக்கின்றனர். வேறு நபர்கள் வெறிநோய் வந்து பிழைத்ததாக சரித்திரமே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;வெறிநோய் பற்றிய ஆய்வு..!&lt;br /&gt;&lt;br /&gt; சமீபத்திய வெறிநோய் பற்றிய கண்டுபிடிப்பு நம்மை அதிர்ச்சியில் உறைய வைக்கிறது. உடலில் வெறிநோய் அடையாளங்கள் உருவான பின், நம் பெரும்பாலான உடல் செல்களில் உள்ள உட்கருவின் டி.என்.ஏ., ஆர்.என்.ஏ.வாக மாற்றப்படுகிறது. ஆனால் இவ்வளவு உருமாற்றம் நடந்தாலும், வெறிநோய் வைரஸ் பெருக்கம் செய்ய இந்த ஆர்.என்.ஏ வின் சிறு பகுதியே பயன்படுத்தப்படுகிறது. என்ன அநியாயம் பாருங்கள். வைரஸ் பல்கிப் பெருக, ஏராளமான புரதம் உருவாக்க, அளப்பறிய ஆர்.என்.ஏ உருவாகி, அதில் கொஞ்ஞூண்டு ஆர்.என்.ஏ மட்டுமே.. பயன்பாட்டுக்காம். &lt;br /&gt;&lt;br /&gt;வெறிநோய் வருவதற்கான சில காரணிகள்..!&lt;br /&gt;&lt;br /&gt; ஆசிய நாடுகளில் சில இடங்களில் நாய்க்கறி உண்ணும் பழக்கமும் உள்ளது. இதுவும் கூட வெறிநோய் உருவாக ஒரு காரணம் என்று அறியப்படுகிறது. நம்மிடையே இதுவரை, ஒருவருக்கு வெறிநோய் உள்ள நாய் கடித்ததா என்பதை அறிவதற்கான சோதனை இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. வெறிநோய் அறிகுறிகள் வந்த பின்தான் தெரிகிறது. பொதுவாக வெறிநோய் எச்சில் மூலமே பரவுகிறது. மிக அரிதாக வெறிநோய், பாதிக்கப்பட்ட வெறிநோய் உறுப்புகளிலிருந்து வெளியேறி காற்றில் கலந்து அப்படியே நாம் காற்றைச் சுவாசிக்கும்போது உள்ளே நுழைந்து வெறிநோயை உருவாக்குவதும் உண்டு. அதே போல அரிதாக சரியாக வேகவைக்கப்படாத வெறிநோய் வந்த விலங்குகளின் மாமிசத்திலிருந்தும் வர வாய்ப்பு உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் செய்யவேண்டியவை..:&lt;br /&gt;&lt;br /&gt;நீங்களோ/குழந்தைகளோ இறந்த விலங்குகளை கையால் எடுக்காதீர்கள். அதன் மூலமும் வெறிநோய் வரலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டில் வளர்க்கப்படும் அனைத்து விலங்குகளுக்கும் வெறிநோய்த் தடுப்பூசி கட்டாயமாய் போடவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;விலங்குகளால் ஏற்படும் எந்த காயத்தையும் உடனடியாகத் துடைத்து, அதற்கு தகுந்த மருத்துவ சிகிச்சை செய்ய வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் எந்த விலங்குகளுடனும் தொட்டு விளையாடி பழகக் கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தைகளிடம் விலங்குகளைத் தொடக்கூடாது என்று சொல்லித் தரவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;நாய்களிடம் மிக ஜாக்கிரதையாகவே பழகுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;உலகம் முழுவதுமே வெறிநோய்க்கான தடுப்பு மருந்து தயாரிப்பு போதுமானதாக இல்லை என்பது வருத்தத்திற்குரிய செய்தியாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: - பேரா.சோ.மோகனா&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3683345437092478883-7270566241763985238?l=muruganthiru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muruganthiru.blogspot.com/feeds/7270566241763985238/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3683345437092478883&amp;postID=7270566241763985238' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3683345437092478883/posts/default/7270566241763985238'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3683345437092478883/posts/default/7270566241763985238'/><link rel='alternate' type='text/html' href='http://muruganthiru.blogspot.com/2011/10/blog-post_20.html' title='நாய்க் கடி ஆபத்தானதா?'/><author><name>அறிவியல் விழிப்புணர்வு</name><uri>http://www.blogger.com/profile/14816292961575112498</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='7' src='http://2.bp.blogspot.com/_-B1lk_hlPgA/SbYP5SBQ4CI/AAAAAAAAAHc/wBrjaI1emS4/S220/PSF_logo.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3683345437092478883.post-1987595649326775974</id><published>2011-10-04T03:31:00.000-07:00</published><updated>2011-10-04T03:33:21.786-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வரலாற்று துணுக்குகள்'/><title type='text'>உலகின் மிகப் பழங்கால ஒயின் தயாரிக்குமிடம்..!</title><content type='html'>பழங்காலத்தில் மக்கள் சந்தோஷமான நிகழ்வு, மதச்சடங்குகள், திருமண விழா, பிறப்பு மற்றும் இறப்பு நிகழ்வுகளில் தங்கள் உணர்வுகளைக் கொண்டாட பானம் அருந்தினர். இது ஒரு சமூக பழக்கமாகவே இருந்தது. இந்த நடைமுறை காலம் காலமாகவே நடந்து வருகிறது. ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு வகையான பானம் அருந்துகின்றனர். கிரேக்கர்கள், ரோமானியர்கள் போன்றவர்கள் தங்களின் கடவுளான பாச்சசசை தொழுவதற்கு ஒயின் அருந்துவதை ஒரு சடங்காகவே கொண்டாடினர். துக்ககரமான  நிகழ்விலும், குடும்ப விழாக்களிலும் ஒயின் அருந்தி மகிழ்ந்தனர். இது பற்றி, பைபிள் கதைகளிலும் கூறப்பட்டுள்ளது. அராரத்  மலையில் வந்து தங்கிய நோவா, அங்கு திராட்சைக் கொடியினை நட்டு வளர்த்து, திராட்சை பழம் பறித்து, அதனை புளிக்கச் செய்து, அந்த பானத்தைக் குடித்தாராம்.&lt;br /&gt;&lt;br /&gt;      சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழு, உலகின் மிகப் பழமையான ஒயின் பிழியும் மற்றும் சேகரித்து புளிக்க வைக்கும் பாத்திரத்தைக் கண்டுபிடித்துள்ளனர். அது, ஈரானுக்கு அருகில் ஆர்மேனியன் கிராமத்திற்கு பக்கத்திலுள்ள, தெற்கு ஆர்மேனியன் மலையில் ஆர்னி-1 குகையிலிருந்து கிடைத்துள்ளது. திராட்சை பிழியும் பெரிய தொட்டி, அதிலிருந்து வடிந்து, சேகரித்து, புளிக்க வைக்கும் மண் ஜாடிகள் மற்றும் ஒயின் குடிக்கும் குவளை போன்றவை இருக்கின்றன. ஆனால் இவைகளின் வயது சுமார் 6,100  ஆண்டுகள் இருக்கலாம் என சர்வதேச ஆராய்ச்சிக்குழு கருதுகிறது. அது மட்டுமல்ல, இவைகளை வேதிஆய்வுக்கு உட்படுத்தியதில் வந்த முடிவும், இவை 6,100 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்றே தெரிவிக்கின்றன. இதற்கு முன்பு பல சான்றுகள், ஒயின் அருந்துவதைப் பற்றி கிடைத்திருந்தாலும், இதுவரை கிடைத்துள்ளதில் மிகப் பழமையான மற்றும் முழுமையான சான்று இதுவே என லாஸ் ஏஞ்சல்ஸின் கலிபோர்னியா பல்கலையைச் சேர்ந்த அகழ்வாராய்ச்சி இணை நிர்வாக இயக்குனர் கிரிகாரி அரேஷியன் தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;      மிகப் பழமையான ஒயின் தயாரித்த பகுதியைப் பற்றிய செய்தியை நேஷனல் ஜியோகிராபிக் சொசைட்டி(National Geographic Society), 2011  ஜனவரி 11ம் நாள் தெரிவித்துள்ளது. ஆர்னி குகையிலுள்ள சான்றுகள் இங்கே ஒயின் தயாரிக்கும் வசதி இருந்ததை துல்லியமாக நிரூபிக்கின்றன என்று பிலடெல்பியா அருங்காட்சியக பல்கலையின் உயிர்மூலக்கூறியியல் அகழ்வாராய்ச்சி சோதனைசாலையின் அறிவியல் நிர்வாக இயக்குநர் பாட்ரிக் மெக்கவர்ன் கருத்து தெரிவிக்கிறார். மேலும் இதிலிருந்து வெளிப்படும் தகவல் என்ன தெரியுமா? இவ்வளவு பெரிய ஒயின் தயாரிக்கும் இடத்தைப் பார்க்கும்போது யுரேஷியாவில் இதற்கு முன்பே பல வகை திராட்சைகளைப் பயிர் செய்திருக்கின்றனர் என்பதும் தெரியவருகிறது என இந்த விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;     ஆர்னி-1 குகைகளில் இருந்த ஒயின் தயாரிப்பு பொருள்களிலிருந்து கிடைத்த ரேடியோகார்பன் டேட்டிங் தகவல் மூலம், இவை தாமிர காலத்தைச் சேர்ந்தவை என்றும் கூறப்படுகிறது. அங்கே 3 அடி சதுரமான குழி ஒன்றும் காணப்படுகிறது. இது திராட்சையை காலால் மிதித்து பிழியும் இடமாக இருக்கலாம் என்று கணிக்கின்றனர். இதன் ஓரத்தில் கனமான விளிம்பும் கூட இருக்கிறது. மேலும் இதனருகில் நசுக்கிய திராட்சைகளும், உலர்ந்த திராட்சைக் கொடிகளும், திராட்சைக் காம்புகளும் கூட காணப்படுகின்றன. இவைகளின் வயதும் 6,000 ஆண்டுகளுக்கு மேல்தான். இது சிறிய ஒயின் தயாரிப்பு இடமாக இருப்பதால், இது சடங்குகள் நடத்தப்படும் இடமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. மேலும்  இந்த இடத்தைச் சுற்றிலும் கல்லறைகள் காணப்படுவதால், இந்த ஒயின் தயாரிப்புகள் அந்த இறப்பு சடங்குகளுக்காகவே பயன்பட்டிருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. இதிலிருந்து இறப்பு விருந்துகளில் ஒயின் தான் முக்கிய பானமாக இருந்திருக்கிறது என்பதும் தெரியவருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;      ஒயின் புளிக்க வைக்கும் ஜாடியின் அடியில், ஒயினால் ஏற்பட்ட கரும்சாம்பல் நிறத்திலான கறை காணப்படுகிறது. இது, தாவர நிறமி மால்விடின் (malvidin) என்ற வேதிப் பொருள். இது ஒயினால் ஏற்பட்டது என்றும், இதனை அகற்றுவது கடினம் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதன் அருகில், மண்ணாலான ஒயின் அருந்தும் கோப்பையும், விலங்கின் கொம்பாலான ஒரு கிண்ணமும் கூட காணப்பட்டது. இவைகளுடன் காணப்பட்ட சிதைந்த திராட்சை, அதன் காம்பு, கொடி மற்றும் அதன் மீதி மிச்சங்கள் போன்றவை அங்கே சிவப்பு ஒயின் தயாரிப்பைத் தெளிவாக உணர்த்துகின்றன. இப்போதும் கூட, ஆர்மேனியன் கிராமப் பகுதிகளில், திராட்சை ஒயின் தயாரிப்புதான், முக்கிய தொழிலாகவும், பாரம்பரிய தொழிலாகவும் இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;           ஆர்னி-1 குகையில் 2008ம் ஆண்டு, ஒரு காலணி (Shoe) கிடைத்தது. அதன் வயதும் சுமார் 5,400௦௦ ஆண்டுகள் ஆகும்.  இது தோல் மற்றும் புல்லால் ஆனது. இங்கேயே, செம்பு காலத்தைச் சேர்ந்த மூன்று மண்டையோடுகளும் கிடைத்துள்ளன. இவை தனித்தனியான குழிகளில் இருந்தன. மேலும் இவைகளில் இரண்டு 12-14 வயது பெண் குழந்தைகளுடையது. இவர்கள் இறப்பு சடங்குக்காக கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் கருதுகின்றனர். அதிசயமாக, ஒரு மண்டையோட்டில் மூளை பத்திரமாக பதப்படுத்தப்பட்டும் இருந்ததாம். இப்பகுதியைச் சுற்றிலும், எரிமலை பளிங்கு கற்களிலான கருவிகளும் காணப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி:பேரா.சோ.மோகனா&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3683345437092478883-1987595649326775974?l=muruganthiru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muruganthiru.blogspot.com/feeds/1987595649326775974/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3683345437092478883&amp;postID=1987595649326775974' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3683345437092478883/posts/default/1987595649326775974'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3683345437092478883/posts/default/1987595649326775974'/><link rel='alternate' type='text/html' href='http://muruganthiru.blogspot.com/2011/10/blog-post.html' title='உலகின் மிகப் பழங்கால ஒயின் தயாரிக்குமிடம்..!'/><author><name>அறிவியல் விழிப்புணர்வு</name><uri>http://www.blogger.com/profile/14816292961575112498</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='7' src='http://2.bp.blogspot.com/_-B1lk_hlPgA/SbYP5SBQ4CI/AAAAAAAAAHc/wBrjaI1emS4/S220/PSF_logo.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3683345437092478883.post-6501518059793038778</id><published>2011-09-29T22:37:00.000-07:00</published><updated>2011-09-29T22:38:57.239-07:00</updated><title type='text'>நெருக்கடியில் இந்திய அறிவியல்</title><content type='html'>பல ஆயிரம் ஆண்டுகள் பாரம்பரியமும் நீண்ட வரலாறும் கொண்ட நாடு நமது இந்திய நாடு. அறிவியல் தொழிற் நுட்பம் பண்டைய இந்தியாவில், ஏனைய உலக கலாசாரப் பகுதிகள் போலவே, வளர்ந்து வந்துள்ளது. வானவியலில் ஆரியபட்டர், கணிதவியலில் பாஸ்கரா, மருத்துவத்தில் சுஸ்ருதா, வேதியியலில் நாகார்ஜுனா என எழுதப்பட்ட அறிவியல் வரலாற்றில் பிரசித்தி பெற்றவர் பலர். உலகப் பிரசித்தி பெற்ற டமாஸ்கஸ் உடைவாள் என்று அறியப்பட்ட போர்வாள் தயாரிக்க பயன்படும் உறுதிமிக்க எஃகு, ஐரோப்பிய நவீன கப்பல்கள் வரும் முன்னரே கடல் பிரயாணம் செய்ய பயன்பட்ட மாலுமி சாஸ்திரம், நீர் தேக்கி அதிக நெல் உற்பத்தி செய்யும் சாகுபடி முறை என பல்வேறு தொழில்நுட்பங்களும் இந்தியாவில் சிறந்திருந்தது. கைவினைஞர்கள் என ஒதுக்கப்பட்டு பொதுவாக இத்தொழில்கள் வர்ணாஸ்ரம பிரிவில் தாழ் நிலை மக்களுக்கு என விதிக்கப்பட்டிருந்தது. எனவே, பொதுவாக இவை அவ்வளவாக போற்றப்படாவிட்டாலும் இவையும் நமது அறிவியல் தொழிற் நுட்ப பாரம்பரியத்தின் சிகரங்கள் தாம்.&lt;br /&gt;&lt;br /&gt;நவீன அறிவியல் என்பது இன்று சிலர் பழித்துக் கூறுவது போல மேலை ஐரோப்பிய நாடுகளின் சொத்து அல்ல. உலக அறிவுச் செல்வங்கள் எல்லாம் தொகுக்கப்பட்டு அதன் மீது கட்டி எழுப்பப் பட்டது தான் நவீன அறிவியல். ஐரோப்பாவில் நவீன அறிவியல் பிறந்தாலும் அதன் தோற்றுவாய்க்கு பின்னே இந்திய அறிவியல், சீன தொழில் நுட்பம், அரபிய அறிவியல் பரிசோதனைகள் என உலகின் சகல பகுதி மக்களின் கொடையும் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;காலனி ஆதிக்கச் சுழலில் ஐரோப்பியரின் வருகையை ஒட்டி இந்த நவீன அறிவியல் இந்தியாவில் அறிமுகமானது. முதலில் ஐரோப்பிய காலனி ஆட்சியாளர்கள் இந்தியர்களுக்கு தொழில் நுட்ப கல்வி மட்டும் கற்பித்து, காலனி ஆதிக்கத்தில் அவர்களது தொழில் மற்றும் அரசுப் பணிகளுக்கு அவர்கள் கீழ் பணி செய்யும் படித்த தொழில் திறன் மிக்க இந்தியர்களை மட்டுமே உருவாக்க முனைந்தனர். அறிவியல் ஆய்வு இந்தியர்களால் முடியாது என்றே கூறி வந்தனர். இந்திய விடுதலைப் போரின் ஒரு பகுதியாக சில அறிவுஜீவிகளின் முன் முயற்சியின் தொடர்ச்சியாகவே அறிவியல் கல்வி மற்றும் நவீன அறிவியல் ஆய்வு இந்தியாவில் பரவி கால் ஊன்றியது. மகேந்திர லால் சர்க்கார் என்பவரால், 1876ல் இந்திய மக்கள் கொடுத்த நன்கொடை கொண்டு துவக்கப்பட்ட INDIAN ASSOCIATION FOR THE CULTIVATION OF SCIENCE என்ற அமைப்பில் தான் சி .வி. ராமன் ஆராய்ச்சி செய்து, 1930ல் அவர் பெயரில் இன்று அறியப்படும் ராமன் விளைவை கண்டுபிடித்தார். இந்த கண்டு பிடிப்புக்குத் தான் நோபல் பரிசு கிடைத்தது என்பது குறிப்பிடத்தகுந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அதே போல் INDIAN INSTITUTE OF SCIENCE எனும் நவீன ஆய்வு நிறுவனம் பெங்களூரில் 1909ல் டாட்டா உதவியுடன் துவங்கப்பட்டது. காலனிய அரசு இம்முயற்சிகளுக்கு அவ்வளவு ஆதரவு தரவில்லை என்பது குறிப்பிடத் தகுந்தது. ஆனால் இதில் வேதனை என்னவென்றால் காலனி ஆதிக்கத்தில் நாம் நோபல் பரிசு வென்றோம். ஆனால் விடுதலை அடைந்து அறுபது ஆண்டுகள் கடந்த பின்ன ரும் இந்தியாவிலிருந்து இந்தியர் எவரும் இதுவரை நோபல் பரிசு பெறவில்லை என்பது கவனிக்கத்தக்கது. நோபல் பரிசு கிடைக்க வில்லை என்பது ஒருபுறம் கிடக்கட்டும்; நமது நாட்டின் அறிவியல் நிலை என்ன தெரியுமா? டேவிட் கிங் என்பார் 2004இல் நடத்திய ஆய்வில் 32 நாடுகளில் ஒப்பீட்டளவில் இந்தியாவின் இடம் 31. நமக்கு கீழே உள்ள நாடு ஈரான்! அடிப்படையில் அறிவு உற்பத்தி தான் உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆய்வு நிறுவனங்களின் பணி . அறிவு உற்பத்தி என்பது ஆய்வுக் கட்டுரைகள், அறிவுக் காப்புரிமம் முதலிய அறிவு சொத்துரிமை ஆகும். இதில் பிரசுரிக்கப் பட்ட ஆய்வுக் கட்டுரைகள் என்பது அறிவு உற்பத்தியின் ஒரு குறியீடு. &lt;br /&gt;&lt;br /&gt;அறிவு உற்பத்தியில் நமது நிலை என்ன? ஒப்பிடுதலுக்காக சீனாவை எடுத்துக்கொள்வோம். 1998இல் இந்தியா 17500 அறிவியல் ஆய்வுக் கட்டுரைகள் தான் வெளியிட்டது, இது 2008இல் சுமார் இருமடங்காகி 41,000 என உயர்ந்தது. ஆனால் இதே கால இடைவெளியில் சீனா 20500 லிருந்து 1,12,000 என உயர்ந்துள்ளது. நம்மை போல 2.7 மடங்கு அறிவியல் அறிவு உற்பத்தி சீனாவில் அதிகம். &lt;br /&gt;&lt;br /&gt;அறிவியல் அறிவு உற்பத்தி மற்றும் புதுமை படைத்தல் முதலிய வற்றில் மட்டும் நம் நாட்டின் நிலை பின்தங்கி இல்லை. நமது நாடு ஆய்வாளர்கள் படைக்கும் அறிவு மற்றும் புதுமையின் தாக்கம் / வீச்சும் குறைவு. நமது ஆய்வுக் கட்டுரைகளை பெரும்பாலும் எவரும் பயன்படுத்துவதில்லை; ஏனெனில் இவை அவ்வளவு தரம் தாழ்ந்தது அல்லது அற்பமான ஆய்வு..&lt;br /&gt;&lt;br /&gt;அணுசக்தி, விண்வெளித் துறை, நவீன மருத்துவம், தொழில் அறிவியல் நுட்பம் முதலியவற்றில் உலகில் திறன் படைத்த நாடுகளில் இன்று இந்தியாவின் பின்னடைவிற்கு என்ன காரணம்? விடுதலை அடைந்த போது நேருவின் நவீன இந்தியாவை படைக்கும் மோகத்தின் காரணமாக அறிவியலுக்கு அரசியல் ஆதரவு இருந்தது. அன்றைய அறிவியல் தலைவர்கள் சி வி ராமன், மேஹநாத் சாஹா, கே. எஸ். கிருஷ்ணன், விக்ரம் சாராபாய் போன்றோர் அரசியல் செல்வாக்கு பெற்று தான் இருந்தனர். இருந்தும் அறுபது வருடம் கடந்த பின்னரும் அறிவியல் நிலை முன்னேற்றமடையாததற்கு காரணம் என்ன?.&lt;br /&gt;&lt;br /&gt;அறிவியல் மற்றும் அறிவியல் மனப்பான்மை மீது நேரு ஆர்வம் காட்டினாலும் உள்ளபடியே அறிவியல் வளர்ச்சிக்கு வேண்டிய நிதியை அரசு ஒதுக்கவில்லை. சில குறிப்பிட்ட கேந்திர அறிவியல் துறைகள் விண்வெளி, அணுசக்தி ஆகியவை நிதி பெற்றாலும், ஏனைய துறைகளின்பால் போதிய கவனம் இருக்கவில்லை. சமீப காலம் வரை வெறும் 0.8 மட்டுமே இந்தியா தனது மொத்த பட்ஜெட்டில் அறிவியலுக்கு செலவழிக்கிறது. சீனா சுமார் 1.44 சதமும், தென் கொரியா 3.21 சதமும் செலவு செய்கிறது என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;அறிவியல் தொழிற் நுட்ப ஆய்வுக்கு செலவு என்பது ஒரு பகுதியே ஆகும். கல்விக்கு முதலீடு என்பதும் முக்கிய அம்சமாகும். உயர்கல்விக்கு மாணவ/மாணவியருக்கு தலா ரூ.400 தான் இந்தியா ஆண்டுக்கு செலவழிக்கிறது. ஆனால் சீனா 2728வும் , பிரேசில் 3986வும் மலேசியா 11790 வும் செலவழிக்கிறது. உலகத்தில் உயர்கல்விக்கு அரசு மிகக் குறைந்த அளவு செலவழிப்பது இந்தியாவில் தான். இந்த நிலையில் தான் உயர்கல்வியை தனியார் மயமாக்குவோம் எனவும், கட்டணம் வசூலித்துக் கல்வி எனும் கொள்கையும் பரவலாக பேசப்படுகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அரசு முதலீடு, அறிவியல் ஆய்வுக்கு செலவு என்பது தவிர இந்தியா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களின் அமைப்பிலும் அடிப்படையில் சிக்கல் உள்ளது. சிறந்த மாணவர்களை மட்டும் கொண்டு செயல்படும் ஆய்வு நிறுவனங்கள் உள்ளபடியே உலகப் புகழ் மிக்கவை.இவற்றில் நடத்தப்படும் ஆய்வுகள் பெருமளவு உலகத் தாக்கம் செலுத்துபவை.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய உயர் ஆய்வு நிறுவனங்களுக்கு கிழே உள்ள பல்கலைக் கழகங்கள். நடுத்தரமான ஆய்வும், முதுகலை படிப்பும் மட்டும் நடத்தும் பல்கலைக் கழகங்கள் அவ்வளவு தாக்கம் செலுத்துபவை அல்ல. நிரந்தரமான பண நெருக்கடி, போதுமான ஆய்வுக்கூட வசதியின்மை, ஆசிரியர்கள் ஆய்வு செய்ய போதிய வசதியின்மை முதலியவை பல்கலைக் கழகங்களின் பொதுவான சிக்கல்கள். ஒருசில விரல் விட்டு எண்ணக்கூடிய பல்கலைக் கழகங்களில் நிலைமை சற்றே வித்தியாசமாக இருந்தாலும், பொதுவே பல்கலைக்கழங்கள் செய்யும் ஆய்வுகள் தரும் தாக்கம் சொற்பமே ஆகும். பெரும்பாலும் தேர்வு நடத்தி சான்றிதழ் தரும் அமைப்பாகத் தான் இன்று பெரும்பாலும் பல்கலைக்கழகங்கள் சுருங்கிவிட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய உயர் கல்வி அமைப்பில் அடிமட்டத்தில் ஆய்வு என்றால் என்னவென்றே தெரியாத வெறும் இளம் கலை பட்டப் படிப்பு மட்டும் தரும் கல்லூரிகள் நிறைந்துள்ளன. அதாவது வேறு வகையில் கூறினால் நமது சமூகத்தின் கேடு கெட்ட வர்ணாஸ்ரம படிநிலை அமைப்பை நினைவு செய்யும் படிநிலை அமைப்பு தான் நமது உயர்கல்வி அமைப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;அறிவியல் உயர் கல்வி அமைப்பு தான் பழுதானது என்றால் இங்கு கற்பிக்கப் படும் முறையும் அவலமானது. அறிவியல் என்பது, குறிப்பாக உயர்கல்வியில் அறிவியல் செய்திகளை கற்று மனனம் செய்வது அல்ல. உள்ளபடியே அறிவியல் முறை கற்றறிதல் என்பது தான் உயர் கல்வி. அறிவியல் ஆய்வு செய்யாமல் அறிவியல் முறையை கற்க முடியுமா என்ன? ஆயினும் பெரும்பாலும் முதுகலை படிப்பில் சில சமயம் முனைவர் படிப்பிலும் பெரும் மாணவ+மாணவியர் உள்ளபடியே ஆய்வு எதுவும் செய்வதில்லை. பள்ளி செயல்முறை போன்று இயற்பியல் அல்லது வேதியியல் ஆய்வுக் கூடத்தில் ஏற்கனவே பலமுறை செய்துள்ள பரிசோதனைகளை செய்துபார்க்கும் பணி தான் நடக்கிறது. நோட்ஸ் என்ற பெயரில் பள்ளிக் கல்வியில் நடைபெறும் அதே மனப்பாடம் செய்யும் கல்வி முறை தான் உயர் கல்வியிலும் நீட்சி பெறுகிறது. அதன் காரணமாகத் தான் முனைவர் பட்ட ஆய்வேடுகள் பல குறிப்பிடத் தகுந்த ஆய்வு இதழ்களில் பிரசுரிப்பது கூட இல்லை. அவற்றின் தரம் அவ்வளவு தான். பட்டம் மட்டும் பெறத் தான் ஆய்வு; அதன் வழி அறிவு உற்பத்தி என்பது எதுவும் இல்லை என்பது தான் நிதர்சனம்.&lt;br /&gt;&lt;br /&gt;தரமான ஆய்வு என்றால் அது தேசிய ஆய்வு நிறுவனங்களில் அல்லது விரல் விட்டு எண்ணக் கூடிய பல்கலைக் கழகங்களில் என்று இருக்கும் பட்சத்தில் உயர்கல்வி என்பது வெறும் ஜோக் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்காவை எடுத்துக்கொள்வோம். பிரின்ஸ்டன், எம் ஐ டி, முதலியவை ஆய்வுப் பல்கலைகழகங்கள். இவை தேசிய நிறுவனங்கள் இல்லை. ஆக்ஸ்போர்ட் கேம்ப்ரிட்ஜ் முதலியவையும் பல்கலைக் கழகங்கள். ஜப்பான், கொரியா, சீனா போன்ற எந்த நாட்டிலும் அறிவியல் ஆய்வு மற்றும் புதுமை படைத்தலில் பல்கலைக் கழகங்களுக்கு தனி மரியாதை உண்டு. இந்தியாவில் தான் பல்கலைக்கழங்களை கிடப்பில் போட்டு தனி தேசிய ஆய்வு நிறுவனங்கள் அறிவியல் ஆய்வு மற்றும் புதுமை படைத்தலில் முன்னணி அமைப்பாக உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அறிவியல் ஆய்வு என்பதும் புதுமை படைத்தல் என்பதும் பழையன கழித்தல் புதுமை வருதல் என்ற போக்கில் ஏற்படும் பழையன கழித்தல் என்பதாகும். இது மாணவ, மாணவியர் தமது ஆசிரியர்க்கு சிரம் தாழ்த்தி தலை குனிந்து மரியாதையை செலுத்துவதில் ஏற்படுவதில்லை. ஆசிரியர் கருத்துக்களை எதிர்த்து கேள்வி கேட்பதில் தான் புதுமை அடங்கியுள்ளது. இங்கு நாம் வகுப்பறை கண்ணியம், ஒழுங்கு முதலியவை குறித்து பேசவில்லை. ஆசிரியர் கருத்தை மறுபேச்சின்றி ஏற்க வேண்டும் என்கிற மனப்பாங்கைத்தான் விமர்சிக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;தனது வழிகாட்டி கூறியதை கேள்வி கேட்காமல் ஏற்பது; அதனை அப்படியே காலம் காலமாக அடுத்த தலைமுறைக்கு ஓதுவது என்கிற சடங்கு தான் அறிவியல் ஆய்வு என்ற பெயரில் பெரும்பாலும் நடைபெறுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கேக் நடுவே திராட்சை பழம் போல நேர் மின்னேற்றம் கொண்ட அணுவின் ஊடே எலெக்ட்ரான் எதிர் மின்னேற்றம் கொண்டு பொதிந்துள்ளது என்ற கருத்தை கூறிய ஜ.ஜ தாம்சன் என்பரின் மாணவர் தான் ருதேர்போர்ட். இவர் தனது ஆசிரியரின் கருத்தை தவறு என நிறுவினார். தனது புதுமை கருத்தை நடுவே கருவில் குவிந்துள்ள நேர் மின்னேற்ற துகள் (நியூட்ரோன்) சூரியனை சுற்றும் கோள் போல அணுக்கருவை சுற்றும் எலெக்ட்ரான் என்ற கருத்தை முன்வைத்தார் ருதேர்போர்ட். அவரின் மாணவர் நீல்ஸ் போர் தனது ஆசிரியரின் கருத்தை தவறு என நிறுவி போர் அணு மாதிரி கொள்கைளை உருவாக்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆய்வில் வழிகாட்டியின் அறிவியல் கருத்தை தவறு என கூறுவது இருக்கட்டும், அவர் செய்யும் எழுத்து பிழையை திருத்தினால் கூட போதும்; என்ன இப்போவே உனக்கு எல்லாம் தெரியுமா? என்ற ஆணவப் பேச்சு தான் கேட்க வேண்டி வரும். நமது சமூகத்தில் இன்றும் நிலப்பிரபுத்துவ மனநிலை சிதையாமல் குடி கொண்டுள்ளது நமது பல்கலைக் கழக மற்றும் ஆய்வு நிறுவனங்களில் தான். நிறுவன இயக்குனர்/ பல்கலைக் கழக துணை வேந்தர் அரசர் போல வானளாவிய அதிகாரம் படைத்தவர் என்ற நிலை. அவரை எதிர்த்து யாரும் அறிவியல் ஆய்வு பூர்வமாக கூட கேள்வி கேட்கக் கூடாது என்கிற அதிகார மன நிலை முதலியவையும் இந்திய அறிவியலின் தரம் கெட்டுப் போனதற்கு காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;உயர் கல்வி நிறுவனங்களில் நிலவும் சர்வாதிகாரப் போக்கு, ஜனநாயகமின்மை, அதிகாரிகளின் தலையீடு (ஒரு ஆய்வாளர் ஆய்வுக் கருத்தரங்கிற்கு போகலாமா கூடாதா என்பதைக் கூட, ஒப்புதல் வாங்க வேண்டும் என்ற பெயரில், பல்கலைக் கழக அல்லது அரசுத் துறை அதிகாரிகள் முடிவு செய்யும் அவல நிலை) இவை எல்லாம் ஆய்வு நிறுவனங்கள் அமைப்புகள் தமது வீரியத்தை இழக்கும் நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;எந்த ஆய்வு என்பதிலும் வர்ணாஸ்ரம சிந்தனையின் தாக்கம் கூர்ந்து கவனித்தால் புலப்படும். ஆய்வுப் பணி/ கற்பித்தல் செய்யும் ஆசிரியர் பணி , அடிப்படை ஆய்வு/ பயன்பாட்டு ஆய்வு , மூளை உழைப்பு/ உடல் உழைப்பு கோட்பாடு/ பரிசோதனை என முரணாகத் தான் ஆய்வு பார்க்கப்படுகிறது. ஆய்வுப் பணி, கோட்பாடு, மூளை உழைப்பு முதலிய தான் உயர்வாக பார்க்கும் நிலை இருக்கிறது. நமது நாட்டில் இயற்பியலில் கோட்பாடு ஆய்வு செய்வோர் பரிசோதனை ஆய்வு செய்பவர்களை விட பல மடங்கு அதிகம். பல மேலை நாடுகளில் பரிசோதனை ஆய்வு செய்யும் திறன் மிக்கவர்களை போற்றுவது போல நம் நாட்டில் செய்வதில்லை; அதன் காரணமாக மாணவ - மாணவியர் பெரும்பாலும் கோட்பாடு ஆய்வு செய்யத் தான் பழகுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அறிவியல் ஆய்வில் நிதி, ஆய்வு வசதி தவிர முக்கியமான முதலீடு மனிதவளம். மக்கள்தொகைக்கு 4663 பேர் அமெரிக்காவில் அறிவியல் தொழில் நுட்ப நிபுணர்கள். சீனாவில் பத்து லட்சம் மக்கள்தொகைக்கு 1071, தென் கொரியாவில் 4627 ஆனால், இந்தியாவில் இது வெறும் 137 தான்!விடுதலை அடைந்த பொது இந்தியாவில் வெறும் 17 பல்கலைக்கழகங்கள் தான் இருந்தன. 2009இல் இது மொத்தம் 483என உயர்ந்துள்ளது; அதாவது முப்பது மடங்கு. ஆனால் இந்த வளர்ச்சி மிக சொற்பமே ஆகும். தென் கொரியாவில் உள்ள அளவு மக்கள் தொகைக்கு பல்கலைக்கழகம் என்ற விகிதத்தில் இந்தியாவில் இருக்க வேண்டுமெனில் உள்ளபடியே நம்மிடம் 2900 பல்கலைக்கழகம் இருக்க வேண்டும். அமெரிக்காபோல வேண்டுமெனில் 4000 இங்கிலாந்து போலவெனில் 3600 பல்கலைக்கழகங்கள் வேண்டும். ஆனால் இருப்பதோ வெறும் 483. உலகத் தரம் வாய்ந்த ஆண்டுக்கு வெறும் 30 முனைவர் பட்ட மாணவ மாணவிகளை தான் தயார் செய்கிறது. இது கடலில் கரைத்த பெருங்காயம் போல தான். வேறு ஆய்வு நிறுவனங்களில் கூட இந்த அளவு சொற்பமேயாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் முக்கிய சிக்கல் உயர்கல்வி கற்க ஏற்படும் செலவு. இளம் கலை வகுப்பு வரை கூட நடுத்தர மக்களால் தமது குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்க முடியும். அதன் பின்னர் மாணவ+மாணவியர் தமது பெற்றோருக்கு ஒரு பாரமாக மாறி சம்பளம் ஈட்டும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். குறைந்த வசதி பின்னணி கொண்ட குடும்பத்திலிருந்து வரும் மாணவ மாணவியர் பற்றி கூறவே வேண்டாம். இளம் கலைக் கல்வி பெறுவதே பெரும்பாடு. இத்தகு பின்னணி கொண்டவர்கள் முதுகலை பட்டம் பெற படிப்பது அவ்வளவு எளிதல்ல. முதுகலை பட்டம் பெற்றபின் முனைவர் பட்டப் படிப்பில் உதவித் தொகை கிடைக்கலாம் .ஆனால் முதுகலை பட்டப் படிப்பின் போது சிக்கல் தான். எனவே உயர்கல்வி கட்டணம் குறைவாக இருப்பது மட்டுமின்றி வசதி குறைவான பின்னணியிலிருந்து வரும் மாணவ மாணவியருக்கு முதுகலை பட்ட நிலையிலிருந்தே உதவி தொகை மட்டுமல்ல ஈட்டுத் தொகையும் வழங்க வேண்டும். உயர் கல்வி வாய்ப்புக் குறைவின் காரணமாக இன்று இளம்கலை பட்டப்படிப்பில் சேரும் மாணவ மாணவிகளில் வெறும் ஒரு சதவிகிதம் தான் முனைவர் பட்ட ஆய்வுக்கு செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;இருபத்தியோராம் நூற்றாண்டில் பொருளாதாரம் அறிவு சார் பொருளாதாரமாக இருக்கும் எனப்படுகிறது. அறிவு சார் பொருளாதாரத்தில் இந்தியா தனது நிலையை மேம்படுத்த வேண்டுமெனில் அதன் அறிவு சார் மனித வளத்தை பெருக்க வேண்டும்; தரத்தை உயர்த்தவேண்டும். ஆகவே இன்றைய சுழலில் உயர்கல்வி நிறுவனங்கள் பெருமளவு அதிகரிக்கப்படவேண்டும் என்பதுவே முதல் படி.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு தீர்வாக இரண்டு வழிகள் நம் முன் வைக்கப்படுகிறது முதலாவது தீர்வு திறந்தவெளி பல்கலைக் கழகங்கள்; இரண்டாவது அந்நிய பல்கலைக் கழகங்களை அவர்களது கடை திறக்க அனுமதிப்பது.&lt;br /&gt;&lt;br /&gt;திறந்தவெளி பல்கலைக்கழகங்கள் உள்ளபடியே திறன் மேம்பாட்டிற்கும் புதிய திறன் வளர்த்துக் கொள்ளவும் பயன்படும் தான். அதுபோல கற்கும் சமுதாயத்துக்கு திறந்தவெளி பல்கலைக்கழகங்கள் பெரும் பங்கு ஆற்றமுடியும். ஆனால் அடிப்படை உயர் கல்வி ஆய்வு மாணவர்கள் தயாரித்தலில் இவற்றின் பங்கு அவ்வளவாக இருக்கமுடியாது. திறந்தவெளி பல்கலைக்கழகங்களை மட்டும் நம்பித்தான் உயர் கல்வி விரிவாக்கம் எனில் தரம் மிகவும் குறையும்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்நிய பல்கலைக் கழகங்களைப் பொறுத்தவரை அவையும் திறந்தவெளி பல்கலைக்கழகங்கள் போல தான். அவை எதுவும் இங்கு பல்கலைக்கழகத்தை நிறுவ முன்வருவதில்லை. ஆகவே, அவையும் உள்ளபடியே தீர்வாகாது.மொத்தத்தில் உயர் கல்வி அமைப்பில் பெரும் மாற்றம், போதுமான நிதி ஒதுக்கீடு, தரம் மேம்பட உயர்கல்வி ஆசிரியர்களுக்கு ஆய்வு செய்ய வசதி, ஆய்வு மாணவ - மாணவிகளுக்கு போதுமான உபகார சம்பளம் முதலியவற்றின் மீது உடனடி கவனம் தேவை.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: த.வி.வெங்கடேஸ்வரன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3683345437092478883-6501518059793038778?l=muruganthiru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muruganthiru.blogspot.com/feeds/6501518059793038778/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3683345437092478883&amp;postID=6501518059793038778' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3683345437092478883/posts/default/6501518059793038778'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3683345437092478883/posts/default/6501518059793038778'/><link rel='alternate' type='text/html' href='http://muruganthiru.blogspot.com/2011/09/blog-post_29.html' title='நெருக்கடியில் இந்திய அறிவியல்'/><author><name>அறிவியல் விழிப்புணர்வு</name><uri>http://www.blogger.com/profile/14816292961575112498</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='7' src='http://2.bp.blogspot.com/_-B1lk_hlPgA/SbYP5SBQ4CI/AAAAAAAAAHc/wBrjaI1emS4/S220/PSF_logo.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3683345437092478883.post-828464694699438165</id><published>2011-09-25T22:36:00.000-07:00</published><updated>2011-09-25T22:39:53.800-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தேநீர் வரலாறு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழர் பண்பாடு'/><title type='text'>சீனர் மற்றும் தமிழர் பண்பாட்டில் தேநீர்</title><content type='html'>தேநீர் இன்று உலக மக்களின் வாழ்க்கையிலும் பண்பாட்டிலும் செம்புலப்பெயல்நீர்போல இரண்டறக் கலந்துவிட்டது. பண்டையக்காலம் தொட்டே குறிப்பாக சீனர்களின் வாழ்க்கையிலும் பண்பாட்டிலும் தேநீர் ஒன்றிவிட்டது. சீனாவின் தேசிய பானம் தேநீர். சீனர்களின் அன்றாட வாழ்கைக்குத் தேவைப்படுகின்ற ஏழு அடிப்படை பொருட்களில் தேநீரும் ஒன்று. மற்றவை: விறகு, அரிசி, எண்ணெய், உப்பு, சோயா சாஸ், வினிகர். ஆகவே, இவ்வாய்வுக் கட்டுரை தேநீரின் வரலாற்று பின்புலம், தேநீர் வகைகள் மற்றும் தயாரிப்பு முறைகள், சீனர் மற்றும் தமிழர் பண்பாட்டில் தேநீர், தேநீர் குவளைகளில் சித்திர வேலைபாடுகள் மற்றும் நம்பிக்கைகள் ஆகியவற்றை விரிவாக ஆய்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தேநீரின் வரலாற்று பின்புலம்:&lt;br /&gt; &lt;br /&gt; சீன மொழியில் சாசுய்(cháshù) என்று அழைக்கப்படும் தேநீர், இந்தியில் சாய் என்றும் மலையாளத்தில் சாயா என்றும் அழைக்கப்படுகிறது. சாய் என்ற சொல் சீன மொழியில் இருந்து வந்த சொல்லாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இலங்கைத் தமிழில் தேத்தண்ணீர் என்று அழைக்கப்படுகிறது. சீனாவில் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தேநீர் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இருப்பினும், ஆங்கிலேயர்களின் பயன்பாட்டிற்கு வந்தபிறகு, பதினேழாம் நூற்றாண்டிலிருந்துதான் தேநீரின் சுவை வெளியுலக மக்களுக்கு தெரியவந்தது எனலாம். இந்தியர் பண்பாட்டிலும் மலைப்பிரதேசங்களிலும் தேச்செடி வேறூன்றியது ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்திலேயாகும்.&lt;br /&gt;&lt;br /&gt; தேநீர் குறித்த ஆராய்ச்சிகள் சீனாவில் பண்டைய காலத்திலேயே நடைபெற்று இருக்கின்றது. சீனாவின் தேநீர் சித்தர் என்று அழைக்கப்படுபவர் புலவர் லு யு (Lu Yu , 733-804);. இவர் சாஜிங் என்ற ஆய்வு நூலை எழுதியவர். இந்நூல் ஆங்கிலத்தில் “The Classic of Tea’’ என்ற தலைப்பில் மொழிபெயர்க்கப்பட்டு மூன்று தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளது. இந்நூல் தேநீர் வகைகள், தயாரிக்கும் முறைகள், தேநீரின் மருத்துவக் குணங்கள் பற்றி வரிவாக எடுத்தியம்புகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தேநீரின் தோற்றம் குறித்து சீன நாட்டுப்புறக் கதைகளும் உள்ளன. அவை:&lt;br /&gt;&lt;br /&gt; 1. கி.மு மூன்றாம் நுற்றாண்டிற்கு முன் சென் நங் (Sen Nung) என்ற மன்னர் ஒரு மரத்தின் அடியில் அடுப்பு மூட்டி வென்னீர் வைத்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த மரத்திலிருந்து சில இலைகள் அவரின் பாத்திரத்தில் கொதித்துக் கொண்டிருந்த நீரில் விழுந்தது. அந்நீர் அருந்துவதற்கு சுவையாகவும் நறுமணமாகவும் இருந்தது. அன்றிலிருந்து தொடர்ந்து பயன்பாட்டில் உள்ளதாக நம்பப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt; 2. கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் தருமா என்ற புத்த பிச்சு இந்தியாவிலிருந்து சீனாவிற்கு பயணம் மேற்கொண்டார். அப்போது அவரின் ஆன்மீக நம்பிக்கையை நிரூபணம் செய்வதற்காக ஏழு ஆண்டுகள் தவம் மேற்கொண்டு வந்தார். தவமிருக்கும்போது அவரின் கண்கள் தூக்கத்தில் சொருகின. தவத்தின்போது தூக்கம் வராமலிருக்க அருகிலிருந்த செடியிலிருந்து இலைகளைப் பறித்து வென்னீரில் போட்டு பருகிவந்தார். அதன்பிறகு அவர் தொடர்ந்து தன்னுடைய தவத்தை மேற்கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;தேநீர் வகைகள் மற்றும் தயாரிப்பு முறைகள்:&lt;br /&gt;&lt;br /&gt;கருப்புத் தேநீர் (Black tea or brown tea) &lt;br /&gt;பச்சைத் தேநீர் (Green tea) &lt;br /&gt;ஊலாங் தேநீர் (Wulong tea)&lt;br /&gt;மல்லிகைத் தேநீர் (Jasmine tea /scented tea) &lt;br /&gt;வெள்ளைத் தேநீர் (White tea)&lt;br /&gt;&lt;br /&gt;ஆகியன சீனாவின் முக்கியமான தேநீர் வகைகளாகும். தேநீரின் வகைகள் ஒவ்வொன்றும் இலைகளின் பருவம் மற்றும் பதப்படுத்தும் விதம் ஆகியவற்றிற்கேற்ப வேறுபடுகிறது. சீனர்களின் தேநீர் வாய்ப்பாடு: வென்னீர் 10 பதப்படுத்தப்பட்ட தேயிலை ஆகும். பால் மற்றும் சர்க்கரையைத் தேநீருடன் கலந்து பயன்படுத்தும் வழக்கம் சீனர்களிடம் இல்லை. ஆனால், சிறப்பு தினங்களில் தேநீரின் சுவையைக் கூட்டுவதற்காக பேரிச்சம் பழத்தை தேநீருடன் சேர்ப்பது வழக்கமாக உள்ளது. மேலும் மல்லிகை சாமந்தி போன்ற பூக்களையும் தேயிலையுடன் சேர்த்து மல்லிகைத் தேநீர் தயாரிக்கப்படுகிறது. மழைநீர் அல்லது பனி நீர் கொண்டு தயாரிக்கப்படும் தேநீர் சிறந்த தேநீராகக் சீனர்களால் கருதப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt; தமிழர் பண்பாடடில் தேநீர் தயாரிப்பு முறை சீன முறையிலிருந்து சற்று வேறுபட்டது. தமிழரின் தேநீர் வாய்ப்பாடு : தேத்தூள் + தண்ணீர் + பால் + சர்க்கரை. இது தேவைக்கேற்ப மாறுபடுகிறது. பால்தேநீர் (milk tea), பாலில்லாத் தேநீர்(tea with out milk ), சர்க்கரையில்லாத் தேநீர் (tea with out sugar ) எழுமிச்சைத் தேநீர்(leamon tea) என தமிழர்களின் தேநீரை வகைப்படுத்தலாம். சர்க்கரையில்லா தேநீர் பெரும்பாலும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களால் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. தேநீருடன் எழுமிச்சை சாறு சேர்த்து எழுமிச்சை தேநீர் தயாரிக்கப்படுகிறது. ஜீரண சக்தியை அதிகப்படுத்துவதற்காகத் தேநீருடன் இஞ்சியை சேர்ப்பதும் தமிழர் பண்பாட்டில் குறிப்பிடத்தக்கது. தமிழர்களின் பயன்பாட்டுக்கு தேநீர் வருவதற்கு முன்பிருந்தே தமிழர் பண்பாட்டில் தேநீருக்கு இணையான பானம் கொத்தமல்லி தண்ணீர்(coriander tea) பண்டைய காலம் தொட்டே தமிழர் பண்பாட்டில் இருந்த வருகிறது. கொத்தமல்லி+தண்ணீர் +கருப்பட்டி + இஞ்சி என்பன இதன் வாய்ப்பாடாகும். இது சோர்வு நீக்கியாகவும், வலி நிவாரணியாகவும், ஜீரணியாகவும், செயல் ஊக்கியாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தேநீரைப் போன்றே காலை மாலை எனத் தேவைக்கேற்ப பயன்படுத்தப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சீனர் மற்றும் தமிழர் பண்பாட்டில் தேநீர்:&lt;br /&gt;&lt;br /&gt; பல்வேறு பண்பாட்டு சூழல்களில் தேநீரைப் பயன்படுத்தும் வழக்கம் சீனர்களிடம் பண்டைய காலம் தொட்டே இருந்து வருகிறது. அதாவது மரியாதையின் குறியீடாகவும், குடும்ப உறுப்பினர்கள் சந்தித்துக்கொள்ளும்போதும், மன்னிப்பு கோருவதற்காகவும், திருமண நாளில் பெரியவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும், பாரம்பரியத்தை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்வதற்காகவும் தேநீர் பரிமாறுவது வழக்கமாக இருந்து வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;• மரியாதையின் குறியீடாக (as a sign of respect)சீனச் சமுதாயத்தில் இளைய தலைமுறையினர் தங்கள் மரியாதையை வெளிப்படுத்தும் விதத்தில் மூத்த தலைமுறையினருக்கு தேநீர் வழங்குகின்றனர். பெரியவர்களை விடுமுறை நாட்களில் தேநீரகத்திற்கு அழைத்துச் சென்று தேநீர் கொடுத்து உபசரிப்பது பாரம்பரிய வழக்கமாக உள்ளது. இதுவே பண்டைய காலங்களில் உயர் பதவியில் வகிப்பவர்களுக்குக் கீழ்நிலையில் இருப்பவர்கள் மரியாதை நிமித்தமாக தேநீர் வழங்குவது இருந்து வந்தது. இன்று பண்பாட்டு மாற்றங்களின் விளைவாக கீழ் பதவியில் வகிப்பவர்களுக்கு உயர் பதவியில் வகிப்பவர்களும், சிறியவர்களுக்குப் பெரியவர்களும் தேநீர் ஊற்றிக் கொடுப்பதைக் காணமுடிகிறது. &lt;br /&gt;&lt;br /&gt; தமிழர் பண்பாட்டிலும் தேநீர் இன்று மரியாதையின் குறியீடாக மாறிவிட்டது என்பதைக் கண்கூடாக காணமுடிகிறது. விருந்தினர்கள, உறவினர்கள, நண்பர்கள் என யார் வீட்டிற்கு வந்தாலும் தேநீர் அல்லது குழம்பி கொடுத்து உபசரிப்பது தமிழர் சமுதாயத்தில் வழக்கமாக உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;• திருமண நாளில் பெரியவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும்(to express thanks to elders on wedding da): சீனர்களின் திருமணச் சடங்குகளில் தேநீர் முக்கிய இடத்தை வகிக்கிறது. மணமகள் திருமண நாளன்று விடியற்காலையில் திருமணத்திற்கு முன்பு தனது பெற்றோருக்கு தேநீர் ஊற்றிக் கொடுத்து தன்னை நன்றாக வளர்த்ததற்காக தன்னுடைய நன்றியைச் செலுத்துவாள்.  &lt;br /&gt; &lt;br /&gt; திருமணம் முடிந்த பிறகு திருமண நாளன்றே மணமகன் மற்றும் மணமகள் உறவினர்களை அறிமுகப்படுத்தும் விதமாக மீண்டும் தேநீர் சடங்கு நடைபெறுகிறது. சடங்கின்போது மணமகன், மணமகள் மற்றும் மணமகள் தோழி மூவரும் இணைந்து சிவப்பு பேரிச்சை மற்றும் தாமரை இதழ்களைச் சேர்த்து தேநீர் தயாரிப்பார்கள். சிவப்பு பேரிச்சை மற்றும் தாமரை இதழ்களை தேநீரில் சேர்ப்பதன் மூலம் மணமகள் கூடிய விரைவில் திடகாத்திரமான குழந்தைகளைப் பெறுவாள் என நம்பப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மணமக்கள் மண்டியிட்டு மணமகனின் பெற்றோர்களுக்குத் தேனீர் வழங்குவது வழக்கமாக உள்ளது. மணமகள் தன்னுடைய மாமனாரின் இடது புறமும் மணமகன் தன்னுடைய தாயின் வலதுபுறமும் சம்பிரதாயப்படி மண்டியிடவேண்டும். தேநீர் சடங்கின்போது தோழி மங்கல வாழ்த்துப்பாடல்களைப் பாடிக்கொண்டு மணமக்களுக்கு உதவியாக இருப்பாள்; மணமகனின் பெற்றோருக்குத் தேநீர் வழங்கிய பிறகு, மணமகனின் உறவினர்களுக்குத் தேநீர் வழங்கப்படுகிறது. முதலில் தாத்தா பாட்டிக்கும் பிறகு அண்ணா, அக்கா, தங்கை என வயதின் அடிப்படையில் ஒவ்வொருவருக்காக வழங்கி அறிமுகப்படுத்தப்படுகிறது. அதன்பிறகு குடும்ப உறுப்பினர்களும் உறவினர்களும் மணமக்களுக்கு சிவப்பு வண்ணப் பொதியை பரிசாக அளிப்பார்கள். அப்பொதியில் பணமோ நகையோ இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt; கால மாற்றங்களுக்கேற்ப தேநீர் வழங்கும் சடங்கிலும் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இன்று மணமக்கள் இரு வீட்டாருக்கும் தேநீர் வழங்குகின்றனர். இச்சடங்கு பெரிய பெரிய மண்டபங்களிலும், ஐந்து நட்சத்திர விடுதிகளிலும், திறந்த வெளிகளிலும் பல ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் வண்ணம் ஆடம்பரமாக நடைபெறுகிறது. ஆடம்பரங்கள் இருப்பினும், இச்சடங்கு இரண்டு குடும்பங்களின் ஒருங்கிணைப்பை கவுரவப்படுத்தும் விதமாகவே நடைபெறுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt; தமிழர் பண்பாட்டுச் சூழலிலும் தேநீர் இன்று முக்கிய இடத்தை வகிக்கிறது. பெண் பார்க்கும் படலத்தின்போது மணமகனுக்கு இனிப்பு மற்றும் காரத்துடன் தேநீர் கொடுக்கப்படுகிறது. தேநீரை பெண்பார்க்க வரும் மணமகனுக்கு மணப்பெண் கையால் கொடுப்பது வழக்கமாக உள்ளது. தேநீர் பருகியபிறகு தேநீர் கோப்பையை எடுத்துச்செல்வதற்காக மீண்டும் அப்பெண் அழைக்கப்படுவாள். அப்பெண் மீண்டும் வந்து அத்தேநீர் கோப்பையை எடுத்துச்சென்றால் அப்பெண்ணுக்கு அம்மணமகனைப் பிடித்திருக்கிறது என்று பொருள். அப்பெண்ணின் தாயார் எடுத்துச் சென்றால் அப்பெண்ணுக்கு மணமகனை பிடிக்கவில்லை என்று பொருள் கொள்ளப்படுகிறது.(மணமகன் தேனீர் பருகிவிட்டு மணப்பெண்ணின் வீட்டிலிருந்து வரும் தருவாயில் இனிப்பை சுவைத்தால் அப்பெண்ணை பிடித்திருக்கிறது என்று பொருள். காரத்தை தொட்டால் பிடிக்கவில்லை என்று பொருள்.) இவ்வழக்கம் இடத்திற்கு இடம் வேறுபடுகிறது. நிச்சயதார்த்தம், திருமணம் என இன்று எல்லா வகையான பண்பாட்டுச் சூழல்களிலும் தேநீர் பயன்படுததுவதைக் காணலாம்&lt;br /&gt;&lt;br /&gt;. குடும்ப உறுப்பினர்கள் சந்தித்துக்கொள்ளும்போதும் (for a family gathering): பொருளின் நிமித்தமாக அல்லது திருமணம் ஆனபிறகு பிள்ளைகள் பெற்றோரை விட்டுப் பிரிந்து செல்கின்றனர். மீணடும் குடும்ப உறுப்பினர்கள் ஒன்று சேரும்போது தேநீரகத்திற்கு குடும்பத்துடன் சென்று தேநீர் அருந்தி மகிழ்வது சீனர்களின் வழக்கமாக உள்ளது. சீனாவில் தேநீரகங்கள் சீனக் கட்டக் கலை நுட்பத்துடனும் இயற்கை எழிலோடும் சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் குழு குழுவாக அமர்ந்து தேநீர் அருந்தும் வகையில் கட்டமைக்கப்பட்டிருக்கும். தேநீரகத்தில் சீனக் கலைஞர்கள் மீட்டும் இசையை மணிக்கணக்கில் கேட்டு மகிழ்ந்தவாறே தேநீர் அருந்துவது சீனர்களின் கலா ரசனையைக் காட்டுகிறது. தேநீர் அருந்தும்போது கொறிப்பதற்காக வறுத்த பூசணி, தர்பூசணி விதைகள், வேர்க்கடலை ஆகியன கொடுக்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;• மன்னிப்பு கோருவதற்காகவும்(to apologize) : பிள்ளைகள் ஏதாவது தவறுகள் செய்துவிட்டால் தேநீர் ஊற்றிக்கொடுத்து பெற்றோர்களிடம் மன்னிப்புக்கோருவது சீனர்கள் பண்பாட்டில் காணமுடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;• பாரம்பரியத்தை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்வதற்காகவும் (to pass on the tradition) : குடும்பம்தோறும் உறவினர்கள் கூடி தேநீர் அருந்தும்போது குடும்ப பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் பற்றிப் பேசிகொள்வது வழக்கம். இதன் மூலம் சீனர்களின் பண்பாடு அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லப்படுவதாக நம்பப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தேநீர் குவளையில் சித்திர வேலைப்பாடுளும் சீனர்களின் நம்பிக்கைகளும்:&lt;br /&gt;&lt;br /&gt; சீனர்கள் பயன்படுத்தும் தேநீர் கூஜாக்களும் குவளைகளும் சித்திர வேலைப்பாடுகளுடன் மிகுந்த கலை நுட்பத்தோடும் அழகியல் உணர்வோடு இதற்கென தனி வகை களிமண் மற்றும் மணல் கொண்டு தயாரிக்கப்படுகிறது. ட்ராகான், பீனிக்ஸ், குதிரை, குரங்கு, புலி, பூனை, சேவல், மீன், பன்றி, ஆமை, ஆந்தை, பல்லி, தவளை, செர்ரிமலர், தாமரை, சூரியகாந்தி மலர், அண்ணாச்சி, பூசணி, மூங்கில், சிரிக்கும் புத்தர், குழந்தை புத்தர் ஆண், பெண் ஆகிய வடிவங்களில் தயாரிக்கப்பட்ட அல்லது ஆகிய உருவங்கள் பொறிக்கப்பட்ட கூஜாக்களிலிருந்து குவளையில் தேநீர் ஊற்றிக் குடிப்பதன் மூலம் அதற்கேற்ற பலன் கிடைப்பதாக நம்பப்படுகிறது.&lt;br /&gt; &lt;br /&gt; ட்ராகான்-பீனிக்ஸ், ஆண்-பெண் ஆகியவற்றின் இணைப்பில் தயாரிக்கப்படும் கூஜாக்கள் அதிகாரம் மற்றும் அழகு ஆகிய இரண்டும் கிடைப்பதாக நம்பப்படுகிறது. குதிரை: ஆளுமைப் பண்பு, நுண்ணறிவு மற்றம் நன்றியுணர்வு. புலி:வீரம் மற்றும் தீய சக்திகளுக்கு எதிராகச் சண்டையிடும் குணம். பூனை:நல்லது நடக்கும். சேவல்:விடியற்காலையில் நல்ல செய்தியைக் கொண்டு வருதல். மீன் மற்றும் பன்றி:செழுமை மற்றும் வளம். குரங்கு: ஆற்றல். ஆமை மற்றும் பல்லி: நீண்ட ஆயில். தவளை: எதிர்வரும் ஆபத்தை அறியச்செய்வது. வண்ணத்துப்பூச்சி: மாறாத காதல் மற்றும் முருகியல். செர்ரிமலர்:அழகு மற்றும் செல்வம். தாமரை:எதிர்பார்ப்பு இல்லாத நட்பு மற்றும் காதல். சூரியகாந்தி மலர்:நம்பிக்கை. அண்ணாச்சி:அர்பணிப்பு மற்றும் நற்குணம். பூசணி: நல்ல பலன். மூங்கில்:உயர் பண்பு மற்றும் உயர்வு. குழந்தை மறறும் சிரிக்கும் புத்தர்: மகிழ்ச்சி, அமைதி மற்றும் அன்பு. இத்தகைய கலை நுட்பத்துடன் கூடிய கோப்பைகள் பத்தாம் நூற்றாண்டிலிருந்து பயன்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தகுந்தது.&lt;br /&gt;&lt;br /&gt; தேநீர் பருகுவது சீனர்கள் பண்பாட்டில் உள்ளது போல் வழக்கமாக இல்லாமல் பழக்கமாகத் தமிழர் சமுதாயத்தில் கருதப்படினும், தமிழர் பண்பாட்டில் தேநீர் இரண்டறக் கலந்துவிட்டது என்பது தெளிவாகிறது. தமிழகத்தில் தேநீரகங்கள் இன்று கிராமங்களில்கூட தெருக்கள்தோறும் காணப்படுகிண்றன. தேநீரகங்கள் அரசியல் மற்றும் சமூக விவாத களங்களாகவும் உள்ளன. தினமலர் நாளிதழில் 'டீக்கடை பெஞ்சு' என்ற தலைப்பில் தினந்தோறும் அன்றாட அரசியல் மட்டும் சமூக சிக்கல்களை அலசுகின்றது. திரைப்பட பாடல்களில்கூட தேநீர் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. கல்யாணப் பரிசு என்ற படத்தில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய. 'டீ...டீ....டீ... பாட்டாளியாய் இருக்கும் தோழனுக்கு கூட்டாளியாய் இருப்பது டீ....' என்ற பாடல் வரிகள் குறிப்பிடத்தக்கது. பாட்டாளிகளுக்காகவே அறிமுகப்படுத்தப்பட்ட தேநீர் இன்று அனைத்து தரப்பு மக்களின் சிந்தனையைத் தூண்டும் பானமாக உள்ளது. எனவே, தமிழறிஞர்களும் ஆய்வாளர்களும் தமிழர் பண்பாட்டில் தேநீர் எவ்வாறெல்லாம் இரண்டறக் கலந்துள்ளது என்பது குறித்தும் தேநீரின் தீய மற்றும் மருத்துவ குணங்கள் குறித்தும் விரிவான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: -முனைவர் கு.சிதம்பரம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3683345437092478883-828464694699438165?l=muruganthiru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muruganthiru.blogspot.com/feeds/828464694699438165/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3683345437092478883&amp;postID=828464694699438165' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3683345437092478883/posts/default/828464694699438165'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3683345437092478883/posts/default/828464694699438165'/><link rel='alternate' type='text/html' href='http://muruganthiru.blogspot.com/2011/09/blog-post_25.html' title='சீனர் மற்றும் தமிழர் பண்பாட்டில் தேநீர்'/><author><name>அறிவியல் விழிப்புணர்வு</name><uri>http://www.blogger.com/profile/14816292961575112498</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='7' src='http://2.bp.blogspot.com/_-B1lk_hlPgA/SbYP5SBQ4CI/AAAAAAAAAHc/wBrjaI1emS4/S220/PSF_logo.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3683345437092478883.post-8726282079966707100</id><published>2011-09-23T00:38:00.001-07:00</published><updated>2011-09-23T00:47:09.534-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்க்கை முறை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உணவு பழக்கம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுகாதார சீர்கேடு'/><title type='text'>ருசிக்காக நச்சுப் பொருளைச் சேர்ப்பதா?</title><content type='html'>1908ல் டோக்கியோவைச் சேர்ந்த கிகுனே இகடா என்பவரே வாசனைப் பொருளுக்குக் காரணமான குளுடாமிக் அமிலத்தை (Glutamic Acid) கண்டுபிடித்தார். 1956ல் ஜப்பானைச் சேர்ந்த அஜினோமோட்டோ என்ற கம்பெனி இதை வியாபார ரீதியாக தயாரிக்க ஆரம்பித்தது. அன்று முதல் போட்டோ காப்பி, Xerox என்ற கம்பெனி பெயருடன் தவறாக அழைக்கப்படுவது போல MSG அஜினோமோட்டோ என்று நாமகரணம் செய்யப்பட்டு விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் 78% லி குளுடாமிக் அமிலம் 22% சோடியம் உள்ளது. குளுடோமேட் என்பது பால், பால் பொருள்கள், கறி, மீன் மற்றும் பல காய்கறிகளில் காணப்படும் ஓர் இயற்கையான அமினோ அமிலம். நமது உடலில் கூட இது உற்பத்தி செய்யப்படுகிறது. நமது மூளை வளர்ச்சிக்குத் தேவையான குளுடதயான் மற்றும் காமா அமினோ புட்ரிக் அமிலம் போன்றவற்றை நமது உடல் தயாரிக்க இது உதவுகிறது. மிகச்சிறு அளவுகளில் இது மூளை நரம்புகள் வேலை செய்ய உதவுகிறது. அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதானே! MSG மட்டும் விதி விலக்கா என்ன? அதிக அளவில் இதைச் சேர்த்துக் கொண்டால் மூளையின் ஹைப் போ தலாமஸ் என்ற முக்கியமான ஒரு பகுதியை பாதித்து விடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எந்தெந்த பொருள்களில் அதிகம் உள்ளது?&lt;br /&gt;&lt;br /&gt;பதப்படுத்தப்பட்ட பல உணவு வகைகள்,&lt;br /&gt;&lt;br /&gt;உரங்கள்,&lt;br /&gt;&lt;br /&gt;பூச்சிக் கொல்லிகள்,&lt;br /&gt;&lt;br /&gt;பயிர் வளர்ச்சி ஊக்கிகள்&lt;br /&gt;&lt;br /&gt;சோயா புரதத்தால் தயாரிக்கப்படும் பற்பல பொருள்கள் (உ.ம்) சோயா சாஸ்&lt;br /&gt;&lt;br /&gt;கார்ன், மால்ட்&lt;br /&gt;&lt;br /&gt;ஈஸ்ட்&lt;br /&gt;&lt;br /&gt;பார்லி மால்ட்&lt;br /&gt;&lt;br /&gt;சூப் பவுடர்கள்&lt;br /&gt;&lt;br /&gt;பல சமயங்களில் உணவில் இது சேர்க்கப்படுகிறது. உணவுப் பொருள்களைப் பதப்படுத்தும் பல முறைகளின் போது (உ.ம்) (Hydrolysis, Enzymalysis, Fermentation) இயற்கையாக வெளியாகி உணவில் தானாக சேருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பல வகை (Fast Food) வகைளில் (MSG) சேர்க்கப்படுகிறது! பிட்சா, பர்கர், ப்ரைடு ரைஸ், நூடுல்ஸ் வகை போன்ற நிறைய உணவு வகைகளில் (MSG) சேர்க்கப்படுகிறது. பெரிய ஐந்து நட்சத்திர ஓட்டல்கள் முதல் வீதியோரக் கடைகளில் விற்கப்படும் உடனடி உணவுகளில் இது கலக்கப்படுகிறது. வெறும் ருசிக்காக மட்டும்!&lt;br /&gt;&lt;br /&gt;மனிதனுக்கு (MSG)யால் ஆபத்தா?&lt;br /&gt;&lt;br /&gt;நமது உணவுப் பழக்க வழக்கங்களின் கட்டுப்பாடு நமது மூளையில் உள்ள ஹைபோதாலமஸ் என்ற பகுதியில் உள்ளது. MSGன் வாசனையால் ஹைபோதாலமஸ் தூண்டப்படுகிறது. இன்சுலின், அட்ரினலின் போன்றவை சுரப்பதையும் அதிகப்படுத்துகிறது. இவை அதிகமாக உணவு சாப்பிடத் தூண்டுபவை. எனவே, அதிக உணவால் எடை கூடுகிறது. அடிக்கடி சாப்பிட வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்துகிறது. மூளையில் சிரோடோனின் என்ற பொருளின் அளவு குறைந்து தலைவலி, மனச்சோர்வு, உடல் சோர்வு மேலும் உணவுக்கு ஏங்குதல் போன்றவை ஏற்படுகிறது. MSG நமது உணவில் உள்ள துத்தநாகத்துடன் சேர்ந்து துத்தநாகம் உடலில் சேர்வதைக் குறைக்கிறது. Zinc குறைபாடு ஏற்படுகிறது. Zinc குறைவால் மூளையில் டோபாமன் அளவு குறைந்து, அதன் விளைவாக, ஞாபக சக்தி குறைந்து, கவனக் குறைவு, திட்டமிட்டு செயல்படும் திறன் குறைவு என்று பட்டியல் நீளுகிறது. அதிகமான குளடாமில் அமிலம் உயிரின் முக்கிய அணுவான DNA என்ற மூலப் பொருளைப் பாதிக்கிறது. இது உடனடியாக நடப்பதில்லை. பாதிப்பின் அறிகுறிகள் வெளிப்படுத்துவதில்லை. மெது மெதுவாக தொடர் பாதிப்பு ஏற்படுகிறது. உடல் எடை அதிகரிப்பு, நடத்தை விபரீதங்கள், கவனக்குறைவு போன்றவை அதிகரிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;MSGயின் தாக்கம் மனிதர்களுக்கு சோதனைச் சாலை எலி போன்றவற்றை விட சுமார் 5 மடங்கு அதிகம்! அதிலும் கருவில் உள்ள சிசுக்களுக்கும், சிறு குழந்தைகளுக்கும் பாதிப்பு மிக அதிகம். தாயின் ரத்தம் மூலம் கருவில் உள்ள குழந்தையின் மூளையைத் தாக்கி மூளை வளர்ச்சியைப் பாதிக்கிறது. தீவிரவாதச் செயல்கள், உணர்ச்சிகள் நிலையில்லாமை, கவனக்குறைவு ஆகியவை ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.&lt;br /&gt;&lt;br /&gt;எந்த அளவு MSG பாதுகாப்பானது?&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு தனி மனிதனுக்கும் இதன் பாதிப்பு வேறுபடுகிறது. பாதிக்கும் அளவு, நேரம் போன்றவையும் வேறுபடுகிறது. MSG கலந்த உணவைச் சாப்பிட்ட சில நிமிடங்கள் முதல் 23 நாட்களுக்குப் பிறகு கூட அறிகுறிகள் ஏற்படலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;வயிற்று வலி, மூட்டு வலி, நாக்கு வீங்குதல் போன்றவை உடனடியாகத் தெரியும். நரம்பு செல்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்காவின் உணவு மருந்து கட்டுப்பாடு நிறுவனம் (US FDA) தினம் 3 கிராம் வரை MSG பாதுகாப்பானது என்று நிர்ணயித்துள்ளது. ஆனால் சிலருக்கு 1 கிராமுக்கு குறைவாக உணவில் சேர்த்தாலே நச்சு அறிகுறிகள் வெளிப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;1968ம் ஆண்டு சீனாவிலிருந்து வெளியான ஒரு மருத்துவக் குறிப்புதான் MSGன் நச்சுத் தன்மையை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது. ஒரு சீன உணவகத்தின் உணவு சாப்பிட்ட 20 நிமிட நேரத்தில் கை, கால்கள் மரத்துப் போய், முகத்தில் ஒரு துடிக்கும் உணர்வு, கழுத்து மற்றும் நெஞ்சில் வலியோடு ஒரு பிடிப்பு ஏற்பட்டிருக்கிறது. இவை 2 மணி நேரத்தில் குறைந்து விட்டது. அவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் 2 மணி நேரத்தில் நல்ல நிலைமைக்கு வந்து விட்டாலும் ஏதோ ஓர் இனம் தெரியாத பாதிப்பு இருந்ததை உணர்ந்துள்ளார்கள். இதற்கு (Chinese Restaurant Syndrome) என்றே பெயரிடப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;சட்ட ரீதியாக&lt;br /&gt;&lt;br /&gt;USFDA இயற்கை வாசனை, பதப்படுத்தப்பட்ட புரதம் அல்லது யீஸ்ட் என்று பெயரிட்டு உபயோகப்படுத்தலாம் என்று அனுமதி அளித்திருப்பது வியப்பைத் தருகிறது MSG என்று லேபிளில் குறிப்பிட வேண்டிய கட்டாயம் இல்லை?&lt;br /&gt;&lt;br /&gt;தொலைக்காட்சிகளில் வரும் விளம்பரத்தைப் பார்த்து ஆசைக்காக வாங்கி சாப்பிடும் Noodlesல் மிகவும் அதிகமாக MSG உள்ளது. எனவே, குழந்தைகள் இதன் தாக்கத்திற்கு மறைமுகமாக ஆளாகிறார்கள். Fast Food மையங்களில் விற்பனையாகும் அனைத்து உணவு வகைகளிலும் MSG உள்ளது. வாசனை மற்றும் ருசிக்காக அந்த உணவு சாப்பிடும் இன்றைய வளர் இளம்பருவத்தினர் தங்களுக்கு ஏற்படப் போகும் ஆபத்தை உணராமல் ஆடிப்பாடிக் கொண்டு, உண்டு களித்துக் கொணடிருப்பது வேதனைக்குரிய விஷயம். சில நிறுவனங்கள் MSG சேர்க்கப்படாமல் துரித உணவுகளைத் தயாரித்து அதை லேபிளில் குறிப்பிடுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;நமது சமூக, பொருளாதார பண்பாட்டு வாழ்க்கை முறையுடன் ஒத்துப் போகும் பற் பல உணவுகளில் வாசனை மற்றும் ருசியை அதிகரிக்கும் பொருட்கள் இருக்கும் போது வீணான, ஆபத்தான ரசாயனப் பொருட்களில் மேல் மோகம் ஏன்? இது தெரிந்தா? தெரியாமலா? இதன் விளைவு? நம் எதிர்காலச் சந்ததியினரின் ஆரோக்கியத்துக்கு ஆபத்து என்பதை எல்லோரும் உணர வேண்டும். குறிப்பாக, உணவுப் பொருட்கள் தயாரிப்பவர், உணவு வகைகளை விற்பவர்கள் சிந்திக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;Let your food be your medicine என்கிறார் ஹிப்போகிரடிஸ்.  &lt;br /&gt;&lt;br /&gt;சிந்திப்போம், செயல்படுவோம்!&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி:பூவுலகு மாத இதழ்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3683345437092478883-8726282079966707100?l=muruganthiru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muruganthiru.blogspot.com/feeds/8726282079966707100/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3683345437092478883&amp;postID=8726282079966707100' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3683345437092478883/posts/default/8726282079966707100'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3683345437092478883/posts/default/8726282079966707100'/><link rel='alternate' type='text/html' href='http://muruganthiru.blogspot.com/2011/09/blog-post_23.html' title='ருசிக்காக நச்சுப் பொருளைச் சேர்ப்பதா?'/><author><name>அறிவியல் விழிப்புணர்வு</name><uri>http://www.blogger.com/profile/14816292961575112498</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='7' src='http://2.bp.blogspot.com/_-B1lk_hlPgA/SbYP5SBQ4CI/AAAAAAAAAHc/wBrjaI1emS4/S220/PSF_logo.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3683345437092478883.post-1588519010689838523</id><published>2011-09-21T21:32:00.000-07:00</published><updated>2011-09-21T21:37:22.094-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வரலாறு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வரி உருவான விதம்'/><title type='text'>தமிழ்ச்சமுகத்தில் வரி</title><content type='html'>ஓவ்வொரு நாட்டின் குடிமகனும் தன்நாட்டின் அரசாங்கத்திற்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ ஒரு குறிப்பிட்ட தொகையைக் கட்டாயம் செலுத்த வேண்டியுள்ளது. குடிமக்கள் மட்டுமின்றி பல்வேறு அமைப்புகளும், நிறுவனங்களும்கூட ஒரு குறிப்பிட்ட தொகையை தம் நாட்டின் அரசுக்குச் செலுத்தக் கடமைப்பட்டுள்ளன. இவ்வாறு செலுத்தப்படுவது ‘வரி’ என்று பெயர் பெற் றுள்ளது. ஓர் அரசின் வருவாயின் தவிர்க்க இயலாத பகுதியாக வரி அமைந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;       ஒரு சமுகத்தில் நிகழும் பொருள் உற்பத்தி முறையின் அளவுகோலாகவும்கூட வரியைக் கணிப்பதுண்டு. ஏனெனில் தனிச் சொத்துரிமை வேர்விடாத ஒரு சமுகத்தில் வரி என்பது அறிமுகமாகாது. தனிச்சொத்துரிமையும் அரசு என்ற அமைப்பும் உருவான பின்னரே ஒரு சமுகத்தில் வரி அறிமுகமாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;       நிலம் என்ற உற்பத்திச் சாதனத்தை அடிப்படையாகக் கொண்ட நிலவுடைமைச் சமுகத்தில் நிலத்தின் உரிமை யாளர்கள் தம்மை ஆளுவோருக்கு விளைச்சலில் ஒரு பகுதியைக் கொடுக்க வேண்டும் என்ற விதிமுறைக்கு ஆளாக்கப்பட்ட போதே வரி என்பது முதல் முறையாக நடை முறைக்கு வருகிறது. வேறு வகையில் சொன்னால் நிலவுடைமைச் சமுகத்தின் வளர்ச்சிக் கேற்ப, வரி என்பது பயிரிடும் நிலத்திற்கு விதிக்கப்படுவது என்ற நிலையிலிருந்து, வளர்ச்சியடைந்து வணிகர்கள் கைவினை ஞர்கள் ஆகியோரிடமும் வாங்கப்பட்டது. சமுகத்தின் பொருள் உற்பத்தி முறையின் வளர்ச்சியையொட்டி வரி இனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;       தமிழ்நாட்டைப் பொறுத்தளவில் சங்ககாலம் என்று குறிப்பிடும் காலம் தமிழக நிலவுடைமைச் சமுகத்தின் தோற்ற காலம் ஆகும். கிறித்துவிற்கு முந்தைய காலத்திய பிராமிக் கல்வெட்டுகள் வணிகர் களின் இருப்பைச் சுட்டுகின்றன. சங்க இலக்கியங்கள், உள்நாட்டு வாணிபத்தை யும், ஏற்றுமதி இறக்குமதி வாணிபத்தையும், பதிவு செய்துள்ளன. ஆயினும் சங்ககாலச் சமுதாயத்தின் பொருள் உற்பத்தி முறையில் வேளாண்மையே முக்கிய பங்காற்றி யுள்ளது. இதன் அடிப்படையில் சங்ககால ஆட்சியாளர்களின் வருவாய் இனத்தில் நிலவரி முதலிடம் பெற்றிருந்தது. விளைச்ச லில் ஆறில் ஒரு பங்கு வரியாக வாங்கப் பட்டது என்ற கருத்து பரவலாகக் கூறப்படு கிறது. ஆனால் சங்க இலக்கியங்களில் இதற்குச் சான்று எதுவுமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;       சங்க காலத்தில் நாணயப்புழக்கம் இருந்துள்ளமையை சங்க இலக்கியங்கள் வாயிலாக அறிய முடிகிறது. நிலவரியானது தானியவடிவில் வாங்கப்பட்டதா, நாணய வடிவில் வாங்கப்பட்டதா என்பதில் தெளி வில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;       கழுதைகளின் மீது வாணிபப் பொருட்களைக் கொண்டுவருவோர் உல்கு என்ற பெயரில் செலுத்தியதை பெரும் பாணாற்றுப்படை குறிப்பிடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;       மற்றொரு பக்கம் ஏற்றுமதி, இறக்கு மதி வரிகள் துறைமுகங்களில் வாங்கப்பட்டன. வரி செலுத்தியதன் அடையாளமாக சோழர்களின் புலிச்சின்னம் துறை முகத்தில் இருந்த பொருட்களின் மீது பொறிக்கப்பட்டதாகப் பட்டினப்பாலை குறிப்பிடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;       மேலும், ஏற்றுமதி இறக்குமதிப் பொருட்களின் பட்டியல் ஒன்றையும் பட்டினப்பாலை குறிப்பிடுகிறது. இதன் அடிப்படையில் நோக்கும் போது துறை முகத்தில் வாங்கப்படும் ‘உல்கு’ (சுங்கம்) என்ற வரி குறிப்பிடத்தக்க வருவாய் இனமாக இருந்துள்ளது எனக் கருத இடமுள்ளது. கைவினைஞர்கள் பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியங்களில் காணப்பட்டாலும் அவர்கள் வரி செலுத்தியது பற்றிய செய்திகள் இல்லை. மொத்தத்தில் நிலவரியும் சுங்க வரியும் சங்ககாலச் சமுதாயத்தில் நிலவிய முக்கிய வரிகள் என்று உறுதிபடக் கூறமுடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;       சங்க காலத்தையடுத்த பல்லவர் ஆட்சிக்காலம் தமிழக நிலவுடைமைச் சமுகத்தின் வளர்ச்சிக் காலமாக அமை கிறது. புதிதாக விளைநிலங்கள் சாகு படிக்குக் கொண்டுவரப்பட்டமையும் வாணிபம் கைத்தொழில் வளர்ச்சியும், வலு வான மைய அரசும் பல்லவர் ஆட்சியின் சாதனைகளாகும். இதன் அடிப்படையில் நிலவரி, சுங்க வரி, என்ற இரு வரி இனங்களுடன் பல் வேறு புதிய வரிகள் அறிமுகமாயின. மிக நுட்பமான முறையில் திட்ட மிடப்பட்டு பல புதிய வரிகள் உருவாக்கப் பட்டன. சான்றாக, சிலவற்றைக் குறிப் பிடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;       சித்திரமூலம் என்ற மூலிகைச்செடி கொடியாகப் படருவது. இதைப் பயிரிட்டவர்களிடம் “செங்கொடிக் காணம்” என்ற வரி வாங்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;       விளைந்த தானியங்கள் விற்பனை செய்யப்பட்டபோது நாற்பத்தெட்டு படிக்கு ஒரு படி என்ற அளவில் வரிவாங்கப் பட்டது. இது ‘வட்டி நாழி’ எனப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;       வழிப்போக்கர்கள் ஓர் இடத்தைக் கடந்து செல்ல வரி வாங்கப்பட்டது. இது “ஊடு போக்கு” எனப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;       கள் இறக்குவோர் “ஈழப்பூட்சி” என்ற வரியையும் மீன்பிடிப்போர் “பட்டினச் சேரி” என்ற வரியையும் கால்நடை வளர்ப்போர், “இடைப்பூட்சி” என்ற வரியையும் குயவர்கள் “குசக்காணம்” என்ற வரியையும் தட்டார்கள் “தட்டுக்காயம்” என்ற வரியையும், வண்ணார்கள் “பாறைக் காணம்” என்ற வரியையும் ஆற்றில் ஓடம் செலுத்துபவர்கள் “பட்டிகைக் காணம்” என்ற வரியையும் செலுத்தி வந்தனர். இவ்வரிகள் நாணய வடிவில் செலுத்தப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;       நெசவாளர்களும் எண்ணெய் எடுப்போரும் தம் உற் பத்திப் பொருளில் ஒரு பகுதியை வரி யாகச் செலுத்தினர். இவ்வரிகள் முறையே “தறிக்கூறை செக்கு” எனப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;       பறையடிப்போரிடமிருந்து “நெடும் பறை” என்ற வரியும், ஏற்றம் இறைப் போரிடம் “ஏற்றக்காணம்” என்ற வரியும் வாங்கப்பட்டன. திருமணம் செய்வோர் “கண்ணாலக்காணம்” என்ற வரியைச் செலுத்த வேண்டியிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பல்லவர் காலத்தையடுத்த முற்காலப் பாண்டியர் ஆட்சிக்குப் பின்னா சோழப்பேரரசு உருவாகியது. கி.பி 850 தொடங்கி 1300 வரையிலான இக்காலம் தமிழக நிலவுடைமைச் சமுகம் வளர்ச்சி பெற்ற காலமாகும். வேளாண்மை வணிகம் ஆகியன குறிப்பிட்டுச் சொல்லுமளவுக்கு செழித்து வளர்ந்திருந்தன. அரசின் வருவாய் இனமாக நிலவரியும் பல்வேறு வகையான தொழில் வரிகளும் இக்காலத்தில் நடைமுறையிலிருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;வரிகளைக் கணக்கிடவும் வாங்கவும் பதிவுசெய்யும் ஒரு முறையான நிர்வாக அமைப்பு உருவாக்கப்பட்டிருந்தது. இவ்வமைப்பில் பல்வேறு படிநிலைகளில் அரசு அலுவலர்கள் பணிபுரிந்தனர். கரணம் என்பவர் வரிக் கணக்குகளைப் பதிவு செய்யும் அடிநிலை ஊழியராவார். கணக்கு மத்தியஸ்தன் என்றும் இப்பதவி அழைக்கப்பட்டது. பணியாற்றும் நிறுவனத்துடன் இப்பதவி தொடர்புபடுத்தப்பட்டு நாடுகரணம், கோயில்கரணம், வாரியக்கரணம், ஊர்க்கரணம், என அழைக்கப்பட்டது. வரிகுறித்த கணக்குகளை எழுதி வைக்கும் புத்தகத்தைப் பராமரிப்பவன் ‘வரிப் பொத்தகம்’ எனப்பட்டான். சில வரிகள் குறித்த நிர்வாக அமைப்பு ‘புரவு வரித் திணைக்களம்’ என்ற பெயரில் இருந்தது. இதில் பணிபுரியும் அதிகாரி ‘புரவு வரித் திணைக்களத்துக் கண்காணி’ என்றழைக்கப்பட்டான். ஆனால் ஓலையில் எழுதப்பட்ட கணக்குகள் எதுவும் நமக்குக் கிட்டவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஏறத்தாள 9000 சோழர்காலக் கல்வெட்டுக்கள் முழுமையாக வெளியிடப்படவில்லை என்று நொ.பொரு கராஷிமா குறிப்பிடுகிறார். வெளியான கல்வெட்டுக்களைப் பயன்படுத்தி கல்வெட்டுக்களில் அதிக அளவில் இடம்பெறும் வரிகளை அட்டவணைப்படுத்தியுள்ளார். அவரது அட்டவணையில் 27 வரிகள் இடம்பெற்றுள்ளன. கால அடிப்படையில் இவ்வரிகளை ஆராய்ந்து சோழராட்சியில் காலந்தோறும் வருவாய் இனங்கள் கூடிக்கொண்டு சென்றன என்ற முடிவுக்கு அவர் வருகிறார். இவ்வரிகளில் சில நாம் முன்னர் பார்த்த பல்லவர் காலத்தில் வழக்கிலிருந்தவை. சில புதிதாக அறிமுகமானவை.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வரிகளில் நிலவரியானது கடமை காணிக்கடன் புரவு என்ற பெயர்களில் நில உரிமையாளர்களிடமிருந்து விளைச்சலில் ஆறில் ஒருபங்கு என்ற அளவில் வாங்கப்பட்டது. இவ்வாறு வாங்கும் நெல்லை அளக்க ‘பஞ்சவாரக்கால்’ என்ற முகத்தளவைக் கருவி பயன்படுத்தப்பட்டது. சில இடங்களில் பொன்னாகவும் வரி வாங்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;சோழர் காலத்திற்கு முந்தைய முற்காலப் பாண்டியர்காலத்தில் வழக்கிலிருந்த ஆறுவரிகளாகப் பின்வரும் வரிகளை நொபுரு கரோஷிமா குறிப்பிடுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;(1)    அச்சுவரி             :      இவ்வரியை அச்சுக்காசுகளாகச் செலுத்த வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;(2)    இலாஞ்சினைப்பேறு    :      அரசு முத்திரையை வைத்திருக்கும் அலுவலருக்குச் செலுத்தும் வரி.&lt;br /&gt;&lt;br /&gt;(3)    காரிய ஆராய்ச்சி     :      அரசு அலுவலர்களுக்காகச் செலுத்தும் வரி.&lt;br /&gt;&lt;br /&gt;(4)    சந்திவிக்கிரகப்பேறு    :      அரசனின் தூதுவர் அல்லது அலுவலருக்குச் செலுத்தும் வரி.&lt;br /&gt;&lt;br /&gt;(5)    தட்டொலி            :      தட்டை என்னும் வாத்தியத்தைக் கொட்டுவோர் மீது விதிக்கப்பட்ட வரி.&lt;br /&gt;&lt;br /&gt;(6)    பஞ்சபீலி            :      கொட்டை நீக்கிய பஞ்சின் மீது விதிக்கப்பட்ட வரி.&lt;br /&gt;&lt;br /&gt;சோழர்காலத்தில் சில வரிகள் பெயர்மாற்றம் பெற்றுள்ளன. பல்லவர்காலத்தில் இடைப்பூச்சி என்ற பெயரில் கால்நடை வளர்ப்போரிடம் வாங்கப்பட்ட வரி, இடையர்வரி என்று பாண்டியர் காலத்திலும், ‘இடைப்பாட்டம்’ என்று சோழர்காலத்திலும் அழைக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;       அரசு ஊழியர்களின் உணவுக்காகத் தருவது ‘எச்சோறு’ எனப்பட்டது. செக்கு ஆட்டும் தொழில் செய்வோர் ‘செக்கு இறை’ என்ற வரியையும் தட்டார்கள் ‘தட்டார் பாட்டம்’ என்ற வரியையும் நெசவாளர்கள் ‘தறி இறை’ எனற வரியையும் செலுத்தினர். வண்ணார்கள் செலுத்திய வரி ‘வண்ணாரப் பாறை’ ‘வண்ணார் கற்காசு’ எனப்பட்டது. நடனமகளிர் தம் முகம் பாhக்கும் கண்ணாடிக்கும் வரி செலுத்தினர்.&lt;br /&gt;&lt;br /&gt;       குதிரை யானைகளுக்கு முறையே ‘குதிரைப்பந்தி’ ‘யானைச்சாலை’ என்ற பெயரில் வரிவாங்கப்பட்டது. மாடு வளர்ப்போர் ‘நல் எருது’ ‘நல் எருமை’ என்ற பெயரில் வரிகட்ட வேண்டியிருந்தது. கம்மாளர் கொல்லர் போன்று பட்டறை அமைத்துத் தொழில் செய்வோரிடம் ‘தட்டொலி’ என்ற வரி வாங்கப்பட்டது. ஏரியில் மீன் பிடிப்போர் ‘ஏரிமீன்பாட்டம்’ என்ற வரியைச் செலுத்தினர். சொந்தமாக உழுகருவியான ஏர் வைத்திருப்போரிடமிருந்து ஏர்வரியும் பொது இடத்தைப் பயன்படுத்துவோரிடமிருந்து ‘கடைக் கூட்டிலக்கை’ என்ற வரியும் வாங்கப்பட்டது. கிராமத்தில் குடியிருப்போரிடம் ‘ஆள்வரி’ என்ற பெயரில் வரிவாங்கப்பட்டது. நாட்டின் பொதுக் காரியங்களுக்காக ‘நாட்டு விநியோகம்’ என்ற வரியும் நிலத்தீர்வைக் கணக்குகளை எழுதும் செலவுகளுக்காக ‘நாட்டுக் கணக்கு வரி’ என்ற வரியும் வாங்கப்பட்டது. சோழர் நாட்டில் ஓடும் காவிரியில் வெள்ளக்காலாங்களில் வெள்ளப் பெருக்கெடுத்து கரை உடைவது நிகழும். இதைத் தடுக்க காவிரியின் கரையைப் பலப்படுத்துவதற்கு ஆகும் செலவைச் சரிக்கட்ட ‘காவிரிக் குலை’ என்ற பெயரில் வரி வாங்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;       தம் மறுமைப் பயன்கருதி சோழ மன்னர்கள் மேற்கொண்ட செயல்களுள் ஒன்று ‘துலாபாரதானம்’ இது குறித்து கல்லெட்டறிஞர் கோவிந்தராசன் கூறும் செய்தி வருமாறு:&lt;br /&gt;&lt;br /&gt; அரசனும் மிக்க செல்வரும் இம்மை மறுமைப் பயன்கருதி வேதியர்க்குச் சடங்கின் வழிச் செய்யும் பெருந்தானங்களில் ஒன்றாகும். இத்தானம் ஆண்கள் மட்டுமே செய்யத்தகுந்ததென்பதாக ‘துலாபுருஷதானம்’ என்று ஆகமம் கூறும்.&lt;br /&gt;&lt;br /&gt;       துலாபாரதானம் செய்யும் அரசன் புதிதாக மண்டபம் ஒன்றினை அமைத்து, அதன் நடுவே துலாக்கோல ஒன்றை நிறுத்தி, அத்துலாக்கோலை அலங்கரித்து, வேதியர்களைக் கொண்டு, வேள்வியாசிரியன் முன்னர் ஆகுதி முதலிய கிரியைகள் செய்து துலாக்கோலை வழிபட்டு, ஒரு தட்டில் அமர்ந்து கொள்வான். அவன் எடைக்குச் சரியாக மற்றோர் தட்டில் பொன்னை நிரப்புவார்கள். பின்னர் அப்பொன்னில் பாதியை வேள்வியாசிரியனுக்கும் மிகுதியைத் திருகோயில்கட்கும் வேதியர்கட்கும் அரசன் தானமாக் கொடுப்பான். இவ்வாறு செய்தவன் மிக்க புகழுடன் ஆயுளையும் பெற்று, திருமாலின் பதம் புகுவான் என்பது அருமறை வழக்காம்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு துலாபாரதானம் செய்து புண்ணியம் தேடிக்கொள்ளத் தேவையான பொருளை மக்களிடம் வரி வாங்குவதன் வாயிலாகவே பெற்றுக் கொண்டனர். இவ்வரி ‘துலாபார வரி’ எனப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;நிலத்தில் விளையும் பயிர்களுக்கேற்ப நிலவரி விதிக்கப்பட்டது. மாறவர்மன் குலசேகர பாண்டியனின் 22 ஆவது ஆட்சியாண்டுக் கல்வெட்டொன்று (கி.பி.1289-90)&lt;br /&gt;&lt;br /&gt; ஆடிக்குறுவை விளைந்த நிலத்துக்கு, தினை வரகு விளைந்த நிலத்துக்கு, மஞ்சள் கருணை விளைந்த நிலத்துக்கு, கரும்பு கொடிக்கால் விளைந்த நிலத்துக்கு என்று பயிருக்கு ஏற்ப வரியை பாகுபடுத்துகிறது. இது போன்றே வியாபாரிகள் பேர் ஒன்றுக்கு ஆறுபணம் கைக்கோளர் தறி ஒன்றுக்கு ஆறுபணம் சாவியர் தறி ஒன்றுக்கு ஆறுபணம் &lt;br /&gt; வாணியர் தறி ஒன்றுக்கு ஆறுபணம் என்று ஜடாவர்மன் இரண்டாம் சுந்தர பாண்டியன் காலத்துக் கல்வெட்டான்று (1289-90) பாகுபடுத்திக் குறிப்பிடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;       மாறவர்மன் வீரபாண்டியன் கல்வெட்டொன்று (1343-44) கால்நடை வளர்க்கும் மன்றாடிகள் ஆண்டொன்றுக்குச் செலுத்த வேண்டிய வரியை&lt;br /&gt;&lt;br /&gt; பத்துமாட்டுக்கு ஒரு பணம்&lt;br /&gt; அஞ்சு எருமைக்கு ஒரு பணம்&lt;br /&gt; ஐம்பது ஆட்டுக்கு ஒரு பணம் என்று வரையரை செய்துள்ளதைக் குறிப்பிடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;       இதுபோன்றே ‘வான்பயிர்’ ‘புன்பயிர்’ என்று பயிர்களை இரண்டாகப் பகுத்துள்ளனர். வான்பயிர் என்பது வளமான பகுதியில் வளர்வது. தெங்கு, வாழை கொழுந்து, மஞ்சள், இஞ்சி, கருணை, கரும்பு, செங்கமுநிர் என்பன வான்பயிர்கள் என்ற வகைமையில் குறிப்பிடப்படுகின்றன. புன்பயிர் என்பது மழையை எதிர்நோக்கி வளரும் புன்செய் நிலப்பயிர்களாகும். புல்லு, வரகு, தினை, சாமை, இறுங்கு (சோளம்) ஆமணக்கு, பருத்தி, வழுதலை, பூசணி, எள்ளு, கொள்ளு பயறு அவரை துவரை என்பன புன்பயிர்களாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: செம்மலர்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3683345437092478883-1588519010689838523?l=muruganthiru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muruganthiru.blogspot.com/feeds/1588519010689838523/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3683345437092478883&amp;postID=1588519010689838523' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3683345437092478883/posts/default/1588519010689838523'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3683345437092478883/posts/default/1588519010689838523'/><link rel='alternate' type='text/html' href='http://muruganthiru.blogspot.com/2011/09/blog-post_21.html' title='தமிழ்ச்சமுகத்தில் வரி'/><author><name>அறிவியல் விழிப்புணர்வு</name><uri>http://www.blogger.com/profile/14816292961575112498</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='7' src='http://2.bp.blogspot.com/_-B1lk_hlPgA/SbYP5SBQ4CI/AAAAAAAAAHc/wBrjaI1emS4/S220/PSF_logo.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3683345437092478883.post-6312767257746959938</id><published>2011-09-18T23:54:00.000-07:00</published><updated>2011-09-18T23:55:45.604-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புவி வெப்பமயமாதல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஓசோன் மண்டலப் பாதுகாப்பு'/><title type='text'>ஓசோன் மண்டலப் பாதுகாப்பு - அவசியமும் வழிமுறைகளும்</title><content type='html'>நம் பூமிப் பந்தை ஒரு வாயுப்போர்வை அலுங்காமல் குலுங்காமல் அப்படியே அலாக்காக, அற்புதமாக மூடி வைத்திருக்கிறது. அதுதான் வளிமண்டலம். வளிமண்டலம் என்பது பல்வேறு வாயுக்களின் கலவையே. இந்த வாயு மண்டலக் கலவையை, நம் புவியின் ஈர்ப்பு சக்திதான் வளிமண்டலம் எங்கும் விரிந்து பரந்து, பறந்து, பறந்து ஓடிப்போகாமல் இழுத்து பத்திரமாய் வைத்திருக்கிறது. இந்த வளிமண்டலம் இல்லாவிட்டால், இந்த உலகில் உயிரினங்களே வாழ முடியாது. நம் பூமி வெப்பத்தில் பொரிந்து போகாமல் பாதுகாப்பாக இருப்பதும் இந்த வளிமண்டலத்தால்தான். நமது தாயகமான சூரியனிடமிருந்து வரும் புறஊதாககதிர்களை வளிமண்டலம் உட்கிரகிக்கிறது; இதனால் வெப்பத்தை தன்னிடம் தக்க வைத்து, புவியின் மேற்பரப்பை மிதமாய், உயிரினங்கள் வாழும் தன்மையதாய் சூடாக்குகிறது. இதன் மூலம் வெப்ப நிலை உயர்வையும் இது கட்டுப்படுத்துகிறது. பகல் இரவு வெப்பநிலையும் சீராக்கப்படுகிறது.&lt;br /&gt;  &lt;br /&gt; வளிமண்டலத்தில் உள்ள வாயுக்களில் அதிகம் இருப்பது நைட்டிரஜன், ஆக்சிஜன், ஆர்கான் மற்றும் கரியுமில வாயு ஆகியவையே. மற்றவைகள் மிகக் குறைவாகவே உள்ளன. நைட்டிரஜன் 78 .4 %, ஆக்சிஜன் 20 .946 %; ஆர்கான் மற்றும் 0.934 %; கரியுமில வாயு 0..039 % இருக்கிறது. மற்ற வாயுக்கள் மிக மிகக் குறைந்த அளவே உள்ளன. நியான் 0.001818 %., ஹீலியம் 0.000524 %; மீத்தேன் .0000179 %; கிரிப்டான் 0.000114 %; ஹைடிரஜன் 0.000055 %; நைட்ரஸ் ஆக்சைடு 0.00003 %;. கார்பன் மோனோ ஆக்ஸைடு 0.00001 %; சினோன் 0.000009 %; ஓசோன் 0.000007 % 0.௦ to 0.07 ppmv (0 to 7x10 -6 %); நைட்டிரஜன் ஆக்சைடு 0.000002 %; ஐயோடின் 0.000001 %; மிகக் குறைந்த அளவு அம்மோனியா மற்றும் நீராவி..குறைவாகவே உள்ளது.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;  &lt;br /&gt; ஓசோன் அடுக்கு என்பது வளிமண்டலத்தின் அடுக்குகோளத்தைச் (Stratosphere) சுற்றி போர்த்தப்பட்டுள்ள ஒரு போர்வையாகும். இது பூமிலிருந்து சுமார் 15 கி.மீ உயரத்திலிருந்து, 15-30 கி.மீ தூரம் வரை (சுமார் 20 கி.மீ கனத்தில்) பரவி இருக்கிறது. இந்த ௨௦ கி.மீ உயரம் பரவி உள்ள ஓசோனை அப்படியே அமுக்கி அடைத்தால் அதன் கனம் சுமார் 3 மீ.மீ அளவுதான் இருக்கும். ஆனால் இதன் கனம்என்பது பருவ நிலைக்கு ஏற்பவும், பூமியின் மேற்பரப்பில் துருவ மற்றும் நிலநடுக்கூட்டிலும் அளவு வேறுபடுகிறது. இந்த ஓசோன் தான் சூரியனிடமிருந்து வரும், உயிரிகளுக்கு கேடு விளைவிக்கும் புறஊதாக்கதிர்களை சுமார் 97%-99% வடிகட்டி விடுகிறது. எனவே நாம் அதன் தாக்குதலிருந்து தப்பித்து நிம்மதியாய் இருக்கிறோம்.  &lt;br /&gt;  &lt;br /&gt; பொதுவாக பூமியிலிருந்து மேலே செல்லச் செல்ல, காற்றின் அழுத்தமும், அடர்வும் குறைந்து கொண்டே வரும். ஆனால் வெப்பம் அப்படி இல்லை. பல இடங்களில் பல உயரத்தில் வெப்ப மாறுபாடு ஏராளமாக உள்ளது. பூமியின் வளிமண்டலம் வரிசையாக 5 அடுக்குகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது. பூமிக்கு அருகில் இருக்கும் அடுக்கு கனமாகவும், அதிக உயரத்தில் இருக்கும் அடுக்கு மிக மெலிதாகவும் இருக்கிறது. மேலே உள்ள அடுக்கு மட்டும் அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக வான்வெளியுடன் இரண்டறக் கலந்துவிடுகிறது. பூமியின் முதல் அடுக்கான அடிவளி மண்டலம் (Troposphere) தரைக்கு மேலே, சுமார் 19 கி.மீ உயரம் வரை பரவி உள்ளது. ஆனால் இது துருவத்தில் இதன் கனம் 9 கி.மீ ஆகவும், நில நடுக்கோட்டுப் பகுதியில் 17-19 கி.மீ உயரம் உள்ளதாகவும் உள்ளது. இந்த பகுதியில்தான் நமது சீதோஷ்ணநிலை மாறுபாடுகள் காணப்படுகின்றன. பூமியின் தரையை ஒட்டிய பகுதிகள் வெப்பமாகவும், உயரே செல்ல, செல்ல வெப்பம் குறைவாகவும் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு அடுத்த இரண்டாவது அடுக்கு மீவளி/அடுக்கு மண்டலம்(Stratosphere). இதற்கும் அடிவளி மண்டலத்திற்கும் இடையில் ட்ரோபோபாஸ்/ சேணிடை/சிற்றிடை அடுக்கு உள்ளது(Trophopause). இது ட்ரோபாபாஸிலிருந்து சுமார் 51 கி.மீ உயரம் வரை நீண்டிருக்கிறது. பெரும்பாலான விமானங்கள் பறப்பது இந்த பகுதியில்தான். ஆனால் இங்கே.. உயரே செல்லச் செல்ல வெப்பம் அதிகரித்துக்கொண்டே போகும். ஏனெனில், இதன் அடிப்பகுதியில் உள்ள ஓசோன் அடுக்கு வெப்பத்தை அப்படியே உள்வாங்கிக் கொள்கிறது. ட்ரோபோபாஸின் அருகில் வெப்பம் -60 டிகிரியாக இருக்கும். ஆனால் மீவளி மண்டலத்தின் மேல் பகுதியில் வெப்பம் அதிகமாக இருக்கும். இதற்கு மேலே, மீவளி பாஸ்(Stratopause) உள்ளது. இது மூன்றாம் அடுக்கான இடை/நடு மண்டலம் (Mesosphere) 51 -55 கி.மீ வரை பரவி கிடக்கிறது. இங்கே காற்றின் அழுத்தம் கடல் மட்டத்திலிருந்து 1 /1000 மடங்காகும். இங்கேதான் விண்கற்களும், பாறைத் துண்டுகளும் எரிகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த 4 வது அடுக்கு வெப்பமண்டலம்(Thermosphere). இங்கே வெப்பம் 1,000 டிகிரி வரை இருக்கும். இது 100 -650 கி.மீ உய்ரம் வரை பரவி இருக்கிறது. வானின் அரோரா ஒளி உருவாவதும், விண்வெளி ஓடங்கள் பறப்பதும் இப்பகுதியில்தான். சர்வதேச விண்வெளி நிலையங்கள் இங்கேதான், 320 -380 கி.மீ உயரத்தில் இருக்கின்றன. 5வது அடுக்கான வெளிமண்டலம் (Exosphere) உள்ளது. இது 650 -10,000,௦௦௦ கி.மீ வரை இருக்கிறது. இதுதான் பூமியின் வளி மண்டலத்தின் கடைசிப்பகுதி. இதற்குப் பின் இப்பகுதி வான்வெளியுடன் இரண்டறக்கலந்து விடுகிறது. இங்கே ஹீலியமும், ஹைடிரஜனும் காணப்படுகிறது. ஆனால் இப்பகுதி மிக மிக மெலிதாக உள்ளது.   &lt;br /&gt; &lt;br /&gt;ஓசோன் (Ozone) என்பது மூன்று ஆக்சிஜன் அணுக்களின் இணைப்பு. இரண்டு ஆக்சிஜன் அணுக்கள் சேர்ந்தது நாம் சுவாசிக்கும் ஆக்சிஜன் வாயு. இது நிலையானது. ஆனால் ஓசோன் வாயுவின் இணைப்பு நிலையற்றது. உலகம் உருவானபோது ஆக்சிஜன் இல்லை. ஆக்சிஜன் தாவரங்கள் உருவான பின்புதான் உருவானது. அப்போது 1,500,000,௦௦௦000 ஆண்டுகளுக்கு முன் இருந்த உயிரிகள் ஆக்சிஜனின்றி, ஹைடிரஜனை வெளியேற்றி உயிர் வாழ்ந்தன. உலகம் முழுவதும் குளோரோபில் உள்ள சயனோ பாக்டீரியா என்ற ஆல்கா (240 கோடி ஆண்டுகளுக்கு முன்)பரவலாகி, ஒளிச் சேர்க்கையின் உபரிப்பொருளாக ஆக்சிஜனை வெளிவிட்டது. அதனால் வளிமண்டலத்தின் ஆக்சிஜன் அளவும் பெருகியது. ஒரு கால கட்டத்தில் புவியில் தாவரங்களின் எண்ணிக்கையே அதிகமாக இருந்தது. சயனோ பாக்டீரியா ஆக்சிஜன் வாயுவை உருவாக்கவில்லை என்றால், மீவளி மண்டலத்தின் ஓசோன் அடுக்கு உண்டாகியே இருக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;   ஓசோன் வாயு இருபக்கமும் பதப்படுத்தப்பட்ட கூரான கத்திக்கு இணையானது. ஓசோன் பூமிக்கு அருகில் இருக்கும்போது, அதனை நாம் சுவாசித்தால் நமக்கு தீங்கு விளைவிக்கும். அரித்துவிடும். ஆனால் இது மீவளி மண்டலத்தின் அடிப்பகுதியில் அடர்வாக இருக்கும்போது, இது சூரியனிடமிருந்து வரும் உயிரிகளுக்கு கெடுதல் செய்யும் புறஊதாக் கதிர்களை வடிகட்டி விடுகிறது. வளிமண்டலத்தில் ஓசோன் இல்லை என்றால் புறஊதாக்கதிர்களிடம் இருந்து நம்மைக் காக்க ஓர் சிறப்பு உடையை/காப்புக் கவசத்தை நாம் அணிய வேண்டியிருக்கும். ஏனெனில் புறஊதாக் கதிர்கள் நம்மைத் தாக்கி தோல் புற்று நோயையும், கண் நோய்களையும் உண்டாக்கி, நம்மை சிதைத்து விடும்.  &lt;br /&gt;    &lt;br /&gt; வளிமண்டலத்திலுள்ள ஓசோன் அடுக்கில் 90 % இயற்கையானது. நமக்கு நன்மை விளைவிப்பதுதும் கூட. ஆனால் மீதியுள்ள 10% கெடுதி விளைவிக்கும் ஓசோன். இது சிற்றுந்து, பேருந்து மூலம் வெளியாகும் புகையிலிருந்து உருவாவதாகும். ஒளிவேதியியல் இயந்திர இயக்கத்தின் (photo chemistry mechanics mechanism) மூலம் ஓசோன் அடுக்கு உருவாகும் வித்தையை பிரிட்டிஷ் இயற்பியலாளர் சிட்னி சாப்மீன் 1930களில் கண்டுபிடித்தார். மீவளிமண்டலத்தில் இருக்கும் ஆக்சிஜன் வாயுவிலுள்ள ஆக்சிஜன் அணுக்களில் புறஊதாக்கதிர்கள் தாக்கி, தனித் தனி ஆக்சிஜன் அணுக்களாக உடைக்கிறது. உடைக்க முடியாத ஆக்சிஜன் வாயுவுடன் ஒற்றை ஆக்சிஜன் அணு இணைந்து, அங்கு மூன்று ஆக்சிஜன் அணுக்கள் உள்ள ஓசோனாக உருவாகிறது. புறஊதாக்கதிர் மீண்டும் மீண்டும் ஓசோனைத் தாக்கி இதனை, ஆக்சிஜன் வாயுவாகவும், ஆக்சிஜன் அணுக்களாகவும் மாற்றி விடுகிறது. பின்னர் இவை நிறைய சேர்ந்த பின் இதுவே ஓசோன் அடுக்காகிறது. இது ஒரு தொடர் வினையாக நிகழ்ந்து, ஓசோன்-ஆக்சிஜன் சுழற்சி(Ozone-oxygen cycle) நடக்கிறது. &lt;br /&gt;  &lt;br /&gt; ஓசோன் சுவிஸ் வேதியலாளர் கிறிஸ்டியன் பிரட்ரிச் ச்கொன்பெயின் என்பவர்தான் ஓசோன் இருப்பதைக் கண்டுபிடித்தார். காற்றிலுள்ள 10,௦௦௦000 மூலக்கூறுகளுக்கு 10 அல்லது அதற்கும் குறைவான ஓசோன் மூலக்கூறுகள் எனற அளவிலேயே உள்ளன. 1980களில் ஓசோன் அடுக்கில் உலகின் வடபகுதியான அண்டார்டிக்காவில், வசந்தகாலத்தில் (Spring season) ஒரு ஓட்டை இருந்தது கண்டறியப்பட்டது. ஓட்டை என்றால் ஓசோனில் யாரும் ஊசியை எடுத்து குத்தி ஓட்டை போடவில்லை. ஓசோனில் ஏற்பட்ட இந்த ஓட்டையானது மனிதர்களாலும், மனித செயல்பாடுகளால் வெளிப்படும் குளோரோபுளூரோ கார்பன்களாலும் (Chloroflurocarbons) தான் ஓசோன் அடுக்கில் ஓட்டை உண்டாகி இருக்கிறது என்று அறிவியல் அறிஞர்களால் அறியப்பட்டுள்ளது. பொதுவாக ஓசோன் அடுக்கு, கட்டுறா அயனிகளால் தான் பாதிக்கப்படுகிறது. நைட்டிரிக் ஆக்சைடு, நைட்ரஸ் ஆக்சைடு, ஹைடிராக்சைல், குளோரின் மற்றும் புரோமின் போன்றவைதான் இந்த உடைப்புப் பணியைச் செய்கின்றன.&lt;br /&gt;  &lt;br /&gt; அண்டார்டிக்கில் உள்ள ஓசோன் ஓட்டையை 1985ல் பிரிட்டிஷ் விஞ்ஞானிகளாலான ஜோசப் பார்மான், பிரியன் கார்டினர் மற்றும் ஜோனாதன் ஷான்க்ளின் போன்றோர் அண்டார்க்டிக் பகுதி கணக்கெடுப்பின்போது கண்டறிந்தனர். அந்த பகுதியிலுள்ள ஓசோன் அடுக்கில் ஓசோனின் அளவு குறைந்திருந்ததே, அதன் கனம் மெலிதானதாய் இருந்ததே ஓசோனில் ஓட்டை என்று சொல்லப்படுகிறது. ஓசோனின் ஓட்டை என்பது பத்தாண்டுகளுக்கு 4% என்ற அளவில் சீராகக் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வர வர ஒவ்வொரு ஆண்டும் இந்த ஓட்டையின் அளவு அதிகரித்துக் கொண்டே போகிறது. இந்த ஆண்டு வசந்தத்தின்போது ஓசோன் ஓட்டையின் அளவு ஆகஸ்ட் 2011ல் 40 % இருந்ததாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;     மனிதனால் வெளியிடப்படும் ஓசோன் பாதிப்பு பொருள்கள்,    சக்தி மிக்க பசுமையகப் பொருட்களாக (potent greenhouse gases) செயல்படுகின்றன. அவற்றில் சில பொருள்கள் கரியுமில வாயுவைவிட 1,400 மடங்கு வீரியம் மிக்கவை. எனவே இவையும் சீதோஷ்ண நிலை மாற்றத்திற்கும், வெப்ப மயமாதலுக்கும் மிகவும் துணை போகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;   உலக ஐக்கிய நாடுகள் அமைப்பு, ஓசோன் அடுக்கின் முக்கியத்துவத்தை எண்ணி, அதனைப் பாதுகாக்க ஒரு நாளைத் தேர்ந்தெடுத்தனர். அதுதான் செப்டம்பர் 16. அதனை உலக ஓசோன் தினமாக அறிவித்துள்ளனர். 1987ல் உலகின் 24 நாடுகள் மாண்ட்ரியலில் ஒன்றிணைந்து இனிமேலுக்காவது ஓசோனை பாதுகாக்க வேண்டும் என்ற முடிவெடுத்து அனைத்து நாடுகளும் கையெழுத்து போட்டன. இந்த தினம் என்பது மாண்ட்ரியல் புரோட்டோகாலில், ஓசோன் அடுக்கில் ஓசோன் அளவு குறைவது தொடர்பாய் 1987 ல் கையெழுத்திட்ட தினம்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;   ஐக்கிய நாடுகள் பொதுச் சபை 1994 லிலிருந்து செப்டம்பர் 16 ஐ உலக ஓசோன் தினமாக அறிவித்து அனுசரிக்க அழைப்பு விடுத்தது. அனைத்து நாடுகளும் ஓசோன் பாதுகாப்புக்காக ஒன்றிணைய வேண்டும் என்பதே இதன் குறிக்கோள். ஓசோன் படலம் என்பது பூமியின் சூரிய தடுப்புத் திரைதான் ..! இதனைப் பாதுகாத்தால் தான், உயிர்களின் நீடித்த வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் உதவிகரமாக இருக்கும். இதற்காக, மூன்று Pக்களை முன் வைக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;1. Planet : புவிக்கோள்.. பெரும்பாலான தாவரங்கள் புறஊதாக்கதிர் களிடமிருந்து இயற்கையிலேயே தங்களைப் பாதுகாக்கும் தன்மையைக் கொண்டுள்ளன. ஆனால் எப்போதும் அல்ல. எந்த பாதுகாப்பு கவசம் இல்லாத கடல், ஏரிகளில் புற ஊதாக்கதிர்கள் ஊடுருவிச் சென்று, குறைந்த ஆழத்தில் வாழும் மீன்கள் மற்றும் மிதவை உயிரிகளைப் பாதிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;2. People மக்கள்: அளவுக்கு அதிகமாக வெய்யிலில் இருப்பதனால், சூரியனிடமிருந்து வரும் புறஊதாக்கதிர்கள் சூரிய எரிப்பு காயம் உண்டாக்குகிறது; கண் பார்வையை பாதிக்கிறது. சூரிய ஒளியில் இருப்பது நீண்ட காலம் தொடர்ந்தால், தோல் புற்று நோய் வருகிறது. மேலும் புற ஊதாக்கதிர் தற்காப்புத் திறனுக்கும் தடை போடுகிறதாம்.&lt;br /&gt;&lt;br /&gt;3. Prosperity வளங்கள்: ஓசோன் அடுக்கின் கணம் குறைவதால், மக்களுக்கும் புவிக்கும் பாதிப்பு உண்டு பண்ணும்போது, அதன் தொடர் நடவடிக்கையாக ஏராளமான பொருளாதார இழப்பும் அதன் சங்கிலித் தொடர் நிகழ்வுகளும் உண்டாகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt; மக்களுக்கு ஓசோன் படலத்தை பாதுகாக்கும் உணர்வை உண்டுபண்ண வேண்டியது மிகவும் முக்கியமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;1. உலகில் வாழும் மக்கள் ஒவ்வொருவரும் ஓசோனை பாதிக்கும் பொருட்களை தவிர்பதையும், ஓசோன் பாதுகாப்பு நடக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;2. ஓசோனைப்பாதுகாக்க எளிய நடைமுறைகளைக் கைக்கொண்டால் போதுமானது.&lt;br /&gt;&lt;br /&gt;3. இது தொடர்பான விழிப்புணர்வையும், தாக்கத்தையும் மக்கள் மனதில் உருவாக்க வேண்டியது மிகவும் அவசியம்.&lt;br /&gt;&lt;br /&gt;4. சூழல் தொடர்பான பொருட்களைப் பயன்படுத்த வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;5. சூழல் நட்பற்ற பொருட்களைத் தவிக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;6. எத்தனை நீண்ட பயணமும் கூட, முதல் அடி வைப்பதில்தான் துவங்குகிறது என்பதைக் கருத்தில் கொண்டு, நாம் செய்யும் சின்ன, சின்ன விஷயங்கள் கூட, சூழலைப் பாதுகாப்பதாகவும், ஓசோனைக் காப்பதாகவும் இருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;7. காற்றுக் குமிழிகளை உடைக்கும் தெளிப்பான்களை (Sprayers ) தவிர்க்கவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;8. குளோரோ புளூரோ கார்பன்(CFC) வெளியேற்றும் குளிர்சாதனப்பெட்டியின் பயன்பாட்டைக் குறைக்கவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;9. ஹாலோஜென் வாயு உள்ள தீயணைப்பானுக்குப் பதிலாக வேறு பொருள் உள்ளதைப் பயன்படுத்த வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;10. சபிக் காபுரையிட்ட பொருட்களை தவிர்க்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;11. குளிர் சாதன அறையை நன்றாக பராமரிக்க வேண்டும். இல்லையெனில் அதன் மூலம் வெளிவிடும் நிறைய CFC வளிமண்டலத்திற்குள் நுழையும்.&lt;br /&gt;&lt;br /&gt;12. சிற்றுந்தின் உறைபனிப் பெட்டியையும், குளிர் சாதனத்தையும் சரியாகப் பராமார்க்க வேண்டும். அவை சரியாக இயங்காவிட்டாலும் CFC வெளியேறி ஓசோன் படலத்தை தாக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;13. புதிதாக குளிர் சாதனப் பெட்டி வாங்குவோர், CFC இல்லாத பெட்டியாகப் பார்த்து வாங்கவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;14. புரோமோமீதேன்(bromomethane ) உள்ள பொருள்களையும் பயன்படுத்தக் கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;15. காற்று மாசுபாடு பொருள்களையும் தவிர்க்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;16. சிற்றுந்து, கம்ப்பிரஷர்(compressors) மற்றும் குளிர் சாதனப் பெட்டி பயன்படுத்துவதைக் குறைக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;17. இதற்கு மாற்றாக பேருந்து, மிதிவண்டி மற்றும் நடைப் பயணத்தை மேற்கொள்ளவும்.&lt;br /&gt;&lt;br /&gt;18. ஆற்றல் குறைவாக உள்ள மின் பல்புகளைப் பயன்படுத்தவும். இதனால் மாசுபாடு குறையும்.&lt;br /&gt;&lt;br /&gt;19. ஓசோன் அடுக்கின் ஓட்டையைக் குறைப்பது/ நிறுத்துவது என்பது, அதனைப் பாதிக்கும் பொருட்களைத தவிர்ப்பது மட்டும்தான், ஓசோன் படலம் பாதுகாப்புப் பணி மற்றும் உதவி செய்ய முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;20. மாணவர்கள், தன்னார்வலர்கள், சூழலியலாளர்கள், சமூக விழிப்புணர்வு கொண்டவர்கள் மற்றும் அறிவு ஜீவிகள் என உலகத்தின் மீதும், உயிரினங்கள் மீதும், சூழல் மீதும் அக்கறை கொண்ட அனைவரும் இதனை கடைப்பிடிக்க வேண்டும்: இதனை மக்களிடம் பரப்ப வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: பேரா.சோ.மோகனா&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3683345437092478883-6312767257746959938?l=muruganthiru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muruganthiru.blogspot.com/feeds/6312767257746959938/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3683345437092478883&amp;postID=6312767257746959938' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3683345437092478883/posts/default/6312767257746959938'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3683345437092478883/posts/default/6312767257746959938'/><link rel='alternate' type='text/html' href='http://muruganthiru.blogspot.com/2011/09/blog-post_18.html' title='ஓசோன் மண்டலப் பாதுகாப்பு - அவசியமும் வழிமுறைகளும்'/><author><name>அறிவியல் விழிப்புணர்வு</name><uri>http://www.blogger.com/profile/14816292961575112498</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='7' src='http://2.bp.blogspot.com/_-B1lk_hlPgA/SbYP5SBQ4CI/AAAAAAAAAHc/wBrjaI1emS4/S220/PSF_logo.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3683345437092478883.post-773494615793343473</id><published>2011-09-15T03:16:00.000-07:00</published><updated>2011-09-15T03:18:29.911-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொழுதுபோக்குமுறை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்க்கைமுறை'/><title type='text'>அடித்து வைக்கப்பட்ட உருளைக்கிழங்கு</title><content type='html'>உட்கார்ந்த இடத்திலேயே உட்கார்ந்து, நேரம் காலம் பாராமல் நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டு வீண் பொழுதைக் கழிப்பவர்கள் 'அடித்து வைக்கப்பட்ட உருளைக் கிழங்கு' (Couch Potato) என்று அழைக்கப்படுவதுண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;கணினியில் Youtube தளத்தில் நிறைய வீடியோ படங்களைப் பார்த்து பொழுது போக்குபவர்களை Youtuber எனப்படுவர். Tuber எனப்படுவது சதைப் பற்றார்ந்த அடி நிலத் தண்டு உடையது என்றும் பொருள்படும். &lt;br /&gt;&lt;br /&gt;உருளைக் கிழங்கையும் Tuber என்று சொல்வர். Youtuber என்பதும் உருளை கிழங்கை உருவகப்படுத்துவதுதான். எனவே கணினியின் முன் ஆணியடித்தது போன்று இடத்தை விட்டு அகலாமல் இருப்பவரை Youtuber என்று அழைப்பது சரியே. &lt;br /&gt;&lt;br /&gt;பெரும்பாலான பெண்கள் பகலிலும், மாலையிலும் குறைந்தது இரண்டு மணி நேரமாவது தொடர்ந்து தொலைக் காட்சியின் முன் அமர்ந்து 'நீண்ட தொடர்களை' சோகத்துடன் பார்த்துக் கொண்டிருப்பது அனைவரது வீட்டிலும் தவறாத காட்சி. &lt;br /&gt;&lt;br /&gt;முன்பெல்லாம் நாளிதழ்களிலும், வார இதழ்களிலும் 'வாசித்து விட்டீர்களா குமுதம்' என்றும் 'கல்கி, ஆனந்த விகடன்' என்றும் பெண்ணின் படம் பிரசுரமாகியிருக்கும். இப்பொழுது பெண்கள் புத்தகங்கள் படிப்பதைக் குறைத்துக் கொண்டு T.V. தொடர்களைப் பார்த்து வருவதாகத் தெரிகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;வீட்டிற்கு உறவினர்களோ விருந்தினர்களோ வந்து விட்டால், எப்பொழுது கிளம்புவார்கள், தொலைக்காட்சியில் தொடர்களை பார்க்கலாம் என்பதிலேயே ஆர்வமாகவும், பரபரப்பாகவும் இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு வீட்டிலுமுள்ள ஆண்களும், பெண்களும் வேலை நேரம் போக, ஓய்வு நேரத்தில் நல்ல புத்தகங்களையும், செய்தித் தாள்களையும் படித்து வருவது நல்ல பழக்கமாகவும், நல்ல மனநிலையையும் தரும் என்பதில் சந்தேகமில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;தொலைக்காட்சி நீண்ட நேரம் பார்ப்பதையும், கணினியில் அவசியமின்றி நீண்ட நேரம் பொழுது போக்குவதையும் தவிர்த்தால் உடல் நலம் பெறலாம். &lt;br /&gt;&lt;br /&gt;அதே நேரம் வாரத்திற்கு ஐந்து நாட்களாவது தினமும் அதிகாலையில் 30 நிமிடங்கள் நடைபயிற்சி மேற்கொள்வது சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் மற்றும் இருதய நோய்க்கு பலனளிக்கும் பயிற்சியாகும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3683345437092478883-773494615793343473?l=muruganthiru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muruganthiru.blogspot.com/feeds/773494615793343473/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3683345437092478883&amp;postID=773494615793343473' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3683345437092478883/posts/default/773494615793343473'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3683345437092478883/posts/default/773494615793343473'/><link rel='alternate' type='text/html' href='http://muruganthiru.blogspot.com/2011/09/blog-post_15.html' title='அடித்து வைக்கப்பட்ட உருளைக்கிழங்கு'/><author><name>அறிவியல் விழிப்புணர்வு</name><uri>http://www.blogger.com/profile/14816292961575112498</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='7' src='http://2.bp.blogspot.com/_-B1lk_hlPgA/SbYP5SBQ4CI/AAAAAAAAAHc/wBrjaI1emS4/S220/PSF_logo.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3683345437092478883.post-8955902451892262788</id><published>2011-09-13T00:32:00.000-07:00</published><updated>2011-09-13T00:33:10.992-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மருத்துவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குழந்தை நலம்'/><title type='text'>குழந்தை நல மருத்துவம்</title><content type='html'>குழந்தைகளுக்கான உடல் நலம் குறித்து வாசகர்களின் கேள்விகளுக்கு சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனை குழந்தைகள் நலமருத்துவர் டாக்டர்.காசி அவர்கள் பதிலளித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தைகள் சில சமயம் கோபமாகவும், எரிச்சலோடும் பேசுகிறார்களே? சிறு வயதிலேயே ஏன் இப்படி நடந்துகொள்கிறார்கள்.?-புவனா, திருப்பூர்&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தைகளின் அனைத்து விதமான நடவடிக்கைகளுக்கும் முதல் பொறுப்பு பெற்றோர்கள்தான். ஏனென்றால் அவர்கள்தான் குழந்தைகளுக்கு முன்மாதிரி. இதுதான் உலக நியதியும்கூட. முதலில் அம்மாவும், அப்பாவும் தான். பிறகுதான் இந்த சமூகம் எல்லாம்.&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தைகள் இப்படி நடந்து கொள்வது பெற்றோர்களைப் பார்த்துத்தான். குழந்தைகள் முன்பாகவே பெற்றோர்கள் சண்டைபோட்டுக் கொண்டால் அது அவர்கள் மனதில் பதிந்துவிடும். சாப்பாட்டில் உப்பு குறைவு அல்லது அதிகம் என்பதற்காக அப்பா சாப்பாட்டுத் தட்டை தூக்கி எறிந்தால் குழந்தையும் ஒருநாள் இதையே செய்யும்.&lt;br /&gt;&lt;br /&gt;கூட்டுக் குடும்பங்கள் மறந்து தனிக் குடும்பங்கள் அதிகமாவதாலும், குழந்தைகளை கவனிப்பது, கண்டிப்பது, தட்டிக் கொடுப்பது போன்றவையும், அதிகமாக செல்லம் கொடுப்பது, எதை கேட்டாலும் வாங்கிக் கொடுப்பது போன்றவையும் தற்போது அதிகரித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தைகள் கேட்கும் அனைத்தையும் வாங்கிக் கொடுப்பதும் தவறு, எதையுமே வாங்கிக் கொடுக்காமல் இருப்பதும் தவறு. அடம் பிடித்து அழுவதால் எல்லாம் நமக்கு கிடைத்துவிடும் என்ற சிந்தனை குழந்தைக்கு வந்துவிட்டால் அவ்வளவு தான். எது தேவையோ அதை வாங்கிக் கொடுங்கள். அடம் பிடித்து அழுது புரண்டால் ஒன்று புரியவையுங்கள் அல்லது புறக்கணியுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;புரதச் சத்து குழந்தைக்கு அதிகம் தேவை என்பதற்காக கடையில் விற்கும் ஊட்டச்சத்து மாவு வாங்கிக்கொடுக்கலாமா?-ரமேஷ், காரைக்குடி &lt;br /&gt;&lt;br /&gt;தேவையில்லை. இயற்கையாகவே நாம் கொடுக்கும் உணவில் சிலவற்றை சேர்த்து கொடுத்தாலே போதுமானது. பொட்டுக் கடலை, சுண்டல், பயிறு வகைகள், பச்சைப் பயிறு, பருப்பு வகைகள் சற்று அதிகமாக குழந்தைகளின் உணவில் சேர்த்தாலே போதுமான புரதச்சத்து கிடைத்து விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;என் குழந்தை ஒழுங்காக சாப்பிட மாட்டேங்குது டாக்டர் என்று பலபேர் வருகின்றனர். அவர்களிடம் கவலைப்படாதீர்கள், குழந்தைக்கு முட்டையும், கீரையும் கொடுங்கள் என்று சொன்னால், இல்ல டாக்டர் ஏதாவது டானிக் கொடுங்கள் என்கின்றனர். இயற்கையாகவே உணவில் சிலவற்றை சேர்த்து குழந்தைகளுக்கு கொடுத்தாலே அவர்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளமுடியும். டானிக்கும் வேண்டாம், எந்த ஹெல்த் பவுடரும் வேண்டாம்.&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தை சோர்வாக இருக்கிறது. எது கொடுத்தாலும் சரியாக சாப்பிடுவதில்லை என்ன செய்வது?-ஜெயா, செங்கோட்டை&lt;br /&gt;&lt;br /&gt;கிராமத்தில் “வேண்டா பிள்ளைக்கு வெல்லம் கொடு” என்பார்கள். இது வேண்டாத பிள்ளைக்கு கொடு என்று அர்த்தம் அல்ல. எதை கொடுத்தாலும் சாப்பிடாமல் வேண்டாம், வேண்டாம் என்று சொல்லும் பிள்ளைக்கு வெல்லம் கொடு என்று அர்த்தம்.&lt;br /&gt;&lt;br /&gt;வெல்லத்தில் இரும்புச் சத்து உள்ளது. பொதுவாக யாராவது சோர்வாக காணப்பட்டால் அவர்கள் இரத்தச் சோகையோடு இருக்கிறார்கள் என்று கொள்ளமுடியும். இது இரும்புச் சத்து குறைவாக உள்ளதின் வெளிப்பாடு. எனவே புரதம் அதிகம் உள்ள பொட்டுக் கடலை, வேர்க்கடலை, வெல்லத்தோடு பொட்டுக் கடலை உருண்டையாகவும், வேர்க்கடலை உருண்டையாகவும், பொரி உருண்டையாகவும் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இது இரத்தத்தில் ஹீமோகுளோபினை உயர்த்தி இரத்தச் சோகையை குறைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: இளைஞர் முழக்கம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3683345437092478883-8955902451892262788?l=muruganthiru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muruganthiru.blogspot.com/feeds/8955902451892262788/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3683345437092478883&amp;postID=8955902451892262788' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3683345437092478883/posts/default/8955902451892262788'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3683345437092478883/posts/default/8955902451892262788'/><link rel='alternate' type='text/html' href='http://muruganthiru.blogspot.com/2011/09/blog-post_13.html' title='குழந்தை நல மருத்துவம்'/><author><name>அறிவியல் விழிப்புணர்வு</name><uri>http://www.blogger.com/profile/14816292961575112498</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='7' src='http://2.bp.blogspot.com/_-B1lk_hlPgA/SbYP5SBQ4CI/AAAAAAAAAHc/wBrjaI1emS4/S220/PSF_logo.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3683345437092478883.post-3926865784434149587</id><published>2011-09-07T01:16:00.000-07:00</published><updated>2011-09-07T01:17:31.236-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முட்டை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இருதயம்'/><title type='text'>முட்டை தினமும் சாப்பிடலாமா?</title><content type='html'>அமெரிக்காவின் முட்டை சத்துணவு மையமும், ஹார்வார்டு ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த்தும் கடந்த 14 ஆண்டுகளாக முட்டை உணவு பற்றி ஆராய்ந்தன. 14 ஆண்டுகள் தினமும் முட்டை சாப்பிடும் பல ஆயிரம் பேர்களைத் தொடர்ந்து கண்காணித்தார்கள். இவர்கள் உடலில் இதய நோய்க்கான அறிகுறியே இல்லை என்பது தெரியவந்தது. சத்துணவான முட்டையில் உள்ள பொருட்கள் இதய நோயைக் குணப்படுத்துகிறது. அதிக அளவு கொலஸ்ட்ரால் இல்லாமல் பார்த்துக் கொள
